எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, November 19, 2010

பில்லி , சூனியம் , ஏவள்......???

நைட்டு ஒரு மணி - திடீர்ன்னு என் போன் ரிங் ஆச்சு , நமக்கு இருட்டுன்னாலே பயம் , பகல்ல கூட கருப்பு கலர கண்டா பயப்படுவேன் , டு ராத்திரில போன்..... பயந்துகிட்டே எடுத்தேன் ......

"ஹலோ "

"ஹலோ சார் நாங்க ICICI Bankல இருந்து பேசுறேன் , உங்களுக்கு Axis Bank கிரடிட் கார்டு வேணுமா சார் "

"என்னது ICICI Bank ல Axis Bank கிரடிட் கார்டா ??? "(அழகான ஸ்வீட் வாய்ஸ்ல ஒரு பொண்ணு பேசிச்சு , அந்த ஸ்வீட் வாய்ஸ் நால என் போன்ல எறும்பு மொய்க்க ஆரம்பிச்சதுன்னா பாத்துக்கங்க )

"ஆமா சார் , பிளாட்டினம் கார்டு தர்றோம் "

பிளாட்டினமா? அது விலை ஜாஸ்த்தி ஆச்சே ? சரி வாங்கி வித்திடலாமுன்னு ஒரு ஐடியாவோட -

"அது சரி
ம்மா இந்த டு ராத்திரில போன் பன்ற?"

அதுக்குள்ள டக்குன்னு ஒரு ஆண் குரல் - "சாரி சார் , என்பொண்ணு தான் அது , கால் சென்டர்ல வொர்க்பன்றா அதோட தூக்கத்துல பேசுற வியாதி இருக்கு , அதான் தூக்கத்துல போன் பண்ணிட்டா ரொம்ப சாரி சார் "

அடப்பாவிகளா ..... புதுசு புதுசா டார்ச்சர் பன்ரானுகளே .......... சரின்னு மறுபடியும் தூங்கினேன் ............

கொர்,கொர்,கொர் ................ (அட தூங்குறேன் சார்)

மறுபடியும் போன் ரிங்காச்சு .....ஆகா அந்த பொண்ணுதான்னு நினைச்சுகிட்டு போன் எடுத்து....

"ஹலோ "

"ஹலோ , சார் நாங்க கேரளா பேய் மாந்தரீக கம்பனில இருந்து பேசுறோம் , செல்லமா வீட்ல வளக்க குட்டி பேய் ஏதாவது வேணுமா சார் ?"

என்னது பேயா ? எனக்கு கை கால் எல்லாம் ஆடிப்போச்சு ,போன்ல மொச்சுக்கிட்டு இருந்த எறும்பெல்லாம் தெறிச்சு ஓடிப்போச்சுக , பாருங்க அது பேசுற டைலாக்கூட கருப்பு கலர்ல இருக்கு

"என்னம்மா , என்ன சொல்ற ?"

"இல்லைங்க சார் நாங்க வீடுகள்ல செல்லமா வளக்க குட்டி நாய் மாதிரி குட்டி பேய் சப்ளை பன்றோம் சார் "

"யம்மா , எனக்கு அதெல்லாம் வேணாம்மா" (நடுங்கிக்கிட்டே பதில் சொன்னேன் )

"பரவால்லிங்க சார் நீங்க யாருக்காவது பில்லி , சூனியம் , ஏவள் பண்ணுமா இல்ல முட்டை மந்திரிச்சு வைக்கணுமா சார் ?"

(எனக்கு தலைக்குள்ள பளீர்ன்னு லைட் எரிஞ்சிச்சு , அட துக்கெல்லாம் இப்ப மார்கெட்டிங் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களா ? வெரி குட் , இதுதான் நல்ல சான்ஸ்...... நிறைய பயபுள்ளைக பிளாக்கு தக்காளி இன்னைக்கு சூனியம் வச்சிர வேண்டியது தான் )

"ஆமாங்க மேடம் அதுக்கு ன்னா பார்மாலிட்டி ?"

ஹா,ஹா,ஹா,...............மக்களே டீலிங் பேசி முடிச்சிட்டேன் , இந்த மனுஷனுக்கு வக்கிரத்துக்கு தலைமுடி , பழைய டிரஸ்சு , காலடி மண்ணு மாதிரி பிளாக்கு சில ஐட்டங்கள் உங்க பிளாக்குல இருந்து திருடிட்டு இன்னைக்கு நைட் ரெண்டுமணிக்கு சுடுகாட்டுக்கு வரச்சொல்லிருக்கு ........... ஹா.ஹா.ஹா.....நாளை முதல் உங்கள் பிளாக் ............ஹா.ஹா.ஹா..........

Thursday, November 18, 2010

குலதெய்வ கோவில்ல கிடாவெட்டு

லீவுக்கு ஊருக்கு போயிருந்தப்ப பக்கத்து ஊரு பிரண்டுகிட்ட இருந்து போன்வந்துச்சு

"ஹலோ......... சொல்றா மாப்ள "
"மச்சான் நான்தான் , என் குழந்தைக்கு காதுகுத்து வச்சிருக்கேன் , வந்திடு "
"எங்க? "
"குலசாமி கோவில்ல "
"அது எங்க இருக்கு? "
"நம்ம கானா விளக்கு ஜங்சன்ல லெப்ட்டு எடுத்து ஒரு 12 கிலோ மீட்டர் உள்ள வந்தா ஒரு பெரிய்ய ஆறுவரும் அந்த ஆத்தங்கரைலதான் கோவில் இருக்கு , நாங்க எர்லி மார்னிங் கிளம்பிடுவோம் நீ நம்ம சிவா கூட வண்டில வந்திடு , ரோடு கொஞ்சம் மோசமா இருக்கும் பாத்துவா "
"கிடா வெட்டு இருக்கா"
"ஆமா"
"ஓகே டா"

ஆஹா , இன்னைக்கு எப்படியும் கிடாவெட்டுவாங்க விருந்துல போயி ஒரு கட்டு கட்டனுமின்னு காலைல இருந்தே பச்ச தண்ணி கூட பல்லுல படாம பாத்துகிட்டேன் .

நான் சிவாவுக்கு போன் பன்னி கண்பார் பன்னிக்கிட்டேன், ஒரு 11 : 30 கிளம்பலாம்ன்னு பிளான் .

கரக்ட்டா சிவாவும் வண்டிய எடுத்துகிட்டு வந்துட்டான் , வண்டிய பாத்ததும் பயங்கர சாக் ஆகிட்டேன்

"என்னடா மாமா வண்டில ரெண்டு வீல் தான் இருக்கு மீதி ரெண்டுவீலக்காணோம்?"
"நாயே..... இது பைக் ரெண்டுவீல்தான் இருக்கும் "
"ஓ........ சாரிடா மாமா , வண்டின்னதும் நான் காருன்னு நினைச்சிட்டேன் "

சரின்னு கிளம்பி போனோம் . சரியான வெயில் அடிச்சு ...

"மாமா ஓவரா வெயிலா இருக்கு கொஞ்சம் ஏ.சிய போடு "

அவன் ஒண்ணுமே சொல்லல , வண்டிய ஓரமா நிப்பாடி பின்னாடி திரும்பி பளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.

"இனிமே வாயத்தொறந்த மவனே உனக்கு இன்னைக்கு என் கைல தாண்டா சாவு ."
(எனக்கு கொய்ய்ய்ன்னு காதுக்குள்ள ஒரு சத்தம் , பைக்ல ஏ.சி இல்லன்னா வாயில சொல்லலாமுல்ல .......... என்னா கோவக்காரனா இருக்கான்? .)

கானா விளக்கு லெப்ட்டுல கட்பண்ணி போனோம்.. போனோம்... 15 கிலோ மீட்டர் போயிட்டோம் , ஒரு ஆறு ஐயும் காணோம் , ரோடு மோசமாவெல்லாம் இல்லை படு கேவலமா இருந்துச்சு . அங்க இருந்த நம்ம பயலுக்கு போன் பன்னி என்னடான்னு கேட்டோம் . அவனும் கோவிலுக்கு போற வழியில இருக்க ஒவ்வொரு அடையாளமா சொல்லி அதெல்லாம் பாத்திங்கலான்னு கேட்டான் . நாங்க அவன் சொன்ன அடையாளம் ஒன்னகூட பாக்கள் , கடைசீல என்னான்னு பாத்தா கானா விளக்குல இருந்து ரைடல போகணும் .

அந்த நாயி ஊர்ல இருந்த வரும்போது கானாவிலக்கு கோவிலுக்கு லெப்ட்ல கட் பண்ணனும் , எங்க ஊர்ல இருந்து வரும்போது கோவிலுக்கு ரைட்க கட் பண்ணனும் .

சரின்னு திரும்பி மறுபடியும் கானாவிலக்கு வந்து , சரியான ரூட்ட புடிச்சு நாங்க போயிசேர 4 :30 மணி ஆயிடுச்சு , அங்க எல்லாம் சாப்ட்டு பாத்திரபண்டத்தைஎல்லாம் கழுவி வச்சிட்டு கிளம்பிக்கிட்டு இருந்தாங்க . கடைசில ரசம் சோறு கூட கிடைக்கல . (கடவுள் இருக்கார் சார் )

அப்புறம் என்ன பன்றது ஆத்துல ஓடுன பச்ச தண்ணியத்தான் குடிச்சோம் .

Tuesday, November 16, 2010

மீருக்கு தெலுங்கு தெரியுமா....லூ........?

/////////டியர் பிரண்ட்ஸ் - மன்னிக்கவும் - ஆக்சுவலா தமிழ்மணம் இந்த மாதிரி வாரா, வராம் பெஸ்ட்டு பிளாக்கர்ஸ் லிஸ்ட்டு போட்டா நம்ம பசங்க எல்லாம் இன்னும் தலைய பிச்சுக்கிட்டு சிஸ்டம் முன்னாடியே இருப்பானுகன்னு நேத்து சொல்லவந்தேன் .......கடைசில அது வேற ஒரு அர்த்தமா வந்திருச்சு ....... எனக்கே வாழ்த்து சொல்லி கமண்ட்ஸ் வர வரத்தான் புரிய ஆரம்பிச்சது ....ஒரு சுயதம்பட்டம் அடிச்சமாதிரி ஆகிப்போச்சு , ரொம்ப சாரி - எனக்கு புடிக்காத விஷயம் இது . ////////////


நேற்றைய பதிவில் கடைசியில் நம்ம வினு போட்ட காமன்ட்சுக்கு ஒரு சிறு விளக்கம் .


வினு நான் ஒரு விஷயம் சொல்றேன் அப்புறம் உங்க கருத்து சொல்லுங்க. அந்த என்கவுடர் நடந்த அன்று காலை எனது நண்பர்களுடன் டீக்கடையில் டீ சாப்பிடும் போது இந்த டாபிக் வந்தது , கடைல மொத்தம் சுமார் ஒரு 15 பேருக்கு மேல இருந்தாங்க , அதுல முக்கால்வாசிப்பேர் என்கவுன்டர் சரின்னும் மீதிப்பேர் என்கவுன்டர் தப்புன்னும் விவாதம் பண்ணினாங்க . சரின்னு சொன்னவுங்க எல்லாம் உணர்ச்சிப்பூரவமாதான் பேசினாங்க தப்புன்னு சொன்னவங்க உண்மையிலே நியாயமா விவாதம் பண்ணினாங்க .

உண்மையில் மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கிரனுமின்னு எனக்கு ஆர்வம் அதிகமாயிடுச்சு , அதற்காகத்தான் அந்த பதிவு . ஏன் ஒட்டு போடச்சொன்னேன்னா , டெயிலி நிறைய பேர் வந்து படிச்சிட்டு சும்மா போயிடுறாங்க (ஹிட்ஸ் பாத்திங்கன்னா தெரியும் ) அவுங்களோட கருத்து என்னன்னு தெரிஞ்சுக்கிரனுமின்னு தான் ஒட்டு போடச்சொன்னே . அந்த பதிவில் வந்த பின்னூட்டங்களில் எவ்வளவு விவாதம் நடந்தது ??? நிஜம்மா அத வச்சு நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன் .

நிறையா ஒட்டு வாங்கி பிரபலமாகனும் என்பது என் நோக்கம் இல்லை .

--------------@@@@@-------------

ஓகே இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம்

இன்னைக்கு காலைல என் வைபுக்கு போன் வந்தது , அவளோட பிரண்டு ஆந்திராவுல இருந்து பேசினாங்க . போன்ல 45 நிமிஷம் பேசுறாங்க . இதுல என்ன பெரிய ஆச்சரியம்ன்னு கேட்டிங்கன்னா ????

அந்த பொண்ணுக்கு சுத்தமா தமிழ் தெரியாது , என்னோட வீட்டுகாரம்மாவுக்கு சுத்தமா தெலுங்கு தெரியாது , இவுங்க ரெண்டுபேருக்கும் இங்கிலீசு கொஞ்சம் அரகொற ......... இல்லை ரொம்ப கொரகொர .

இன்னைக்கு காலைல நான் மூணு தோசை சாப்பிட 45 நிமிஷம் ஆச்சுங்க , போன காதுல வச்சுகிட்டு இங்க கைல சைகை பண்ணுறாங்க . அதாவது சைகைலே போன்ல பேசுறாங்க . (என்ன கொடும சார் இது )

எங்க வீட்டு பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்த தெலுங்கு பேமிலி பொண்ணு தான் அது . ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் . பேச்சு வார்த்தை எல்லாம் சைகைலேதான் . அத பாத்தா செம காமடியா இருக்கும் , நான் அத பாத்துட்டு ஊட்டில போயி ரூம் போட்டு ரெண்டுநாள் சிரிச்சிட்டு வந்தேன்னா பாத்துக்கங்க .

நேர்லே ஒழுங்கா பேசமுடியாது சைகைலதான் பேசுவாங்க , இந்த நிலைமைல போன்ல 45 நிமிஷம் .

அவுங்க பேசிக்கிட்டே சில வார்த்தைகள்

டூ மெம்பர்சு கம்முலூ......வா .........

ரெயின் ஸ்டார்ட் கஷ்டமா......லூ ..........

மீரு அப்பாலு செப்புனான்களா...........