எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, November 13, 2010

அவசர உதவி 108

உண்மையில் அவசர உதவி 108 மிகச்சிறப்பாக சேவை செய்கிறது . எங்கிருந்தாலும் உடனடியாக வந்து உதவுகிறார்கள் . பல ஏழைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன .

எனது நண்பர் கூறியது :

நேத்து சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோ பக்கத்துல ஒரு வயதானவர் மீது கார் மோதி விட்டது , பெரியவருக்கு நல்ல அடி , உடனே பப்ளிக் 108 போன்பன்ன ஆம்புலன்ஸ் உடனே வந்து விட்டது . ஆம்புலன்சில் வந்த ஊழியர்கள் அந்த பெரியவரை ஹாஸ்பிடல் கூட்டிச்செல்ல மறுத்தனர் .

காரணம் அந்த பெரியவர் உடம்பில் இருந்து இரத்தம் வரவில்லையாம் ?????????


இரத்தம் வந்தால் தான் ஏற்றிச்செல்வோம் என்று கூறியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதம் செய்யவும் அந்த ஊழியர்கள் அவர்களது மேலதிகாரிகளிடம் போனில் பேசிவிட்டு சரி கூட்டிட்டு போறோம் நீங்கள் யாரவது கூடவந்து டாக்டரிடம் சாட்சி சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர் .................நம்ம பொதுஜனங்கள் வழக்கம்போல பின்வாங்க ....................................

அதற்குள் நமது நண்பரும் உதவிபன்னமுடியாத நிலையில் அங்கிருந்து கிளம்பி விட்டார் . பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை ??????

இதே போல் சில மாதங்களுக்கு முன் கோம்பையில் ஆற்றில் குளிக்கும் போது சிறுவன் ஒருவன் மூழ்கிவிட்டான் என்ற செய்தி கேட்ட உடன் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது , ஆனால் சிறுவன் இறந்து விட்டான் , இறந்த சிறுவனின் உடலை ஏற்றிச்செல்ல 108 மறுத்துவிட்டதாம்.


விபத்தில் அடிபட்டு ரத்தம் வந்தால்தான் கூட்டி செல்வார்களா ?

காப்பாற்றும் போது இறந்தால் அந்த உடலை கொண்டுசெல்ல கூடாதா ?

இப்படியெல்லாம் ரூல்ஸ் இருக்கா ?

அப்போ ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன பன்றது?

இந்த சின்ன சின்ன குறைகளை நிவர்த்திசெய்தல் இன்னும் சிறப்பாக 108 -ன் சேவை இருக்கும் .


86 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரியா சொன்னேங்க தல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்பதான வந்திருக்கு. போக போக மாறும்ன்னு நம்புவோம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிறப்பான சேவை... யார் இந்த மாதிரியான ரூல்ஸ் எல்லாம் போடுறது...

Unknown said...

//அப்போ ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன பன்றது?//
point! :))

Unknown said...

எற்றிச்செல்வோம்

spelling mistake

இம்சைஅரசன் பாபு.. said...

//இப்பதான வந்திருக்கு. போக போக மாறும்ன்னு நம்புவோம்.. //
எலேய் வந்து ரொம்ப நாள் ஆகிடுச்சு .....
ஆனா நல்ல திட்டம் சிலதை சரி செய்தால்

மங்குனி அமைச்சர் said...

நா.மணிவண்ணன் said...

எற்றிச்செல்வோம்

spelling mistake
///

மாத்திட்டேன் சார் நன்றி

Unknown said...

சமூக அக்கறை உடைய பதிவு.பாராட்டுக்கள்.

தினேஷ்குமார் said...

அமைச்சரே வணக்கம்

சரியாக கேட்டுள்ளீர்கள் அவசரம் அவசர சிகிச்சை 108 ல் பணியாற்றும் சிறு சிறு கல்நெஞ்சகாரர்களின் விளைவாகும் விளைவே......

எனக்கு தெரிந்து 108 ஒவ்வொரு ஊர்தியிலும் ஒரு HR persons இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது

Unknown said...

அதிரடி கவிதை போட்டி

குழந்தைகள் தினம் அல்ல அல்ல...
சின்னஞ்சிறு மனிதர்களின் தின விழாவினை மனதில் கொண்டு இந்த கவிதை போட்டிக்கு வலையுலக அன்பர்களை ஆவலுடன் அழைக்கிறோம்.

http://bharathbharathi.blogspot.com/2010/11/blog-post_12.html

ஹரிஸ் Harish said...

அமைச்சரே! வரவர உங்கள் சமூக அக்கறை அதிகரித்துகொண்டே........ செல்கிறதே இதன் பிண்ணனி என்னவோ?

Arun Prasath said...

சீக்கரம் சரி பண்ணிடுவாங்க தல

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்பதான வந்திருக்கு. போக போக மாறும்ன்னு நம்புவோம்..
///

மாறிடும் ...........

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

சிறப்பான சேவை... யார் இந்த மாதிரியான ரூல்ஸ் எல்லாம் போடுறது...///

தெரியலையே ??? கண்டிப்பா ரூல்ஸ் இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

//அப்போ ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன பன்றது?//
point! :))///

நன்றி ஜீ.

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//இப்பதான வந்திருக்கு. போக போக மாறும்ன்னு நம்புவோம்.. //
எலேய் வந்து ரொம்ப நாள் ஆகிடுச்சு .....
ஆனா நல்ல திட்டம் சிலதை சரி செய்தால்///

கரக்ட்டு

மங்குனி அமைச்சர் said...

பாரத்... பாரதி... said...

சமூக அக்கறை உடைய பதிவு.பாராட்டுக்கள்.///

ரொம்ப நன்றி பாரத் பாரதி சார்

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

அமைச்சரே வணக்கம்

சரியாக கேட்டுள்ளீர்கள் அவசரம் அவசர சிகிச்சை 108 ல் பணியாற்றும் சிறு சிறு கல்நெஞ்சகாரர்களின் விளைவாகும் விளைவே......

எனக்கு தெரிந்து 108 ஒவ்வொரு ஊர்தியிலும் ஒரு HR persons இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது////

எப்படியாவது சரியானால் நல்லது

மங்குனி அமைச்சர் said...

ஹரிஸ் said...

அமைச்சரே! வரவர உங்கள் சமூக அக்கறை அதிகரித்துகொண்டே........ செல்கிறதே இதன் பிண்ணனி என்னவோ?////

ஹா.ஹா.ஹா........... ஒன்னும் இல்லை சார்

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

சீக்கரம் சரி பண்ணிடுவாங்க தல///

thanks arun

NaSo said...

மங்குனி அடுத்த தேர்தலுக்கு தயாராகிடீங்களா?

'பரிவை' சே.குமார் said...

சமூக அக்கறைப் பதிவு.

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

மங்குனி அடுத்த தேர்தலுக்கு தயாராகிடீங்களா?
///

தேர்தலா எங்க? எங்க ??? துட்டு தருவாங்களா ???

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

சமூக அக்கறைப் பதிவு.///

நன்றி குமார்

NaSo said...

//மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

மங்குனி அடுத்த தேர்தலுக்கு தயாராகிடீங்களா?
///

தேர்தலா எங்க? எங்க ??? துட்டு தருவாங்களா ???//

ஏன் இப்படி?

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

மங்குனி அடுத்த தேர்தலுக்கு தயாராகிடீங்களா?
///

தேர்தலா எங்க? எங்க ??? துட்டு தருவாங்களா ???//

ஏன் இப்படி?
////

அப்ப துட்டு தரமாட்டாங்களா ?

vasu balaji said...

good one.

NaSo said...

//மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...


அப்ப துட்டு தரமாட்டாங்களா ?//

துட்டு தருவாங்க. ஆனா நீங்க தேர்தல்ல ஓட்டு போடணும். ஓட்டு கேட்கக்கூடாது.

Ungalranga said...

உருப்படியான பதிவு..!!!

(சரி..சரி முறைக்காதீங்க)..

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

good one.
//

thank you sir

கருடன் said...

@மங்குனி

சமூக அக்கறைப் பதிவு. நல்ல சேவை.

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...



துட்டு தருவாங்க. ஆனா நீங்க தேர்தல்ல ஓட்டு போடணும். ஓட்டு கேட்கக்கூடாது.////

எல்லா கட்ச்சிகாரஅணுக கிட்டயும் காசு வசூல் பண்ணு , ஆளுக்கு ஒன்னு போட்ருவோம்

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி

சமூக அக்கறைப் பதிவு. நல்ல சேவை.///

இவன் சீரியஸ்ஸா சொல்றானா , இல்லை நக்கல்பன்றான்னு கண்டுபுடிக்க யாராவது ஒரு வழி சொல்லுங்கப்பா ???

மங்குனி அமைச்சர் said...

ரங்கன் said...

உருப்படியான பதிவு..!!!

(சரி..சரி முறைக்காதீங்க)..///

நன்றிங்க (கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............. முறைக்கலங்க )

ஆமினா said...

இத பத்தி இப்ப தான் எழுத போனேன். அமைச்சரே எழுதிட்டீங்க.

அந்த பெரியவர கூடிட்டு போகலன்னு சொல்றீங்க.

சமீபத்தில் எங்கள் ஊருக்கு சென்றிருந்தேன். எங்கே பார்த்தாலும் 108 பேச்சு தான். நானும் ரொம்ப வியப்பா பார்த்தேன். ஒரு முறை என் வீட்டு வாசலில் நிற்கும் போது சைக்கிள் பழகிக்கொண்டிருந்த பெண் தடுமாறியபடி சென்றதை பார்த்துக்கொண்டிருந்தேன். எதிரில் வந்த ஆட்டோ நெருங்கி வர பயத்தில் சைக்கிளில் இருந்து கீழே குதித்தாள். கை கால்களில் லேசான சிராய்ப்புகள் தான். உடனே108க்கு போன் போடுங்கப்பான்னு ஒரு குரல். 5 நிமிடத்தில் வந்த அந்த வண்டி அந்த பெண்ணை அழைத்துச்சென்றது. இத்தனைக்கும் அந்த பெண் வேண்டாம் என சொல்லியுமழைத்துசென்றனர். என்னத்த சொல்றது?!

மங்குனி அமைச்சர் said...

ஆமினா said...

இத பத்தி இப்ப தான் எழுத போனேன். அமைச்சரே எழுதிட்டீங்க.

அந்த பெரியவர கூடிட்டு போகலன்னு சொல்றீங்க.
////

போகலைன்னு சொல்லலை மேடம் , அடுத்து என்ன நடந்ததுன்னு தெரியல , அதுக்குள்ளே நம்ம பிரண்டு கிளம்பிட்டார் . 108 உண்மையிலேயே நல்லா பண்றாங்க மேடம்

ஆமினா said...

//காரணம் அந்த பெரியவர் உடம்பில் இருந்து இரத்தம் வரவில்லையாம் ?????????//

அமைச்சரே நான் இதை சொன்னேன்! இரத்தம் வரலைன்னு கூடிட்டு போகாம இருந்தாங்க என்பது கொடுமையான விஷயம் இல்லையா?! ஒரு பக்கம் அப்படி! ஒரு பக்கம் நான் சொன்னபடி :)

நல்லா எழுதியிருக்கீங்க.

தினேஷ்குமார் said...

அமைச்சரே நம்ம பக்கம் கொஞ்சம் வர்றது

http://marumlogam.blogspot.com/2010/11/blog-post_10.html

Madhavan Srinivasagopalan said...

//ஹரிஸ் said...

அமைச்சரே! வரவர உங்கள் சமூக அக்கறை அதிகரித்துகொண்டே........ செல்கிறதே இதன் பிண்ணனி என்னவோ?//

அதான.. எனக்கும் அதே சந்தேகம்தான்

சௌந்தர் said...

அப்போ ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன பன்றது?/// அதானே ஹார்ட் அட்டாக் வந்தா என்ன செய்வாங்க தலையில் ரெண்டு அடி போட்டு ரத்தம் வர வைத்து கூப்பிட்டு போவாங்க போல...

S.முத்துவேல் said...

மிக சிறப்பான தகவல்..

vinu said...

இங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........

ithu yaaru sonnathunnu niyaabagam irrukkaaaaaaaaaaaaa

செல்வா said...

சரியான கேள்விகள் தான் அண்ணா . ஆனா வேனில் செல்லும் போது இறந்துவிட்டால் பிரச்சினை இல்லை , ஆனா முன்னாடியே இறந்துட்டா எத்திக்க மாட்டங்க அப்படின்னு கேள்விப்பட்டேன் ..

செல்வா said...

//அப்போ ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன பன்றது?///

ஹார்ட் அட்டாக் வந்தா கூட்டிப்போவாங்க அப்படின்னு நினைக்கிறேன் .,
ஏன்னா விபத்துக்கும் நெஞ்சுவளிக்கும் வித்தியாசம் இருக்குதுள்ள.

சசிகுமார் said...

இது மிக சிறந்த திட்டம் முதலில் ஆந்திராவில் இத்திட்டதை அமல் படுத்தினார்கள் அடுத்து நம் மாநிலத்தில் அமல் படுத்தி சிறப்பான வரவேற்ப்பை பெற்ற திட்டமாகும். இது போல் எனக்கு ஒரு சம்பவம்.

ஒருவர் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். உடனே அங்கு இருந்தவர்கள் 108 போன் செய்ய அவர்கள் அவருக்கு என்ன வயது எந்த ஊரு என்ன முகவரி எப்படி அடிபட்டது என்று அனைத்தையும் விசாரித்து விட்டு ரயிலில் விபத்து ஏற்ப்பட்டால் நாங்கள் வர முடியாது என்று அலட்சிய படுத்தி விட்டனர்.
இது போன்ற சிறிய குறைகளை நிவர்த்தி செய்தால் மேலும் மக்கள் பயனடைவர்.

suneel krishnan said...

இந்த ஆம்புலன்ஸ் வசதி உண்மையிலயே பாராட்ட தக்க ஒரு அமைப்பு .துளி லஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு நல்ல அமைப்பாக இது இயங்குகிறது .
இந்த மாறி சில விதிகளுக்கு காரணம் நமக்கே உண்டான குசும்பு தான் .அதுக்கு பயந்து தான் இந்த மாறி சில முரண்பாடான விதிகள் அங்க இருக்கு .கிட்ட தட்ட முப்பது சதவிகிதம் 108 க்கு தினம் விஷமிகளின் அழைப்பு தானாம் .சில சிறு விதி மாறுதல்கள் செய்தால் இத்திட்டம் பூரணம் அடையும்

மங்குனி அமைச்சர் said...

ஆமினா said...

//காரணம் அந்த பெரியவர் உடம்பில் இருந்து இரத்தம் வரவில்லையாம் ?????????//

அமைச்சரே நான் இதை சொன்னேன்! இரத்தம் வரலைன்னு கூடிட்டு போகாம இருந்தாங்க என்பது கொடுமையான விஷயம் இல்லையா?! ஒரு பக்கம் அப்படி! ஒரு பக்கம் நான் சொன்னபடி :)

நல்லா எழுதியிருக்கீங்க.
///

ஓகே , நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

அமைச்சரே நம்ம பக்கம் கொஞ்சம் வர்றது

http://marumlogam.blogspot.com/2010/11/blog-post_10.html///

ok dinesh

மங்குனி அமைச்சர் said...

Madhavan said...

//ஹரிஸ் said...

அமைச்சரே! வரவர உங்கள் சமூக அக்கறை அதிகரித்துகொண்டே........ செல்கிறதே இதன் பிண்ணனி என்னவோ?//

அதான.. எனக்கும் அதே சந்தேகம்தான்///

ஓ............ இதுல கூடுவேற யா ????? சங்கம் எதுவும் ஆரம்பிச்சிடாதிங்க

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

அப்போ ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன பன்றது?/// அதானே ஹார்ட் அட்டாக் வந்தா என்ன செய்வாங்க தலையில் ரெண்டு அடி போட்டு ரத்தம் வர வைத்து கூப்பிட்டு போவாங்க போல...///

சே.சே....அப்படியெல்லாம் இல்லை சார் , உண்மையிலேயே நல்லா சேவை செய்யுறாங்க

மங்குனி அமைச்சர் said...

எஸ்.முத்துவேல் said...

மிக சிறப்பான தகவல்..///

நன்றி முத்துவேல்

மங்குனி அமைச்சர் said...

vinu said...

இங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........

ithu yaaru sonnathunnu niyaabagam irrukkaaaaaaaaaaaaa////

இதுல ஜாதியும் வரல , இலக்கியமும் வரல (அவ்வ்வ்வ்வ்............... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு , வினு சார் வினு சார் நான் பாவம் )

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

சரியான கேள்விகள் தான் அண்ணா . ஆனா வேனில் செல்லும் போது இறந்துவிட்டால் பிரச்சினை இல்லை , ஆனா முன்னாடியே இறந்துட்டா எத்திக்க மாட்டங்க அப்படின்னு கேள்விப்பட்டேன் ..///

ஆமா , ஆனா இறக்கப்போறது யாருக்கும் தெரியாதுல்ல

Riyas said...

CORRECT

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//அப்போ ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன பன்றது?///

ஹார்ட் அட்டாக் வந்தா கூட்டிப்போவாங்க அப்படின்னு நினைக்கிறேன் .,
ஏன்னா விபத்துக்கும் நெஞ்சுவளிக்கும் வித்தியாசம் இருக்குதுள்ள.////

ஆமா , அதற்கு வேற ரூல்ஸ் , .....தாமதிக்க மாட்டார்கள்

மங்குனி அமைச்சர் said...

சசிகுமார் said...

இது மிக சிறந்த திட்டம் முதலில் ஆந்திராவில் இத்திட்டதை அமல் படுத்தினார்கள் அடுத்து நம் மாநிலத்தில் அமல் படுத்தி சிறப்பான வரவேற்ப்பை பெற்ற திட்டமாகும். இது போல் எனக்கு ஒரு சம்பவம்.

ஒருவர் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். உடனே அங்கு இருந்தவர்கள் 108 போன் செய்ய அவர்கள் அவருக்கு என்ன வயது எந்த ஊரு என்ன முகவரி எப்படி அடிபட்டது என்று அனைத்தையும் விசாரித்து விட்டு ரயிலில் விபத்து ஏற்ப்பட்டால் நாங்கள் வர முடியாது என்று அலட்சிய படுத்தி விட்டனர்.
இது போன்ற சிறிய குறைகளை நிவர்த்தி செய்தால் மேலும் மக்கள் பயனடைவர்.///

ஓ....இதுவேறையா ????

RVS said...

சமூக நலத்துறை அமைச்சராகிவிட்டீர்களா?
சமூக பொறுப்புள்ள பதிவு.. நன்று... ;-) ;-)

vinu said...

ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........


naaaan point pannunathu inthaa varigalai mattumthaan; padu seeeeeeeeeeeeeeeeeeeeeeeriousaa unga pathivugal sila vaaraaam irrukku ithulaa serious muththippoiy ippo 108 kku phne pannura nilamaiyil ippa athai paththiyum oru pathivu;


appura MPPS[Manguni pathivugalai Purakkanipor sangam]nnu onnu aarambikka veandi varum; ithu echcharikkai alla warning notice;

vanakkam;

மங்குனி அமைச்சர் said...

dr suneel krishnan said...

இந்த ஆம்புலன்ஸ் வசதி உண்மையிலயே பாராட்ட தக்க ஒரு அமைப்பு .துளி லஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு நல்ல அமைப்பாக இது இயங்குகிறது .
இந்த மாறி சில விதிகளுக்கு காரணம் நமக்கே உண்டான குசும்பு தான் .அதுக்கு பயந்து தான் இந்த மாறி சில முரண்பாடான விதிகள் அங்க இருக்கு .கிட்ட தட்ட முப்பது சதவிகிதம் 108 க்கு தினம் விஷமிகளின் அழைப்பு தானாம் .சில சிறு விதி மாறுதல்கள் செய்தால் இத்திட்டம் பூரணம் அடையும்////

அடப்பாவிகளா எதுல விளையாடுறதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா ???

மங்குனி அமைச்சர் said...

vinu said...

ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........


naaaan point pannunathu inthaa varigalai mattumthaan; padu seeeeeeeeeeeeeeeeeeeeeeeriousaa unga pathivugal sila vaaraaam irrukku ithulaa serious muththippoiy ippo 108 kku phne pannura nilamaiyil ippa athai paththiyum oru pathivu;


appura MPPS[Manguni pathivugalai Purakkanipor sangam]nnu onnu aarambikka veandi varum; ithu echcharikkai alla warning notice;

vanakkam;///

ஆஹா ,,,,,, வரும்போது கொலவெறியோடதான் தான் வர்றானுக............. என்ன பன்னலாம்............ஒன்னும் பண்ணமுடியாது சரண்டர். .........வெள்ளைக்கொடி .............

மங்குனி அமைச்சர் said...

RVS said...

சமூக நலத்துறை அமைச்சராகிவிட்டீர்களா?
சமூக பொறுப்புள்ள பதிவு.. நன்று... ;-) ;-)///

thank you RVS SIR

மங்குனி அமைச்சர் said...

Riyas said...

CORRECT///

thank you riyas

vinu said...

மங்குனி அமைச்சர் said...

ஆஹா ,,,,,, வரும்போது கொலவெறியோடதான் தான் வர்றானுக............. என்ன பன்னலாம்............ஒன்னும் பண்ணமுடியாது சரண்டர். .........வெள்ளைக்கொடி .............


indru muthal manguni blog right corner bottom page mottai kulanthaikku Manguni endru peyar sooootappadugirathu, [kadachiyaaga vantha cheaithyyy: thankku varum commentkalai padithuum/paarthum ivaarun thaniyaaga officeil thaliyil adiththukkondu irunthathai yaaro vedio eduththu pottu vittathaaga pulambikkondu irrukkiraar]

சி.பி.செந்தில்குமார் said...

>>>காரணம் அந்த பெரியவர் உடம்பில் இருந்து இரத்தம் வரவில்லையாம் ?????????


இரத்தம் வந்தால் தான் ஏற்றிச்செல்வோம் என்று கூறியுள்ளனர்.>>>
evvaLavu muttaaLthanamaana எவ்வளவு முட்டாள்தனமான முடிவு.எவ்வளவு புத்திசாலித்தனமான பதிவு

vinu said...

சி.பி.செந்தில்குமார் said...

எவ்வளவு முட்டாள்தனமான முடிவு.எவ்வளவு புத்திசாலித்தனமான பதிவு


ithulla eaathaavathu ulllkuththu irrukkaaaaa

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

>>>காரணம் அந்த பெரியவர் உடம்பில் இருந்து இரத்தம் வரவில்லையாம் ?????????


இரத்தம் வந்தால் தான் ஏற்றிச்செல்வோம் என்று கூறியுள்ளனர்.>>>
evvaLavu muttaaLthanamaana எவ்வளவு முட்டாள்தனமான முடிவு.எவ்வளவு புத்திசாலித்தனமான பதிவு
////

ஒன்னும் புரியலையே ???? எங்கயோ ஆப்பு ரெடியாகுதுன்னு மட்டும் தெரியுது (டே .............மங்கு பி கேர்புல் )

மங்குனி அமைச்சர் said...

vinu said...

சி.பி.செந்தில்குமார் said...

எவ்வளவு முட்டாள்தனமான முடிவு.எவ்வளவு புத்திசாலித்தனமான பதிவு


ithulla eaathaavathu ulllkuththu irrukkaaaaa///

எனக்கும் அதே டவுட்டு தான்

Anonymous said...

பல கிராமங்களில் குடிகாரர்கள் மப்பில் வேண்டுமென்றே 108 ஃபோன் செய்து அலும்பு செய்வதால்,சிலரின் அலைக்கழிப்பால் இது போன்று அவர்கள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்..ஆனாலும் பல கிராமங்களில் பிரசவ வல்யில் துடிக்கும் பெண்களுக்கு கடவுல் போல உதவி செய்கிறது 108 சேவை

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பல கிராமங்களில் குடிகாரர்கள் மப்பில் வேண்டுமென்றே 108 ஃபோன் செய்து அலும்பு செய்வதால்,சிலரின் அலைக்கழிப்பால் இது போன்று அவர்கள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்..ஆனாலும் பல கிராமங்களில் பிரசவ வல்யில் துடிக்கும் பெண்களுக்கு கடவுல் போல உதவி செய்கிறது 108 சேவை
///

உண்மைதான் சார் நல்ல சேவை , அந்த அலும்பு செய்யும் நாய்களைத்தான் ஏதாவது செய்யனும்

vinu said...

மங்குனி அமைச்சர் said...


உண்மைதான் சார் நல்ல சேவை , அந்த அலும்பு செய்யும் நாய்களைத்தான் ஏதாவது செய்யனும்


thatpugalchi pidikaathu endru thankkuthaane adikkadi sollikollum manguni vazga vaazgaaaaaaaa

vinu said...

manguni i need a favour; can you help me to take a decision; i got some offer with Bond of 2 years shall i take up that call

S Maharajan said...

//தேர்தலா எங்க? எங்க ??? துட்டு தருவாங்களா ???//

ootu podalai auto varum paravaillaya?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிறந்த சேவைதான், நிர்வாகக் குளறுபடிகளால் தடம் மாறுகிறதோ?

Philosophy Prabhakaran said...

நம்பர் 2 நீங்க தான்னு கேள்விப்பட்டேன்... வாழ்த்துக்கள்... அடுத்த வாரம் முதலிடம் பிடிக்க முயலுங்கள்...

அம்பிகா said...

\\வெறும்பய said...
சிறப்பான சேவை... யார் இந்த மாதிரியான ரூல்ஸ் எல்லாம் போடுறது...\\
அதானே..!
நம்பர் 2 ஆனதற்கு வாழ்த்துக்கள்.

Anisha Yunus said...

இவ்வளவு பொறுப்பா எல்லாம் எழுதற நீங்க உங்க தர்பார்ல இப்படி ஒரு பச்சப்புள்ளைகிட்ட சுத்தியலை குடுத்து சதா மண்டைய உடச்சுகிட்டு இருக்க சொல்லலாமா? அடுத்த 108 அதுக்குத்தான் போலவே...பாவம் அமைச்சரே....கொஞ்சம் ரெஸ்ட் குடுங்க...ப்ளீஸ்.. :)

வெங்கட் said...

அருமையான பதிவு..!!

// இரத்தம் வந்தால் தான் ஏற்றிச்செல்வோம்
என்று கூறியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள்
வாக்குவாதம் செய்யவும் அந்த ஊழியர்கள்
அவர்களது மேலதிகாரிகளிடம் போனில் பேசிவிட்டு //

So., இது அந்த ஊழியர்கள் மேல் தப்பில்லை..
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட Guidelines
அப்படி இருக்கிறது என்பதையே இது
காட்டுகிறது..

" எய்தவன் இருக்க அம்பை நோவானேன்.. "

கருடன் said...

@மங்கு

யோ உன்னை திட்டி பதிவு போட்டு இருக்கேன்... இங்க வா பதிவுலகில் இரத்த ஆறு ஓட போகுது ரெடியாகு...

மங்குனி அமைச்சர் said...

vinu said...

manguni i need a favour; can you help me to take a decision; i got some offer with Bond of 2 years shall i take up that call
////


வினு நல்லா யோசிச்சு நீங்களே ஒரு நல்ல முடிவா எடுங்க . bond என்பதால் நல்லாயோசிங்க , அந்த டீடைல் எல்லாம் நல்லா படிச்சு பாத்து முடிவு எடுங்க .

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

//தேர்தலா எங்க? எங்க ??? துட்டு தருவாங்களா ???//

ootu podalai auto varum paravaillaya?///

சார் எல்லாருக்கும் ரெண்டு ரெண்டு ஒட்டு போட்ட்ருவோம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிறந்த சேவைதான், நிர்வாகக் குளறுபடிகளால் தடம் மாறுகிறதோ?///

ஆமா பன்னிகுட்டி

மங்குனி அமைச்சர் said...

philosophy prabhakaran said...

நம்பர் 2 நீங்க தான்னு கேள்விப்பட்டேன்... வாழ்த்துக்கள்... அடுத்த வாரம் முதலிடம் பிடிக்க முயலுங்கள்...///

ஹி.ஹி.ஹி.....இதுக்கே நான் வொர்த் இல்லைங்க சார்

மங்குனி அமைச்சர் said...

அம்பிகா said...

\\வெறும்பய said...
சிறப்பான சேவை... யார் இந்த மாதிரியான ரூல்ஸ் எல்லாம் போடுறது...\\
அதானே..!
நம்பர் 2 ஆனதற்கு வாழ்த்துக்கள்.///

மிக்க நன்றி அம்பிகா மேடம்

மங்குனி அமைச்சர் said...

அன்னு said...

இவ்வளவு பொறுப்பா எல்லாம் எழுதற நீங்க உங்க தர்பார்ல இப்படி ஒரு பச்சப்புள்ளைகிட்ட சுத்தியலை குடுத்து சதா மண்டைய உடச்சுகிட்டு இருக்க சொல்லலாமா? அடுத்த 108 அதுக்குத்தான் போலவே...பாவம் அமைச்சரே....கொஞ்சம் ரெஸ்ட் குடுங்க...ப்ளீஸ்.. :)////


என்ன மேடம் பண்றது நான் சொன்னாலும் கேட்க்க மாட்டேங்குறான்

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

அருமையான பதிவு..!!

// இரத்தம் வந்தால் தான் ஏற்றிச்செல்வோம்
என்று கூறியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள்
வாக்குவாதம் செய்யவும் அந்த ஊழியர்கள்
அவர்களது மேலதிகாரிகளிடம் போனில் பேசிவிட்டு //

So., இது அந்த ஊழியர்கள் மேல் தப்பில்லை..
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட Guidelines
அப்படி இருக்கிறது என்பதையே இது
காட்டுகிறது..

" எய்தவன் இருக்க அம்பை நோவானேன்.. "///

கரக்ட்டு ஊழியர் மேல் எந்த தவறும் இல்லை

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

யோ உன்னை திட்டி பதிவு போட்டு இருக்கேன்... இங்க வா பதிவுலகில் இரத்த ஆறு ஓட போகுது ரெடியாகு...///

நாங்கல்லாம் பின்னக்கால் பிடரில அடிக்க ஓடிப்பலகுனவிங்க , எங்ககிட்டேவா ????