எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, January 18, 2012

ஒய் திஸ் கொலைவெறி

நான் ஒரு முட்டாளுங்க 
ரொம்ப நல்லா படிச்சவுங்க 
நாலுபேரு சொன்னாங்க 
நான் ஒரு முட்டாளுங்க ........


அட நம்ம ரிங் டோன் சார் ,
(ஜூனியர் மங்கு மைன்ட் வாய்ஸ்  உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு டாடி ) 

பொங்கல் அன்னைக்கு காலைல போன் அடிச்சது ,போன்ல நம்ம கோகுலத்தில் சூரியன் வெங்கட் ......

"ஹலோ ஹேப்பி பொங்கல் வெங்கட்  "

"ஹி,ஹி,ஹி...தேங்க்ஸ் , உங்களுக்கு நான் நாளைக்கு போன்பண்ணி  பொங்கல் வாழ்த்து சொல்லுறேன் மங்கு "

"ஏன்? " 

"நாளைக்கு தான் மாட்டுப்பொங்கல் அதான் "
(உஸ்ஸ் ...... இதுக்கு தான் படிச்ச பயலுககூட சேராதேன்னு எங்கப்பா அப்பவே சொன்னார் )

"சரி , சரி ..விசயத்துக்கு வாங்க "

"ஒன்னும் இல்லை மங்கு , எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு அரசமரம் இருக்கு , அதோட வேர் வந்து எங்க வீட்டு காம்பவுண்ட் சுவர டேமேஜ் பண்ணுது , வேர
கட்பன்னவும் மனசு வரல , உனக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லேன் "

" என்னது வேர்  வந்து சுவர டேமேஜ் பண்ணுதா ? இம்மம்ம்ம் ...... பேசாம ஒரு நாலடி குழிதோண்டி அதுக்குள்ளே ஒரு TAKE  DIVERSION அப்படின்னு ஒரு போர்டு வச்சுப்பாருங்களேன் "

"என்னது?"

"அப்படியும் கேக்கலைன்ன   NO ENTRY    அப்படின்னு வைங்க "

" அடிங் ...... ங்கொய்யாலே , பன்னாட, பரதேசி ,  டோமரு , டுபாகூரு, சோமாறி , கயித, கசுமாலம்,  கேப்மாரி,  பொறம்போக்கு, பேமானி ,மொள்ளமாரி , முடிச்சவிக்கி , கஸ்மாலம் , பாடு , சாவுகிராக்கி ,நன்னாரி  நாதாரி நாயே ............. "

" அய்யோ ஸ்டாப் , ஸ்டாப் ..... நீங்க டீசன்ட்டான பதிவர் இப்படியெல்லாம் திட்டக்கூடாது வெங்கட் "

"ஓ..... டென்சன்ல மறந்துட்டேன் ,   ஸ்டுபிட் , பூல் , நான்சென்ஸ் ...... இருடா எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நேர்ல வந்து உன்னைய  வாயிலேயே வெட்டுறேன் "

நல்லது சொன்னா தப்பாய்யா ??? 

அவனுகளா போன் பன்றாணுக, கேள்வி கேக்குரானுக, பதில்சொன்னா நேர்ல வந்து வாயிலேயே வெட்டுவேங்கிராணுக   , 

நன்றிகெட்ட உலகமடா  மங்கு , பீ கேர்புல் .....

Thursday, December 29, 2011

விடைபெறுகிறேன் நண்பர்களே


டியர் பிரண்ட்ஸ் ,


எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, என்னால இனிமே இந்த வலையுலகில் தொடர்ந்து செயல்படமுடியாத சூழல் உருவாகிவிட்டது . ஆனால் கடந்த நாட்களில் எனக்கு இந்த உலகம் முழுவதிலிருந்து பல நண்பர்கள் கிடைத்தார்கள் .  எனது நட்பின் மூலம் அதில் சிலருக்கு மனவருத்தங்களும் சங்கடங்களும் ஏற்பட்டு இருக்கலாம் , எனவே நண்பர்களே விடைபெறும் இந்த நேரத்தில் அவர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . தயவு செய்து உங்கள் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். கலங்கிய கண்களுடன் விடைபெறுகிறேன் .

இப்படிக்கு

2011



டுஸ்கி : தயவுசெய்து கீழேயுள்ள டிஸ்கியை யாரும் படிக்காதீர்கள் .

டிஸ்கி : ஹி.ஹி.ஹி.....ஒன்னும் இல்லைங்க போனவருசம் (2010 ) ஒரு பதிவர் இந்தமாதிரி பதிவு போட்டு இருந்தார். இந்த கான்செப்ட் ரொம்ப எனக்கு புடிச்சிருந்தது அதான். (@பட்டா ..... இந்த இடத்துல தான் நீ காரி துப்பனும் )

சரி இப்போ மேட்டருக்கு வருவோம் ..........

டெர்ரர் கும்மி குரூப்புல இருந்த நாங்க பதிவர்களின் பதிவுகளுக்கு  ஒரு சின்ன பரிசுப்போட்டி    வச்சிருக்கோம் . கீழ உள்ளத கிளிக் பண்ணி டீடைல்ஸ் பார்த்துக்கங்க .  









இதுல முதல் முக்கியமான கண்டிசன் என்னான்னா ??? 

டெர்ரர் கும்மி மெம்பர்கள் யாரும் போட்டி  நடுவர்கள் கிடையாது  .

அடடா ..... ஆமா இவனுக பூராம்  ஹை கோர்ட் ஜட்ஜா இருந்தவுங்க , தீர்ப்பு சொல்லிட்டாலும் .......???


இதுல ரெண்டாவது  முக்கியமான கண்டிசன் என்னான்னா ??? 

டெர்ரர் கும்மியை சேர்ந்த யாரும் இந்த போட்டில கலந்துக்க கூடாது .

அடிங்.... ங்கொய்யாலே , நாதாரி கும்மி நாயிகளா என்னமோ இவனுகள கலந்துக்க விட்டுட்டா எல்லாரும் பரிசு வாங்கி குவிக்கப்போறது  மாதிரி  என்னமா பில்டப் குடுத்திருக்காணுக. ஒரு பயலுக்கு (முக்கியமா என்னையும் சேர்த்துதான்)  ஒழுங்கா ஒரு பதிவு எழுத தெரியாது , இப்படி ஒரு கண்டிசன் இவனுகளா போட்டு போட்டில கலந்து தோத்துபோயி  கேவலப்படுரதுல இருந்து தப்பிக்க ஐடியா பண்ணிட்டானுக .



Wednesday, November 2, 2011

இப்படி ஒரு பிரண்டு தேவையா மச்சான் ?

காலைல ஆறுமணிக்கு   எழுந்து ..........



"ஹேய் இரு,இரு,இரு, ஆமா நீ என்ன கருமத்துக்கு  ஆறுமணிக்கு எழுந்த ?"

ஷட்டில் விளையாட , ஹேய் பேசிகலி  ஐ எம் எ ஸ்போட்ஸ் மென் யா .

"அடிங்... நாதாரி நாயே பாத்திரம் கழுவி ,வீட்ட கூட்டி, பையன ஸ்கூலுக்கு ரெடிபண்ணி அனுப்பனும் , அதுக்குத்தான உன்னோட வீட்டுக்காரம்மா மூஞ்சில சுடுதண்ணிய  ஊத்தி எழுப்பிவிட்டுச்சு . "

"அடப்பாவிகளா ஊருக்கே தெரிஞ்சுபோச்சா ? சரி விடு மேட்டருக்கு வர்றேன் "

"வா "

காலைல ஆறுமணிஎழுந்து பல்லு விளக்காம வீட்டுக்காரம்மா குடுத்த  டீ சாப்டுகிட்டே 

" மறுபடியும் ஸ்டாப் "

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........  இப்போ என்ன ?"

"உனக்கு வீட்டுல டீயெல்லாம் போட்டு தர்றாங்களா ?"

" நானா போட்டுக்கிட்டது தாண்டா, ஐய்யோ சாவடிக்கிரானுகளே , சொல்ல வந்தத சொல்ல விடுங்கடா "

"சரி சொல்லு  "
  
காலைல ஆறுமணிஎழுந்து பல்லு விளக்காம வீட்டுக்காரம்மா குடுத்த  டீ சாப்டுகிட்டே பால்கனிலருந்து கீழ பாத்தா கீழ் போர்சன்ல இருக்க  நம்ம கண்ணன் பைக்ல  வந்து சேர்ந்தான் . அந்த பயபுள்ள ரெகுலரா இந்த நேரத்துல  வாக்கிங் போற ஆளு ..........

"என்ன கண்ணா இந்நேரத்துல வாக்கிங் போகாம பைக்ல  எங்க போயிட்டு வர்ற ?"

"இல்லைண்ணே இன்னைக்கு சீக்கிரம் ஆஃபீஸ்  போகணும் , நடந்து வாக்கிங்(?) போனா லேட் ஆகும் அதான் பைக்லே வாக்கிங் போயிட்டு வந்துட்டேன் "

# இப்படி ஒரு பிரண்டு தேவையா மச்சான் ?