எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, December 4, 2010

டாக்டர். குஜய்காந்த் - கூகுள் சுத்த வேஸ்ட்

முஸ்கி : எல்லாரும் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு கூலிங் கிளாஸ் போட்டு என் பிளாக்க படிங்க , என்னோட மெட்ராஸ் ஐ உங்களுக்கும் ஒட்டிக்காம இருக்கும்




டுஸ்கி:
இந்த பதிவுக்கும் இதில் உள்ள படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பன்னிகுட்டி ராமசாமி மீது சத்தியமாக கூறிக்கொள்கிறோம் . மீறி தவறாக எடுத்துக்கொண்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல .



-----@@@@@-----

சே..... என்னப்பா கூகுள் இது? சுத்த வேஸ்ட் ........

நம்ம டாக்டர். குஜய்காந்த் டாக்டர் பட்டம் வாங்கி 24 அவர்ஸ் ஆச்சு இன்னும் அந்த போடோவெல்லாம் அப்டேட் பண்ணாம இருக்கு ....

கூகுளுக்கு , சேம்....... சேம் .......... பப்பி சேம்

டாக்டர். குஜய்காந்த் நமது மொக்கைசாமிக்கு அளித்த பேட்டி


மொக்கைசாமி : வாழ்த்துக்கள் டாக்டர். குஜயகாந்த் சார் ..... உங்களுடைய அடுத்த மூவ் ?

டாக்டர். குஜய்காந்த் : இனி தீவிரவாதிகள் சாதாரண ஆபீசர் கூட சண்டை போடா மாட்டாங்க ....... டாக்டர்.ஆபீசர் கூட சண்டை போடுவாங்க . அது தீவிரவாதிகளுக்கு பெருமைதானே?



மொக்கைசாமி :அது சார், அதைவைத்து ஏழைகளுக்கு என்னபண்ணப் போறீங்க ?

டாக்டர். குஜய்காந்த் : ஓ......... ஏழைகளுக்கு உதவ இந்த டாக்டர் பட்டம் பத்தாது , எனவே நான் அது எம்.எஸ் படித்து விட்டு ஏழைகளுக்கு வீடு வீடாக சென்று இலவச ஆப்ரேசன் செய்யப்போகிறேன் .

மொக்கைசாமி : நீங்கள் ஆட்ச்சிக்கு வந்தால் ஏழைகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன்னு சொல்றிங்க , அதுக்கு என்ன திட்டம் வச்சு இருக்கீங்க ?

டாக்டர். குஜய்காந்த் : அது ஒன்னும் இல்லைங்க ஆட்சிக்கு வந்த உடன் ஏழைகள் அனைவரையும் நாடு கடத்தி விடுவேன்.


மொக்கைசாமி : எந்த மிடில் , அப்பர்மிடில் கிளாஸ் டீசன்ட் பேமிலீஸ் யாரும் கவுரவ குறைச்சலான ஓட்டுப் போடும் வேலையை செய்யமாட்டார்கள் . ஒட்டு போடுறது எல்லாம் ஏழைகள் , அப்ப அடுத்து வரும் எலெக்சனுக்கு என்ன செய்விங்க ?

டாக்டர். குஜய்காந்த் : அந்த நாலரை வருசத்துல இங்குள்ள மிடில் , அப்பர்மிடில் கிளாஸ் பேமிலீஸ் எல்லாத்தையும் எப்படியும் கஷ்ட்டப்பட்டு நான் ஏழைகள் ஆக்கிடுவேன் , அப்புறம் அவுங்க ஒட்டு போட்டுத்தான ஆகணும் ?

மொக்கைசாமி : உங்க அடுத்த புராஜெக்ட் என்ன ?

டாக்டர். குஜய்காந்த் : நமது சி.பி.ஐ வெப்சைட்ட பாகிஸ்தான் திருடிக்கிட்டு போயிடுச்சாம் , நான் பாகிஸ்தான் போயி அதை மீட்டு வருவதுதான் எனது அடுத்த புராஜக்ட் , லட்சியம் எல்லாம்.

தொடரும் ..........

டிஸ்கி : பதிவர்களால் நமது மொக்கைசாமி கொல்லப்படாமல் இருந்தால் மீதி பேட்டி அடுத்த பதிவில் தொடரும்


Thursday, December 2, 2010

பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள்

ஃப்ளாஸ் நியுஸ் : இதனால் சகலமான பொது ஜனங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ......................... ஒன்னும் இல்லைங்க "மெட்ராஸ் ஐ " மூணு நாள் லீவுன்னு சொல்ல வந்தேன் .............. வழக்கம் போல சொதப்பிடுச்சு, அவ்வளவு தான் யாரும் மிஸ்டேக்கா எடுத்துக்காதிங்க ............

-----@@@@@-----

எங்க போனாலும் நமக்கு ராஜ மரியாதைங்க. எப்பவுமே அப்படித்தான் , இப்ப கொஞ்சம் ஸ்பெசல் . (ஹி.ஹி.ஹி......பி.பி.சி சொன்னாங்க )

எங்க ஆபீஸ் முன்னாடி ஒரு ஜெயின் லேடிஸ் காலேஜ் இருக்கு , அந்த பொண்ணுங்க எல்லாம் காலேஜ கட் அடிச்சிட்டு என் ஆபீஸ் வாசல்ல என்னைய பாக்க கியூ கட்டி நிக்கிறாங்க.

இதப்பாத்த இந்த ஏரியா வட்டச்செயலாளர் வண்டு முருகன் டக்குன்னு டோக்கன் போட்டு கல்லா கட்ட ஆரம்பிச்சிட்டான் .


சரின்னு வெளிய போயி பொண்ணுகள் ரொமாமாமா......மாமான்ஸ்- ஒரு லுக்கு விட்டேன் ............

எல்லா பொண்ணுங்களும் தரைல விழுந்து உருண்டு பொரண்டு சிரிக்கிறாலுக ........... என்னைய பாத்தா அவ்ளோ காமடி பீசாவ தெரியுது ????

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............................................


வேற ஒன்னும் இல்லைங்க மெட்ராஸ் ......... இதுல மழை வேற , கிளைமேட் மோடம் போட்டு இருந்த்ததா . கூலிங் கிளாஸ் போட்டு வெளிய போக முடியல .

ரோட்டுல எல்லா பயபுள்ளைகளும் என்னைய பாத்து நக்கலா சிரிக்கிராணுக . ஒவ்வொருத்தன் கிட்டயும் எனக்கு மெட்ராஸ் -ன்னு சொல்லவா முடியும் .

டீ கடைல போயி டீ கேட்டா , கடைக்காரன் கையை புடிச்சு டீ கிளாஸ குடுக்குறான் , என்னடான்னு கேட்டா , உங்களுக்கு கண்ணு தெரியுமா சார்ன்னு கேட்க்குறான் .

ஆனா அதுலயும் ஒரு நல்லது நடந்துச்சுங்க , ரெண்டு மூணு இடத்துல பிகர்ஸ் நான் கேட்காமலே என் கைய புடிச்சு ரோட்ட கிராஸ் பண்ணி விட்டுச்சுக .ஹி,ஹி,ஹி.................

நீதி : ரோடு கிராஸ் பண்ணிவிடும் பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள்

Tuesday, November 30, 2010

ரேடியோவுக்குள்ள குட்டி, குட்டி ஆளுங்க

லாங், லாங் யகோ , சோ லாங் யகோ .............

கி.மு-லையா ...

ரொம்ப லாங்கா போயிட்டிங்க கொஞ்சமா பார்வர்ட்

சேர , சோழ , பாண்டியர் காலம் ....

நோ .நோ.....இன்னும் கொஞ்சம் பார்வர்ட்

முஹலாயர்கள் ஆட்சி காலமா ..........

இன்னும் கொஞ்சம்

ஆங்கிலேயர் ஆட்சி காலமா .....

இன்னும் பார்வர்ட்

சுதந்திரம் வாங்கினப்பவா?

ஆங் ..... இன்னும் கொஞ்சம் லிட்டில் பார்வர்ட்

நாயே. நீயே சொல்லித்தொலை

அதாவது 1985 + அப்ப நான் படு பிர்லியட்டான சுட்டிப் பையன் , என்னுடைய கேள்வி ஞானத்துக்கு நோபல் பரிசும் , சுட்டித்தனத்துக்கு ஆஸ்கார் அவார்டும் அப்பவே குடுத்தாங்கன்னா பாத்துக்கங்க .......

என்னுடைய குழந்தை பருவம்தான் " இந்தியாவின் பொற்காலம்" அப்படின்னு மேல் நாட்டு அறிஞர் சுப்ரமணிய சுவாமி (இம் ....அவரேதான் ) கூட சொல்லி இருக்கார்.(மவனே அவன் மட்டும் என் கைல கிடைச்சான்..... ) ,

அந்த கால கட்டத்துல எங்க அப்பா ஒரு ரேடியோ வாங்கிட்டு வந்தாரு , அது பாட்டு பாடுச்சு.............

ஏம்பா ரேடியோவுக்குள்ள குட்டிக் குட்டி ஆளுங்க

இருக்காங்களாப்பா ???

எங்கப்பாவோட
மைன்ட் வாய்ஸ்

"ஒரு லூசு, புள்ளையா வந்து பொறந்துருக்கு"



ஓகே ... நௌ, இப்ப (ரெண்டும் ஒண்ணுதாண்டா பன்னாட ) நிகழ காலத்துக்கு வாங்க ...... இப்ப என்னடான்னா எங்க வீட்டு ரேடியோவுல கண்ணாடி வச்சு , அந்த ஆளுங்க எல்லாம் பாடுறது மட்டும் இல்லாம நடிக்கவும் ஆரம்பிச்சிட்டாங்க .....

டெக்னாலஜி இம்ப்ரூவ்டு சோ மச் யா ............

அதுக்கு பேரு கூட இப்ப டி.வி-யாம் இது என்ன அதிசயம்ன்னா எங்க வீட்டு டி.வில இருக்க அதே ஆளுங்க அச்சடிச்ச மாதிரி ஊருக்கு போனா அங்க இருக்க டி.வியிலும் இருக்காங்க . அட அதவிடுங்க ....எங்க சிஸ்டர்ஸ் வீட்டுக்கு போனா அவுங்க டிவியிலும் அச்சடிச்ச மாதிரி அதே மாத்ரி ஆளுங்க ................

உலகத்துல ஒரே மாதிரி ஏழுபேரு இருப்பாங்கன்கிறது நிஜம்தான் போல !!!

என் பையன் மைன்ட் வாயிஸ்

"ஒரு லூசுக்கு போயி புள்ளையா பொறந்திருக்கமே ?????"