காலைல ஆறுமணிக்கு எழுந்து ..........
"ஹேய் இரு,இரு,இரு, ஆமா நீ என்ன கருமத்துக்கு ஆறுமணிக்கு எழுந்த ?"
ஷட்டில் விளையாட , ஹேய் பேசிகலி ஐ எம் எ ஸ்போட்ஸ் மென் யா .
"அடிங்... நாதாரி நாயே பாத்திரம் கழுவி ,வீட்ட கூட்டி, பையன ஸ்கூலுக்கு ரெடிபண்ணி அனுப்பனும் , அதுக்குத்தான உன்னோட வீட்டுக்காரம்மா மூஞ்சில சுடுதண்ணிய ஊத்தி எழுப்பிவிட்டுச்சு . "
"அடப்பாவிகளா ஊருக்கே தெரிஞ்சுபோச்சா ? சரி விடு மேட்டருக்கு வர்றேன் "
"வா "
காலைல ஆறுமணிஎழுந்து பல்லு விளக்காம வீட்டுக்காரம்மா குடுத்த டீ சாப்டுகிட்டே
" மறுபடியும் ஸ்டாப் "
"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......... இப்போ என்ன ?"
"உனக்கு வீட்டுல டீயெல்லாம் போட்டு தர்றாங்களா ?"
" நானா போட்டுக்கிட்டது தாண்டா, ஐய்யோ சாவடிக்கிரானுகளே , சொல்ல வந்தத சொல்ல விடுங்கடா "
"சரி சொல்லு "
காலைல ஆறுமணிஎழுந்து பல்லு விளக்காம வீட்டுக்காரம்மா குடுத்த டீ சாப்டுகிட்டே பால்கனிலருந்து கீழ பாத்தா கீழ் போர்சன்ல இருக்க நம்ம கண்ணன் பைக்ல வந்து சேர்ந்தான் . அந்த பயபுள்ள ரெகுலரா இந்த நேரத்துல வாக்கிங் போற ஆளு ..........
"என்ன கண்ணா இந்நேரத்துல வாக்கிங் போகாம பைக்ல எங்க போயிட்டு வர்ற ?"
"இல்லைண்ணே இன்னைக்கு சீக்கிரம் ஆஃபீஸ் போகணும் , நடந்து வாக்கிங்(?) போனா லேட் ஆகும் அதான் பைக்லே வாக்கிங் போயிட்டு வந்துட்டேன் "
# இப்படி ஒரு பிரண்டு தேவையா மச்சான் ?