எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, November 9, 2010

கோவை குழந்தைகளை கொன்றவர்கள் சுட்டுக்கொலை (என்கவுன்டர்)

கோவையில் முஸ்கின் (11 வயது ) , ரித்திக் ( 8 வயது) என்ற அக்காள் தம்பி கடத்தி சென்றனர் . 11 வயதான முஸ்கின்ஐ பாலியல் பலாத்காரம் செய்து பின் முஸ்கின் , ரித்திக் இருவரையும் வாய்காலில் தள்ளி கொலைசெய்த மோகன்ராஜ் மற்றும் மனோகர் கைது செய்யப்பட்டனர். இன்று அதிகாலை 5 :30 மணிக்கு விசாரணைக்கு அழைத்து செல்லும் போது போலீசார்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டான் . மனோகர் நிலை என்னவென்று இன்று காலை 9 மணிவரை தெரியவில்லை .

எனது கருத்தை பின்னால் கூறுகிறேன் .

ஒரு சின்ன கருத்துக் கணிப்பு :

மோகன்ராஜ் என்கவுன்டர் முறையில் சுட்டுக்கொல்லப்பட்டது சரியா ? தவறா ?

* "சரி" என்பவர்கள் "பாசிடிவ்" ஓட்டுப் போடுங்கள் .

* "தவறு" என்பவர்கள் "நெகடிவ்" ஒட்டு போடுங்கள் .


அனைவரும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் கண்டிப்பாக கூறுங்கள் .

வழக்கம் போல படிச்சிட்டு சும்மா போகாம தயவுசெய்து கண்டிப்பாக உங்கள் பாசிடிவ் அல்லது நெகடிவ் ஓட்டுக்களை அளியுங்கள் .



Monday, November 8, 2010

பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது

சென்னை (08-11-2010) திங்கட்கிழமை


இரண்டுசக்கர வாகனத்தில் சென்று பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது

நவ , 8 , சென்னையில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்களை பின் தொடர்ந்து சென்று கிண்டல் செய்த வாலிபர் நேற்று கையும் களவுமாக கைது செய்யப்பட்டார் .

அண்ணாநகரிலிருந்து தி.நகருக்கு வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போலீஸ் பெண் உயர் அதிகாரியை பின் தொரடர்ந்து கிண்டல் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார் . ............

--------@@@@@--------

முஸ்கி : மேலே உள்ள செய்திக்கும் , கீழே நடந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .


கடந்த நாலு நாளா இருந்த சென்னை இருக்கே ????!!!!!! சொர்க்கம் சார் ............எங்க போனாலும் டிராபிக் கிடையாது ரோடு எல்லாம் காலியா இருந்தது .

(ஹலோ மைக் டெஸ்டிங் 1 , 2 .........3 )

ஆகா பிராக்கட் பார்ட்டி வந்துட்டானே , இனி என்ன சொன்னாலும் ஆப்பு அடிப்பானே ?

வருடா வருடம் இரண்டு மூன்று நாட்கள் சென்னையில் தீபாவளி சமயத்தில் இந்த அதிசயம் நடக்கும் சார் .

(
ஆமா..... கண்டுபுடிச்சிட்டாருயா தாமஸ் ஆல்வா எடிசன் )

அண்ணே.......... ஏன்ணே?.....ஏன்?

தீபாவளிக்கு பாதிப்பேரு ஊருக்கு போயிருப்பான் மீதிப்பேறு டி.வி முன்னாடி இருப்பானுக . நீங்க எந்த ரோடு போனாலும் டிராபிக் இல்லாம பிரீயா இருக்கும்.

அடடே ...எங்க அந்த பிராக்கட் பாரட்டிய ஆளக்காணோம்? , போயிட்டானோ ??????

பைக் ஓட்ட செம ஜாலியா இருக்கும் . பாட்டு பாடிகிட்டே வண்டி ஓட்டலாம் ,ரெண்டு கைவிட்டு ஓட்டலாம் , கண்ண மூடிக்கிட்டு ............சே,சே....வேணாம் ரிஸ்க்கு , பிகர் பாத்துகிட்டே ஓட்டலாம் .............

(பஸ்ட்டு உன் மூஞ்சிய கண்ணாடில பாரு ........)
ஆஹா , வந்துட்டான்யா ,வந்துட்டான்யா ........ கிருகதுருவம் புடிச்சவன் வந்துட்டான்யா ......


அப்படித்தான் சனிக்கிழமை காலைல ஜாலியா ஒரு பிகரா பாத்துகிட்டே ஒட்டிக்கிட்டு வந்தேன் , கடைசில பாத்தா அண்ணா நகர்ல நிக்கிறேன். ஹி.ஹி.ஹி........என் ஆபீசு தி.நகர்ல இருக்கு .

(ஹா, ஹா.ஹா.............. டேய் பன்னாட ..... உன் வீட்டுக்காரம்மா போன் நம்பர் *(*$!) %$^&% இது தானே)
பிராக்கட் சார், பிராக்கட் சார் நான் உங்களுக்கு என்ன துரோகம் பண்ணினேன் , ஏன் இந்த கொலைவெறி ...............?

அப்புறம் அங்க இருந்து இன்னொரு பிகர பிக்கப் பண்ணி லைட்டா ஜாலியா சில்மிஷம் பண்ணிக்கிட்டே ( சே.....வீட்ட அண்ணா நகருக்கு மாத்தணும் , அதுவரைக்கு அண்ணாநகர் வழியா ஆபீஸ் வந்து போகணும் . ன்னா பிகர்ஸ்?????? ...........இம்ம்ம்ம்ம்....................) வந்தேன் , கடைசில பாத்தா அந்த பிகரு நம்ம ஆபீஸ் எதுக்க இருக்க போலீஸ் ஸ்டேசன் பக்கத்துல வண்டிய நிப்பாட்டுச்சு .........................................


(ஹா,ஹா,ஹா,....................ஹி.ஹி,ஹி.........ஹோ,ஹோ,ஹோ,.............க்கிக்,க்கிக்,க்கிக், க்கிக்.................)
என்னா சந்தோசம் பாரு ?????????????



Saturday, November 6, 2010

நாளை கறிசோறு ???


வருடம் ஒரு முறை
உண்ணும் கறிசோறும்
இந்த முறை
வெள்ளிக்கிழமையால்
வெறும் சோறாக்கிப் போச்சு!!!

இருந்த ஒரே
புது சட்டையில்
பட்டாசு போட்ட
கோலப்புள்ளிகளை
அப்பாவுக்கு தெரியாமல்
எப்படி மறைப்பது ?

பாழாய் போன மழை
நமத்துப்போன
வேட்டுக்களை நனைத்து
கொளுத்த விடவில்லை
சொக்கபானை!!!!

இன்று சனிக்கிழமை
நாளையாவது
கறிசோறு சமைப்பாளா
அம்மா ???