எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, May 19, 2010

லஞ்சம் , லஞ்சம் , ஊரெல்லாம் லஞ்சம்

கனவு , ஒரு நாள் நிஜமாகும் ..... என்கிற தலைப்பில் பட்டாப்பட்டி ஒரு பதிவு போட்டு அவருக்கு நம் சமுதாயத்தின் மேல் உள்ள கோபத்தை மிக காட்டமாக கூறியிருந்தார் .....

அதை பற்றி எனது கருத்து......

லஞ்சம், பெட்ரோல் விலை இவை இரண்டையும் எந்த ஒரு நாடு கட்டுக்குள் வைத்திருக்கிறதோ அது தானாகவே முன்னேறிவிடும்.

லஞ்சம் எங்கே ஆரம்பமாகிறது ? (இப்ப எல்லாம் பிறக்கும் போதே லஞ்சம் குடுத்து தான் பிறக்க வேண்டி உள்ளது , எல்லா அரசு பொது மருத்துவமனைகளிலும் லஞ்சம் குடுத்தால் தான் பிரசவம் பார்கிறார்கள் ) .

நமது தேவைகள் அவசரமாகும் போது . உதாரணமாக,
நமக்கு ஓட்டுனர் உரிமம் , கடவுச்சீட்டு ( அட தூய தமிழ், மங்கு அசத்துடா ) இவற்றை பெற இரண்டு நாள் அலைய நேரமில்லை (நாம் நேராக சென்றால் நிச்சயம் லஞ்சம் இல்லாமல் காரியம் முடியும்) , நேராக முகவர்களிடம் செல்கிறோம் , முகவர்கள் வேலை விரைவில் முடிய லஞ்சம் கொடுகிறார்கள் . அதுமட்டும் அல்லாது அரசு கேட்டுக்கும் சான்றிதல்கள் தர இயலாதவர்கள் இன்னும் அதிகமாக லஞ்சம் கொடுக்க முன் வருகிறார்கள். இப்பொழுது அரசு அதிகாரிகள் மட்டுமல்ல , மக்களும் லஞ்சம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.

எங்க ? ஏன் ? எதற்கு ? எப்படி ?
(நிறுத்து நிறுத்து , ஏன் இந்த டென்சன் கோபம் )

ஒட்டு போடத்தான் .

இருபது கோடி செலவு செய்து வெற்றிபெறும் சட்டமன்ற உறுப்பினர் ,
என்ன செய்வார் ?
????????
( ம் ம்ம்ம்ம்.... தெருவுல நாய்
குறைக்கும் போது , பக்கத்து கோயில்ல உண்ட கட்டி வாங்கி சாப்புடுவாறு)

இவற்றை சரி செய்ய என்ன வழி?

(ஒன்னியும் பன்னமுடியாது .
)

சட்டத்தை கடுமையாக்கனும்.

அது அவ்வளவு சாதாரணமாக முடியாது
, ஏன் ?

வளைகுடா நாடுகளில் சட்டம் மிக கடுமையானது , அது போன்று கடுமையாக்க நாம் நம் சமுதாயத்தை ஆணி வேரிலிருந்து சரிசெய்ய வேண்டும் , நமக்கு பிறந்ததிலிருந்து உணவு , உடை , தங்குமிடம் , பாசம் அனைத்தும் தானாகவே கிடைத்து விட்டன , வளர, வளர நாகரீகம் சொல்லிக்கொடுக்கப்பட்டு எது சரி , எது தவறு , எது குற்றம் என்பது தெளிவாக சொல்லிகொடுக்கபடுகிறது .நமக்கு இந்த கடுமையான சட்டங்கள் பொருந்தும் .

ஆனால் ?????

சென்டல் , எக்மோர் ரயில் நிலையங்கள் , குப்பை மேடுகள் போன்ற வற்றில் அனாதையாக திரியும் சிறுவர்கள் , அவர்களுக்கு உடை இல்லை, தங்குமிடம் இல்லை , பாசம் இல்லை , இருப்பது எல்லாம்........

பசி, பசி ,பசி ???


முதலில் திருட ஆரம்பிகிறார்கள் , பின்பு ரவுடியிசம் , மாமூல் , கட்டபஞ்சாயத்து ............................................ (மங்கு ரொம்ப யோசிக்காத , மூளைக்காய்ச்சல் வந்திட போகுது )

இவர்கள் செய்யும் தவறுக்கும் அந்த கடுமையான சட்டம் பொருந்துமா ???????

லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது எல்லாம் ஒருவித திருட்டு தான் , அவனுக்கும் , பசிக்காக திருடுபவனுக்கு ஒரே தண்டனை கொடுக்க இயலுமா ??????

எனவே ஆணிவேரிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது ஏன் கருத்து , உடனடியாக முடியாது மிக நீண்ட காலம் ஆகலாம் , அனால் இப்பொழுதே அந்த வேலை ஆரம்பிக்க படவேண்டும் ,

அதை யார் செய்வது ?
வேறு யார் அரசாங்கம் தான் .

எந்த அரசாங்கம் ?
தொகுதிக்கு இருபது கோடி செலவு செய்து வெற்றி பெரும் அரசு.

ஏன் இருபது கோடி செலவு செய்கிறார்கள் ? நம்ம மக்கள் லஞ்சம் கேட்பதால். (பாஸ் முன்னாடி தான் பாஸ் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தார்கள் , இப்ப எல்லாம் மக்களே கேட்க ஆரம்பிச்சுடாங்க )

பட்டாப்பட்டி :ங்கொய்யாலே..... பைனலா நீ என்னா சொல்ல வர்ற ?
....ம்ம்ம்..... சென்னைல நேத்து நைட்ல இருந்து நல்ல மழை

71 comments:

மங்குனி அமைச்சர் said...

முத்து , கரிகாலன் உங்க கருத்தை மட்டும் சொல்லுங்கள் , அடுத்த பதிவுல கும்மியடிசிகலாம்

Ahamed irshad said...

லஞ்சத்த பற்றி சொன்ன ஷங்கர் படத்துக்கே ப்ளேக்'ல டிக்கெட் வாங்கிட்டு போன ஆளுங்க பாஸ் நாம..

பருப்பு (a) Phantom Mohan said...

சின்ன சின்ன அலட்ச்சியங்கள் மாபெரும் தவறுக்கு வழி வகுக்கும்...
நம்ம மேல தப்ப வச்ச்க்கிட்டு அடுத்தவன குறை சொல்றத முதல்ல நிப்பாட்டனும்...இதப் பத்தி தான் ஒரு பதிவு போட கொஞ்சம் எழுதி வச்சிருக்கேன்..கூடிய சீக்கிரம் என் கருத்தை நான் பதிவு செய்கிறேன்...

ஓவர் ஆல், தண்டனைகள் கடுமையானால் தான் தப்புகள் குறையும்

ஜெய்லானி said...

//ங்கொய்யாலே..... பைனலா நீ என்னா சொல்ல வர்ற ?//

ஒன்னும் பண்ண முடியது . முதல்ல சி பி ஐ சுதந்திரமா இயங்கனும் . போலீஸ் அரசியல் வாதிக்கு சல்யூட் அடிக்கக்கூடாது . கலெக்டர் அமைச்சருக்கு கார் கதவை திறக்ககூடாது. தப்பு பண்ணுர அரசியல் வாதிக்கு மனுசனே தண்டனை தரனும்.


இது நடக்குமா ??????

க‌ரிச‌ல்கார‌ன் said...

//பட்டாப்பட்டி :ங்கொய்யாலே..... பைனலா நீ என்னா சொல்ல வர்ற ?//

அதே

க‌ரிச‌ல்கார‌ன் said...

//சட்டத்தை கடுமையாக்கனும். //

கோடிக்க‌ண‌க்குல‌ ல‌ஞ்ச‌ம் வாங்குற‌வ‌ன‌ ஒண்ணும் புடுங்க‌ முடியாது.தெருக் கோடியில‌ வாங்குற‌வ‌ன‌ தான் பிடிச்சு க‌ண‌க்கு காட்டுவாங்க‌

Unknown said...
This comment has been removed by the author.
S Maharajan said...

//பட்டாப்பட்டி :ங்கொய்யாலே..... பைனலா நீ என்னா சொல்ல வர்ற ?
....ம்ம்ம்..... சென்னைல நேத்து நைட்ல இருந்து நல்ல மழை//

HA HA HA HA சிரிச்சு முடியல அமைச்சரே!
மகாராஜன்: இனிமேல் நம்ம மக்கள் லஞ்சம்வாங்காமலும்,கொடுக்காமலும்
இருக்க வேறு என்ன செய்யலாம்.
மங்குனி அமைச்சர் :எல்லாரையும் வரிசையா நிக்க வச்சு?
மகாராஜன்: நிக்க வச்சு??????????
?
?
?
?
?
?
?
மங்குனி அமைச்சர்: அட்வைஸ் பண்ணலாம்.(லஞ்சத்தால் ஏற்படுகின்ற தீமையை விளக்கலாம்)

மங்குனி அமைச்சர் said...

//அஹமது இர்ஷாத் said...

லஞ்சத்த பற்றி சொன்ன ஷங்கர் படத்துக்கே ப்ளேக்'ல டிக்கெட் வாங்கிட்டு போன ஆளுங்க பாஸ் நாம.. ///

ஹி,ஹி,ஹி நானும் தான்

மங்குனி அமைச்சர் said...

/// பருப்பு The Great said...

சின்ன சின்ன அலட்ச்சியங்கள் மாபெரும் தவறுக்கு வழி வகுக்கும்...
நம்ம மேல தப்ப வச்ச்க்கிட்டு அடுத்தவன குறை சொல்றத முதல்ல நிப்பாட்டனும்...இதப் பத்தி தான் ஒரு பதிவு போட கொஞ்சம் எழுதி வச்சிருக்கேன்..கூடிய சீக்கிரம் என் கருத்தை நான் பதிவு செய்கிறேன்...

ஓவர் ஆல், தண்டனைகள் கடுமையானால் தான் தப்புகள் குறையும்////


அதுதான் சரியான தீர்வு

மங்குனி அமைச்சர் said...

//// ஜெய்லானி said...

//ங்கொய்யாலே..... பைனலா நீ என்னா சொல்ல வர்ற ?//

ஒன்னும் பண்ண முடியது . முதல்ல சி பி ஐ சுதந்திரமா இயங்கனும் . போலீஸ் அரசியல் வாதிக்கு சல்யூட் அடிக்கக்கூடாது . கலெக்டர் அமைச்சருக்கு கார் கதவை திறக்ககூடாது. தப்பு பண்ணுர அரசியல் வாதிக்கு மனுசனே தண்டனை தரனும்.


இது நடக்குமா ??????/////


ஆனாலும் உனக்கு ரொம்ப பேராச ஜெய்லானி

மங்குனி அமைச்சர் said...

///க‌ரிச‌ல்கார‌ன் said...

//பட்டாப்பட்டி :ங்கொய்யாலே..... பைனலா நீ என்னா சொல்ல வர்ற ?//

அதே/////


அத்தான் நானும் யோசிசுகிட்டு இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

//க‌ரிச‌ல்கார‌ன் said...

//சட்டத்தை கடுமையாக்கனும். //

கோடிக்க‌ண‌க்குல‌ ல‌ஞ்ச‌ம் வாங்குற‌வ‌ன‌ ஒண்ணும் புடுங்க‌ முடியாது.தெருக் கோடியில‌ வாங்குற‌வ‌ன‌ தான் பிடிச்சு க‌ண‌க்கு காட்டுவாங்க‌////


ஒரு நியுஸ் : 200 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஒரு பியூன் 2 வருசமா சஸ்பென்சன்ல இருக்காராம் ,

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

//பட்டாப்பட்டி :ங்கொய்யாலே..... பைனலா நீ என்னா சொல்ல வர்ற ?
....ம்ம்ம்..... சென்னைல நேத்து நைட்ல இருந்து நல்ல மழை//

HA HA HA HA சிரிச்சு முடியல அமைச்சரே!
மகாராஜன்: இனிமேல் நம்ம மக்கள் லஞ்சம்வாங்காமலும்,கொடுக்காமலும்
இருக்க வேறு என்ன செய்யலாம்.
மங்குனி அமைச்சர் :எல்லாரையும் வரிசையா நிக்க வச்சு?
மகாராஜன்: நிக்க வச்சு??????????
?
?
?
?
?
?
?
மங்குனி அமைச்சர்: அட்வைஸ் பண்ணலாம்.(லஞ்சத்தால் ஏற்படுகின்ற தீமையை விளக்கலாம்)//////


எல்லாரையும் வரிசையா நிக்க வச்சு சுடனும் , அப்படிதானே சொல்ல வந்திக , புரியுது

settaikkaran said...

யாரு தப்புப் பண்ணினாலும் பண்ணட்டும்; நான் பண்ண மாட்டேன். நான் ஒருத்தனாவது இதுக்கெல்லாம் இணங்க மாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு கஷ்டப்படுறவங்க நிறைய பேர் இருக்காங்கண்ணே! அவங்க எண்ணிக்கை அதிகமாகணும். அதைத் தவிர வேறே தீர்வே கிடையாது! சரி, நாம மட்டும் ஏன் கஷ்டப்படணும், நாமும் ஓடுற தண்ணியிலே உருண்டுக்கிட்டுப்போவோமேன்னு உருள ஆரம்பிச்சா....?????? அது தான் நடந்துக்கிட்டிருது இங்கே!

நல்ல ஆதங்கம்தேன்! வேறே என்னத்தைச் சொல்ல...?

Chitra said...

. (மங்கு ரொம்ப யோசிக்காத , மூளைக்காய்ச்சல் வந்திட போகுது )


......எல்லோரும் யோசிக்கணும்..... குறிப்பாக அரசியல்வாதிகளும்..... லஞ்சம் வர காரணம்: "தான் மட்டும் நல்லா இருக்கணும், தனக்கு மட்டும் வேலை நடக்கணும் " என்கிற attitude. ஊஹும்..... மழையாவது பெய்தே.... அதுக்கும் லஞ்சம் கேக்குதா?

நாடோடி said...

//பசி, பசி ,பசி ???

முதலில் திருட ஆரம்பிகிறார்கள் , பின்பு ரவுடியிசம் , மாமூல் , கட்டபஞ்சாயத்து ............................................ (மங்கு ரொம்ப யோசிக்காத , மூளைக்காய்ச்சல் வந்திட போகுது )

இவர்கள் செய்யும் தவறுக்கும் அந்த கடுமையான சட்டம் பொருந்துமா ???????

லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது எல்லாம் ஒருவித திருட்டு தான் , அவனுக்கும் , பசிக்காக திருடுபவனுக்கு ஒரே தண்டனை கொடுக்க இயலுமா ?????//

க‌ண்டிப்பா பொருந்தும் அமைச்ச‌ரே... நீங்க‌ சொல்லுற‌ மாதிரி அவ‌ன் திருட‌ செய்யும் முய‌ற்ச்சியை ஒரு வேலை பார்க்க‌ முய‌ர்ச்சிக்க‌லாம்... உழைப்பில்லாம‌ல் சாப்பிட‌ முடியாது அமைச்ச‌ரே... இன்று என்ன‌வோ ந‌ல்ல வேலையில் இருப்ப‌வ‌ர்க‌ளும், ப‌டித்த‌வ‌ர்க‌ளும் குபேர‌ன் வீட்டில் பிற‌ந்த‌வ‌ர்க‌ள் இல்லை.. என்ப‌தை நீங்க‌ள் ஒத்து கொள்கிறீக‌ளா...

ஏன் க‌ட்ட‌ப‌ஞ்சாய்த்தோடு நிறுத்திவிட்டீர்க‌ள்... அத‌ன் பிற‌கு அர‌சிய‌லில் சேருகிறான்.. த‌லைவ‌ன் ஆகிறான்.. நாம் எல்லோரும் அவ‌ருக்கு ச‌லாம் வைத்து கொண்டு ஓட்டு போடுகிறோம்... அர‌சிய‌லில் வ‌ந்தால் அவ‌னுடைய‌ எண்ண‌ம் என்ன‌வாக‌ இருக்கும்?...

நாடோடி said...

//இவற்றை பெற இரண்டு நாள் அலைய நேரமில்லை (நாம் நேராக சென்றால் நிச்சயம் லஞ்சம் இல்லாமல் காரியம் முடியும்) , நேராக முகவர்களிடம் செல்கிறோம் , முகவர்கள் வேலை விரைவில் முடிய லஞ்சம் கொடுகிறார்கள் . ///

அப்ப‌டியாலால் அந்த‌ வேலையை ஒரு நாளில் செய்ய முடியும் தானே?... அப்புற‌ம் எதுக்கு இர‌ண்டு நாட்க‌ள் அலைய‌ வேண்டும்... அவ‌ன் ந‌ம்மிட‌ம் காசு எதிர்பார்த்து தானே இர‌ண்டு நாள் அலைய‌ விடுகிறான்.... அதை முன்ன‌ரே தெரிந்து கொண்டு ப‌ண‌த்தை கொடுத்து வாங்குப‌வ‌ர்க‌ளை எத‌ற்கு குறை சொல்ல‌ வேண்டும்?.... அவ‌னுடைய‌ வேலையே அதை செய்வ‌து தானே அமைச்ச‌ரே... உட‌னே முடித்து கொடுத்தால் ப‌ண‌த்தை கொடுக்க‌ நான் என்ன‌ முட்டாளா?...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்கு ரொம்ப யோசிக்காத , மூளைக்காய்ச்சல் வந்திட போகுது//

யோவ் ஜோக் அடிக்காத. மூளைக்காய்ச்சல் அது இருக்கிரவனுக்குதான் வரும்...

MUTHU said...

கருத்து..............
...
ம் ொல்லுறேன்,



சுதந்திரம் வாங்கும் போது எழுதிய சட்டத்தை,வைத்து கொண்டு அதுவும் அதில் ஒரு டேங்கர் லாரியே போய் வருகிற அளவுக்கு ஓட்டை இருந்தால் என்ன செய்ய முடியும்,
லஞ்சம் வாங்கினால் கை போகி விடும் என்கிற அளவுக்கு சட்டம் கடுமையாக்க படவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து

ஷர்புதீன் said...

:)

வால்பையன் said...

நியாயமான கேள்வி தல!, லஞ்சம் இருக்கும் வரை முழுமையான எந்த சலுகையும்/உரிமையும் மக்களுக்கு போய் சேராது!

Aba said...

உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. இன்றுதான் நான் பழைய பதிவுகளை வாசித்துவிட்டு வருகிறேன்.. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை!

இந்தப் பதிவு சீரியஸ்.. என் மனக்குமுறலை வார்த்தைகளில் வடித்து இருக்கிறீர்கள்.. நல்ல மொழிப் பிரயோகம். தமிழ்மொழியை அதற்குரிய கலை நயத்தோடு பயன்படுத்துவதில் இன்றைய வலைப்பதிவர்களில் உங்களை மிஞ்ச யாருமில்லை என்பது எனது தாழ்மையான "கருத்து"

(என்னா பாக்குறே? இதுதானே கருத்து?!?!) (இடையே என்னவோ மூளையைப் பத்தி வந்துதே... மூளைக்கு ஸ்பெல்லிங் தெரியுமாடி உனக்கு?)

இருந்தாலும் உன்னோட வார்த்தைய மதிக்கறேன்... அடுத்த பதிவுல சந்திப்போம்.. ஆ... அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்! என்னையும் முத்துவையும் விடு.. இடையில எவனோ "மங்குனி அமைச்சர்" னு வந்து நம்ம எல்லாரோட கமென்டுக்கும் ரிவிட் அடிக்கிறான்.. சொல்லி வை அவன்கிட்ட... இனிமே என்னோட இந்த ப்ளாக்ல அவன பாத்தேன்... தொலைச்சுடுவேன் தொலைச்சி ஆமா..

(எலேய் மக்கா.. இருக்குறவனுக்கு ஒரு பிளாக்கு.. இல்லாதவனுக்கு இருக்கறதெல்லாம் பிளாக்கு.. கண்ணா இது எப்பிடி இருக்கு??.. இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோ... யாதும் ப்ளாக்கே யாவரும் கேளிர்னு சொன்ன விவேகானந்த சுவாமிகள் வழியில வந்தவன் நானு... இப்போ வர்ட்டா....) அடுத்த பதிவுல சந்திப்போம்... ஸீயூ

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சென்டல் , எக்மோர் ரயில் நிலையங்கள் , குப்பை மேடுகள் போன்ற வற்றில் அனாதையாக திரியும் சிறுவர்கள் , அவர்களுக்கு உடை இல்லை, தங்குமிடம் இல்லை , பாசம் இல்லை , இருப்பது எல்லாம்.....

//

எப்படி இருக்கும்?
..மக்கள் பணத்தை கோடி கோடியா சுருட்டிக்கிட்டு,
மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கியது யார்?..

மக்களுக்கு அடிப்படை வசதி.. ஊழலற்ற ஆட்சி..இதைத்தான் எதிர்பார்க்கிறோம்..

Unknown said...

நீ பணத்துக்காக வேலை பாக்குறியா ?

உனக்காக பணம் வேலை செய்யனுமா ??.

தத்து பித்தானந்தா ...

சொல்லச் சொல்ல said...

இதபத்தி எழுத உங்களுக்கு எவ்வளவு லஞ்சம் கிடைச்சிச்சு.. ரொம்ப சூப்பெரா கச்சிதமா எழுதி இருக்கீங்களே அதான் கேட்டேன்.
வளைகுடா நாடு இந்த விஷயத்தில் எப்படீன்னா லஞ்சம் கொடுத்தவனையும், வாங்குனவனையும் அலேக்கா அமுக்கிடும். விசா expire ஆனவன்களை (விசா செத்தவங்கன்னு சொல்லுறதா...) நாம வீட்டு வேலைக்கு வச்சிருந்தோம்னா, நம்மையும் சேர்த்து உள்ளே தள்ளிபோடும்.

அவ்வளவு ஜெயில்க்கு நாம எங்க போறது. ஒரு விஷயம், U.K ல குற்றவாளிகள அடைக்க இடமில்லாம இருந்தப்ப தான் ஆஸ்திரேலியால கொண்டுவந்து விட்டாங்க.

நீச்சல்காரன் said...

நாட்டு நிலைமை வருத்தமாக இருக்கு

எல் கே said...

makkal yosikanum boss

மனோ சாமிநாதன் said...

சமுதாயத்தில் ரொம்ப காலமாகப் புரையோடிப்போன விஷயம் இது. எங்கிருந்து சரி செய்வது இதை? இந்தியாவில்தான் இப்படி என்று என்றால் கடுமையான சட்ட திட்ட திட்டங்கள் உலவிய இங்கு கூட இன்று அங்கும் இங்குமாக லஞ்சங்கள் வாங்குவது நடந்து வருகின்றன.

ஊரில் நமக்குச் சொந்தமான இடம்கூட தூங்கும்போது அடுத்தவர் கைமாறுகிற்து. நமக்குச் சொந்தமானதை நாம் திரும்பப் பெறுவதற்குக்கூட லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இன்றைய நிலைமை அப்படி! இதில் அநியாயம் என்னவென்றால் லஞ்சம் கொடுக்கத் தெரியாத அப்பாவிகளை அவர்கள் அலைய வைத்து இழுத்தடிப்பதுதான். அப்புறம் ஒரு வழியாகத் தெரிந்து கொண்டு லஞ்சம் கொடுக்கும்போது ‘ இதை முன்னாலேயே கொடுத்திருந்தால் வீணாய் அலைந்திருக்க வேண்டாமில்லே’ என்ற விமர்சனமும் பரிதாபங்களும் வேறு. வேறோடிப்போன இந்த வியாதியை எந்த மருந்தைக்கொடுத்து சரிபடுத்துவது?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்களுக்கே உரித்தான.. நடையில் ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க...
வாழ்த்துக்கள்.

மோனி said...

இனி பஞ்சம், பஞ்சம், ஊரெல்லாம் பங்சம்தான்...

http://beta.profit.ndtv.com/news/show/govt-doubles-natural-gas-price-cng-to-cost-more-49382?u=2054

Anonymous said...

இதுல உண்மை இருக்கிறது என்னவோ உண்மை தான்.
பொதுநலன் மிக முக்கியம் மங்குனி அமைச்சரே...
அதுக்காக இப்படியா???
உங்களால இப்படியும் சிந்திக்க முடியுமா??
ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

vasan said...

அர‌சிய‌ல்வாதிக‌ள் ஊழ‌ல் செய்தி வ‌ரும்.
ஆனா, த‌ண்ட‌னைன்னு தீர்ப்பே வ‌ராது !!!

பயனுள்ள தகவல்கள் said...

வளைகுடா நாடுகளில் சட்டம் மிக கடுமையானது , அது போன்று கடுமையாக்க நாம் நம் சமுதாயத்தை ஆணி வேரிலிருந்து சரிசெய்ய வேண்டும்.
---------------------
ஆனாலும் இது ரொம்ப அதிகம். வளைகுடாவிலும் நமது நாடு போலத்தான். என்ன இங்கு கரைவேட்டிகள் தொல்லை மட்டும் இல்லை.இந்த லஞ்ச வியாதி உலகம் முழுவதும் தலைவிரித்து ஆடுவதற்கு காரணம் குறுக்கு வழியில் பணம் ஈட்ட வேண்டும் என்ற ஆசைதான். வாங்குபவர்களும், கொடுப்பவர்களும் செய்வது தவறு என்பதை உணர்ந்தால்தான் அதை ஒழிக்க முடியும்.

Mohan said...

லஞ்சத்திற்கு நாம் அனைவருமேப் பொறுப்பு என்பது மறுக்க முடியாத உண்மை....

Anonymous said...

MLA, MP ஆகி அரசாங்கம் கொடுக்கும் சம்பளம் மற்றும் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு (ஆயுள் முழுவதும் பென்ஷன் வரும்) சபைக்கு வராத காவிரிதாய், கேப்டன் இவர்களை பற்றி யாராவது ஒரு பதிவு போடுங்கள் ப்ளீஸ். அதோடு இவர்களுக்கு வோட்டு போட்ட நம்ம கோமனான்டிக்கும் சேர்த்துதான்..

Anonymous said...

Ahmed avargaley shankar kuda lanchatha pathi yedutha padatha veliya varathaku yethana peruku lancham kudutharo!!!!!!!!!!
Antha filmla ulla scene yenga irunthu thirudunaro!!!!!!
Aduthuvan kaasula thathuvam solran
Avan kaasula oru padam kuda avan direct panala!!!!! yosing pa yosinga...Innum 4 or 5 english padam release aana piragu athula iruntuh 2, 3 scene uruvi Yenthiran veli varum.

மங்குனி அமைச்சர் said...

// சேட்டைக்காரன் said...

யாரு தப்புப் பண்ணினாலும் பண்ணட்டும்; நான் பண்ண மாட்டேன். நான் ஒருத்தனாவது இதுக்கெல்லாம் இணங்க மாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு கஷ்டப்படுறவங்க நிறைய பேர் இருக்காங்கண்ணே! ///



ஆமா சேட்ட , நிறைய பேரு இருக்காங்க

மங்குனி அமைச்சர் said...

//Chitra said...

. (மங்கு ரொம்ப யோசிக்காத , மூளைக்காய்ச்சல் வந்திட போகுது )


......எல்லோரும் யோசிக்கணும்..... குறிப்பாக அரசியல்வாதிகளும்..... லஞ்சம் வர காரணம்: "தான் மட்டும் நல்லா இருக்கணும், தனக்கு மட்டும் வேலை நடக்கணும் " என்கிற attitude. ஊஹும்..... மழையாவது பெய்தே.... அதுக்கும் லஞ்சம் கேக்குதா?////


மழை லஞ்சம் கேட்காது மேடம் , அது பேர சொல்லி நம்ம ஆளுக கேட்பாக

மங்குனி அமைச்சர் said...

/////நாடோடி said...

//பசி, பசி ,பசி ???

முதலில் திருட ஆரம்பிகிறார்கள் , பின்பு ரவுடியிசம் , மாமூல் , கட்டபஞ்சாயத்து ............................................ (மங்கு ரொம்ப யோசிக்காத , மூளைக்காய்ச்சல் வந்திட போகுது )

இவர்கள் செய்யும் தவறுக்கும் அந்த கடுமையான சட்டம் பொருந்துமா ???????

லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது எல்லாம் ஒருவித திருட்டு தான் , அவனுக்கும் , பசிக்காக திருடுபவனுக்கு ஒரே தண்டனை கொடுக்க இயலுமா ?????//

க‌ண்டிப்பா பொருந்தும் அமைச்ச‌ரே... நீங்க‌ சொல்லுற‌ மாதிரி அவ‌ன் திருட‌ செய்யும் முய‌ற்ச்சியை ஒரு வேலை பார்க்க‌ முய‌ர்ச்சிக்க‌லாம்... //////

அவர்களின் முதல் திருட்டே சாப்பாட்டுகாக

///உழைப்பில்லாம‌ல் சாப்பிட‌ முடியாது அமைச்ச‌ரே... இன்று என்ன‌வோ ந‌ல்ல வேலையில் இருப்ப‌வ‌ர்க‌ளும், ப‌டித்த‌வ‌ர்க‌ளும் குபேர‌ன் வீட்டில் பிற‌ந்த‌வ‌ர்க‌ள் இல்லை.. என்ப‌தை நீங்க‌ள் ஒத்து கொள்கிறீக‌ளா...

ஏன் க‌ட்ட‌ப‌ஞ்சாய்த்தோடு நிறுத்திவிட்டீர்க‌ள்... அத‌ன் பிற‌கு அர‌சிய‌லில் சேருகிறான்.. த‌லைவ‌ன் ஆகிறான்.. நாம் எல்லோரும் அவ‌ருக்கு ச‌லாம் வைத்து கொண்டு ஓட்டு போடுகிறோம்... அர‌சிய‌லில் வ‌ந்தால் அவ‌னுடைய‌ எண்ண‌ம் என்ன‌வாக‌ இருக்கும்?...////


அத தான் சார் நானும் சொல்றேன்

மங்குனி அமைச்சர் said...

////நாடோடி said...

//இவற்றை பெற இரண்டு நாள் அலைய நேரமில்லை (நாம் நேராக சென்றால் நிச்சயம் லஞ்சம் இல்லாமல் காரியம் முடியும்) , நேராக முகவர்களிடம் செல்கிறோம் , முகவர்கள் வேலை விரைவில் முடிய லஞ்சம் கொடுகிறார்கள் . ///

அப்ப‌டியாலால் அந்த‌ வேலையை ஒரு நாளில் செய்ய முடியும் தானே?... /////

இல்லை அப்பளை பன்ன ஒரு நாள் , மீண்டும் கலக்ட் பன்ன ஒருநாள் போகனும்

///அப்புற‌ம் எதுக்கு இர‌ண்டு நாட்க‌ள் அலைய‌ வேண்டும்... அவ‌ன் ந‌ம்மிட‌ம் காசு எதிர்பார்த்து தானே இர‌ண்டு நாள் அலைய‌ விடுகிறான்.... அதை முன்ன‌ரே தெரிந்து கொண்டு ப‌ண‌த்தை கொடுத்து வாங்குப‌வ‌ர்க‌ளை எத‌ற்கு குறை சொல்ல‌ வேண்டும்?.... அவ‌னுடைய‌ வேலையே அதை செய்வ‌து தானே அமைச்ச‌ரே... உட‌னே முடித்து கொடுத்தால் ப‌ண‌த்தை கொடுக்க‌ நான் என்ன‌ முட்டாளா?.../////


நான் லஞ்சம் கொடுத்து வேலை முடிக்க வேண்டும் என்று சொல்ல வில்லை , இன்றைய நிலவரத்தை சொன்னேன்

மங்குனி அமைச்சர் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்கு ரொம்ப யோசிக்காத , மூளைக்காய்ச்சல் வந்திட போகுது//

யோவ் ஜோக் அடிக்காத. மூளைக்காய்ச்சல் அது இருக்கிரவனுக்குதான் வரும்...///


அத தானே நானும் சொல்றேன் , ஒரு பயலும் கேட்க மாட்றாங்க

மங்குனி அமைச்சர் said...

//MUTHU said...

கருத்து..............
...
ம் ொல்லுறேன்,



சுதந்திரம் வாங்கும் போது எழுதிய சட்டத்தை,வைத்து கொண்டு அதுவும் அதில் ஒரு டேங்கர் லாரியே போய் வருகிற அளவுக்கு ஓட்டை இருந்தால் என்ன செய்ய முடியும்,
லஞ்சம் வாங்கினால் கை போகி விடும் என்கிற அளவுக்கு சட்டம் கடுமையாக்க படவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து////


அந்த கைய எடுக்குரவனும் லஞ்சம் கேட்குறானே

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...

:)///


:)))

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

நியாயமான கேள்வி தல!, லஞ்சம் இருக்கும் வரை முழுமையான எந்த சலுகையும்/உரிமையும் மக்களுக்கு போய் சேராது!///


சரியா சொன்னிங்க தல

மங்குனி அமைச்சர் said...

//கரிகாலன் said...///


உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்................ எவ்ளோ பெரிய பின்னூட்டம்

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

சென்டல் , எக்மோர் ரயில் நிலையங்கள் , குப்பை மேடுகள் போன்ற வற்றில் அனாதையாக திரியும் சிறுவர்கள் , அவர்களுக்கு உடை இல்லை, தங்குமிடம் இல்லை , பாசம் இல்லை , இருப்பது எல்லாம்.....

//

எப்படி இருக்கும்?
..மக்கள் பணத்தை கோடி கோடியா சுருட்டிக்கிட்டு,
மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கியது யார்?..

மக்களுக்கு அடிப்படை வசதி.. ஊழலற்ற ஆட்சி..இதைத்தான் எதிர்பார்க்கிறோம்..////


யப்பா சாமி நானும் அதைதான் கேட்குறேன்

மங்குனி அமைச்சர் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...



தத்து பித்தானந்தா ...///


சார் , சத்தமா சொல்லாதிங்க அப்புறம் கேமரா வசுரபோராணுக

மங்குனி அமைச்சர் said...

///சொல்லச் சொல்ல said...

இதபத்தி எழுத உங்களுக்கு எவ்வளவு லஞ்சம் கிடைச்சிச்சு.. ரொம்ப சூப்பெரா கச்சிதமா எழுதி இருக்கீங்களே அதான் கேட்டேன்.
வளைகுடா நாடு இந்த விஷயத்தில் எப்படீன்னா லஞ்சம் கொடுத்தவனையும், வாங்குனவனையும் அலேக்கா அமுக்கிடும். விசா expire ஆனவன்களை (விசா செத்தவங்கன்னு சொல்லுறதா...) நாம வீட்டு வேலைக்கு வச்சிருந்தோம்னா, நம்மையும் சேர்த்து உள்ளே தள்ளிபோடும்.

அவ்வளவு ஜெயில்க்கு நாம எங்க போறது. ஒரு விஷயம், U.K ல குற்றவாளிகள அடைக்க இடமில்லாம இருந்தப்ப தான் ஆஸ்திரேலி/யால கொண்டுவந்து விட்டாங்க.////


நம்ம அந்தமான் மாதிரிதான்

மங்குனி அமைச்சர் said...

// நீச்சல்காரன் said...

நாட்டு நிலைமை வருத்தமாக இருக்கு///


ஆமா சார்

மங்குனி அமைச்சர் said...

//LK said...

makkal yosikanum boss///


யோசிச்சு நல்ல முடிவு எலக்சன்ல எடுக்கணும்

மங்குனி அமைச்சர் said...

மனோ சாமிநாதன் said...

இதை முன்னாலேயே கொடுத்திருந்தால் வீணாய் அலைந்திருக்க வேண்டாமில்லே’ என்ற விமர்சனமும் பரிதாபங்களும் வேறு. ////


ஆமாங்க மேடம் உண்மையிலேயே ரொம்ப கொடுமையான விஷயம்

மங்குனி அமைச்சர் said...

// Ananthi said...

உங்களுக்கே உரித்தான.. நடையில் ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க...
வாழ்த்துக்கள்.////


நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

//மோனி said...

இனி பஞ்சம், பஞ்சம், ஊரெல்லாம் பங்சம்தான்...///

அதுதான் சார் கடைசீல

மங்குனி அமைச்சர் said...

//இந்திரா said...

இதுல உண்மை இருக்கிறது என்னவோ உண்மை தான்.
பொதுநலன் மிக முக்கியம் மங்குனி அமைச்சரே...
அதுக்காக இப்படியா???
உங்களால இப்படியும் சிந்திக்க முடியுமா??
ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.////


ஹி.ஹி.ஹி .....ரொம்ப தேங்க்ஸ் மேடம்

மங்குனி அமைச்சர் said...

//vasan said...

அர‌சிய‌ல்வாதிக‌ள் ஊழ‌ல் செய்தி வ‌ரும்.
ஆனா, த‌ண்ட‌னைன்னு தீர்ப்பே வ‌ராது !!!////


குற்ற வாலின்னு அறிவிச்சா பாவம் காலேஜ் பசங்கள கொளுத்துவாணுக

மங்குனி அமைச்சர் said...

SARFUDEEN said...

வளைகுடா நாடுகளில் சட்டம் மிக கடுமையானது , அது போன்று கடுமையாக்க நாம் நம் சமுதாயத்தை ஆணி வேரிலிருந்து சரிசெய்ய வேண்டும்.
---------------------
ஆனாலும் இது ரொம்ப அதிகம். வளைகுடாவிலும் நமது நாடு போலத்தான். என்ன இங்கு கரைவேட்டிகள் தொல்லை மட்டும் இல்லை.இந்த லஞ்ச வியாதி உலகம் முழுவதும் தலைவிரித்து ஆடுவதற்கு காரணம் குறுக்கு வழியில் பணம் ஈட்ட வேண்டும் என்ற ஆசைதான். வாங்குபவர்களும், கொடுப்பவர்களும் செய்வது தவறு என்பதை உணர்ந்தால்தான் அதை ஒழிக்க முடியும்.////


மிக சரியாக சொன்னீர்கள்

மங்குனி அமைச்சர் said...

// Mohan said...

லஞ்சத்திற்கு நாம் அனைவருமேப் பொறுப்பு என்பது மறுக்க முடியாத உண்மை....///


மிக நிச்சயமான உண்மை

மங்குனி அமைச்சர் said...

//Anonymous said...//


தயவு செய்து உங்கள் பெயர்களுடன் , கருத்து கூறுங்கள் , எதிரில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் பதில் சொல்வது தானாக உலரும் பைத்தியம் போல் நான் என்னை உணர்கிறேன்

ரோஸ்விக் said...

// உடனடியாக முடியாது மிக நீண்ட காலம் ஆகலாம் , அனால் இப்பொழுதே அந்த வேலை ஆரம்பிக்க படவேண்டும் ,
//

மங்கு சிரிப்பும், சிறப்பும் மிக்க பதிவு.

இது சம்பந்தமாக நான் எழுதிய பதிவு - தண்டனைகள் தப்பினால் தப்புக்கள் குறையுமா?

admin said...

கள்ளிச் செடியில் மலராக இருப்பதை விட! ரோஜா செடியில் முள்ளாக இருப்பது மேல்!

நசரேயன் said...

நியாமான கேள்வி அமைச்சரே

Anonymous said...

தயவு செய்து உங்கள் பெயர்களுடன் , கருத்து கூறுங்கள் , எதிரில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் பதில் சொல்வது தானாக உலரும் பைத்தியம் போல் நான் என்னை உணர்கிறேன்

Anonymous said...

தயவு செய்து உங்கள் பெயர்களுடன் , கருத்து கூறுங்கள் , எதிரில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் பதில் சொல்வது தானாக உலரும் பைத்தியம் போல் நான் என்னை உணர்கிறேன்

Anonymous said...

தயவு செய்து உங்கள் பெயர்களுடன் , கருத்து கூறுங்கள் , எதிரில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் பதில் சொல்வது தானாக உலரும் பைத்தியம் போல் நான் என்னை உணர்கிறேன்

பித்தனின் வாக்கு said...

Hai manguni nan iffa chennai vanthutten. i staying at Kalpakkam 80km away from chennai. my phone number is 9894561034. Call me when you are free.

மர்மயோகி said...

மங்குனி அமைச்சருக்கு இப்படியெல்லாம் யோசிக்கதெரியுமா? ....அசத்துங்க...

Jaleela Kamal said...

mmm ரொம்ப ஆதங்க பட்டு எழுதி இருக்கீங்க.
ஆமாம் உங்க கிட்ட யாரு லஞ்சம் கேட்ட்டது, அதன் பிரதிபலிப்பா இது.

//ங்கொய்யாலே..... பைனலா நீ என்னா சொல்ல வர்ற ?//

ஒன்னியம் பண்ண முடியாது,
எல்லாம் எல்லை மீறி விட்டது.

இத பற்றி யோசிக்க யோசிக்க மூளை காய்ச்சல் இல்லை மூளை செதரினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.

அனானி கூட முன்று தடவ பெனாத்தின போல இருக்கு/ஹி ஹி

Jaleela Kamal said...

தொப்பையானந்தா இந்தியா வந்துட்டாராம், பார்த்து மொபல ஆஃப் பண்ணிடாதீங்க

"உழவன்" "Uzhavan" said...

இப்போது மழை பெய்ததிற்கான சுவடே இல்லை.

சாமக்கோடங்கி said...

என்னோட ரொம்ப நாள் ஆதங்கம்.. என்னத்த சொல்ல... எல்லார் பக்கத்திலும் தப்பு இருக்கு...