நேற்று இரவு முதல் சென்னையில் பருவமழை ஆரம்பித்து தொடர்ந்து மழை , வழக்கம் போல் மழை மற்றும் சாக்கடை நீர் நிறைந்த , மேடுபள்ளமான , குண்டும் குழியுமான சென்னை இன்று காலை அனைத்து மக்களின் அவசர கதியான இயந்திர வாழ்க்கையின் அசுர வேகத்தை மட்டுப் படுத்தி மக்களை பொறுமையாகவும் , நிதானமாகவும் இயங்க ஆண்டி முதல் அரசர் வரை அனைவருக்கும் உத்தரவிட்டது.
இது மழையின் உத்தரவா? இல்லை குண்டும் குழியுமான சாலையின் உத்தரவா? இல்லை அந்த சாலைகளை சரிசெய்யாமல் விட்ட அதிகாரிகள் உத்தரவா? அல்லது இந்தியாவை வல்லரசாக மாற்றிக்கொண்டு இருப்பதால் இந்த வேலைகளை கவனிக்க முடியாத அரசியல் வாதிகளின் உத்தரவா?
ஏதோ ஒன்னு , ஆனால் ஆப்பு மட்டும் எல்லா தரப்பு மக்களுக்கும் , இதில் ஏழை , நடுத்தர வர்க்கம் , பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் மழையில் நனைந்த தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னை ஜனநாயக மற்றும் கம்யுனிச கொள்கைகளுடன் தனது கடமையை செவ்வனே செய்து கொண்டுள்ளது .
சென்னையின் மையப் பகுதியில் இப்படி என்றால் புறநகர் பகுதிகளை பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள்? சென்னையை சுற்றி உள்ள அனைத்து நீர் நிலைக்கும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாம புறநகர் பகுதிகளை சுற்றிவளைத்து மிதக்க வைக்கிறது .
வற்றிய நிலையில் உள்ள ஏரியில் வீடுகட்டி விட்டு மழைகாலங்களில் வீட்டிருக்குள் தண்ணீர் வருகிறது என்று புலம்பும் பைத்தியக்கார மக்களுக்கு அந்த புறம்போக்கு இடங்களை விற்ற அரசியல் வாதிகள் அறிவாளிகளா ? இல்லை அந்த வீடுகளுக்கு மின்சார இணைப்பும் , குடிநீரி இணைப்பும் குடுத்துவிட்டு இப்பொழுது வந்து அந்த வீடுகளை ஆக்கிரமிப்புகள் என்று கூறி அகற்றும் அதிகாரிகள் அறிவாளிகளா ?
மின்சார இணைப்பும் , குடிநீரி இணைப்பும் வழங்கும் அரசு அதிகாரிகளுக்கு அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர் நிலைகள் என்று இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கும் போது தெரியவில்லையா ?
தென்னை மரத்தில் உள்ள இளநீர் முற்றி கீழே உள்ள பலா மரத்தில் உள்ள கனிந்த பலா பழத்தின் மேல் விழுந்து அந்த பலா பழத்தை உடைத்து அதற்கு கீழ் மாமரத்தில் விழுந்து மாங்கனிகளை உதிர்த்து பின் அதற்க்கு கீழே உள்ள வாழை மரத்தின் மீது விழுந்த வாழைத்தாரை சிதைத்து அதற்குபின் தரையில் அந்த தென்னகாய் விழுந்தது என்று நமது நாட்டின் இயற்க்கை வளத்தை பற்றி பாடிவைத்துள்ளனர் .
ஆனால் இப்பொழுது அந்த நியதி மாறி கீழிருந்து மேலாக ஒரு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகத்தில் உள்ள பியூன் வாங்கும் லஞ்சத்தின் பங்கு அது அப்படியே பயணப்பட்டு கிளார்க் , அதிகாரி , உதவி ஆய்வாளர் , ஆய்வாளர் , கலக்டர் , மந்திரி அப்புறம் தலைமை என்று பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது .
அட அதெல்லாம் விடுங்க சாமி , சென்ற ஆண்டின் தீபாவளி மதுபான வருமானமான 250 கோடியை உயர்த்தி இந்த ஆண்டிக்கு 300 கோடியாக வரம்பு நிர்ணயித்துள்ள நமது அரசு கொள்கைகள் வெற்றிபெற பொது மக்களாகிய நாம் நமது ஜனநாயக கடைமையை செய்து அரசின் இந்த முயற்சி வெற்றி பெற உறுதுணையாக இருப்போம்.
இது மழையின் உத்தரவா? இல்லை குண்டும் குழியுமான சாலையின் உத்தரவா? இல்லை அந்த சாலைகளை சரிசெய்யாமல் விட்ட அதிகாரிகள் உத்தரவா? அல்லது இந்தியாவை வல்லரசாக மாற்றிக்கொண்டு இருப்பதால் இந்த வேலைகளை கவனிக்க முடியாத அரசியல் வாதிகளின் உத்தரவா?
ஏதோ ஒன்னு , ஆனால் ஆப்பு மட்டும் எல்லா தரப்பு மக்களுக்கும் , இதில் ஏழை , நடுத்தர வர்க்கம் , பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் மழையில் நனைந்த தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னை ஜனநாயக மற்றும் கம்யுனிச கொள்கைகளுடன் தனது கடமையை செவ்வனே செய்து கொண்டுள்ளது .
சென்னையின் மையப் பகுதியில் இப்படி என்றால் புறநகர் பகுதிகளை பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள்? சென்னையை சுற்றி உள்ள அனைத்து நீர் நிலைக்கும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாம புறநகர் பகுதிகளை சுற்றிவளைத்து மிதக்க வைக்கிறது .
வற்றிய நிலையில் உள்ள ஏரியில் வீடுகட்டி விட்டு மழைகாலங்களில் வீட்டிருக்குள் தண்ணீர் வருகிறது என்று புலம்பும் பைத்தியக்கார மக்களுக்கு அந்த புறம்போக்கு இடங்களை விற்ற அரசியல் வாதிகள் அறிவாளிகளா ? இல்லை அந்த வீடுகளுக்கு மின்சார இணைப்பும் , குடிநீரி இணைப்பும் குடுத்துவிட்டு இப்பொழுது வந்து அந்த வீடுகளை ஆக்கிரமிப்புகள் என்று கூறி அகற்றும் அதிகாரிகள் அறிவாளிகளா ?
மின்சார இணைப்பும் , குடிநீரி இணைப்பும் வழங்கும் அரசு அதிகாரிகளுக்கு அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர் நிலைகள் என்று இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கும் போது தெரியவில்லையா ?
தென்னை மரத்தில் உள்ள இளநீர் முற்றி கீழே உள்ள பலா மரத்தில் உள்ள கனிந்த பலா பழத்தின் மேல் விழுந்து அந்த பலா பழத்தை உடைத்து அதற்கு கீழ் மாமரத்தில் விழுந்து மாங்கனிகளை உதிர்த்து பின் அதற்க்கு கீழே உள்ள வாழை மரத்தின் மீது விழுந்த வாழைத்தாரை சிதைத்து அதற்குபின் தரையில் அந்த தென்னகாய் விழுந்தது என்று நமது நாட்டின் இயற்க்கை வளத்தை பற்றி பாடிவைத்துள்ளனர் .
ஆனால் இப்பொழுது அந்த நியதி மாறி கீழிருந்து மேலாக ஒரு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகத்தில் உள்ள பியூன் வாங்கும் லஞ்சத்தின் பங்கு அது அப்படியே பயணப்பட்டு கிளார்க் , அதிகாரி , உதவி ஆய்வாளர் , ஆய்வாளர் , கலக்டர் , மந்திரி அப்புறம் தலைமை என்று பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது .
அட அதெல்லாம் விடுங்க சாமி , சென்ற ஆண்டின் தீபாவளி மதுபான வருமானமான 250 கோடியை உயர்த்தி இந்த ஆண்டிக்கு 300 கோடியாக வரம்பு நிர்ணயித்துள்ள நமது அரசு கொள்கைகள் வெற்றிபெற பொது மக்களாகிய நாம் நமது ஜனநாயக கடைமையை செய்து அரசின் இந்த முயற்சி வெற்றி பெற உறுதுணையாக இருப்போம்.
ஜெய் ஹிந்த்
டிஸ்கி : பாவம் யாரும் பெத்த புள்ளையோ ஒரு நாள் மழைக்கே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு கிடக்குறான்.