எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, July 31, 2010

கேப்மாரி பில்டர்ஸ்

இப்ப எங்க பாத்தாலும் லேயவுட் போட்டு அவனுக பண்ணுற அளப்பர தாங்க முடியலைங்க , முக்கியமா அவனுக NRI தான் குறிவக்கிரானுக ...... நமக்கு தான் நிறைய NRI பிரண்ட்ஸ் இருக்காங்களே அப்படின்னு நானும் அந்த பிசினஸ்ஸ ஆரம்பிச்சிட்டேன் . டீடைல்ஸ் கீழ இருக்கு ....


கேப்மாரி பில்டர்ஸ் வழங்கும் V.V.I.P நகர் (இப்படி போட்டாதான் பயபுள்ளைக உச்சி குளுந்துபோய் வாங்குறாங்க )

சென்னை நகருக்கு மிக அருகில் , ஏர்போர்ட்டிலிருந்து பத்து நிமிட பயணத்தில் (பத்து நிமிடம் பிளைட்ல போகணும் ) நேசனல் ஹைவேசுக்கு(இதுக்கும் பிளைட்லதான் போகனும்) பக்கத்தில் அமைத்துள்ளது நமது V.V.I.P நகர்.

இது உங்களுக்காவென்றே பிரத்தியேகமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. அரசிடமிருந்த ABCD அப்ரூவல் பெற்ற மனைகள் .

V.V.I.P நகரில் நான்கைந்து இடங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு அப்படியே உங்களுக்காக மூடாமல் விட்டு இருக்கிறோம். எனவே குழந்தைகளை நீங்கள் வெளியே விட மாட்டிங்க. அதுனால விளையாட்டு திடல் அமைத்து இடம் வீணாகாமல் உங்களுக்காக கேப்மாரி பில்டர்ஸ் மிச்சப்படுத்தி இருக்காங்க .

வீட்டு மனைகளுக்கு தண்ணி வசதி ரொம்ப முக்கியம் , எங்க கேப்மாரி பில்டர்ஸ் வழங்கும் V.V.I.ப நகரில் நீங்கள் 1000 அடி தோண்டினாலும் தண்ணிவராது , எனவே உங்கள் வசதிக்காக நாங்களே ஒரு லிட்டர் தண்ணீர் 21 ரூபாயிக்கு குறைந்த விலையில் சப்பளை செய்கிறோம் .

அப்புறம் முக்கியமாக இந்த நகரை சுற்றி அடர்ந்த காட்டுப் பகுதியாக இருப்பதால் நிறைய கொடிய மிருகங்களின் நடமாட்டம் இருக்கும் , எனவே உங்களுக்கு திருட்டு பயம் சுத்தமாக தேவை இல்லை . அதேபோல் சொந்த காரவுங்க யாரும் பயந்துகிட்டு வந்து போக மாட்டாங்க , இது தான் இந்த கேப்மாரி பில்டர்ஸ் வழங்கும் V.V.I.P நகரின் சிறப்பு அம்சம்.


அது மட்டும் இல்லைங்க , இந்த நகரை சுற்றி மருத்துவகல்லூரி , இன்ஜினியரிங் காலேஜ் , கலக்டர் அலுவலகம் , ICICI மற்றும் AXIS Banks , பள்ளி வளாகம் , பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேசன் எல்லாம் இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எதுவுமே வராது எனவே நீங்கள் டிராபிக் தொல்லை இல்லாமல் இருக்கலாம் .

என்ன உங்க மனைய தேர்வு செய்திட்டிங்களா ? ரூபாய் 99999999999 குடுத்து இப்பவே புக் பண்ணினால் இருநூறு தங்க காசுகள் இலவசம் .

அது தவிர ஒரு மனை வாங்கினால் , மூன்று மனைகள் இலவசமாக உங்களுக்காக வழங்குறாங்க கேப்மாரி பில்டர்ஸ் . இன்னும் பதினைந்து நாட்ட்களில் நீங்க ரிஜிஸ்தர் பண்ணிங்கன்னா LCD டி.வி., பிரிட்சு , ஹோம் தியேட்டர் , மைக்ரோ ஓவன் , ஆட்டோமேடிக் வாசிங் மெசின் என நிச்சைய பரிசுகள் உண்டு .


Friday, July 30, 2010

பதிவுலகில் டான் (சே .. நான் )

////பட்டாப்பட்டி said.....
நீங்களா எழுதினா....... நல்லாயிருக்கும்.. இல்ல ஆயுத முனையில, எழுதவைக்கவேண்டி வரும் ...சொல்லிப்புட்டேன் மக்கா...///

அன்பான பிளாகர்களே இந்த மிரட்டலுக்கு பயந்தவன் நான் இல்லை , நாங்கள் பார்க்காத ஆயுதமா ?., இல்லை சிறைச்சாலையா? (வாய மூடுடா பரதேசி , நீயே மாட்டிகுவ போல ) , எதையும் தாங்கும் இதயம் இது , எந்த சர்வாதிகாரத்துக்கு பயப்பட மாட்டோம் என்றாலும் மக்கள் நலனுக்காக இந்த பதிவு .....

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
அதுதான் அங்கேயே தோன்றுதே அப்புறம் என்ன பெரிய்ய ஜட்ஜு மாதிரி கேள்வி ?


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

சொந்தப்பேறு வச்சா போலிசு புடிச்சுக்கும் , நம்மள இன்டர்நேசனல் அளவுல தேடுறாங்க .

ஹி,ஹி,ஹி அது வந்து இந்த பேர சும்மாதான் வச்சேன் . அப்புறம் நான் ஏதோ கடன் காரனுகளுக்கு பயந்துகிட்டு வச்சேன்னு நினைச்சுகாதிக (மங்கு வலை விரிக்கிறாங்க மாட்டிக்காத )

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

இப்படித்தான் கொஞ்சம் கண்புயூஸ் ஆகித்தான் வச்சேன்







4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலமா ? நானா ? ஓகே ,ஓகே அதுவந்து நமிதாவ வச்சு கடைய தொறந்தேன் , அப்புறம் கஸ்டமர்களுக்கு ஒரு பதிவு படிச்சா ஒரு பதிவு பிரீ அப்படின்னுஆஃபர் குடுத்தேன் , ஆடித்தள்ளு படியா 50 % டிஸ்கவுன்ட் குடுத்தேன் , (அதாவது பாதி பதிவு படிச்சாலே போதும் ).

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து
கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை
என்றால் ஏன்?
அந்த கதைய ஏன் கேட்குரிக்க ?
"சரி கேட்கல விடு "
என்னாது?? இருங்க, இருங்க சொல்றேன் , ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே கோபபடுரீக .....
அது வந்து சில நிகழ்சிகள போட்டு , அதுல பாதிக்கபட்டவுங்க இன்னும் என்னை தேடிகிட்டு இருக்கிறதா கேள்வி ....அதுக்குத்தான் நான் இப்ப மரு வச்சு , கூலிங்கிளாஸ் போட்டு மாறுவேசத்துல திரியிறேன்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஆக்சுவலா நான் வந்து பிளாக் மணிய ஒயிட் மணி (இந்த மணிங்கிறது யாருன்னு காவாளித்தன்மா கேட்டக கூடாது ) ஆக்கத்தான் பிளாக் ஆரம்பிச்சேன் . பதிவு போட்டு அது தோல்வி அடஞ்சிருச்சு அதுனாலா நஷ்டம்னு கணக்கு காட்டத்தான் .

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில்
எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

நான் இதுவரைக்கு 44 பதிவுக்கு சொந்தக்காரன் , இது கூட 45 வது பதிவு .........
"அடிங் ங் ...... .......... ............... "
ஸ்டாப் , ஸ்டாப் ... ஓ... நீங்க பிளாக்க எத்தனைன்னு கேட்டிகளா? அப்படி முதல்லே தெளிவா கேட்கணும் , அத விட்டு இப்படி டோட்டல் பேமிலிய டேமேஜ் பண்ணக் கூடாது . இம்... ஒன்னு தாங்க .

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
அம்மா சார் , இங்க மங்குனி அமைசர் அப்படின்னு ஒரு மரண மொக்க பதிவர் இருக்கான் சார் , அவன் பதிவ படிச்சு வந்த கோபத்தில ஆறு பேர கொலை பன்னிருக்கேன்னா பாத்துகங்க . படுகாலி அவன் மட்டும் என் கைல கிடச்சான் ........


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்?
பாராட்டியதா ??? முதல் பதிவுல ஆரம்பிச்ச கொலை மிரட்டல் இன்னும் நிக்கல இதுல பாராட்டு வேறையா ?


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு
தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...


பாஸ்
"என்னது பாஸ்-ஆ? , இங்க என்ன குயிஸ்-ஆ நடக்குது, ஒழுங்கா பதில் சொல்லுயா "
சரி ,சரி இதோ பாருங்க மக்களே போய் புள்ளகுட்டிகள படிக்க வையுங்க , படிச்ச உடனே பிளாக் ஆரம்பிச்சு எனக்கு பாலோவர் ஆகச்சொல்லுங்க . (நாடு விளங்கிடும் )

Wednesday, July 28, 2010

பதிவுலகத்துக்கு செய்வினை செய்துட்டாங்க

மே 13 , நூறு பாலோவர்ஸ் வந்ததுக்கு நன்றி சொல்லி பதிவு போட்டேன் , மீண்டும் இருநூறு பால்லோவர்சுக்கு நன்றி சொல்லி பதிவு போடவைத்த அனைவருக்கு நன்றி .

சும்மா ஒரு பார்மாலிட்டிக்காக சொல்லலைங்க , உண்மையிலேயே உங்களது பின்னூட்டமும் , உங்களுடைய வருகையும் தான் எனக்கு ஊக்கமளிக்கிறது .

இப்படிக்கு ..
நன்றி சொல்லி ஆளை கவுத்துவோர் சங்கம்

-----------@@@@@@@-----------


வணக்கம் , இன்றைய செய்திகள் ......

மங்குனி அமைச்சருக்கு உலகமெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன . மேலும் திங்கள் செவ்வாய் , புதன் , வியாழன் , வெள்ளி , சனி, ஞாயிறு போன்ற கிரகங்களிருந்து வாழ்த்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன . அதிலும் புதன் கிரக மக்கள் மங்குனி அமைச்சரை தங்கள் கிரகத்திக்கு வந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர் . (மங்கு இதுல எது உள்குத்து இருக்கு , இந்த இருக்க எவனோ தான் உன்னைய தொரத்திவிட இப்படி பொரலிய கிளப்பிருக்கான் "பி கேர்புல் "). மன்குவின் எதிர் கட்சியை சேர்த்தவர்கள் அவர்களது கட்ச்சியை கலைத்து விட்டு மன்குவின் கட்ச்சியில் இணைந்து விட்டதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன . மேலும் ..............................

இப்படிக்கு....
தமக்கு தாமே ஜால்ரா போட்டுகொள்வோர் சங்கம்

-----------@@@@@@@-------------


யாரோ பதிவுலகத்துக்கு செய்வினை செய்துட்டாங்க போல ? ஒன்னும் சுருசுருப்பையே காணோம் ? பதிவுலகமே ஒரு மந்த நிலைக்கு போயிடுச்சு? . இந்த ஒரு வாரம் பத்து நாளா ரொம்ப டல்லா இருக்கு .அதிலையும் நம்ம குரூப் ரொம்ப மோசம் . அதுக்கு தகுந்தா மாதிரி சுவாரசியமான நியுஸ் ஒன்னும் இல்லை. எனவே நண்பர்களே ஏதாவது புது பிரச்சனைய உண்டாக்குங்கள், இல்ல பேசாம ரெண்டு குரூப்புக்கு சண்டை இழுத்து விடுங்கள் .

வாழ்க ஜனநாயகம்


இப்படிக்கு
அடுத்தவுங்களை ஏத்திவிட்டு வேடிக்கை பார்ப்போர் சங்கம்

-------@@@@@@-------



பப்ளிக் : ஏண்டா பன்னாட மங்குனி , இதெல்லாம் ஒரு பதிவா ? இப்படி கேவலமா மொக்க பதிவு போட்டா எப்படிடா பதிவுலகம் உருப்படும் ?

இப்படிக்கு....
சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்வோர் சங்கம்


---------@@@@@--------


டிஸ்கி : பாருங்க சார் , பப்ளிக் அப்படிங்கிற பேர்ல யாரோ என்னோட எதிரி சதி பண்ணிருக்கான் , நீங்க ஒன்னும் கண்டுக்காதிங்க

இப்படிக்கு....
பேசியே சமாளிப்போர் சங்கம்



Friday, July 23, 2010

திருட்டுப்பதிவு

என்ன அநியாயம் இது , ஒரு வாரம் லீவில் சென்று வருவதற்குள் எங்கு பார்த்தாலும் திருட்டு கொள்ளை . நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது , காவல்துறை கையாலாகாமல் போய்விட்டது . நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை . (பார்ரா பெரிய்ய கண்டுபுடிப்பா இருக்கே ?)

பா.மு.க அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது? (இம் .... பிள்ளையார் கோவில்ல உண்ட கட்டி சாப்டுகிட்டு இருக்கு )

மன்னர் அந்தப்புரமே கதியாய் கிடக்கிறார் (கொடுத்து வச்ச மனுஷன் ) , நாட்டை பாதுகாக்க வேண்டிய ராணுவ அமைசர் காதல் வலையில் விழுந்துள்ளார் (உனக்கு ஏன் வயிறு எரிது?) . மற்றொரு முக்கிய அமைச்சரோ ஆணி புடுங்குவதில் பிசியாக உள்ளார் . இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் ?

எங்கும் கொள்ளை , திருட்டு . காவல் நிலையத்தில் திருடுபோயுள்ளது . மற்றும் மற்றொருவரது கடையே திருடப்பட்டுள்ளது .

திருடர்களுக்கு பகிங்கர எச்சரிக்கை விடுக்கிறேன் (ஆமா இவரு பெரிய்ய பா.சிதம்பரம் , வந்துட்டாரு !!!!!)

இனி உங்கள் கைவரிசை இங்கு பலிக்காது . கூடிய விரைவில் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். பின் கடுமையான தண்டனை வழங்கப்படும் . (இருடி உனக்கு ஆப்பு வக்கிறேன் )

திருடர்களே தைரியம் இருந்தால் பிளாக்கை திருடிப்பாருங்கள் ?
(ஆமா இது பெரிய்ய மைசூர் மகாராஜா பேலஸ் ? இத திருடிட்டாலும் .......).

பிளாக் என்ன இதில் இருக்கு ஒரு பதிவை திருடிப்பாருங்கள் ?
(அட தொங்குனா கொடுக்கா , மனசுல நீ என்னடா நினைச்சுகிட்டு இருக்க? )

திருடினால் உங்கள் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டு , பின் கழுவில் ஏற்றப் படுவீர்கள் . (திருடர் சார் , திருடர் சார் , இதெல்லாம் சும்மா ஒல ஒலாயிக்கு , நான் டம்மி பீசு , நீங்க பாட்டுக்கு டென்சனாகி என் பிளாக்கில எதுவும் கைவச்சுடாதீக)

போடா பொறம்போக்கு , நீ ஓசியா கொடுத்தாலும் ஒரு பய வாங்கமாட்டான் .

டிஸ்கி : இந்தப்பதிவு இந்தப்பதிவு மங்குனி அமைச்சரிடம் திருடியது (இப்ப எப்படி திருடுவிக , இப்ப எப்படி திருடுவிக .......................)

நண்பர்களே நாடு இருக்கும் நிலையில் இந்த பதிவை கூட யாரும் திருட வாய்ப்புள்ளது , எனவே என்னை மாதிரி நீங்களும் இப்படி டிஸ்கி போட்டு வையுங்கள் . யாராவது திருடினால் ஈசியாக கண்டுபிடித்து விடலாம் . எப்படி நம் லாவகமான சிந்தனை ????
--------@@@@@--------

ஓகே , பிரண்ட்ஸ் இப்ப மேட்டருக்கு வருவோம் , இப்பஎல்லாம் அடுத்தவுக பதிவ திருடி போடுவது ஃபேசன் ஆயிடுச்சு . அதுனால நானும் மேல உள்ள பதிவ ஒரு பதிவர்ட இருந்து திருடி போட்டு இருக்கேன் . எங்க யாரு அந்த பதிவர்ன்னு கண்டுபிடிங்க பாக்கலாம் ??????

கண்டுபிப்பவர்களுக்கு முதல் பரிசாக டோனி கூட நாயர் கடை டீயும் , கிட்டிபுல்லையும் விளையாட வாய்ப்பு ........

Saturday, July 17, 2010

என்னுடைய பதிவுகளிலேயே மிகச்சிறந்த பதிவு

அனேகமா என்னுடைய பதிவுகளிலே இந்த பதிவுதான் மிகச்சிறந்த பதிவா நீங்க தேர்ந்தெடுப்பின்கன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா அந்த அளவுக்கு நீங்க எதிபார்க்குற விஷயம் இதுல இருக்கு . அனேகமா என்னுடைய பதிவுகளில் இததான் நீங்க நம்பர் ஒன் பதிவா ஆகிடுவீங்க . இனிமே இதே மாதிரி பதிவு அடிக்கடி போடசொல்லுவிங்க.

"இதை படித்து விட்டு அனைவரும் ஆனந்த கூத்தாடுவீர்கள் . பதிவுலகமே சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போகும் ."


இந்த பதிவ நம்ம பட்டாபட்டிக்கு மெயில் அனுப்பி கருத்து கேட்டேன் , அவருடைய பதில்


//பட்டாப்பட்டி said ...மங்கு இந்த மாதிரி ஒரு அருமையான பதிவைத்தான் நானும் மற்றவர்களும் எதிர்பார்த்தோம் . பதிவுலகமே இதை பார்த்து சந்தோசப்படும்.

இந்த பதிவு உனக்கு எல்லா ஒட்டு பட்டையிலும் தலா மினிமம் 100 ஓட்டுகளாவது கிடைக்கசெய்வது உறுதி . குறைந்தது 200 கமண்ட்ஸ் ஆவது வரும். இதை படிக்கும் அனைவரும் உனக்கு பாலோவர் ஆகி , உனது பாலோவர்கள் எண்ணிக்கை வின்னைதொடும் . இதே மாதிரி வாரம் ஒரு பதிவை எதிபார்க்கிறோம் .

வாழ்த்துக்கள் , வாழ்த்துக்கள் , வாழ்த்துக்கள்.

///

அந்த சிறப்பு மிக்க பதிவு இதோ.......

ஒரு வாரம் விடுமுறை

டும் ,டும், டும்,..............இதனால் சகலமான பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் 18/07/2010 முதல் 23/07/2010 வரை நமது அமைசர் விடுமுறையில் செல்கிறார் , எனவே அந்த தேதிகளில் அமைசர் அவைக்கு வரமாமாமாட்டார்ர்ர்ர் ....................... என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் . எனவே மற்றவர்கள் மங்குனி அவைக்கு வழக்கம் போல் வந்து தங்கள் பணிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள் .



பப்ளிக் : அட்ரா அவன , அட்ரா அவன .. தக்காளி லீவுல போறதுக்கு என்னா பில்டப்பு , பிக்காளி பய..... விடாதிங்கடா அடிங்கடா ......

"ஐயோ அம்மா , அடிக்காதிங்க, அடிக்காதிங்க .....

ஸ்டாப் இட் ....

சின்னபுள்ள தனமா இருக்கு?? பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் "


டிஸ்கி : எல்லாத்துக்கு உச்சி குளுந்திருக்குமே . இடைல வந்து உங்க காமன்ட்சுக்கு பதில் போடுறேன் (ஆமா , உன்பதில கேட்டு யாரு அழுதா இங்க ) . நீங்க உங்க கடமைய செய்ய மறந்துடாதிங்க

Thursday, July 15, 2010

கல்லூரி கலாட்டா (ஆப்பு தான் )

எங்க காலேஜுல வருசத்துக்கு ஒரு வாட்டி ஏதாவது தமிழ் படம் ஒன்னு போடுவாங்க . (நல்ல காலேஜா இருக்கு போல ?) .

ஆடிடோரியத்துல ஸ்கிரின் வச்சு , சின்ன ப்ரொஜெக்டர் வச்சு போடுவாங்க .( வெங்காயம் நீ மேட்டர சொல்லு, எங்களுக்கு தெரியும் , எங்க ஊர் திருவிழாவுல பாத்திருக்கோம் )

காலைல புல்லா லேடிஸ் , அவுக வீட்டுக்கு போனப்புறம் மதியம் பசங்களுக்கு (அப்பவே என்னா வில்லத்தனம்? ).


நான் யு.ஜி செகண்டு இயர் படிக்கும்போது அந்த வருட சினிமா "சின்னத்தம்பி" ( நீங்களே விசில் அடித்து கொள்ளவும் ) , வழக்கம் போல காலைல லேடிஸ் எல்லாம் படம் பாத்திட்டு கிளம்பினாங்க , நானும் பிரண்டு சிவாவும் வழக்கம் போல எங்க பிகருகள கொண்டுபோய் வீட்ல டிராப் பன்னிட்டு(அட சைக்கிள்ல பின்னாடியே போவம்ங்க ) திரும்ப வந்தோம் .

"அப்போ காலேஜுல போயி இந்த செகுரிடி வேல பாத்திகளா ??"
"நாயிக்கு தெரியுமா ஒரு சந்தி பானை , கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசன (அடபழமொழி , திட்டாத விடுப்பா ஒரு புலோல வந்திருச்சு ) . "

சரி காலேஜ் உள்ள போறத்துக்கு முன்னாடி ஒரு "டீ" சாப்பிடலாம்ன்னு "டீ"கடைல போய் "டீ" சாப்ட்டுகிட்டு இருந்தோம் . ( பன்னாட "டீ" போய் "டீ" கடைலசாப்பிடாம அப்புறம் பர்னிச்சர் கடையிலையா போய் "டீ" சாப்பிடுவாங்க,.... உஸ்....... அப்பா எத்தின "டீ" )

திடீர்ன்னு நம்ம பிரண்டு ஒரு பய பின்னங்கள் பிடரில அடிக்க தப தபன்னு ஓடிவந்தான் , அவனுக்கு பின்னாடியே காலேஜ் வாட்ச்மேன் ரெண்டு பேருஅப்புறம் நம்ம எதிரி குரூப் பசங்க ரெண்டு பேரு தொரத்திகிட்டே வந்தாங்க , வந்தவனுக நம்ம பிரண்ட புடிச்சு தரதரன்னு காலேஜுக்குள்ள இழுக்கஆரம்பிச்சானுக , நாங்க ஓடிப்போயி என்னன்னு கேட்குறதுக்குள்ள அடிதடிஆகிப்போச்சு , நம்ம பயல அடிச்சா விடுவமா ?

நாங்களும் அடிக்க ஆரம்பிச்சோம் திடீர்ன்னு "ஸ்டாப் இட்" ன்னு சத்தம், எவ அவன்னு திரும்பி பார்த்தா ???

பிரன்சிபால் மற்றும் ஏழு டிபார்ட்மன்ட் H.O.D எல்லாம் புடைசூழ நிக்கிறாங்க , நேரா எங்க அஞ்சு பேத்தையும் பிரின்சிபால் ரூமுக்கு கூப்ட்டு போய் நாலு நாள் சஸ்பென்ட் பண்ணாங்க. ( நாங்க ரெண்டுபேரு , ஓடிவந்த நம்ம பிரண்டு எதிரிகுரூப் பசங்க ரெண்டுபேரு).


சரின்னு நம்ம பயல தனிய கூப்ட்டு என்னடா நடந்திச்சுன்னு கேட்டா , சின்னத்தம்பி படத்துல போவோமா ஊர்கோலம் பாட்டு ஓடும்போது இந்த நாதாரி உணச்சிவசப்பட்டு வேகமா ஓடிப்போய் குஸ்புவுக்கு முத்தம் குடுத்திருக்கு , அப்பஸ்க்ரீன் கீழ விழுந்திடுச்சு , இது பயந்து போய் ஓடிவந்திருக்கு அவனுகளும் என்னமோ ஏதோன்னு தொரத்திருக்கானுக .

இந்த நாயிஅங்கே இருந்திருந்தா பேச்சு வார்த்தையிலேயே பிரச்சனை முடிச்சிருக்கும் . (அடிதடி நடக்கு போது காலேஜ் பியூன் ரெண்டுபேருக்குஅடிவிளுந்திருக்கு அதுதான் சஸ்பென்சன் .)

இதுக்கு பேருதான்

"தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டும் "

அப்படின்கிறதோ
??? (அட மங்கு இன்னைக்கு என்னடா ஒரே பழமொழியா இருக்கு? அசத்துடா ?)







Monday, July 12, 2010

பட்டாப்பட்டி vs மங்குனி T .V .

சரி சரி , எல்லாம் ரெடியாகுங்க இன்னைக்கு பிரபல தொழிலதிபர் சே...... பிரபல பிளாகர் பட்டாபட்டிய பேட்டி எடுக்கிறோம் , அவரு கரக்ட்டா பதினோருமணிக்கு வந்திடுவார் ஸ்டுடியோவ ரெடி பண்ணுங்க.

(என்னது ஸ்டுடியோவா ??? பத்துக்கு பத்து ரூம் ஒன்ன வச்சுகிட்டு ஸ்டுடியோன்கிறான். யோவ் பஸ்ட்டு சம்பளத்த குடு , வேலைக்கு சேந்துமூணுமாசம் ஆச்சு இன்னும் ஒருவாட்டிகூட சம்பளம் தரல, வெங்காயம் இதுபேசுற பேச்ச பாரு )

"கேமராமேன் எங்க ? ஏம்பா கேமராவ ரெடியா வச்சுக்க?"

"என்னது கேமராவா ? சார் ரிகார்ட் பண்ண பிலிம் இல்லை"

"பிலிம் இல்லையா ? சரி சரி எல்லாத்துக்கும் கம்பனில இருந்து மொபைல் வங்கி கொடுத்தமே அதுல, கேமரா மொபைல் இருக்கா ? அத வச்சு அட்ஜஸ் பண்ணிக்கலாம் ".

"சார் , நீங்க வாங்கி குடுத்த 500 ரூபா மொபைல்ல கேமராவெல்லாம் இல்லை."

"அப்படியா ? அப்ப நம்ம ஓனர் ப்ளாக் போ அங்க அவரு ஒரு நோக்கியா கேமரா மொபைல் வச்சுருப்பாரு , அத வாங்கிட்டு வா ".

"வர்ற பட்டாப்பட்டி பெரிய V.I.P. , எல்லாம் கரக்ட்டா இருக்கணும் , அந்த போகஸ் லைட் எடுத்து கரக்ட்டா பிக்ஸ் பண்ணுங்க"

"சார் , சார் இருந்த ஒரு போகஸ் லைட்டையும் சேட்டு கல்யாணத்துக்கு வாடகைக்கு குடுத்திட்டோம் ."

"சரி சரி மானத்த வாங்காதிங்க , பக்கத்து கடைல போய் ஒரு பெடோமாக்ஸ் லைட் வாடகைக்கு வாங்கிகிட்டு வாங்க ."

"சார் , அவுங்க பழைய பாக்கி 137 ரூபா குடுத்தாதான் பெடோமாக்ஸ் லைட் தருவாங்களாம் ."

"அப்படியா , சரி இருக்க நாலு டியுப் லைட்டையும் போடுங்க ".

"யோவ் , பில்லு கட்டலன்னு .பி காரன் போன வாரமே பீச புடுங்கிட்டு போய்ட்டான்"

ஓகே ,ஓகே பேட்டிய மொட்ட மாடில வச்சுக்கலாம் . (தக்காளி இன்னைக்கு எப்படியும் பட்டாப்பட்டி கிட்ட ஒரு 10000 ரூபா டொனேசன் வாங்கிடனும் )

>>>>@@@@<<<<

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக , ப்ளாக் ஆரம்பித்து சில மாதங்களே ஆன, அதற்குள் பிரபலம் அடைந்த உங்கள் பிரபல பதிவர் திரு.பட்டாப்பட்டி அவர்களின் பேட்டி இப்பொழுது ஒலிபரப்பப் படும் .

இரண்டு வாரங்களில் பேட்டிக்கு இடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து பரிசுகளை வெல்லுங்கள் .

முதல் பரிசாக போயிங் 747 நேயர்களேபஸ்
இரண்டாம் பரிசு சொகுசுக் கப்பல்
மற்றும் பல நூறு விதமான பரிசுகளை வெல்லுங்கள் ..........

@@@@@***@@@@@


"வணக்கம் திரு .பிரபல தொழிலதிபர் சே... பிரபல பதிவர் பட்டாப்பட்டி அவர்களே

"வணக்கம், வணக்கம்"

நீங்க எப்படி பிரபல பதிவரானிங்க?

(அடப்பாவிகளா வந்ததும் டீ தருவானுகன்னு நினைச்சேன் , இவனுக தண்ணிகூட குடுக்கலையே , இன்னைக்கு எப்படியும் இவனுககிட்ட டீ குடிக்காம போககூடாது ) அது வந்து சார் , நான் சின்ன வயசுலே ஸ்கூல்ல பக்கத்து பிகர் கிட்ட ஹேர் கிளிப்பு, ரப்பர் பேண்டு , பென்சில் இப்படி பொருட்கள திருடி கொஞ்சம் கொஞ்சமா பிரபலமானேன். அப்புறம் கடைய தொறந்து வச்சா ஒரு பய வரல, என்னடாபன்றதுன்னு யோசிச்சு அப்புறம் ப்ளாக் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பிரபலமான நம்ம மங்குனி அமைசர் ப்ளாக் இருந்த பதிவுகள திருடி என் கடைல வச்சேன் நல்லா வியாபாரம் சூடுபிடிச்சு இப்போ பிரபலம் ஆகிட்டேன்

நேயர்களே நீங்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பட்டாப்பட்டி அவர்களின் பேட்டி அடுத்த வாரம் தொடரும் , நன்றி வணக்கம்