எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, November 15, 2010

தமிழ்மணம் - பத்தவச்சிட்டியே பரட்ட ???

ஏற்கனவே இங்க பலபேரு பைத்தியம் புடிச்சு பாயபிராண்டிகிட்டு இருக்கான் , இதுல தமிழ்மணம் வேற கைல கொள்ளிகட்டைய கொடுத்து தலையசொரிய சொல்றாங்க . அதாங்க .................

கடந்த ஏழு நாட்களில் முதல் 20 இடம் பெற்ற வலைப்பதிவுகளின் பட்டியல்

பிரண்டுக்கு லவ் லெட்டர் குடுக்கப்போயி , அந்த பிகர் நமக்கே உஷாரான கதையா(அட......... பழமொழி மங்கு பின்றடா) எதார்த்தமா போனவாரம் சீரியஸ் மேட்டர் நடக்க நம்மள தூக்கி ரெண்டாவது பிளேஸ்ல வைக்கக்கூடிய அசம்பாவிதம் நடந்து போச்சு . நானெல்லாம் காமடி பீசு சார் , அந்த அளவுக்கெல்லாம் ஒர்த் இல்லைங்க சார் .............. (மங்கு பீ கேர்புல் மறுபடியும் இந்த மாதிரி அசம்பாவிதம் நடக்காம பாத்துக்க )

///இடைச்செருகல் - இவ்ளோ பெரிய அங்கீகாரம் கொடுத்த தமிழ்மணத்திற்கு ரொம்ப நன்றி ////

நம்ம பன்னிகுட்டி ராமசாமி 24 மணிநேரமும் 365 நாளும் சிஸ்டம் முன்னாடியே தான் இருக்கான் , அவன் எப்ப சாப்புடுறான் எப்ப தூங்குறான்னு யாருக்குமே தெரியல . சங்கர் கிட்ட சொல்லி எக்ஸ்ட்ரா ரெண்டு கை பிட்பன்னிருப்பான் போல .....................


போனவார சீரியஸ் பதிவா பாத்துட்டு நம்ம டெர்ரர் பாண்டி வேற

"அவன நிறுத்தச்சொல் நாள் நான் நிறுத்துறேன்னு "

கைல ரெண்டு ஆள் உயர வீச்சு அருவாளோட "அவனுக்கு என்கையாலதான் சாவுன்னு" கொலவெறியோட நம்மள தேடிக்கிட்டு இருககானாம் .


சரி இப்ப என்ன பண்ணலாம்?

தமிழ்மணம் செய்யிறது சரியா ? தவறா ?


சரி என்பவர்கள் பாசிடிவ் ஓட்டும்

தவறு என்....................



ஐயோ...... , ஐயையோ...... , ஐயோ .............டேய் நிறுத்துங்கடா , நிறுத்துங்கடா .............. ஸ்டாப் இட் ..........

எவன்டா பேசிகிட்டு இருக்கும்போது அடிக்கிறது , பிச்சுபோடுவேன் பிச்சு , பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் ,

சின்னப்புள்ளத்தனமா இருக்கு ...............ஒரு புள்ளபூச்சிய போட்டு அடிக்கிறிங்க ....அப்புறம் கொலகேசுல உள்ள போயிடுவிங்க ஜாக்கிரத ...............நான்தான் சொல்றன்ல இனிமே அந்த அசம்பாவிதம் நடக்காதுன்னு ......

Saturday, November 13, 2010

அவசர உதவி 108

உண்மையில் அவசர உதவி 108 மிகச்சிறப்பாக சேவை செய்கிறது . எங்கிருந்தாலும் உடனடியாக வந்து உதவுகிறார்கள் . பல ஏழைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன .

எனது நண்பர் கூறியது :

நேத்து சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோ பக்கத்துல ஒரு வயதானவர் மீது கார் மோதி விட்டது , பெரியவருக்கு நல்ல அடி , உடனே பப்ளிக் 108 போன்பன்ன ஆம்புலன்ஸ் உடனே வந்து விட்டது . ஆம்புலன்சில் வந்த ஊழியர்கள் அந்த பெரியவரை ஹாஸ்பிடல் கூட்டிச்செல்ல மறுத்தனர் .

காரணம் அந்த பெரியவர் உடம்பில் இருந்து இரத்தம் வரவில்லையாம் ?????????


இரத்தம் வந்தால் தான் ஏற்றிச்செல்வோம் என்று கூறியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதம் செய்யவும் அந்த ஊழியர்கள் அவர்களது மேலதிகாரிகளிடம் போனில் பேசிவிட்டு சரி கூட்டிட்டு போறோம் நீங்கள் யாரவது கூடவந்து டாக்டரிடம் சாட்சி சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர் .................நம்ம பொதுஜனங்கள் வழக்கம்போல பின்வாங்க ....................................

அதற்குள் நமது நண்பரும் உதவிபன்னமுடியாத நிலையில் அங்கிருந்து கிளம்பி விட்டார் . பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை ??????

இதே போல் சில மாதங்களுக்கு முன் கோம்பையில் ஆற்றில் குளிக்கும் போது சிறுவன் ஒருவன் மூழ்கிவிட்டான் என்ற செய்தி கேட்ட உடன் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது , ஆனால் சிறுவன் இறந்து விட்டான் , இறந்த சிறுவனின் உடலை ஏற்றிச்செல்ல 108 மறுத்துவிட்டதாம்.


விபத்தில் அடிபட்டு ரத்தம் வந்தால்தான் கூட்டி செல்வார்களா ?

காப்பாற்றும் போது இறந்தால் அந்த உடலை கொண்டுசெல்ல கூடாதா ?

இப்படியெல்லாம் ரூல்ஸ் இருக்கா ?

அப்போ ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன பன்றது?

இந்த சின்ன சின்ன குறைகளை நிவர்த்திசெய்தல் இன்னும் சிறப்பாக 108 -ன் சேவை இருக்கும் .


Wednesday, November 10, 2010

என்கவுன்டர் - எனது கருத்து

என்கவுண்டர் முறையில் மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டது தப்புதான், பொதுமக்கள் மத்தியில் அடுத்து இந்த மாதிரி தப்பு பண்ணலாமான்னு யோசிக்கிறதுக்கு கூட பயப்படுறமாதிரி கொடூரமா கொன்னு இருக்கணும்.

///damildumil said... இந்த சம்பவத்தில் அவனுக்கு சிறிதளவு பங்கு இருந்தாலும் அடித்தே கொல்ல வேண்டிய நாய் தான் அது///

இவன் மாதிரி கொடூர கொலை செய்யும் முதல் குற்றவாளிகளை எவ்கவுண்டர் செய்வது இது முதல் முறை அல்ல . முன் ஆந்திராவில் ஒரு கல்லூரி மாணவி மீது ஆசிட் ஊற்றி கொலைசெய்த இரண்டு மாணவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள்.

இந்த கருத்துக்கணிப்பில் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் குற்றவாளி கடுமையா தண்டிக்கப்படனுமின்னு தான் சொல்லிருக்காங்க , அதுல சிலபேர் என்கவுண்டர் முறைக்கு எதிரா வோட்டு போட்டு இருக்காங்க , குற்றவாளிக்கு ஆதரவா இல்லை , இப்படி என்கவுன்டரை ஆதரித்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று கூறுகிறார்கள்.

போலீஸ் என்ன காலைல ஒன்னு சாயந்திரம் ஒண்ணுன்னு டெய்லி என்கவுண்டர் பன்றாங்களா ?

உண்மைய சொல்லனுமின்னா என்கவுட்டருக்கு பயந்து தான் பல ரவுடிகள் ஒழுங்கா இருக்கானுக . இதில் மாற்றம் வரணும்ன்னா சட்டம் மிகக் கடுமையாக்கப்படும் , தண்டனைகளை பார்த்து அடுத்து தப்பு செய்ய பயப்படனும் .

முதலில் இது முதல் என்கவுண்டர் அல்ல , இதற்கு முறை பலமுறை நடந்துள்ளது . இப்ப யாரு சார் சட்டத்திற்கு பயப்படுறாங்க?, எந்த அரசியல் வாதி , எந்த தொழில்முறை ரவுடி சட்டத்திற்கு பயப்படுகிறான்?. கொலை செய்து விட்டு கூட்டாக தைரியமாக கூலா போயி நீதிமன்றத்தில் சரணடைந்து விடுகிறார்கள் .இப்ப போலீசே அரசியல் வாதிகளுக்கு ரவுடிகளுக்கு பயந்து பணிந்து வேலைசெய்ய வேண்டி உள்ளது.

என்கவுண்டர் அல்லாத அனைத்து குற்றவாளிகளுக்கும் மிக நியாயமான தண்டனை கிடைத்து விட்டதா ? இல்லையே .................

போலீசார் & பத்திரிக்கையாளர்கள் கூட்டணி இருக்கு , விசாரணைக்கு பின்னால் நீங்களே இந்த போலீசை காரித்துப்புவிங்கன்னு ஒரு பத்திரிகை காரர் சொல்லி இருக்கார்.

அப்ப மக்கள் எல்லாம் பைத்தியக்காரன்களா? , என்னா மயி@#@#கு தப்பான நியுஸ் போடுறிங்க , மக்கள் பத்திரிகை , டி.வி போன்ற ஊடகங்களை பார்த்துதான் செய்திகளை அறிந்து கொள்கிறார்கள்.

நாங்க
ஒவ்வொருத்தரும் போயி அந்த பாட்டிகிட்டவும் , டாக்டர் கிட்டவும் உண்மையை கேட்கணுமா ?

பத்திரிகை நிருபர்களும் லஞ்சம் (கட்டாய அன்பளிப்பு) வாங்கும்
அயோக்கியர்கள் என்று நீங்கள்தான் ஒரு பதிவு போட்டு இருக்கீங்க . அப்புறம் எங்களை உணர்ச்சிவசப்படாதிங்க , உண்மை தெரியாமல் பேசாதிங்கன்னு சொல்ல எந்த லஞ்சம் (கட்டாய அன்பளிப்பு) வாங்கும் நல்லவர்களுக்கும் உரிமை இல்லை .



ஒரு முக்கியமான கேள்வி இவன்தான் உண்மையான குற்றவாளியா ???

இருந்துவிட்டால் ? - கோர்ட்டுக்கு போயிருந்தால் நிச்சையமாக தப்பிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .

இல்லாவிட்டால் ? - எத்தனை ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தன உயிரை இழந்திருக்கிறார்கள் , எத்தனை அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் . இந்த மாதிரி கொடூர குற்றங்கள் இனி நடக்க விடாமல் தடுப்பதற்கு தன் உயிரை விட்ட மிகப்பெரிய தியாகிஆவான் .இந்த தவறை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் .