எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, June 21, 2010

என்னா கொலவெறி???

என்னா உலகம்டா இது ? எதுக்கும் ஒரு அளவு இருக்கு , ஒரு நாள் அடிக்கலாம் ரெண்டு நாள் அடிக்காலாம் , கண்ணுல படுரநேரம் எல்லாம் அடிக்க தொரத்தினா எப்படி ??? என்னா கொலவெறி? , (ஒரு பிரண்டுன்னு கூட பாக்காம தரத்தி துரத்தி அடிக்கிறானுக.)

அப்புறம் ஒரு மனுஷன் எப்படித்தான் உயிர் வாழ்வது ??? நீங்களே ஒரு நியாயத்த சொல்லுங்க?.


அந்த விஷயம் கூட இன்னைக்கு நேத்து நடக்களைங்க , காலேஜு படிக்கும் போது நடந்தது , இன்னும் மறக்காம அதே கொலவெறியோட தொரத்துராணுக ,(இவனுககிட்ட இருந்து தப்பிச்சு ஓடுறதே பொழப்பா போச்சு) , அப்படி என்னத்தங்க செஞ்சிட்டோம்???
(என்னம்மோ இவனுக பிகர்கூட கடலை போட்டத அவனுக பொண்டாட்டிட போட்டுகுடுத்த மாதிரி)

அப்படி என்னதான் நடந்ததுன்னா ??????

அன்னைக்கு சனிகிழமை , காலேஜ் லீவு , 7 தடவையா "இதயத்தை திருடாதே" (அப்பைஎல்லாம் ஒரே லவ்ஸ் தான் ) படம் பாக்கலாம்ன்னு நானும் , என் பிரண்டு சிவாவும் எங்க ஊரு போடில இருந்து , தேனிக்கு (தேனி எங்க ஊருக்கு பக்கத்து ஊரு ) கிளம்பினோம் , தேனிலா பச்ச விட்டு இறங்கி தியேட்டருக்கு போயிட்டு இருக்கும் போது வழியில எங்க காலேஜ் கிளாஸ் மேட் பாலா (காலேஜுலே பெரிய்ய டெர்ரர் இவரு ) வந்தான்..... ,

"டே, மச்சான்ஸ் வாங்கடா ? என்னா இந்த பக்கம் ?"

"ஒன்னும் இல்ல மாப்பு , சும்மா படத்துக்கு வந்தோம்"

"என்னா படம்
?"

"அதுதான் , இதயத்தை திருடாதே
"

"அட டோமருங்களா எத்தினவாட்டிடா பாப்பிங்க ? சரி , சுரேஷ் எங்க? அவன் வரைலயா ?
"
(நம்ம இன்னொரு பிரண்டுங்க , போடில இருக்கான் )


"உனக்கு தெரியாதா? சுரேஸ நாய் கடிச்சிருச்சு ."
(சத்தியா சும்மா விளையாட்டுக்கு சொன்னோம் , பிளான் கூட பண்ணல)

"ஐயோ, எப்படா ?
"

"இன்னைக்கு காலைல தான் , அதுதான் அவன் ஊசிபோட்டு வீட்ல படுத்துருக்கான்."

"எங்கடா கடிச்சு?"

"பெருமாள் கோவில் பக்கத்துல
"

"அடிங் ங்கொய்யாலே
.... வாயில கெட்ட வார்த்த வந்திடும் , அவன் ஒடம்புல எந்த இடத்தில கடிச்சு ?

"ஓ
அதுவா ?
, வலது கால்லடா ."

"சரி மாப்ள , பை டா?
"

"ஓகே மாம்ஸ் , பை
"

சரின்னு ஒரே லவ் மூடோட படத்த பாத்திட்டு வந்தோம் , போடிக்கு வந்தா நம்ம சுரேஷ் எதுக்க வர்றான்............. ,
"எங்கடா போயிட்டு வர்ரிங்க ?"

"தேனிக்கு படத்துக்கு போனம்டா ?
"

"என்ன "இதயத்தை திருடாதே" படமா?


"ஆமாடா மச்சி எப்படிடா கண்டுபுடிச்ச ?"


"
கழுத கெட்டா குட்டிச்சுவறு
, சரி பாலாவ பாத்திகளா ?"

"ஆமாடா , அவன் வீட்டுக்கு போனோம் பாவம் அவன நாய் கடிச்சிருச்சு ?
"

"அடடா , எப்போ ?
"

"காலைல .
"
......
......


மறுநாள் , சண்டே வழக்கம் போல மொக்க போட்டு , அடுத்த நாள் மண்டே வழக்கம் போல லேட்டா காலேஜுக்கு போனோம் , காலேஜ் என்ற்றன்சுல கூட நுழையலங்க , அந்த நாயக சுரேசும் , பாலாவும்(கிளாசுக்கு கூட போகாம எங்களுக்காக வைட்பன்னிருக்காணுக ) விட்டு தொரத்தி , தொரத்தி அடிக்கிறானுக !!!

நாம யாரு விடுவமா??? எடுத்தேன் பாரு ஓட்டம் இன்னும் நிக்களைங்க!!!

என்னடா இந்த கோபத்துல தொரத்துரானுகன்னு தீவிரமா கிளாஸ் பொண்ணுக கிட்ட (பாருங்க எல்லா பயபுள்ளைகளும் , பொண்ணுக கிட்ட மட்டும் தான் உண்மையா சொல்லுறானுக ) விசாரிச்சு பாத்தா!!!

இவனுக ரெண்டு பெரும் நாங்க சொன்ன மறுநாள் சண்டே அன்னைக்கு , இந்த லூசு பசங்க இவன பாக்க அவனும் , அவன பாக்க இவனும்
(அதுவும் கைல பழங்கள் எல்லாம் வாங்கிகிட்டு ) போயிருக்காணுக . அதுக்கு நாங்களாங்க பொறுப்பு ?

டிஸ்கி : இது ஏற்கனவே நான் ப்ளாக் ஆரம்பிச்ச புதுசுல போட்ட பதிவு தான் , அப்ப புதுசுநாலா சரியா எழுதல எனக்கும் அது திருப்தியா இல்லை , அதனால்தான் இந்த மீள் பதிவு , படிச்சிட்டு இது எப்படி இருக்குன்னு சொல்லுங்க


164 comments:

PNS said...

மீள் பதிவா? உங்க ப்லாக்ல முன்பே படிச்ச மாதிரி இருக்கே.....

மங்குனி அமைச்சர் said...

கரக்டு, அப்ப ப்ளாக் வந்த புதுசு நால சரியா எழுதல , எனக்கும் அது திருப்தியா இல்லை , அதுதான் இப்ப , இது எப்படி இருக்கு ???

Praveenkumar said...

ம்ம்... அசத்துங்க... மங்குனி..!
உங்க பதிவு என்னா கொலைவெறி..
சுவாரஸ்யமாக...

Jey said...

வாயா வா. அரளி விதைய தீன்னுட்டு ஆள் அம்ம்பேல்னு நினைச்சிட்டு, மங்குனி கானவில்லைனு விளம்பரம் கொடுத்தவகைல ஒரு 15,000/- செலவாயிருச்சி, அனுப்பிவயியா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தங்கச்சிய நாய் கடிசிருச்சுப்பா, நானு மன்குனியிம் பட்டாவ இழுத்துக்குட்டு போனேம் தங்கச்சிய நாய் கடிசிருச்சுப்பா. அப்ப நம்ம பண்ணிக்குட்டியும் வந்தாரா!! தங்கச்சிய நாய் கடிசிருச்சுப்பா

Jey said...

அப்புறம் தமிலீஸ்ல ஓட்டு போட்டதுக்கு ஒரு 2500( + சர்வீஸ் டாக்ஸ் 12.36%) அனுப்பிருபா

மர்மயோகி said...

மங்குனி..இன்னும் அழுத்தமான காமெடியை எதிர்பார்க்கிறோம்..
asusual..ஓட்டுப் போட்டாச்சு...

vasu balaji said...

அப்ப படிக்காததால இப்ப நல்லாருக்கு:)

அன்புடன் நான் said...

”நாய”மா பார்த்தா ஒரு நாய வச்சி உங்க ரெண்டு பேரையும் கடிக்க வச்சிருக்கணும்

Chitra said...

அப்போ படிச்சதை விட, இப்போ இன்னும் நல்லா இருக்குது...... !!! அமைச்சரே..... மற்ற படங்கள் பார்க்க போன போது அடித்த கலாட்டக்களையும் பகிர்ந்து கொள்ளுங்க.... :-)

அமுதா கிருஷ்ணா said...

நாய் ஒரு நாள் உங்களை கடிச்சுட போகுது ஜாக்கிரதை.

athira said...

விடிய எழும்பியதும் நிறையவே சிரிக்கவைத்திட்டீங்க:). இவை எல்லாம் உண்மைச் சம்பவங்கள் தானே?

அதுதான், அப்பவே அடிச்சிட்டினமே, இப்பவும் எதுக்கு கலைக்கிறாங்க?:):).

Raghu said...

ஆஹா! இதுதான் ஆன் த‌ ஸ்பாட் ப்ளானா?!

Unknown said...

நீங்க கலைஞரின் அமைச்சரவையில் இருக்கவேண்டிய ஆளு ...

VELU.G said...

நல்லாயிருக்குங்க

ஜெய்லானி said...

ஏன்யா இந்த கொல வெறி.. ஏறகனவே படிச்சிட்டேனே ..!!! அதை நீயுமில்ல அழிச்சிட்டே ...

வீட்ல அடி அதிகமா ?

பெசொவி said...

//இவனுக ரெண்டு பெரும் நாங்க சொன்ன மறுநாள் சண்டே அன்னைக்கு , இந்த லூசு பசங்க இவன பாக்க அவனும் , அவன பாக்க இவனும் (அதுவும் கைல பழங்கள் எல்லாம் வாங்கிகிட்டு ) போயிருக்காணுக . அதுக்கு நாங்களாங்க பொறுப்பு ?//

சொந்த செலவுல சூனியம் வச்சதுமில்லாம, "அதுக்கு நாங்களா பொறுப்பு" என்று கேட்கும் மங்குனி அமைச்சரை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

திரு.மங்குனி அவர்களுக்கு,
தங்களுடைய பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் போது நாய் கடித்து விட்டது. இதனால் இந்த ஏழை எழுத்தாளன் தினமும் பார்க் ஷெராட்டன் சென்று நீரேற்றம் நடத்த முடியாது போய் விட்டது. இதற்கு நீங்களே முழுப்பொறுப்பேற்று, செலவிற்காக கீழ்கண்ட அக்கவுன்டிற்கு பணம் அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! (விருப்பமுள்ளவர்கள் யாரும் பணம் அனுப்பலாம்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

SB A/c: 0112341627864

Jey said...

பன்னி, நான் பணம் கேட்டதுக்கே, பதிலக்கானோம், இதுல னீங்க வேறயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
பன்னி, நான் பணம் கேட்டதுக்கே, பதிலக்கானோம், இதுல னீங்க வேறயா?//

பணமா கேட்டா கிடைக்காது, அக்கவுன்ட்ல போடச் சொல்லுங்க (அறிவு ஜீவிங்கள்லாம் இப்பிடித்தான் பண்றாங்க!)
Reference: beeruonline.com

Jey said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//Jey said...
பன்னி, நான் பணம் கேட்டதுக்கே, பதிலக்கானோம், இதுல னீங்க வேறயா?//

பணமா கேட்டா கிடைக்காது, அக்கவுன்ட்ல போடச் சொல்லுங்க (அறிவு ஜீவிங்கள்லாம் இப்பிடித்தான் பண்றாங்க!)
Reference: beeruonline.com///


இவைங்கல நம்பமுடியாது பன்னி, நம்ம அக்கவுண்ட் டீடய்ல் கொடுத்தா, அத ஹேக் பன்னிருவாங்க.
ரெசஸ்பான்ஸ் இல்லைனா, பக்கது ஊர்க்காரருதான், வீட்லபோயி வசூல் பன்னிறலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Jey said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//Jey said...
பன்னி, நான் பணம் கேட்டதுக்கே, பதிலக்கானோம், இதுல னீங்க வேறயா?//

பணமா கேட்டா கிடைக்காது, அக்கவுன்ட்ல போடச் சொல்லுங்க (அறிவு ஜீவிங்கள்லாம் இப்பிடித்தான் பண்றாங்க!)
Reference: beeruonline.com///


இவைங்கல நம்பமுடியாது பன்னி, நம்ம அக்கவுண்ட் டீடய்ல் கொடுத்தா, அத ஹேக் பன்னிருவாங்க.
ரெசஸ்பான்ஸ் இல்லைனா, பக்கது ஊர்க்காரருதான், வீட்லபோயி வசூல் பன்னிறலாம்.///


அப்போ மஞ்சப்பை ஒண்ண எடுத்துக்கிட்டு கெளம்புங்க!

ஜில்தண்ணி said...

நல்லாத்தான் இருக்கு :)))

சுசி said...

இதான் முதல் தடவை படிக்கிறேன்..

ரொம்ப சிரிச்சேன்.. வழக்கம் போல..

மங்குனி அமைச்சர் said...

பிரவின்குமார் said...

ம்ம்... அசத்துங்க... மங்குனி..!
உங்க பதிவு என்னா கொலைவெறி..
சுவாரஸ்யமாக... ///


நன்றிங்க பிரவின் குமார்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

வாயா வா. அரளி விதைய தீன்னுட்டு ஆள் அம்ம்பேல்னு நினைச்சிட்டு, மங்குனி கானவில்லைனு விளம்பரம் கொடுத்தவகைல ஒரு 15,000/- செலவாயிருச்சி, அனுப்பிவயியா.///


யப்பா ஜெய் , பஸ்ட்டு என்கிட்ட வாங்கின 2500000 பணத்த திருப்பி குடுக்குற வழிய பாரு

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தங்கச்சிய நாய் கடிசிருச்சுப்பா, நானு மன்குனியிம் பட்டாவ இழுத்துக்குட்டு போனேம் தங்கச்சிய நாய் கடிசிருச்சுப்பா. அப்ப நம்ம பண்ணிக்குட்டியும் வந்தாரா!! தங்கச்சிய நாய் கடிசிருச்சுப்பா/////


வலிக்கலையே , வலிக்கலையே

மங்குனி அமைச்சர் said...

Jey said...

அப்புறம் தமிலீஸ்ல ஓட்டு போட்டதுக்கு ஒரு 2500( + சர்வீஸ் டாக்ஸ் 12.36%) அனுப்பிருபா///


முதல் பதிலை படித்துகொள்ளவும்

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

மங்குனி..இன்னும் அழுத்தமான காமெடியை எதிர்பார்க்கிறோம்..
asusual..ஓட்டுப் போட்டாச்சு...//


நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன், அவ்வளவுதான் சரக்கு

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

அப்ப படிக்காததால இப்ப நல்லாருக்கு:)///


அப்ப படிச்சிருந்தா ஒன்னும் புரிஞ்சிருக்காது , ரொம்ப கேவலமா இருந்தது

மங்குனி அமைச்சர் said...

சி. கருணாகரசு said...

”நாய”மா பார்த்தா ஒரு நாய வச்சி உங்க ரெண்டு பேரையும் கடிக்க வச்சிருக்கணும்///


மங்கு உணக்க எதிரிகள் கூடவே இருக்காங்க

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

அப்போ படிச்சதை விட, இப்போ இன்னும் நல்லா இருக்குது...... !!! அமைச்சரே..... மற்ற படங்கள் பார்க்க போன போது அடித்த கலாட்டக்களையும் பகிர்ந்து கொள்ளுங்க.... :-)////

மேடம் , சும்மா கலாயிகாதிங்க

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

நாய் ஒரு நாள் உங்களை கடிச்சுட போகுது ஜாக்கிரதை.///


கேர்புல்லா தான் இருக்கணும் போல

மங்குனி அமைச்சர் said...

athira said...

விடிய எழும்பியதும் நிறையவே சிரிக்கவைத்திட்டீங்க:). இவை எல்லாம் உண்மைச் சம்பவங்கள் தானே?

அதுதான், அப்பவே அடிச்சிட்டினமே, இப்பவும் எதுக்கு கலைக்கிறாங்க?:):).///


உண்மை சம்பவம்தான் மேடம்

மங்குனி அமைச்சர் said...

ர‌கு said...

ஆஹா! இதுதான் ஆன் த‌ ஸ்பாட் ப்ளானா?!///

yes ragu sir

Jey said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். உங்கிட்டருந்து வசூல் பன்ன ப்பிளான் பன்னிட்டு வறேன்.

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

நீங்க கலைஞரின் அமைச்சரவையில் இருக்கவேண்டிய ஆளு ...////


ஹி,ஹி,ஹி நமக்கு இந்த லோகல் அமைச்சரவை வேண்டாம் சார் ,

மங்குனி அமைச்சர் said...

VELU.G said...

நல்லாயிருக்குங்க///


ரொம்ப நன்றி வேலு சார்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

ஏன்யா இந்த கொல வெறி.. ஏறகனவே படிச்சிட்டேனே ..!!! அதை நீயுமில்ல அழிச்சிட்டே ...///

அதை இன்னும் அழிக்கல

// வீட்ல அடி அதிகமா ?///

ஆமாப்பா ஆமா

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//இவனுக ரெண்டு பெரும் நாங்க சொன்ன மறுநாள் சண்டே அன்னைக்கு , இந்த லூசு பசங்க இவன பாக்க அவனும் , அவன பாக்க இவனும் (அதுவும் கைல பழங்கள் எல்லாம் வாங்கிகிட்டு ) போயிருக்காணுக . அதுக்கு நாங்களாங்க பொறுப்பு ?//

சொந்த செலவுல சூனியம் வச்சதுமில்லாம, "அதுக்கு நாங்களா பொறுப்பு" என்று கேட்கும் மங்குனி அமைச்சரை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.///


எது செஞ்சாலும் சொல்லிட்டு செய்ங்க (அப்பத்தான் தப்பிச்சு ஓட வசதியா இருக்கும் )

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

திரு.மங்குனி அவர்களுக்கு,
தங்களுடைய பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் போது நாய் கடித்து விட்டது. இதனால் இந்த ஏழை எழுத்தாளன் தினமும் பார்க் ஷெராட்டன் சென்று நீரேற்றம் நடத்த முடியாது போய் விட்டது. இதற்கு நீங்களே முழுப்பொறுப்பேற்று, செலவிற்காக கீழ்கண்ட அக்கவுன்டிற்கு பணம் அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! (விருப்பமுள்ளவர்கள் யாரும் பணம் அனுப்பலாம்!)////


பிளீஸ் செக் தா நம்பர் யு ஹவே டயல்டு , நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

SB A/c: 0112341627864///


ஆமா அந்த "SB " யாரு ?? அவரு அக்கவுன்ட்டுல பணம் போடா சொல்ற

மங்குனி அமைச்சர் said...

Jey said...

பன்னி, நான் பணம் கேட்டதுக்கே, பதிலக்கானோம், இதுல னீங்க வேறயா?///


என்ன? , என்ன? சரியா கேக்கல ... ஹலோ ..ஹலோ .....

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
பன்னி, நான் பணம் கேட்டதுக்கே, பதிலக்கானோம், இதுல னீங்க வேறயா?//

பணமா கேட்டா கிடைக்காது, அக்கவுன்ட்ல போடச் சொல்லுங்க (அறிவு ஜீவிங்கள்லாம் இப்பிடித்தான் பண்றாங்க!)
Reference: beeruonline.com///


சரி , அதெல்லாம் அறிவு ஜீவிக செய்றது , நமக்கு அது சரிப்படுமா
???

மங்குனி அமைச்சர் said...

Jey said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//Jey said...

ரெசஸ்பான்ஸ் இல்லைனா, பக்கது ஊர்க்காரருதான், வீட்லபோயி வசூல் பன்னிறலாம்.///


ஹேக் பன்னருதுன்னா என்னா சார் ???

இப்படிக்கு
குழந்தைகள் சங்கம்

Jey said...

பன்னி, முத்து, பருப்பு பட்டா எங்கிருந்தலும் வரவும்.( ஆமாப்பா இங்க ஒருதர குனிய வச்சி கும்மியடிக்க வெண்டியிருக்கு)

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Jey said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//Jey said...



அப்போ மஞ்சப்பை ஒண்ண எடுத்துக்கிட்டு கெளம்புங்க!////


இது மரியாத , நமக்கு இதுதான் ஒத்து வரும்

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி said...

நல்லாத்தான் இருக்கு :)))///


thank you coldwater

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தா வாரேன், உங்காந்து எல்லாத்தையும் பேசி பைசல் பண்ணுவோம்!

மங்குனி அமைச்சர் said...

me tha 50

ஐ , நான் தான் 50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வட போச்சே!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தா வாரேன், உங்காந்து எல்லாத்தையும் பேசி பைசல் பண்ணுவோம்!///

அடப்பாவி எங்கயா இருந்த வட போச்சே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

50வது எடத்த புடிச்ச்துக்கு எங்க கடைல என்ன பரிசு கொடுக்கறோம் தெரியுமா மங்கு?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வட போச்சே!//

பண்ணி நீதான் 50 எனக்கு தான் வட போச்சு

மங்குனி அமைச்சர் said...

சுசி said...

இதான் முதல் தடவை படிக்கிறேன்..

ரொம்ப சிரிச்சேன்.. வழக்கம் போல..///


thanks susi sir

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

வட போச்சே!//

பண்ணி நீதான் 50 எனக்கு தான் வட போச்சு//

அப்போ பேமென்ட்டு கூடிக்கிட்டே போகுதுபோல?

மங்குனி அமைச்சர் said...

Jey said...

பன்னி, முத்து, பருப்பு பட்டா எங்கிருந்தலும் வரவும்.( ஆமாப்பா இங்க ஒருதர குனிய வச்சி கும்மியடிக்க வெண்டியிருக்கு)///


உஸ்,, இதுல அடிக்க ஆள வேற கூற்றானுகளே

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

வட போச்சே!//

பண்ணி நீதான் 50 எனக்கு தான் வட போச்சு//

அப்போ பேமென்ட்டு கூடிக்கிட்டே போகுதுபோல?////


வடைக்கு எல்லாம் காசு வேணாம் , பிரீயா வச்சுக்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said

வடைக்கு எல்லாம் காசு வேணாம் , பிரீயா வச்சுக்க//

யோவ் இதுவே எங்க கடையா இருந்தா என்ன கொடுப்போம் தெரியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முத்துவக் கேட்டுபாரு நேத்து 200 போட்டதுக்கு என்ன பரிசு கொடுத்தோம்னு!

Jey said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
50வது எடத்த புடிச்ச்துக்கு எங்க கடைல என்ன பரிசு கொடுக்கறோம் தெரியுமா மங்கு?//

பன்னி, மங்குனிய நீச்சல் அடிக்க அனுப்பிருவோமா?( அந்த நீச்சலுகுதான்யா.)

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said

வடைக்கு எல்லாம் காசு வேணாம் , பிரீயா வச்சுக்க//

யோவ் இதுவே எங்க கடையா இருந்தா என்ன கொடுப்போம் தெரியுமா? ///


சொல்லு பன்னி , தெரியாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Jey said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
50வது எடத்த புடிச்ச்துக்கு எங்க கடைல என்ன பரிசு கொடுக்கறோம் தெரியுமா மங்கு?//

பன்னி, மங்குனிய நீச்சல் அடிக்க அனுப்பிருவோமா?( அந்த நீச்சலுகுதான்யா.)////

அனுப்பிடவேண்டியதுதான்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உயர்திரு சமூகத்துக்கு, பட்டாபட்டியின் வணக்கங்கள்..

சமீபத்தில வந்த உங்களின் மீள்பதிவை படித்தேன்..ரசித்தேன்..

மீள்பதிவின் மூலம், நீங்கள் பிரபல பதிவராகும் தகுதியை பெற்றுள்ளீர்கள் என்றி இந்த நேரத்தில தெரிவிப்பது என் கடமையாகும்..

உங்கள் பணி மென்மேலும் சிறக்க..எல்லா வல்ல இறைவனை இறஞ்சுகிறேன்..

பதிவில “டோமர்” என்று நீங்கள் சொல்வது, பிரபல டோமரையல்ல என்று மக்களுக்கு விளக்குவது தங்களுடை கடமை ஆகும், என்று இந்த பொன்னான நேரத்தில சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said

வடைக்கு எல்லாம் காசு வேணாம் , பிரீயா வச்சுக்க//

யோவ் இதுவே எங்க கடையா இருந்தா என்ன கொடுப்போம் தெரியுமா? ///


சொல்லு பன்னி , தெரியாது//

200 போட்டதுக்கு சிறப்புப் பரிசா முத்துவ கலாக்காகிட்ட ஒரு வாரம் கெமிஸ்ட்ரி டியூசன் அனுப்பியிருக்கோம்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...
உயர்திரு சமூகத்துக்கு, பட்டாபட்டியின் வணக்கங்கள்..

////
vaappaa pattaa,
panni , pattaa, jey
makkaa irunga oru 15 nimisaththula vanthu vidukiren

Jey said...

பன்னி உன் கடைல, பருப்பு 300 போட்டான்யா.( சின்ன பசங்க ச்பீடா ஓடி ஜெயிச்சிடராங்ல, என்ன செய்யலாம்,!!!)

Jey said...

வா பட்டா வா, நா டீ சாப்பிட போகும்போது வர்றயேயா.
கொஞம் பொரு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பட்டா என்ன வந்துட்டு எஸ்கேப் ஆயிட்ட மாதிரி தெரியுது?

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...


மீள்பதிவின் மூலம், நீங்கள் பிரபல பதிவராகும் தகுதியை பெற்றுள்ளீர்கள் என்றி இந்த நேரத்தில தெரிவிப்பது என் கடமையாகும்..
////


திரு பட்டாப்பட்டி அவர்கள் சமூகத்திற்கு , நான் ஏற்கனவே பிரபல பதிவர்தான் , எனவே இப்போது பிரபலபிரபல பதிவர் அப்படின்னு கூறினால் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து


/// பதிவில “டோமர்” என்று நீங்கள் சொல்வது, பிரபல டோமரையல்ல என்று மக்களுக்கு விளக்குவது தங்களுடை கடமை ஆகும், என்று இந்த பொன்னான நேரத்தில சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...////


இதில் வரும் டோமரும் , நீங்க கூறிய டோமரும் இரட்டையர்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

வா பட்டா வா, நா டீ சாப்பிட போகும்போது வர்றயேயா.
கொஞம் பொரு.///


ஆளை புடி விடாத அமுக்கு

Balamurugan said...

old wine in a new bottle
ஹிஹி...

இன்னுமா உங்கள துரத்துறாங்க?

மங்குனி அமைச்சர் said...

பாலமுருகன் said...

old wine in a new bottle
ஹிஹி...

இன்னுமா உங்கள துரத்துறாங்க?///


ஆமா சார் , ஆமா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உயர்திரு பட்டாபட்டி, மற்றும் மேதகு மங்குனி அமைச்சர் அவர்களின் மேன்மைதாங்கிய சமூகத்திற்கு,

நீங்கள் இருவரும் பிரபலபதிவர்களாக இருக்கின்றபடியாலும், பல புதிய பதிவர்களின் வழிகாடிகளாகத் திகழ்ந்து வருகின்றமையாலும், சமூக முன்னேற்றத்திற்குப் பல அரும்பெரும் தொண்டுகள் புரிந்து வருவதாலும் யாம் உம்மிருவருக்கும் உயரிய பரிசு தருவதாக உத்தேசித்துள்ளோம். எனினும் பரிசு கொடுப்பதற்காக துவங்கப்பட்ட வங்கிக் கணக்கில் இன்னும் பணம் வந்து சேராததால், தயைகூர்ந்து தாங்களிருவரும் தனித்தனியாகவோ, இணைந்தோ பணம்திரட்டி கீழ்காணும் கணக்கில் சேர்த்து விடுதல் நலமாக இருக்கும்!

வங்கிகணக்கு எண்: கஎழயதுஅகந

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்..எதுக்குயா எல்லொரும் என்னைய கும்முறீங்க..(நா)ன் பாவம்..ஹி..ஹி..

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உயர்திரு பட்டாபட்டி, மற்றும் மேதகு மங்குனி அமைச்சர் அவர்களின் மேன்மைதாங்கிய சமூகத்திற்கு,

நீங்கள் இருவரும் பிரபலபதிவர்களாக இருக்கின்றபடியாலும், பல புதிய பதிவர்களின் வழிகாடிகளாகத் திகழ்ந்து வருகின்றமையாலும், சமூக முன்னேற்றத்திற்குப் பல அரும்பெரும் தொண்டுகள் புரிந்து வருவதாலும் யாம் உம்மிருவருக்கும் உயரிய பரிசு தருவதாக உத்தேசித்துள்ளோம். எனினும் பரிசு கொடுப்பதற்காக துவங்கப்பட்ட வங்கிக் கணக்கில் இன்னும் பணம் வந்து சேராததால், தயைகூர்ந்து தாங்களிருவரும் தனித்தனியாகவோ, இணைந்தோ பணம்திரட்டி கீழ்காணும் கணக்கில் சேர்த்து விடுதல் நலமாக இருக்கும்!

வங்கிகணக்கு எண்: கஎழயதுஅகந///

ஏம்பா பன்னி, நாங்களே கம்முநிஸ்ட் காரங்க எப்பவும் உண்டியலோடதான் அலைவோம் எங்கல்டேவா ???

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

யோவ்..எதுக்குயா எல்லொரும் என்னைய கும்முறீங்க..(நா)ன் பாவம்..ஹி..ஹி..///


ஆடு மாடிகிச்சு , எனக்கு லெக் பீஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said...
பட்டாபட்டி.. said...

யோவ்..எதுக்குயா எல்லொரும் என்னைய கும்முறீங்க..(நா)ன் பாவம்..ஹி..ஹி..///


ஆடு மாடிகிச்சு , எனக்கு லெக் பீஸ்//


எத்தனை நாளைக்கு லெக் பீசு சாப்பிடறது? இன்னைக்கு வேற ஏதாவது ட்ரை பண்ணுங்கப்பு!

Jey said...

பன்னிக்குட்டிக்கு, ரெண்டு தோட்டா பார்ர்ச்சல்ல்ல்.

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said...
பட்டாபட்டி.. said...

யோவ்..எதுக்குயா எல்லொரும் என்னைய கும்முறீங்க..(நா)ன் பாவம்..ஹி..ஹி..///


ஆடு மாடிகிச்சு , எனக்கு லெக் பீஸ்//


எத்தனை நாளைக்கு லெக் பீசு சாப்பிடறது? இன்னைக்கு வேற ஏதாவது ட்ரை பண்ணுங்கப்பு!//


சரி , சரி, முதல்ல ஆட்ட புடி தப்பிச்சு தப்பிச்சு ஓடுது பாரு

Jey said...

பட்டா, வாங்க வாங்க, என்னோட பதிவுலக குரு நீங்க, சும்மா உட்ருவோமா, தைரியமா வாங்க தல.

Jey said...

ட்ரைனிங் போன முத்துகிட்ட இருந்து, ஏதும் நல்ல தகவல் ஏதும் உண்டாப்பா?

மங்குனி அமைச்சர் said...

பார்சல் எல்லாம் கிடையாது , எல்லாம் ஸெல்ப் சர்வீஸ்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

பட்டா, வாங்க வாங்க, என்னோட பதிவுலக குரு நீங்க, சும்மா உட்ருவோமா, தைரியமா வாங்க தல.//


அப்படி லைட்ட தலைல மஞ்ச தண்ணிய ஊத்து

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// Jey said...
ட்ரைனிங் போன முத்துகிட்ட இருந்து, ஏதும் நல்ல தகவல் ஏதும் உண்டாப்பா?//

ட்ரைனிங் போயிட்டு வந்த முத்து அடிச்சிப் போட்ட மாதிரி காலைல இருந்து தூங்கறான், எழுப்ப முடியல!

சிநேகிதன் அக்பர் said...

என்னா கொலைவெறி! நல்லாயிருங்க :)

Jey said...

//ட்ரைனிங் போயிட்டு வந்த முத்து அடிச்சிப் போட்ட மாதிரி காலைல இருந்து தூங்கறான், எழுப்ப முடியல!//

இதுக்குதான் நீச்சல் கத்துகுடுத்து அனுபலாம்னு சொன்னேன், நேங்கதான், இடுப்புல கயிறு கட்டிடிரலாம்னு சொன்னீங்க, இப்போ என்னாச்சி பாருங்க, பாவம்யா முத்து.

சாருஸ்ரீராஜ் said...

மீள் பதிவு அருமை

Jey said...

//Jey said...

பட்டா, வாங்க வாங்க, என்னோட பதிவுலக குரு நீங்க, சும்மா உட்ருவோமா, தைரியமா வாங்க தல.//


அப்படி லைட்ட தலைல மஞ்ச தண்ணிய ஊத்து//

மங்குனி கடைசில பட்டாவ தொரத்திவுட்டேகளேப்பா( பட்டா இதுக்கெல்லாம் அசருர ஆளா என்ன?.)

Jey said...

பட்டா நான் உங்க கட்சி தொண்டன் தல, வந்து ஆள் மட்டும் காட்டு, போட்டு தள்ளிரலாம்.

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...

என்னா கொலைவெறி! நல்லாயிருங்க :) ///

thanks akbar sir

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// Jey said...
ட்ரைனிங் போன முத்துகிட்ட இருந்து, ஏதும் நல்ல தகவல் ஏதும் உண்டாப்பா?//

ட்ரைனிங் போயிட்டு வந்த முத்து அடிச்சிப் போட்ட மாதிரி காலைல இருந்து தூங்கறான், எழுப்ப முடியல!//


எத செஞ்சாலும் தெளிவா செய்கப்பா

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

மீள் பதிவு அருமை//

thanks medam

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//Jey said...

பட்டா, வாங்க வாங்க, என்னோட பதிவுலக குரு நீங்க, சும்மா உட்ருவோமா, தைரியமா வாங்க தல.//


அப்படி லைட்ட தலைல மஞ்ச தண்ணிய ஊத்து//

மங்குனி கடைசில பட்டாவ தொரத்திவுட்டேகளேப்பா( பட்டா இதுக்கெல்லாம் அசருர ஆளா என்ன?.)///


அட போப்பா , அது தப்பிச்சு ஓடிடுச்சு

மங்குனி அமைச்சர் said...

Jey said...

பட்டா நான் உங்க கட்சி தொண்டன் தல, வந்து ஆள் மட்டும் காட்டு, போட்டு தள்ளிரலாம்.///


ஆடுகிட்டே அட்ரஸ் கேட்குறியே

Jey said...

99

பருப்பு (a) Phantom Mohan said...

அமைச்சரே எப்பிடி இந்த மாதிரி நகைச்சுவையாக எழுத முடியுது! பதிவு மிகவும் அருமையாக ரசிக்கும் படி உள்ளது. பேஷ்! பேஷ்!

Jey said...

இந்தவாட்டியாவது 100 போட விட்டாய்ங்களே!!

Jey said...

பருப்பு எப்புடீ.

பருப்பு (a) Phantom Mohan said...

just miss 100

மங்குனி அமைச்சர் said...

me the 100

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

அமைச்சரே எப்பிடி இந்த மாதிரி நகைச்சுவையாக எழுத முடியுது! பதிவு மிகவும் அருமையாக ரசிக்கும் படி உள்ளது. பேஷ்! பேஷ்!///


வாப்பு

மங்குனி அமைச்சர் said...

Jey said...

இந்தவாட்டியாவது 100 போட விட்டாய்ங்களே!!//


வாழ்த்துக்கள் , ஜெய்க்கு ஒரு பருத்திபால் பார்சல்

பருப்பு (a) Phantom Mohan said...

மங்குனி அமைச்சர் said...

me the 100
/////////////////////

யோவ் மங்குனி, லூசாய்யா நீ??????

எவ்ளோ கஷ்டப்பட்டு உன் பதிவப் பாராட்டி எழுதிருக்கேன், மறுபடியும் மறுபடியும் நீ மங்குநின்னு ப்ரூவ் பண்றியே!

Jey said...

மங்குனி நல்லா கண்ண தொறந்து பாருய்யா யாரு 100னு?.
இந்த 100ஐ , நான் எனது தானைத்தலைவர் பட்டாபட்டிக்கு காணிக்கையாக்குகிறேன்.

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைச்சர் said...

me the 100//

வட போச்சே , எப்படியெல்லாம் எமாதுராணுக

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

மங்குனி அமைச்சர் said...

me the 100
/////////////////////

யோவ் மங்குனி, லூசாய்யா நீ??????

எவ்ளோ கஷ்டப்பட்டு உன் பதிவப் பாராட்டி எழுதிருக்கேன், மறுபடியும் மறுபடியும் நீ மங்குநின்னு ப்ரூவ் பண்றியே!//

நீ பட்ட கஷ்டத்த பாத்து என் கண்ணு கலங்கி போச்சு

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி நல்லா கண்ண தொறந்து பாருய்யா யாரு 100னு?.
இந்த 100ஐ , நான் எனது தானைத்தலைவர் பட்டாபட்டிக்கு காணிக்கையாக்குகிறேன்.
////


பாத்துட்டேன் , பாத்துட்டேன்
June 21, 2010 7:12 PM

பருப்பு (a) Phantom Mohan said...

என்னய்யா கெட்ட பழக்கம் இது மீள் பதிவு...கீழ் பதிவுன்னு! மத்தவங்க ஹிட்ஸ் வேணும், கடை காலியா இருக்கக்கூடாதுன்னு மீள் பதிவு போடுறாங்க, நாமெல்லாம் யாரு, நமக்கு இது தேவையா? வேணும்னா ஒரு புனைவு போடு, நான் வேணும்னா பேட்டி குடுக்கிறேன்.

பருப்பு (a) Phantom Mohan said...

நீ பட்ட கஷ்டத்த பாத்து என் கண்ணு கலங்கி போச்சு
/////////////////////

கண்ணு கலங்கி என்ன பண்ண, இதே மாதிரி எல்லாப் பதிவுக்கும் கருத்தும் ஓட்டும் போடுறேன், எவ்ளோ குடுப்ப?

பருப்பு (a) Phantom Mohan said...

ha ha ha me the 115!

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

என்னய்யா கெட்ட பழக்கம் இது மீள் பதிவு...கீழ் பதிவுன்னு! மத்தவங்க ஹிட்ஸ் வேணும், கடை காலியா இருக்கக்கூடாதுன்னு மீள் பதிவு போடுறாங்க, நாமெல்லாம் யாரு, நமக்கு இது தேவையா? வேணும்னா ஒரு புனைவு போடு, நான் வேணும்னா பேட்டி குடுக்கிறேன்.///

இது நல்லாருக்கே , யாரை போட்டு தள்ளலாம்? (நல்ல பெரிய தலையா சொல்லு )

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

நீ பட்ட கஷ்டத்த பாத்து என் கண்ணு கலங்கி போச்சு
/////////////////////

கண்ணு கலங்கி என்ன பண்ண, இதே மாதிரி எல்லாப் பதிவுக்கும் கருத்தும் ஓட்டும் போடுறேன், எவ்ளோ குடுப்ப?///

ஊரே இதர் வேலையாதான் அலையுரிகளா

பருப்பு (a) Phantom Mohan said...

இது நல்லாருக்கே , யாரை போட்டு தள்ளலாம்? (நல்ல பெரிய தலையா சொல்லு )
//////////////////

பட்டாபட்டி ன்னு ஒரு பதிவர் ரொம்ப ஓவரா எழுதுறான், அவனப் போடுவோம். இல்ல சீட்டு குலுக்கி போட்டுப் பார்ப்போம்.

Jey said...

மங்குனி உங்க ட்வ்-ல என்னொட பேட்டி ஒன்ன போடுயா, ஃப்ரேய கால்சீட் குடுக்குறேன்.( டிவி-ல சோலோவ லைவ் ப்ரொக்ராம்ல கலந்துகிட்ட அனுபவம் எனக்கு இருக்குயா)

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

இது நல்லாருக்கே , யாரை போட்டு தள்ளலாம்? (நல்ல பெரிய தலையா சொல்லு )
//////////////////

பட்டாபட்டி ன்னு ஒரு பதிவர் ரொம்ப ஓவரா எழுதுறான், அவனப் போடுவோம். இல்ல சீட்டு குலுக்கி போட்டுப் பார்ப்போம்.///

ரைட்டு , பட்டாவே கரக்ட்டு தான்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி உங்க ட்வ்-ல என்னொட பேட்டி ஒன்ன போடுயா, ஃப்ரேய கால்சீட் குடுக்குறேன்.( டிவி-ல சோலோவ லைவ் ப்ரொக்ராம்ல கலந்துகிட்ட அனுபவம் எனக்கு இருக்குயா)//


இது யாருப்பா ? நேரத்துக்கு ஒரு போடோவோட வர்றது

பருப்பு (a) Phantom Mohan said...

Jey said...

மங்குனி உங்க ட்வ்-ல என்னொட பேட்டி ஒன்ன போடுயா, ஃப்ரேய கால்சீட் குடுக்குறேன்.( டிவி-ல சோலோவ லைவ் ப்ரொக்ராம்ல கலந்துகிட்ட அனுபவம் எனக்கு இருக்குயா)
///////////////////

யாருய்யா அது குருவியப்புடிச்சிக்கிட்டு போஸ் குடுக்கிறது? ஆளு புதுசா இருக்கு.

Jey said...

பருப்பு, எங்க தல மேல தூசு பட்டா கூட, ஒலகமே கொந்தளிச்சிரும் ஆமா சொல்லிபுட்டேன்.

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

Jey said...

மங்குனி உங்க ட்வ்-ல என்னொட பேட்டி ஒன்ன போடுயா, ஃப்ரேய கால்சீட் குடுக்குறேன்.( டிவி-ல சோலோவ லைவ் ப்ரொக்ராம்ல கலந்துகிட்ட அனுபவம் எனக்கு இருக்குயா)
///////////////////

யாருய்யா அது குருவியப்புடிச்சிக்கிட்டு போஸ் குடுக்கிறது? ஆளு புதுசா இருக்கு.///

ஜெய் பேர்ல எவனோ விளையாடுறான் , எவன்னு பாரு போட்டு தள்ளுவோம்

Jey said...

//யாருய்யா அது குருவியப்புடிச்சிக்கிட்டு போஸ் குடுக்கிறது? ஆளு புதுசா இருக்கு//
நாந்தான்யா அது.

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//யாருய்யா அது குருவியப்புடிச்சிக்கிட்டு போஸ் குடுக்கிறது? ஆளு புதுசா இருக்கு//
நாந்தான்யா அது.///

அடப்பாவி நீயா? , நீயா? , நீயா ? சீக்கிரம் போடவா மாத்து , இங்க உன்னபாத்து ரெண்டு மாடு செத்துபோச்சு, நாலு பேருக்கு கண்ணு லோல்லையா போச்ச்சு

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//யாருய்யா அது குருவியப்புடிச்சிக்கிட்டு போஸ் குடுக்கிறது? ஆளு புதுசா இருக்கு//
நாந்தான்யா அது.///

எல்லாம் பதிவு போடா ஆரம்பிச்சிடாக, நீ எப்ப ???

பருப்பு (a) Phantom Mohan said...

Jey said...

பருப்பு, எங்க தல மேல தூசு பட்டா கூட, ஒலகமே கொந்தளிச்சிரும் ஆமா சொல்லிபுட்டேன்.

////////////////////////////////////


ஓய்! எவம்லே அது எங்க ஏரியாவுல வந்து jey பேருல அதுவும் பட்டாவுக்கு சப்போட்டா கம்மென்ட் போடுறது. ஒலகம் கொந்தளிக்குமாம்ல, முதல்ல எந்திரிச்சு வாலே இங்க. அமைச்சர் முன்னாடி என்னாலே திமிர் பேச்சு, தைரியம் இருந்தா அமைச்சர் மேல கைய வச்சிட்டு அப்புறம் பேசுலே!

மங்கு இன்னைக்கு இவன சும்மா விடக்கூடாது, நீ உன் குல தெய்வத்த வேண்டிக்கோ!

மங்குனி அமைச்சர் said...

Jey said...

பருப்பு, எங்க தல மேல தூசு பட்டா கூட, ஒலகமே கொந்தளிச்சிரும் ஆமா சொல்லிபுட்டேன்.//

ங்கொய்யாலே பதிவே போடல , அதுக்குள்ள பத்து பாலோவர்

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

Jey said...

பருப்பு, எங்க தல மேல தூசு பட்டா கூட, ஒலகமே கொந்தளிச்சிரும் ஆமா சொல்லிபுட்டேன்.

////////////////////////////////////


ஓய்! எவம்லே அது எங்க ஏரியாவுல வந்து jey பேருல அதுவும் பட்டாவுக்கு சப்போட்டா கம்மென்ட் போடுறது. ஒலகம் கொந்தளிக்குமாம்ல, முதல்ல எந்திரிச்சு வாலே இங்க. அமைச்சர் முன்னாடி என்னாலே திமிர் பேச்சு, தைரியம் இருந்தா அமைச்சர் மேல கைய வச்சிட்டு அப்புறம் பேசுலே!///


அடப்பாவி , அடிவாங்க விட்டு வெடிக்க பாப்ப போலருக்கு

மங்கு இன்னைக்கு இவன சும்மா விடக்கூடாது, நீ உன் குல தெய்வத்த வேண்டிக்கோ!

Jey said...

//அடப்பாவி நீயா? , நீயா? , நீயா ? சீக்கிரம் போடவா மாத்து , இங்க உன்னபாத்து ரெண்டு மாடு செத்துபோச்சு, நாலு பேருக்கு கண்ணு லோல்லையா போச்ச்சு//
மங்கு, என்னோட personaliti-ய பாத்து இவ்வளவுவயித்தெறிச்சல் படுவேனு தெரியாம போச்சியா?. சரி சரி போட்டோவ மாத்திட்டேன், உன் கன்னு பட்டா அதுக்கு நிவாரணம் வேற இல்லை.

பருப்பு (a) Phantom Mohan said...

மங்குனி அமைச்சர் said...

Jey said...

பருப்பு, எங்க தல மேல தூசு பட்டா கூட, ஒலகமே கொந்தளிச்சிரும் ஆமா சொல்லிபுட்டேன்.//

ங்கொய்யாலே பதிவே போடல , அதுக்குள்ள பத்து பாலோவர்
//////////////////////

எல்லாம் காசு குடுத்து சேர்த்த கூட்டம், மானங்கெட்ட பயலுக.

அடங்கோனியா நானும் ஒரு பாலோவர்!

jey குழந்தைப் பையன் மங்கு, கிழிய கொஞ்சுற ஸ்டைலப் பார்த்தியா?

பருப்பு (a) Phantom Mohan said...

சரிப்பா நான் ஷாப்பிங் போறேன், நாளைக்கு யார் வீட்டுல கும்மி?

சொல்லி அனுப்புங்க வந்து தாய்மாமன் முறைய செஞ்சிட்டுப் போறேன், வேற என்ன பண்ண?

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

மங்குனி அமைச்சர் said...

Jey said...

பருப்பு, எங்க தல மேல தூசு பட்டா கூட, ஒலகமே கொந்தளிச்சிரும் ஆமா சொல்லிபுட்டேன்.//

ங்கொய்யாலே பதிவே போடல , அதுக்குள்ள பத்து பாலோவர்
//////////////////////

எல்லாம் காசு குடுத்து சேர்த்த கூட்டம், மானங்கெட்ட பயலுக.

அடங்கோனியா நானும் ஒரு பாலோவர்!

jey குழந்தைப் பையன் மங்கு, கிழிய கொஞ்சுற ஸ்டைலப் பார்த்தியா? ///


ஆமா , ஆமா நானும் இப்பதான் பாத்தேன் , பாவம் பச்ச மண்ணு

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

சரிப்பா நான் ஷாப்பிங் போறேன், நாளைக்கு யார் வீட்டுல கும்மி?

சொல்லி அனுப்புங்க வந்து தாய்மாமன் முறைய செஞ்சிட்டுப் போறேன், வேற என்ன பண்ண?///

ரைட்டு , நானும் கிளம்புறேன் , நாளைக்கு எவன் வீடு தொரந்திருக்கோ அங்கோ போய் குந்திட வேண்டியதுதான்

Jey said...

//ங்கொய்யாலே பதிவே போடல , அதுக்குள்ள பத்து பாலோவர்//

ய்யோவ் இது அன்பால சேர்ந்த கூட்டம்யா, ஒரு பதிவு எழுதி டின்கெரிங் வேல நடந்துகிட்டு இருக்கு, அத போட்டுட்டு, முத உங்கள பலி கொடித்து, பட்டவுக்கு லெக் பீசுதாம்ல.

Jey said...

//jey குழந்தைப் பையன் மங்கு, கிழிய கொஞ்சுற ஸ்டைலப் பார்த்தியா? ///


ஆமா , ஆமா நானும் இப்பதான் பாத்தேன் , பாவம் பச்ச மண்ணு//

இத்ல்லாம் ஊருக்கு போடுற வேஷம்ல, நெசத்துல நங்க டெர்ரர் தெரியும்ல.

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//ங்கொய்யாலே பதிவே போடல , அதுக்குள்ள பத்து பாலோவர்//

ய்யோவ் இது அன்பால சேர்ந்த கூட்டம்யா, ஒரு பதிவு எழுதி டின்கெரிங் வேல நடந்துகிட்டு இருக்கு, அத போட்டுட்டு, முத உங்கள பலி கொடித்து, பட்டவுக்கு லெக் பீசுதாம்ல.///

இப்ப பதினோரு பாலோவர் , நீ டிங்கரிங் பண்ணி முடிகிரதுகுள்ள நூறு பலோவர் வந்துடுவாங்க (சரி அக்கவுண்டுக்கு பணத்த அனுப்பிடு )

Jey said...

ப்ருப்பு, சாப்பிங் போகும்போது சென்னைல இருக்குர எங்களுக்கு என்னய வாங்கிட்டு வரப்போர?...

Jaleela Kamal said...

என்னா கொலவெறி

Jey said...

அடப்பாவி மங்கு, இன்னிக்குதான் follower ஆனியா?. இத கவனிக்காம விட்டேனே?.

ஹேமா said...

அய்யோ...இவ்ளோ பிந்து வந்திருக்கேனா.இவ்வளவு நேரத்துக்கு மங்குனி அமைச்சர் சம்பல்தான் !

MUTHU said...

யாராவது இருக்கீங்களா

Jey said...

வா முத்து, ட்ரைனிங் போயிட்டு அசதியா , தூங்கிட்டு இருந்தேனு கேள்விபட்டேன், உண்மயா?.

Jey said...

கடைல யாரும் இல்லையா?

அன்புடன் மலிக்கா said...

அச்சோ நாய்ய்ய்ய்ய்ய்ய்.

கொலவெறியோடத்தான் சுத்துறீங்க அப்படிதானே. என்னவோ பாத்து பாத்து பத்திரம் மங்க்லுனியாரின் கிட்னி. அச்சோ மூளை...

அ.முத்து பிரகாஷ் said...

மங்குனி தோழர் !
எனக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம் ...
ஆனா ... நண்பர்கள் அடிக்கெல்லாம் வரல்ல ...
ஜஸ்ட் உதை தான் ...

பனித்துளி சங்கர் said...

ஆஹா மீண்டும் ஒரு கொலையா ! நல்லா இருக்கு மங்குனி மீள் பதிவும்

Jey said...

ஹஹஹஹா. மீ த 150.

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

என்னா கொலவெறி//


ஆமா மேடம் , இன்னும் தொரத்துராணுக

மங்குனி அமைச்சர் said...

Jey said...

அடப்பாவி மங்கு, இன்னிக்குதான் follower ஆனியா?. இத கவனிக்காம விட்டேனே?. ///


ஜெய் , நம்ம குரூப் தவிர அடுத்தவுங்கள டிஸ்ட்ரப் பண்ணாத , உன்னோட ஒரு கமாண்ட நான் டெலிட் பண்ணிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...

அய்யோ...இவ்ளோ பிந்து வந்திருக்கேனா.இவ்வளவு நேரத்துக்கு மங்குனி அமைச்சர் சம்பல்தான் !///


ஆமா மேடம், இப்பா ஆவிதான் உங்களுக்கு பதில் சொல்லுது

மங்குனி அமைச்சர் said...

MUTHU said...

யாராவது இருக்கீங்களா///


வாப்பு , வர்றது லேட்டு இதுல கேள்வி வேற

மங்குனி அமைச்சர் said...

Jey said...

கடைல யாரும் இல்லையா?///


யாருமே இல்லாத கடைலே டீ ஆத்துற நல்லவன் நீதாம்பா

மங்குனி அமைச்சர் said...

அன்புடன் மலிக்கா said...

அச்சோ நாய்ய்ய்ய்ய்ய்ய்.

கொலவெறியோடத்தான் சுத்துறீங்க அப்படிதானே. என்னவோ பாத்து பாத்து பத்திரம் மங்க்லுனியாரின் கிட்னி. அச்சோ மூளை...///


மேடம் இப்போ தூங்கும் போது கூட ஹெல்மட் போட்டுதான் தூங்குறேன்

மங்குனி அமைச்சர் said...

நியோ said...

மங்குனி தோழர் !
எனக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம் ...
ஆனா ... நண்பர்கள் அடிக்கெல்லாம் வரல்ல ...
ஜஸ்ட் உதை தான் ...///

சேம் பிளட்

மங்குனி அமைச்சர் said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆஹா மீண்டும் ஒரு கொலையா ! நல்லா இருக்கு மங்குனி மீள் பதிவும்///


எல்லாமே கொலைகார பயபுல்லைகளா இருக்கானுக சார்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

ஹஹஹஹா. மீ த 150.///


வாழ்த்துக்கள்

Anonymous said...

மங்குனி பாத்து நடங்க நாய் கடிக்க போறது...உங்க லொள்ளு சின்ன வயதிலே துடங்கின தான் இல்லே ? பதிவு ரொம்ப தமாசா இருக்கு ..

செல்வா said...

இவ்ளோ நல்லவரா நீங்க ...? சரி உங்க நண்பர்கள் வாங்கிட்டு போனா பழங்கள பத்தி சொல்லவே இல்ல .. என்ன பழம் வாங்கிட்டு போனாங்க ...?
(இப்டி எல்லாம் கேள்வி கேக்கனும்னு என் தலையெழுத்து )

வால்பையன் said...

டெர்ரரா இருக்கு!

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

மங்குனி பாத்து நடங்க நாய் கடிக்க போறது...உங்க லொள்ளு சின்ன வயதிலே துடங்கின தான் இல்லே ? பதிவு ரொம்ப தமாசா இருக்கு .. ///


இப்பல்லாம் நான் வெளிய போறதே இல்லைங்க

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

இவ்ளோ நல்லவரா நீங்க ...? சரி உங்க நண்பர்கள் வாங்கிட்டு போனா பழங்கள பத்தி சொல்லவே இல்ல .. என்ன பழம் வாங்கிட்டு போனாங்க ...?
(இப்டி எல்லாம் கேள்வி கேக்கனும்னு என் தலையெழுத்து )//

என்னா சார் பண்ணறது , உங்க சேர்க்க சரி இல்லை

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

டெர்ரரா இருக்கு!...////


வாங்க வால்ஸ் , எனக்கே கொஞ்சம் பயமா தான் இருக்கு

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா.. சூப்பர் போங்க..
இது தான் விளையாட்டு வினை ஆனா கதையா?? :-))

echussmee... இப்பவும் அடி தொடருதா?? :D :D

(பி.கு: இந்நேரம் நாயி உண்மையிலயே கடிச்சிருந்த கூட ஆறியிருக்கும்..
அவங்க உங்கள விட மாட்டேன்குறாங்க.. :D :D )

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...
ஹா ஹா.. சூப்பர் போங்க..
இது தான் விளையாட்டு வினை ஆனா கதையா?? :-))

echussmee... இப்பவும் அடி தொடருதா?? :D :D

(பி.கு: இந்நேரம் நாயி உண்மையிலயே கடிச்சிருந்த கூட ஆறியிருக்கும்..
அவங்க உங்கள விட மாட்டேன்குறாங்க.. :D :D )
////


சரியா சொன்னிங்க , நாய் கடிச்சா அதுகூட ஆறிருக்கும்

Gayathri said...

விழுந்து விழுந்து சிரிசு எனக்கு அடியே பட்டுடுத்து.ROFL..nice post