எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, December 15, 2010

போங்கடா நீங்களும் உங்க............?????

நம்ம மொக்கச்சாமி ஏதோ டென்சனா போயிக்கிட்டு இருந்தான் . நிப்பாட்டி

"என்ன மொக்க இவ்ளோ கோவமா போற ?"

"நேத்துவரைக்கும் ஒரு ரூபாயிக்கு மூணு பீடி குடுத்த நம்ம பெட்டிக்கட இசக்கி இன்னைக்கு ரெண்டு பீடி தான் குடுத்தான் மங்கு , என்னடான்னு கேட்டா பெட்ரோல் விலை கூடிப்போச்சுங்குறான். நீயே சொல்லு மங்கு பெட்ரோல் விலைக்கும் நான் குடிக்கிற பீடிக்கும் என்ன சம்பத்தம் மங்கு ? "

"அது ஒன்னும் இல்ல மொக்க , பெட்ரோல் விலை கூடுச்சுன்னா , டிரான்பொடேசன் ரேட் கூடி காஸ்டாப் லிவிங் கூடிடும் " (கண்டுபுடிச்சிட்டாருயா கவர்னரு )

"காஸ்டாப் லிவிங்ன்னா என்ன மங்கு ?"

"ஏய் , விளக்கம் சொன்னா கேட்டுக்கணும் , திருப்பி கேள்வி கேட்கக் கூடாது " (என்னமா மடக்குராணுக? , தெரிஞ்சா சொல்லமாட்டமா? )

"சரி மங்கு , இதை என்னன்னு பாக்காம நம்ம துரைமாருங்க எல்லாம் என்னா பன்றாங்க மங்கு ?"

"அடப்போய்யா பாவம் அவுங்களே 17500000 ஆயிரம் கோடி ஊழல்ல பங்கு வரலைன்னு பாராளு மன்றத்தையே முடக்கிட்டாங்க "

"17500000 ஆயிரம் கோடின்னா எவ்ளோ மங்கு?"

"இம் ......... ஒரு பத்து லாரி நிறையா பீடி வாங்கலாம் "(17500000 ஆயிரம் கோடின்னா எவ்ளோ சார் ?)

"அடேங்கப்பா ................. அவ்ளோ பணமா ? ஊழல்ன்னா என்னா மங்கு ?"

"அதெல்லாம் பெரிய எடத்து விவகாரம் மொக்க , நமக்கேன் வம்பு , அத விடு அவுங்கதான் நமக்கு ஒரு ரூபாயிக்கு ஒரு கிலோ அரிசி , இலவச வேட்டி சேலை , இலவச டி.வி எல்லாம் தர்றாங்களே "

"அட ஆமா மங்கு , பெட்ரோல் விலைவேற ஏறிப்போச்சு , ஒரு ரூபா அரிசிய 10 ரூபாயிக்கு நம்ம பாய் கடைக்கு குடுப்பேன் , இனி 12 ரூபாயிக்கு தான் குடுக்கணும் "

"பாத்தியா பெட்ரோல் விலை கூடினது உனக்கும் உதவுது "

"ஆமா மங்கு , பீடி விலை வேற கூடிப்போச்சு , இந்த வாட்டி 1500 ரூபா குடுத்தாவெல்லாம் ஓட்டுப் போடமாட்டேன் , 2000 குடுத்தாத்தான் ஓட்டுப் போடணும் , சரி , சரி லேட் ஆகுது நம்ம வாத்தியார் படம் போட்றப்போறான் நான் கிளம்புறேன் "

" அட ஆமா மொக்க நானும் மறந்திட்டேன் பாரு , நானும் போயி பதிவு போடணும் , இந்த வாட்டி எப்படியும் தமிழ் மணத்துல 20 குள்ள வந்திடனும் "

டிஸ்கி : ??????????????????


Monday, December 13, 2010

பிரபல பதிவர்கள் ஜாக்கிரதை

முஸ்கி : கீழே உள்ள பதிவு , தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம் மற்றும் உலகத்தில் உள்ள எந்த பதிவர்களையும் குறிப்பிடுபவை அல்ல ..... மேலும் வேற்று கிரக பதிவர்களையும் குறித்து எழுத்தப்படவில்லை என்பதை கம்பனியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் .

"எலேய் மாப்ளே........................"

யார்ரா அது நம்ம பயபுள்ளைக குரல் மாதிரி இருக்கேன்னு கதவ தொறந்து பாத்தா , அவனுகளேதான் .......... விருமாண்டி , சங்கிலி முருகன் , மாயாண்டி ..........

"எலேய் மக்கா நல்லா இருக்கிங்களா ??"
"நல்லா இருக்கோம் மாப்ள "

எல்லா பேரும் கையில நல்ல முரட்டு தாம்புக் கயிறு வச்சு இருந்தாய்ங்க , இவனுக எல்லாம் அருவாளோட தான அலைவானுக இப்ப எதுக்கு கயிரோட அலையிராணுக ......

ஒரு வேலை கல்யாணம் ஏதும் பண்ணப்போரானுகளா ????

இதுல என் தலைய வேற உத்து உத்து பாக்குறானுக , என்னவா இருக்கும் ??????




"என்ன மக்கா எல்லாம் கையில கயிரோட வந்து இருக்கீங்க ?"

"அது ஒன்னும் இல்லை மாப்ளே , பொங்கல் வருதுல்ல அதான் ஜல்லிக்கட்டுக்கு மாடு புடிக்க வந்தோம் "

"அது சரி சென்னைல ஏது மாடு ?"

"அதான் பதிவர்கள் எல்லாம் பிரபலம் ஆகிட்டா தலைல கொம்பு முளைச்சிருதாமே , எங்க உன் கிரீடத்த கொஞ்சம் கழட்டு?"

அடங்..... கொன்னியா இது என்னடா புது பொரளியா இருக்கு ..........


"மக்கா யாரோ உனக்கு தப்பான இன்பர்மேசன் குடுத்திருக்காங்க, நான் டம்மி பீசு "

"அட பாத்தாலே தெரியுது நீ டம்மி பீசுன்னு , எங்க கொஞ்சம் பிரபல பதிவர்கள் பேரெல்லாம் சொல்லு ?"

ஓ.... அதான் இங்க நிறையா பேரு கொம்பு முளைச்சு அலையுரானுகளா ??? சரி அவனுகள பத்தி நமக்கேன் .... நா நம்ம கூட்டாளிகள கோர்த்துவிடுவோம்

"இம்........ மக்கா , எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் இருக்காரு ஆனா அவரு சிங்கைல இருக்காரு, அப்புறம் இங்க... இங்க .... "லாஃபிங் - திருடன புடிக்கிரவரு"............


இம்........ அதெல்லாம் ஒன்னும் வேணாம் டெர்ரர் கும்மின்னு ஒரு பிளாக் இருக்கு அங்க இருக்க பூசாரிக எல்லாத்தையும் செக் பண்ணி பாரு ."


"சரி மாப்ள இனி நாங்க பாத்துக்கிறோம் "

(நல்ல வேலை நாம இன்னும் பூசாரி ஆகல ...இவனுக ஊருக்கு போனப்புறம் நாமா பூசாரி ஆகிடலாம் )

எனவே மக்களே நம்ம பயபுள்ளைக எல்லாம் லாரில மாடு தேடி சுத்திக்கிட்டு இருக்கானு , பிரபல பதிவர்கள் எல்லாரும் கொஞ்சம் உங்க தலைய தடவி பாத்துக்கங்க .....

இம் ..... தலைய தவிப் பாத்துட்டிங்களா ????

கொம்பு, கிம்பு மொளச்சிருந்தா பொங்கல் முடியிறவரைக்கும் வெளிய தலைய காட்டிராதிங்க ......... ஜாக்கிரதை

Friday, December 10, 2010

கோயம்புத்தூர் பல்பு

ஒரு ரெண்டுநாள் ஆபீஸ் வேலையா கோயம்பத்தூர் போனேங்க ...... (அதான் சென்னை மக்கள் சந்தோசமா இருந்தாங்களா ?)




அங்க லோகல் பஸ்சுல கண்டக்டர்கிட்ட

"சார் ஒரு காந்திபுரம் குடுங்க "

"எங்க ஊர்லே ஒரே ஒரு காந்திபுரம் தான் இருக்கு , அதையும் உனக்கு குடுத்துட்டா அப்புறம் நாங்க என்ன பன்றது?"

(அடங்.... ங்கொன்னியா இன்னைக்கு இவனுக போதைக்கு நாமதான் ஊறுகாயா? )

"சார் ஒரு டிக்கெட் குடுங்க "

"என்னது டிக்கெட்டா ? செருப்பால அடிப்பேன் நாயே , என்னைய பாத்தா உனக்கு எப்படி தெரியுது? "

(ஆஹா . இன்னைக்கு சனி சடைபோட ஆரம்பிச்சிருச்சு , இன்னும் என்னனென நடக்கப்போகுதோ ?)

"சார் காந்திபுரம் போக ஒரு பயணச்சீட்டு குடுங்க "

"........ அதுவா அப்படிக்கேளு , இந்தா "




(ஆஹா , இந்த ஊருக்காரனுக கிட்ட இனி வாயக்குடுத்து வாங்கிகட்டிக்க கூடாது )

போயி ஒரு சீட்ல உட்கார்ந்தேன் , நமக்கு அந்த ஊரு புதுசு , பக்கத்துல இருந்தவர்கிட்ட

"சார் காந்திபுரம் வந்தா சொல்லுங்க"

உடனே அவரு காந்திபுரம் , காந்திபுரம் நாலுவாட்டி சத்தமா சொன்னாரு , அப்புறம் என்னைய பாத்து

"சார் , நான் கூப்பிட்டு பாத்தேன் காந்திபுரம் வரமாட்டேங்குது , நீங்க வேணா ஒரு வாட்டி கூப்பிட்டு பாருங்க "

(அடப்பாவிகளா.................... வீட்டுலே யோசிச்சிட்டு வருவானுகளோ )

"இல்லை சார் காந்திபுரம் ஸ்டாப் வந்தா சொல்லுங்க , நான் அங்க இறங்கனும் "

"உங்க போன் நம்பர் குடுங்க "

"ஏன் சார் ?"

"இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன் , நாளைக்கு அந்தப்பக்கம் போவேன் , அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான் "

"@#$%##$#$$%$........................."