எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Sunday, August 11, 2013

அடேய் ஜோதிட நாதாரிகளே

அடேய் ஜோதிட நாதாரிகளே , நீங்கள் பணம் சம்பாரிக்க அடுத்தவர்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் .

எனது நண்பன் ஒருவன் புதிதாக திருமணம் ஆனவன் , சென்னையில் ஒரு புது flat புக் பண்ணினான் , அவனது மனைவி கற்பமாக இருந்தார் , அவுங்க ஊருக்கு போனப்ப அந்த ஊரு ஜோசியக்காரனிடன் புது flat plan ஐ காண்பித்து ஜோசியம் கேட்டு உள்ளனர் அதற்கு அந்த நாதாரி, வாஸ்த்துப்படி பாத்ரூம் இங்க இருக்க கூடாது அப்படி இருந்தா உங்களுக்கு குழந்தை ஊனமாக பிறக்கும் அப்படின்னு சொல்லிருக்கான். என் நண்பனின் மனைவீட்டில் அப்படியே இடிந்து போயி விட்டனர்.

என் நண்பனுக்கோ ஜோசியத்தில் நம்பிக்கை கிடையாது , இருந்தாலும் மனைவிக்காக பில்டரிடம் போயி பாத்ரூமை மாற்றி தரும் படி கேட்டுள்ளான் . 
அதற்கு பில்டரோ சார் நாங்க  மிக்கபெரிய வாசத்து சாஸ்த்திரம் பார்பவரிடம் வாசத்து பார்த்து மிக சரியாகத்தான் கட்டி, இருக்கிறோம், பாத் ரூமை மாற்ற முடியாது என்று கூறி விட்டனர். என் நண்பன் சாதாரணமாக எடுத்துக்கொண்டான் அவன் மனைவி ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவள் , பாவம்  இடிந்து போயி இருந்தாள் .

இது  8 மாதத்திருக்கு முன் நடந்தது , தற்போது அந்த தம்பதியருக்கு அழகான , ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது .

டாக்டர்கள் ஸ்கேன் பார்த்து குழந்தைக்கு ஒரு ஊனமும் இல்லை ஆரோக்கிய மாக உள்ளது என்றாலும் குழந்தை பிறக்கும் வரை அவர்கள் பயந்த பயம் இருக்கிறதே ........  

இப்பொழுதான் நிம்மதியாக இருக்கிறார்கள்......

அந்த ஜோசியக்காற நாயை  என்ன பண்ணினா தகும் ??? 

முடிந்தால் உங்கள் கருத்துக்களை கூறுங்கள் 

20 comments:

Anonymous said...

flat book panradhukku munnadi illai josiyam parkkanum un friend nadaari....

Massy spl France. said...

சோதிட நாய்களை என்ன செய்தாலும் எதனால் அடித்தாலும் அதுகளுக்கு சூடு சொரணையே வராது. அதற்கு பதில் நம்மக்கள்தான் தங்களுடைய தன்நம்பிக்கையை வளர்த்துக்கனும்.
பகிர்வுக்கு நன்றி.

ttpian said...

keep the DOG in the bathroom for 120 hours without water

தருமி said...

அப்பெண் வீட்டில் ஏதாவது ‘பரிகாரம்’ செய்திருப்பார்கள். அதனால் தான் குழந்தை ஒழுங்காகப் பிறந்தது - இது எப்பூடி?!

ராவணன் said...

இப்படி மொட்டையாக ஒரு தலைப்பு வைப்பது சரியா?

அடேய் பதிவுகள் எழுதும் நாய்களா என்று ஒருவர் எழுதினால் நம் நிலைமை?

நானும் சோதிடம் தெரிந்தவனே....காசு பணத்திற்கு எதுவும் சொல்லமாட்டேன்.

நீங்க பிறந்த டீடெய்ல் சொன்னா உங்களைப் பற்றி அனைத்தையும் சொல்லலாம்.

எனக்கு பிராமணர்களின் ஜோதிடம் தெரியாது...தமிழர்களின் சோதிடம் மட்டுமே தெரியும்.

Unknown said...

முதல்ல இவங்க அந்த நாயிடம் அங்க போயே கேட்டு இருக்க கூடாது

'பரிவை' சே.குமார் said...

சோதிடம் பார்ப்பவர்கள் நம்மை அழைப்பதில்லை... அவர்களுக்கு அது தொழில்... நாம்தான் அவர்களிடம் போய் விழுந்து சனி எங்க இருக்கான் சுக்கிரன் எங்க இருக்கான்னு பணத்தைக் கொடுத்துக் கேட்கிறோம்...

நம்மீது தவறை வைத்துக் கொண்டு எதோ ஒரு ஜோதிடர் சொன்னார் என்பதற்காக எல்லாரையும் பொத்தாம்பொதுவாக இப்படி அழைப்பது அழகில்லை அமைச்சரே...

ப.கந்தசாமி said...

அவனை மட்டுமல்ல, எல்லா ஜோசியனுங்களையும் கழுவில் ஏற்றவேண்டும்.

Manimaran said...

இவனுகள எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது,

மங்குனி அமைச்சர் said...

மன்னிக்கவும் அவசரமாக வெளியே செல்வதால் , கமண்ட் போட்ட எல்லோருக்கும் பிறகு பதில் அளிக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

flat book panradhukku munnadi illai josiyam parkkanum un friend nadaari....///



சொல்லிட்டருய்யா ..கவர்னரு...... நீ போயி உன் பாருடா வெண்ணை

மங்குனி அமைச்சர் said...

மாசிலா said...

சோதிட நாய்களை என்ன செய்தாலும் எதனால் அடித்தாலும் அதுகளுக்கு சூடு சொரணையே வராது. அதற்கு பதில் நம்மக்கள்தான் தங்களுடைய தன்நம்பிக்கையை வளர்த்துக்கனும்.
பகிர்வுக்கு நன்றி.///



சரியா சொன்னிங்க...... தேங்க்ஸ்

மங்குனி அமைச்சர் said...

ttpian said...

keep the DOG in the bathroom for 120 hours without water///



நன்றி :-)))

மங்குனி அமைச்சர் said...

தருமி said...

அப்பெண் வீட்டில் ஏதாவது ‘பரிகாரம்’ செய்திருப்பார்கள். அதனால் தான் குழந்தை ஒழுங்காகப் பிறந்தது - இது எப்பூடி?! ///


ஹா,ஹா,ஹா........ செத்தாண்டா சேகரு......

மங்குனி அமைச்சர் said...

ராவணன் said...

இப்படி மொட்டையாக ஒரு தலைப்பு வைப்பது சரியா?

அடேய் பதிவுகள் எழுதும் நாய்களா என்று ஒருவர் எழுதினால் நம் நிலைமை? ////

ஹா.ஹா.ஹா.... ஏற்கனவே நிறையா பேர் இதை விட கேவலமா திட்டிடாங்க சார்..... அதுக்கெல்லாம் கோவப்பட முடியாது

மங்குனி அமைச்சர் said...

சக்கர கட்டி said...

முதல்ல இவங்க அந்த நாயிடம் அங்க போயே கேட்டு இருக்க கூடாது////



சரிதான்....ஆனா அந்த பொண்ணோட பேரன்ட்ஸ் பழைய ஆட்கள் அவுங்க தான் போயி கேட்டு இருக்காங்க ....

மங்குனி அமைச்சர் said...

சே. குமார் said...

சோதிடம் பார்ப்பவர்கள் நம்மை அழைப்பதில்லை... அவர்களுக்கு அது தொழில்... நாம்தான் அவர்களிடம் போய் விழுந்து சனி எங்க இருக்கான் சுக்கிரன் எங்க இருக்கான்னு பணத்தைக் கொடுத்துக் கேட்கிறோம்...

நம்மீது தவறை வைத்துக் கொண்டு எதோ ஒரு ஜோதிடர் சொன்னார் என்பதற்காக எல்லாரையும் பொத்தாம்பொதுவாக இப்படி அழைப்பது அழகில்லை அமைச்சரே...///

நீங்க சொல்றது சரி ..... ஆனா இப்போ வர்ற ஜெனெரேசன் கொஞ்சம் புரிஞ்சு இருக்காங்க .....அந்த பொண்ணோட அப்பா அம்மா பழைய ஆட்கள்...பாவம்...அந்த மாதிரி ஆட்கள் கிட்ட தான் இந்த நாயிகள் விளையாடுறானுக ......

மங்குனி அமைச்சர் said...

பழனி. கந்தசாமி said...

அவனை மட்டுமல்ல, எல்லா ஜோசியனுங்களையும் கழுவில் ஏற்றவேண்டும். ///


தேங்க்ஸ் சார்

மங்குனி அமைச்சர் said...


Manimaran said...

இவனுகள எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது,//



ஹா,ஹா,ஹா....

Enoke said...

"Vengayam" movies is based on this issue...People should aware of these culprits...