எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, August 6, 2013

சரக்கடிச்சிட்டு வண்டி ஒட்டணுமா ??? இத படிங்க .....

விபத்துக்களில் உயிர் விடுவதை விட படுகாயத்துடன் உயிரோடு இருப்பது கொடுமையானது.

கண்டமனூர் மெடிக்கல் காலேஜ் General Hospital- க்கு ஒரு டாக்டர் நண்பனோட போயிருந்தேன், விபத்து மற்றும் எலும்பு முறிவு பகுதிகளை சுற்றிப்பார்க்க நேர்ந்தது.....

என்னை அறியாமல் மனதுக்குள் ஒரு நடுக்கம் வந்து விட்டது .....

பார்பதற்கு மிகவும் கலக்கமாகவும் கொடூரமாகவும் இருந்தது , ஒரு நொடி தவறினால் ஏற்படும் விபத்தால் அவங்களின் மொத்த வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்கிவிடுறது , அது மட்டும் அல்லாமல் அவர்களில் குடும்பத்தாரையும் சேர்த்து பாதிக்கிறது.

விபத்து என்று பார்க்கும் போது , குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதும் விபத்திற்கு முக்கிய காரணியாக உள்ளது, இதில்
வாடைகை காரில் இப்பொழுது குடித்துவிட்டு ஓட்டும் டிரைவர்கள் கிடையாது என்றே சொல்லலாம்.

சொந்த காரில்
குடித்துவிட்டு  self drive செய்பவர்களே விபத்துக்குள்ளாவதில்  அதிகமாக இருக்கிறார்கள் . இதில் இவர்கள் மட்டுமல்லாது கூட வரும் குடும்பத்தார் அல்லது நம்பர்கள் மற்றும் எதிரே வந்த வாகனத்தில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் .

வரும்போது வண்டிய மிக மெதுவாகவும் நிதானமாகவும் ஒட்டி வந்தேன் .இன்னும் மனதுக்குள் லேசான நடுக்கம் இருக்கிறது .

குடித்திருக்கும் போது வாகனம் ஓட்டக்கூடாது என்று முடிவெடுத்துள்ளேன்.

Monday, August 5, 2013

நான் ரெடி நீங்க ரெடியா ???


MLA வின் ஒன்னு விட்ட அத்தை பையனோட கேர்ள் பிரண்டோட சித்தப்பா மகளோட ஒன்னு விட்ட மாமனார் மகன் எட்டாங்கிளாஸ் படிக்கும் போது குச்சி ஐஸ் திருடின கேஸ நான் மறுபடியும் ,தூண்டி துருவ ஆரம்பிச்சதுக்காக (பின்ன என்னங்க நாதாரி எனக்கு குடுக்காம அவனா தின்னுட்டான் ) நான் பார்த்துக்கொண்டு இருந்த கலக்டர் IAS வேலையிலிருந்து என்னை தற்காலிக பணிநீக்கம் செய்து விட்ட காரணத்தால் நான் மீண்டும் பிளாக்கில் பதிவுகள் போட்டு உங்களையும் இந்த உலகத்தையும் திருத்தலாம் என்று   நினைக்கிறேன் ...

நீங்க என்ன நினைக்கிறிங்க ???

இப்படிக்கு 
மங்குனி PreKG , LKG , UKG !STD TO 9TH STD, 10th fail , 10 th pass, +1 , +2, B.Sc, M.Sc, IAS 

Monday, May 13, 2013

திரு,பட்டாப்பட்டி காலமானார்.


நமது நண்பர் திரு,பட்டாப்பட்டி அவர்கள், நேற்று சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார். . 
:-(((((


நாளை உடல் அவர் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறும்.