எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, October 7, 2010

என் கல்லூரிக்காதல் நாட்கள்

நேற்று டி.வி யில் இதயத்தை திருடாதே படம் ஓடியது , என்னுடைய எண்ணங்களும் எனது கல்லூரி காதல் நாட்களை நோக்கி ஓடியது, நீண்ட நாட்களுக்கு பின் எனது கல்லூரி டைரியை எடுத்து புரட்டிப் பார்த்தேன் ...........

அவளுடன் உண்டான சண்டையின் போது என் மணிக்கட்டில் சிகிரட்டால் சுட்டுக்கொண்ட தழும்பை இப்பொழுது தடவி பார்த்தேன்.

மறக்க முடியாத நாட்கள் . மறக்க விரும்பாத நாட்கள் . மீண்டும் கிடைக்காத நாட்கள் .ஆனால் மறக்க வேண்டிய நாட்கள்.

லேசா மழைபெய்யும் போது கல்லூரி வராண்டாவில் காதலிக்காக காத்துக்கிடப்பது தனி சுகம் . மழை காலங்களில் கல்லூரி விடுமுறை நாட்களில் அவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் கல்லூரி வராண்டாவில் காத்திருந்த நாட்கள் . அவள் உதட்டோரம்
சுழிக்கும் சிரிப்புக்காக ஏங்கி நின்ற நாட்கள் .

பாதி சாப்பிட்ட தின்பண்டங்களை பரிமாறிக்கொண்ட நாட்கள் , அவள் தொட்ட பேனாவை நானும் தொட வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே பேனா எடுத்துப்போகாத நாட்கள், எனக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காவே இரண்டு பேனாக்கள் அவள் கொண்டு வரும் நாட்கள்.

நாடு இரவு நேரத்தில் சிறிது தொலைவில் இருந்து அவள் வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த நாட்கள்.

அவளிடம் திட்டு வாங்குவதற்கென்றே அவளுக்கு பயந்து கொண்டு மறைப்பது போல நடித்து அவளுக்கு தெரியுமாறு சிகரட் பிடித்த நாட்கள் ,


அவளிடம் திருடிய கர்ஷிப்கள் , ஹேர் கிளிப்க்கள் , அவளிடம் தொலைப்பதற்கு வேண்டும் என்றே நான் வாங்கி தொலைத்த பரிசுப்பொருட்கள்.


அவளுக்கு கொடுப்பதற்காக எழுதிய கவிதைக்கடிதம் இன்னும் குடுக்கப் படாமல் என் டைரியில் . இப்ப படிக்கும் போது சிறுபிள்ளை தனமாக இருக்கு ,


காதலை ........
துடிக்கின்றதே
சொல்ல
இதழ்
ஆவலில்......
மறுக்கின்றதே
மூட
இமை


நான் .........
உனக்கானவே

தெரியுமா
இதயமே?


நீதானடி ........
என்
கனவு

தெரியுமா

கவிதையே ?



டிஸ்கி: இந்த கவிதையில் ஒரு உள் அர்த்தம் உள்ளது , அதை புரிந்து கொண்டவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் ?

146 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sir manguniya kaanom. unkalukku theriyumaa?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//
என்னய்யா நடக்குது இங்க. மங்கு மானஸ்தன காணோம்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

டிஸ்கி: இந்த கவிதையில் ஒரு உள் அர்த்தம் உள்ளது , அதை புரிந்து கொண்டவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் ?

//

எதை பார்க்கலாம்?...ஹி..ஹி

சாருஸ்ரீராஜ் said...

பிளாஷ்பேக் நல்லா இருக்கு , இந்த கவிதை ஜெயம் ரவி பாடிய பாட்டு கவிதையே தெரியுமா ..படத்தின் பெயர் ஞாபகம் இல்லை .

சாமக்கோடங்கி said...

கவிதையே தெரியுமா.. என் கனவு நீதானடி...

இதயமே தெரியுமா...உனக்காகவே நானடி..

இதழ் சொல்லத் துடிக்கின்றதே காதலை..

இமை மூட மறுக்கின்றதே... ஆவலில்...

மங்குனி.. டைரியில அப்படி எழுதிக்கிட்டு இருந்த ஆளு தான் இப்ப ப்ளாகுல இப்படி எழுதிக்கிட்டு இருக்கீங்களா....? ரொம்ப நல்ல முன்னேற்றம்..

அப்புறமா வர்ரம்ப்பா...

(கமென்ட் ஒன்னும் இன்னும் பதிவாகள.. மோதல் வடை எனக்குதான்னு சொல்லலாம்னு பாத்தா ரெண்டு மூணு பேர் கண்டிப்பா இந்நேரம் வடை வான்கீருப்பாங்க..!!)

ரமேஷ் கார்த்திகேயன் said...

//
அவளிடம் திட்டு வாங்குவதற்கென்றே அவளுக்கு பயந்து கொண்டு மறைப்பது போல நடித்து அவளுக்கு தெரியுமாறு சிகரட் பிடித்த நாட்கள் ,
//

super :)

VIKNESHWARAN ADAKKALAM said...

நீங்க முதல்ல கவிதை எங்கனு சொல்லுங்க பாஸ்...

Anonymous said...

யோவ் மங்குனி.. கவிதையா இது?
//ஒரு உள் அர்த்தம் உள்ளது//
ஒரே அர்த்தம் தான்.. ஜெயம் படத்துல வர்ற பாட்ட தலைகீழா எழுதுனா? அது நீ எழுதுன கவிதையா?!

Gayathri said...

azhaga irukku..kavithailam purunjukura alavukku enakku pulamai illai bro

மங்குனி அமைச்சர் said...

என்ன உலகமடா இது ??? நாம எங்கிட்டு போனாலும் கேட்போட்டுர்ரானுக, தப்பிக்கவே முடியலையே ? பயபுள்ளைக நம்ம சீரியஸ்ஸா பதிவு போட்டாலும் நம்ப மாட்டேங்கிரானுக , எடுத்த உடனே நம்ம பிரகாஷ் @ சாமக்கோடாங்கி கேட் போட்டார் , பாப்பம் இன்னும் என்ன நடக்குதுன்னு ............

மங்குனி அமைச்சர் said...

உங்க கமண்ட்ஸ் எல்லாம் இன்னும் கொஞ்சம் நேரனத்தில் பப்ளிஸ் பன்றேன்

மங்குனி அமைச்சர் said...

அடப்பாவிகளா அவன் அவன் கண்டு புடிச்சிட்டு கொலையா கொல்றானுகளே ???

இம்சைஅரசன் பாபு.. said...

//அவளிடம் திட்டு வாங்குவதற்கென்றே அவளுக்கு பயந்து கொண்டு மறைப்பது போல நடித்து அவளுக்கு தெரியுமாறு சிகரட் பிடித்த நாட்கள் //
மக்கா டீசெண்டா இருக்கட்டும்னு சிகரட் எழுதிட்டயா?எப்போதும் 5 பூ பீடி தானே பிடிப்பாய்

இம்சைஅரசன் பாபு.. said...

//நான் வாங்கி தொலைத்த பரிசுப்பொருட்கள்.//
தப்பு .நான் திருடி தொலைத்த பரிசுபொருட்கள்

இம்சைஅரசன் பாபு.. said...

//நாடு இரவு நேரத்தில் சிறிது தொலைவில் இருந்து அவள் வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த நாட்கள்//
எல்லோரும் தூங்கின வுடன் வீட்டில் இருந்து எதாவது களவாங்கலாம் என்று பார்த்து இருப்ப

சௌந்தர் said...

காதலை ........
துடிக்கின்றதே
சொல்ல
இதழ்
ஆவலில்......
மறுக்கின்றதே
மூட
இமை

நான் .........
உனக்கானவே
தெரியுமா
இதயமே?

நீதானடி ........
என்
கனவு
தெரியுமா
கவிதையே ?////

யோவ் ஜெயம் படத்தின் பாட்டை தலை கிழ எழுதினா இது கவிதை ஆகுமா

சௌந்தர் said...

நான் கண்டு புடித்து விட்டேன் மக்கா

மங்குனி அமைச்சர் said...

பஸ்ட்டு கண்டு பிடிச்சது சாருஸ்ரீராஜ்

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் அது ஜெயம் படத்துல வர பாட்டு யா ........கீழ இருந்தே வாசிங்க

Madhavan Srinivasagopalan said...

என்னாச்சி மங்குனிக்கு.. காலைநேர்ந்து 3-4 தடவை தனக்குத் தானே பேசிக்குறாரே.. .. யாரெங்கே.. அரசு மருத்துவரை கூப்பிடுங்கள்..

மர்மயோகி said...

யோவ் மங்குனி.."கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி" என்கிற சினிமாப் பாட்டை அப்படியே தலைகீழாக எழுதி புதிர் போடுறியா நீ?

சௌந்தர் said...

கவிதையே ?
தெரியுமா
கனவு
என்
நீதானடி ....

இதயமே?
தெரியுமா
உனக்கானவே
நான் ..

இமை
மூட
மறுக்கின்றதே
ஆவலில்......
இதழ்
சொல்ல
துடிக்கின்றதே
காதலை ........

ஆனந்தி.. said...

'ஜெயம்' படம் பாட்டுக்கள் நாங்களும் கேட்ருக்கோம்..:-))

SurveySan said...

பதிவு நன்று.

கவிதை தலைகீழ இருக்கு. அதுவும் இல்லாம,ஏதோ சினிமா பாட்டுல்ல இது?

அருண் பிரசாத் said...

யோவ்... மங்குனி... உன் காதலிதான் முட்டாள் (பின்ன உன்னை காதலிச்சா அறிவாளியாவா இருக்க முடியும்) எங்களையும் அப்படினு நினைச்சிட்டியா.... சினிமா கேள்விக்குலாம் கரிக்கிட்டா பதில் சொல்லிடுவோம்....

ஜெயம் படத்து பாட்டை, jumbled wordsல போட்டா குழம்பிடுவோமா?

@ டெரர்
வந்து இந்த ஆளை தூக்குல போடுய்யா

அருண் பிரசாத் said...

இந்த மண்ணாங்கட்டிக்கு comments moderation வேற... முதல்ல அதை தூக்கு

மங்குனி அமைச்சர் said...

அவ்வ்வ்வ்வ்................. நம்ம எவ்ளோ சீரியஸ் ஆ எழுதினாலும் ஒரு பய மதிக்க மட்ட்டேன்கிரானுகளே ?

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sir manguniya kaanom. unkalukku theriyumaa?////

இப்பத்தான் சார் , இன்டெர் போல் போலீசு வந்து அரஸ்ட் பண்ணிட்டு போச்சு

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Hello sir////

yes sepeaking

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//
என்னய்யா நடக்குது இங்க. மங்கு மானஸ்தன காணோம்...////
\

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணக்கலாமாக்குராணுக

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

டிஸ்கி: இந்த கவிதையில் ஒரு உள் அர்த்தம் உள்ளது , அதை புரிந்து கொண்டவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் ?

//

எதை பார்க்கலாம்?...ஹி..ஹி////

சே..... ஒரு மனுஷன் என்னா சோகத்துல இருக்கான் ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லுவோன்னு கிடையாது

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

பிளாஷ்பேக் நல்லா இருக்கு , இந்த கவிதை ஜெயம் ரவி பாடிய பாட்டு கவிதையே தெரியுமா ..படத்தின் பெயர் ஞாபகம் இல்லை .////

மேடம் பஸ்ட்டு நீங்கதான் கண்டு புடுச்சிங்க ,

மங்குனி அமைச்சர் said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

கவிதையே தெரியுமா.. என் கனவு நீதானடி...

இதயமே தெரியுமா...உனக்காகவே நானடி..

இதழ் சொல்லத் துடிக்கின்றதே காதலை..

இமை மூட மறுக்கின்றதே... ஆவலில்...

மங்குனி.. டைரியில அப்படி எழுதிக்கிட்டு இருந்த ஆளு தான் இப்ப ப்ளாகுல இப்படி எழுதிக்கிட்டு இருக்கீங்களா....? ரொம்ப நல்ல முன்னேற்றம்..

அப்புறமா வர்ரம்ப்பா...

(கமென்ட் ஒன்னும் இன்னும் பதிவாகள.. மோதல் வடை எனக்குதான்னு சொல்லலாம்னு பாத்தா ரெண்டு மூணு பேர் கண்டிப்பா இந்நேரம் வடை வான்கீருப்பாங்க..!!)/////

ஹி.ஹி.ஹி..... எல்லாம் ஒரு பில்டப் தான்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ் கார்த்திகேயன் said...

//
அவளிடம் திட்டு வாங்குவதற்கென்றே அவளுக்கு பயந்து கொண்டு மறைப்பது போல நடித்து அவளுக்கு தெரியுமாறு சிகரட் பிடித்த நாட்கள் ,
//

super :)////

ரொம்ப நன்றி ரமேஷ் கார்த்திகேயன் சார்

சௌந்தர் said...

மங்குனி அமைசர் said...
அவ்வ்வ்வ்வ்................. நம்ம எவ்ளோ சீரியஸ் ஆ எழுதினாலும் ஒரு பய மதிக்க மட்ட்டேன்கிரானுகளே...?///

என்னது இது சீரியஸ் பதிவா இதை முன்னாடியே சொல்லுங்க

மங்குனி அமைச்சர் said...

VIKNESHWARAN said...

நீங்க முதல்ல கவிதை எங்கனு சொல்லுங்க பாஸ்...////

நீங்க தான் சார் தெளிவா இருக்கீங்க , என்னா ஒரு வில்லத்தனம் ?

அமுதா கிருஷ்ணா said...

கவிதை கவிதை....

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

யோவ் மங்குனி.. கவிதையா இது?
//ஒரு உள் அர்த்தம் உள்ளது//
ஒரே அர்த்தம் தான்.. ஜெயம் படத்துல வர்ற பாட்ட தலைகீழா எழுதுனா? அது நீ எழுதுன கவிதையா?!////

கொஞ்சம் கூட அசர மாட்டேங்குரிகளே

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

azhaga irukku..kavithailam purunjukura alavukku enakku pulamai illai bro////

நன்றி மேடம் , சீரியஸ் ஆ யோசிக்காதிங்க மொக்க பதிவு தான் இது

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//அவளிடம் திட்டு வாங்குவதற்கென்றே அவளுக்கு பயந்து கொண்டு மறைப்பது போல நடித்து அவளுக்கு தெரியுமாறு சிகரட் பிடித்த நாட்கள் //
மக்கா டீசெண்டா இருக்கட்டும்னு சிகரட் எழுதிட்டயா?எப்போதும் 5 பூ பீடி தானே பிடிப்பாய்////

பப்ளிக் இருக்காங்கல்ல பாத்து பேசுப்பா

DHANS said...

மறக்க முடியாத நாட்கள் . மறக்க விரும்பாத நாட்கள் . மீண்டும் கிடைக்காத நாட்கள் .ஆனால் மறக்க வேண்டிய நாட்கள்//


super

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//நான் வாங்கி தொலைத்த பரிசுப்பொருட்கள்.//
தப்பு .நான் திருடி தொலைத்த பரிசுபொருட்கள்/////

பாபுக்கு ரெண்டு வடை ஒரு டீ பார்சல் .(யோவ் போதுமா ரொம்ப அசிங்கப் படுத்தாத )

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//நாடு இரவு நேரத்தில் சிறிது தொலைவில் இருந்து அவள் வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த நாட்கள்//
எல்லோரும் தூங்கின வுடன் வீட்டில் இருந்து எதாவது களவாங்கலாம் என்று பார்த்து இருப்ப////

உனக்கும் பங்கு தரலாமுன்னு நினைச்சேன் , நீ மாட்டி விட்ட , போ உனக்கு பங்கு கிடையாது

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...



யோவ் ஜெயம் படத்தின் பாட்டை தலை கிழ எழுதினா இது கவிதை ஆகுமா/////

நாங்கலாம் முற்போக்கு கவிஞர்கள் . (சொந்தமாவேல்லாம் கவிதை எழுத வராது சார் )

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

நான் கண்டு புடித்து விட்டேன் மக்கா///

சீக்கிரமா போலீசுல ஒப்படச்சிடுங்க

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் அது ஜெயம் படத்துல வர பாட்டு யா ........கீழ இருந்தே வாசிங்க////

புத்திசாலி , இப்பதான் மூளை வேலை செய்யுதா ??

மங்குனி அமைச்சர் said...

Madhavan said...

என்னாச்சி மங்குனிக்கு.. காலைநேர்ந்து 3-4 தடவை தனக்குத் தானே பேசிக்குறாரே.. .. யாரெங்கே.. அரசு மருத்துவரை கூப்பிடுங்கள்..////

கொஞ்சம் வெயில்ல கம்மி , நமக்கு சூடு குறஞ்சா இப்படித்தான்

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

யோவ் மங்குனி.."கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி" என்கிற சினிமாப் பாட்டை அப்படியே தலைகீழாக எழுதி புதிர் போடுறியா நீ?/////

ஹா,ஹா,ஹா .......... எங்க ஒரு வாடி முழுபாட்டும் பாடுங்க மர்மயோகி

வெட்டிப்பேச்சு said...

Touchy...and Perfect.

your other side is really touchy and nice.

God Bless You. Really you have moved me..

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

கவிதையே ?
தெரியுமா
கனவு
என்
நீதானடி ....

இதயமே?
தெரியுமா
உனக்கானவே
நான் ..

இமை
மூட
மறுக்கின்றதே
ஆவலில்......
இதழ்
சொல்ல
துடிக்கின்றதே
காதலை ........////

நிறையா லவ் பன்னிருப்பிங்க போல

மங்குனி அமைச்சர் said...

ஆனந்தி.. said...

'ஜெயம்' படம் பாட்டுக்கள் நாங்களும் கேட்ருக்கோம்..:-))////

டே...மங்கு,.நீ சீரியஸ் ஆ எழுதினா உன்னைய லேடிஸ் கூட நம்ம மாட்டேங்குறாங்க , மொக்க தான் போடுறன்னு கரக்க்ட்டா கண்டு புடுச்சிடுறாங்க

மங்குனி அமைச்சர் said...

தக்காளி போடுறா 50

மங்குனி அமைச்சர் said...

SurveySan said...

பதிவு நன்று.

கவிதை தலைகீழ இருக்கு. அதுவும் இல்லாம,ஏதோ சினிமா பாட்டுல்ல இது?////

ஆமாங்க சார் , தலைகால படிச்சிட்டே வந்திங்கன்னா தெரியும்

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

யோவ்... மங்குனி... உன் காதலிதான் முட்டாள் (பின்ன உன்னை காதலிச்சா அறிவாளியாவா இருக்க முடியும்) எங்களையும் அப்படினு நினைச்சிட்டியா.... சினிமா கேள்விக்குலாம் கரிக்கிட்டா பதில் சொல்லிடுவோம்....

ஜெயம் படத்து பாட்டை, jumbled wordsல போட்டா குழம்பிடுவோமா?

@ டெரர்
வந்து இந்த ஆளை தூக்குல போடுய்யா/////

ஆமா ஆமா , இந்த ஆள உடனே தூக்குல போடு , துணைக்கு அருணையும் தூக்குல போடு

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

இந்த மண்ணாங்கட்டிக்கு comments moderation வேற... முதல்ல அதை தூக்கு////

comments moderation ஐயும் செத்தா தூக்குல போடணும் ?

Unknown said...

முதல்ல இது கவிதையா ..?

சௌந்தர் said...

இந்த பயபுள்ள தலகிழே நின்னு யோசிச்சி இருக்கு

கருடன் said...

@மங்கு

//@ டெரர்
வந்து இந்த ஆளை தூக்குல போடுய்யா/////

இன்னைக்கு ஒரு நாள் யாரையும் அடிக்க மட்டேன் தேவாக்கு வாக்கு கொடுத்து இருக்கேன்... நாளைக்கு இருக்குயா உனக்கு... புதிர் எல்லாம் மூளை இருக்கவன் போடனும்.. உனக்கு ஏன்?? பாத்ததும் விடை தெரியுது.... மவனே.... இன்னெரு வாட்டி உன் ப்ளாக்ல மாட்ரேஷன் பாத்தேன்....

கருடன் said...

//மணிக்கட்டில் சிகிரட்டால் சுட்டுக்கொண்ட தழும்பை இப்பொழுது தடவி பார்த்தேன்.//

கொய்யால நான் வந்து நாக்குல சுடரேன் இரு....

Anonymous said...

லேசா மழைபெய்யும் போது கல்லூரி வராண்டாவில் காதலிக்காக காத்துக்கிடப்பது தனி சுகம் //
உண்மைதான்...அது ஒரு காலம் ம்ஹ்ஹிம்

Anonymous said...

மங்குனியாரே எதிரி மன்னனுக்கு பயந்து கமெண்ட் மாடுரேசன் போட்டுட்டீங்களா எங்கே ஒளிஞ்சிருக்கீங்க...ஐடிய ஆட்டைய போட்டுட்டாங்களா

கருடன் said...

@மங்கு

இந்தா பிடி எதிர் கவிதை

அன்பே அணார்கலி...
நீ ஒரு காதல் எலி!
எனக்கு பிடிக்கும் போலி
என்னை விட்டு போனா நீ காலி!!

Jaleela Kamal said...

என்னாச்சி மங்குனிக்கு.. காலைநேர்ந்து 3-4 தடவை தனக்குத் தானே பேசிக்குறாரே.. .. யாரெங்கே.. அரசு மருத்துவரை கூப்பிடுங்கள்..////

இல்ல எந்திரன் பார்த்ததிலிருந்தா?
கவிதை யில் வேறு உள் அர்த்தமா?

http://allinalljaleela.blogspot.com/2010/10/blog-post_04.html இதையும் பாருங்கள் உங்களுக்கு ரொம்ப பிடிச்சது.

Jaleela Kamal said...

பள்ளி , கல்லூரி வாழ்க்கைய அப்படி நினைவில் ஓட விட்டாலே ரொம்ப மனதுக்கு இனிமை தான் , அதுவும் காதல் நாட்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் இது புனைவுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி: இந்த கவிதையில் ஒரு உள் அர்த்தம் உள்ளது , அதை புரிந்து கொண்டவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் ?////

இது அவ்வளவும் நேத்திக்கி ராவா அடிச்சிட்டு தூங்கும் போது வந்த கெட்ட கனவு! என்ன சரியா மங்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நேற்று டி.வி யில் இதயத்தை திருடாதே படம் ஓடியது , என்னுடைய எண்ணங்களும் எனது கல்லூரி காதல் நாட்களை நோக்கி ஓடியது,////

என்னது இதயத்தைத் திருடாதே வரும்போது காலேஜா? யப்பா, ஏழு கழுதை வயசாயிடிச்சி, இன்னும் இப்பிடி பழைய கில்மாவ நெனச்சிக்கிட்டு இருந்தா எப்பிடி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பாடி, ஒருவழியா ஆட்டோ கிராபுல ஒரு கிராபு வந்திடிச்சி, இன்னும் எத்தனையோ? அது வரைக்கும் இப்பிடியேதானா? இதுக்கே கண்ணக் கட்டுதுடா சாமி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் கமென்ட்ஸ்லாம் இன்னும் அஞ்சு நிமிசத்துல பப்ளிஷ் ஆகல, இங்கியே வாந்தி எடுத்துடுவேன்...........................!

sathishsangkavi.blogspot.com said...

நீ ரொம்ப நல்லவன்னு நெனச்சேனய்யா...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// நேற்று டி.வி யில் இதயத்தை திருடாதே படம் ஓடியது , என்னுடைய எண்ணங்களும் எனது கல்லூரி காதல் நாட்களை நோக்கி ஓடியது, நீண்ட நாட்களுக்கு பின் எனது கல்லூரி டைரியை எடுத்து புரட்டிப் பார்த்தேன் ........... ////

மங்குனி ,
இதயத்தை திருடாதே படம் 1989 இல் வந்தது ..,அப்போ நீ கல்லூரியில் படித்து கொண்டிருந்தாதை சொல்கிறாய் ..,அப்படிஎன்றால் உன்னக்கு அந்த நேரத்தில் உனக்கு 20 - 21 வயது இருக்கும் ..., அப்படிஎன்றால் இப்போது உன் வயது இப்போது 42 சரிதானே அமைச்சரே ....,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

கமெண்ட் மாடரேஷன் தூக்குயா மங்குனி ............

ஹேமா said...

கவிதை...கவிதை...காதல் கவிதை.உணர்வு இதமாயிருக்கு அமைச்சர் அவர்களே.பாட்டைத் தலைகீழாப் போட்டா கவிதையாகும்ன்னு இண்ணைக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

good post

Gayathri said...

mokka padhiva?? rombha feel panni ezhudhirukeengale

Anonymous said...

ஜெயம் பாட்ட இப்படி கொலை பண்ணிட்டீங்களே..

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

முதல்ல இது கவிதையா ..?////

good question senthil sir

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

இந்த பயபுள்ள தலகிழே நின்னு யோசிச்சி இருக்கு////

நான் நேராத்தான் சார் இருந்தேன் , சிஸ்டம் தான் தலைகீழா தெரிஞ்சது

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

மங்குனி அமைசர் said...
அவ்வ்வ்வ்வ்................. நம்ம எவ்ளோ சீரியஸ் ஆ எழுதினாலும் ஒரு பய மதிக்க மட்ட்டேன்கிரானுகளே...?///

என்னது இது சீரியஸ் பதிவா இதை முன்னாடியே சொல்லுங்க////

உங்க மூஞ்சிக்கு நேர முன்னாடி தானே சொன்னேன் . அவ்வ்வ்வ்வ்..............

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

கவிதை கவிதை....////

நீங்களும் நம்பலையா ???( என்னடா மங்கு உன்னைய யாருமே நம்ப மாட்டேங்குறாங்க )

மங்குனி அமைச்சர் said...

DHANS said...

மறக்க முடியாத நாட்கள் . மறக்க விரும்பாத நாட்கள் . மீண்டும் கிடைக்காத நாட்கள் .ஆனால் மறக்க வேண்டிய நாட்கள்//


super///

thank you dhans sir

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

Touchy...and Perfect.

your other side is really touchy and nice.

God Bless You. Really you have moved me..///

very thanks வெட்டிப்பேச்சு

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//@ டெரர்
வந்து இந்த ஆளை தூக்குல போடுய்யா/////

இன்னைக்கு ஒரு நாள் யாரையும் அடிக்க மட்டேன் தேவாக்கு வாக்கு கொடுத்து இருக்கேன்... நாளைக்கு இருக்குயா உனக்கு... புதிர் எல்லாம் மூளை இருக்கவன் போடனும்.. உனக்கு ஏன்?? பாத்ததும் விடை தெரியுது.... மவனே.... இன்னெரு வாட்டி உன் ப்ளாக்ல மாட்ரேஷன் பாத்தேன்....////

ஹி.ஹி.ஹி....... என்ன டெரர் என் டேசன் ? காலைல சாப்பிடலையா ? இல்ல ஆபீசுல ஆணி புடுங்க சொல்லிட்டானுகளா ? சொல்லு அவனுகள கொன்னு கொன்னுவிளையாடுவோம்

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

//மணிக்கட்டில் சிகிரட்டால் சுட்டுக்கொண்ட தழும்பை இப்பொழுது தடவி பார்த்தேன்.//

கொய்யால நான் வந்து நாக்குல சுடரேன் இரு....////

எல்லாரும் துப்பாக்கிலதான் சுடுவாங்க , நீ எப்படி நாக்குல சுடுவ ?

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

லேசா மழைபெய்யும் போது கல்லூரி வராண்டாவில் காதலிக்காக காத்துக்கிடப்பது தனி சுகம் //
உண்மைதான்...அது ஒரு காலம் ம்ஹ்ஹிம்////

சார் நீங்களும் சேம் பிளாட்டா ???

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மங்குனியாரே எதிரி மன்னனுக்கு பயந்து கமெண்ட் மாடுரேசன் போட்டுட்டீங்களா எங்கே ஒளிஞ்சிருக்கீங்க...ஐடிய ஆட்டைய போட்டுட்டாங்களா////

அட நீங்க வேற சார் , மாடுரேசன எடுக்க மறந்துட்டு என்னடா ஒரு பயலும் கமன்ட் படலைஎன்னு பாத்துகிட்டு இருந்தேன் , திடீர்ன்னு நியாபகம் வந்து போய் பாத்தா 25 கமண்ட்ஸ்இருக்கு

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

இந்தா பிடி எதிர் கவிதை

அன்பே அணார்கலி...
நீ ஒரு காதல் எலி!
எனக்கு பிடிக்கும் போலி
என்னை விட்டு போனா நீ காலி!!////

இரு அப்படியே அதை தொடர் கவிதையாக்குறேன்

நான் கட்டுறேன் உனக்கு தாலி
இனிமே அதுதான் உனக்கு வேலி
நீ இனிமி விளையாடாத கோலி
அப்படி விளையாண்ட நீ காலி
(டே..... மங்கு அசத்துரடா ...............)

இனி யார் வேணாலும் தொடரலாம்

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

என்னாச்சி மங்குனிக்கு.. காலைநேர்ந்து 3-4 தடவை தனக்குத் தானே பேசிக்குறாரே.. .. யாரெங்கே.. அரசு மருத்துவரை கூப்பிடுங்கள்..////

இல்ல எந்திரன் பார்த்ததிலிருந்தா?
கவிதை யில் வேறு உள் அர்த்தமா?

http://allinalljaleela.blogspot.com/2010/10/blog-post_04.html இதையும் பாருங்கள் உங்களுக்கு ரொம்ப பிடிச்சது.////

சும்மா தமாசு மேடம்

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

பள்ளி , கல்லூரி வாழ்க்கைய அப்படி நினைவில் ஓட விட்டாலே ரொம்ப மனதுக்கு இனிமை தான் , அதுவும் காதல் நாட்களா?////

ஆமாங்க மேடம் , காமன்ட்சுக்கு நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் இது புனைவுதானே?////

வாய்யா வில்லங்கம் , நல்ல ரூட்டுதான் புடிச்சிகுடுக்குற , விளங்கும் ஏற்கனவே இருக்க பஞ்சாயத்து எல்லாம் போதாதா ?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி: இந்த கவிதையில் ஒரு உள் அர்த்தம் உள்ளது , அதை புரிந்து கொண்டவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் ?////

இது அவ்வளவும் நேத்திக்கி ராவா அடிச்சிட்டு தூங்கும் போது வந்த கெட்ட கனவு! என்ன சரியா மங்கு?////

ஊஹும்...............தப்பு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நேற்று டி.வி யில் இதயத்தை திருடாதே படம் ஓடியது , என்னுடைய எண்ணங்களும் எனது கல்லூரி காதல் நாட்களை நோக்கி ஓடியது,////

என்னது இதயத்தைத் திருடாதே வரும்போது காலேஜா? யப்பா, ஏழு கழுதை வயசாயிடிச்சி, இன்னும் இப்பிடி பழைய கில்மாவ நெனச்சிக்கிட்டு இருந்தா எப்பிடி?////

யோவ் இது பழைய நினைப்பு , புதுசெல்லா வேற ......ஹி.ஹி.ஹி

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பாடி, ஒருவழியா ஆட்டோ கிராபுல ஒரு கிராபு வந்திடிச்சி, இன்னும் எத்தனையோ? அது வரைக்கும் இப்பிடியேதானா? இதுக்கே கண்ணக் கட்டுதுடா சாமி!////

ஆமா அடுத்து ஹிஸ்டரி எச்சாமுள்ள ஒரு கிராப் இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் கமென்ட்ஸ்லாம் இன்னும் அஞ்சு நிமிசத்துல பப்ளிஷ் ஆகல, இங்கியே வாந்தி எடுத்துடுவேன்...........................!//////

வந்துட்டேன் சாமி

மங்குனி அமைச்சர் said...

சங்கவி said...

நீ ரொம்ப நல்லவன்னு நெனச்சேனய்யா...////

அப்பையா சார் நினைச்சிங்க ? நான் நல்லவன் தான் சார் இந்த பயபுள்ளைக கூட சேந்து இப்படி ஆயிட்டேன் சார்

Anonymous said...

vjhh

Anonymous said...

bbj

முத்து said...

100

முத்து said...

நூறா போட போறே அது நான் இருக்கிற வரைக்கும் முடியாது

மங்குனி அமைச்சர் said...

அடப்பாவிகளா நானே வடைய தூக்கி போட்டனா ?

செல்வா said...

//அவள் தொட்ட பேனாவை நானும் தொட வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே பேனா எடுத்துப்போகாத நாட்கள், எனக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காவே இரண்டு பேனாக்கள் அவள் கொண்டு வரும் நாட்கள்.//

உண்மைலேயே அழகா இருக்கு அண்ணா ..!!

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

//// நேற்று டி.வி யில் இதயத்தை திருடாதே படம் ஓடியது , என்னுடைய எண்ணங்களும் எனது கல்லூரி காதல் நாட்களை நோக்கி ஓடியது, நீண்ட நாட்களுக்கு பின் எனது கல்லூரி டைரியை எடுத்து புரட்டிப் பார்த்தேன் ........... ////

மங்குனி ,
இதயத்தை திருடாதே படம் 1989 இல் வந்தது ..,அப்போ நீ கல்லூரியில் படித்து கொண்டிருந்தாதை சொல்கிறாய் ..,அப்படிஎன்றால் உன்னக்கு அந்த நேரத்தில் உனக்கு 20 - 21 வயது இருக்கும் ..., அப்படிஎன்றால் இப்போது உன் வயது இப்போது 42 சரிதானே அமைச்சரே ....,////

இதயத்தை திருடாதே படம் 1989 வந்ததா ? எனக்கு தெரியாது , நான் கிண்டர் காலேஜில் படிக்கும் போது 2001 அந்த படம் பாத்தேன்

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...

கவிதை...கவிதை...காதல் கவிதை.உணர்வு இதமாயிருக்கு அமைச்சர் அவர்களே.பாட்டைத் தலைகீழாப் போட்டா கவிதையாகும்ன்னு இண்ணைக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன் !////

எல்லாரும் நல்ல விவரமாத்தான் இருக்காங்கடா மங்கு , (அப்புறம் எல்லாம் உன்னை மாதிரி மன்குநியாவா இருப்பாங்க ?

மங்குனி அமைச்சர் said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

good post///

thank you sir

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

mokka padhiva?? rombha feel panni ezhudhirukeengale////

எல்லாம் சும்மா உடான்சு மேடம் (உண்மைன்னு சொன்னா இந்த பயலுக ஓவரா கிண்டல் பண்றானுக மேடம் )

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

ஜெயம் பாட்ட இப்படி கொலை பண்ணிட்டீங்களே../////

சும்மா கொன்னு கொன்னு விளையாண்டு பாத்தேன் மேடம்

மங்குனி அமைச்சர் said...

//Anonymous said...

vjhh


Anonymous said...

ப்ப்ஜ்///


யாருப்பா அது ? என்ன சொல்ல வரிங்க

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

நூறா போட போறே அது நான் இருக்கிற வரைக்கும் முடியாது////

தவள தன வாயல கெடும் சொல்லுவாங்க , அந்த கதையா ஆகிப்போச்சு முத்து

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

102///

vaanga sir

மங்குனி அமைச்சர் said...

Blogger ப.செல்வக்குமார் said...

//அவள் தொட்ட பேனாவை நானும் தொட வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே பேனா எடுத்துப்போகாத நாட்கள், எனக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காவே இரண்டு பேனாக்கள் அவள் கொண்டு வரும் நாட்கள்.//

உண்மைலேயே அழகா இருக்கு அண்ணா ..!!///

ரொம்ப நன்றி செல்வக்குமார்

செல்வா said...

//நீதானடி ........
என்
கனவு
தெரியுமா
கவிதையே ?/

மங்குனி அமைச்சர் என்பவரைக் காணவில்லை ..
கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழக்கப்படும் ..!!

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//நீதானடி ........
என்
கனவு
தெரியுமா
கவிதையே ?/

மங்குனி அமைச்சர் என்பவரைக் காணவில்லை ..
கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழக்கப்படும் ..!!////

அவரை தேட மாயாஜால் , சத்தியம் தியேட்டர் வாசலுக்கு ஆள் அனுப்பப்பட்டு உள்ளது , (அங்கதானே மாமூலா பிச்சை எடுப்பான் ) எனவே கலவை வேண்டாம் சீக்கிரம் கண்டு பிடித்து விடலாம்

செல்வா said...

//(அங்கதானே மாமூலா பிச்சை எடுப்பான் ) எனவே கலவை வேண்டாம் சீக்கிரம் கண்டு பிடித்து விடலாம்
//

அதுக்குள்ள இங்க அவரோட ப்ளாக்க யாரோ ஹேக் பண்ணி கவிதை எல்லாம் எழுதி வச்சிட்டாங்களே ..!!

செல்வா said...

இங்க ஒருத்தரையும் காணோம் ..!!
சரி நான் கிளம்புறேன் ..!!

அஞ்சா சிங்கம் said...

அவ்வ்வ்வ்வ்................. நம்ம எவ்ளோ சீரியஸ் ஆ எழுதினாலும் ஒரு பய மதிக்க மட்ட்டேன்கிரானுகளே ?//
யோவ் இனிமேல் சீரியஸ் பதிவுனா முன்னமே மண்டையோடு படம் போடுறது நல்லது .இல்லனா நாங்க எப்படி புரிஞ்சிகிறது

கருடன் said...

//சிகிரட்டால் சுட்டுக்கொண்ட தழும்பை இப்பொழுது தடவி பார்த்தேன்.
//

வீட்டுல வடை திருடி அம்மா போட்ட சூடு கேள்வி பட்டேன்...

அன்பரசன் said...

//அவளிடம் திருடிய கர்ஷிப்கள் , ஹேர் கிளிப்க்கள்//

அத வச்சு என்ன பண்ணுனீங்க?

சீமான்கனி said...

சூடு வச்சுமா திருந்தல...உண்மையாவே நான் ரசிச்சேன்...மங்குஜி ...ஜூப்பர்

சாமக்கோடங்கி said...

யோவ்.. நான் என்ன ஜிமெயில் அட்ரசா வெச்சிருக்கேன்.. பிரகாஷ் @ சாமக்கோடாங்கி அப்டீன்னு போட்டு இருக்கீங்க.

நான் பிரகாஷ்(எ)சாமக்கோடங்கி..

பிரியுதா..?
காலையில ஒரு கமென்ட் போட்டேன்... ஆபீஸ் போயிட்டு வர்றதுக்குள்ள நூறு கமென்ட் தாண்டீடுச்சு... சரியான கல்லா கட்டும் இடம் தான் போல...

ம்ம.ம்ம.. நடக்கட்டும் மன்குநியாரே..

Chitra said...

மறக்க முடியாத நாட்கள் . மறக்க விரும்பாத நாட்கள் . மீண்டும் கிடைக்காத நாட்கள் .ஆனால் மறக்க வேண்டிய நாட்கள்.



..... நான் லீவ்ல போய் இருந்தப்போ, இங்கே மங்குனி அமைச்சரை யாரோ கடத்திட்டாங்கப்பா .....

Vidhya Chandrasekaran said...

http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_08.html

n.d. shan said...

அவளுக்கு கொடுப்பதற்காக எழுதிய கவிதைக்கடிதம் இன்னும் குடுக்கப் படாமல் என் டைரியில்.. தயவு செய்து பதிவில் இடுங்க சார்....நாங்களாவது ரசிக்கிறோம்...

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//(அங்கதானே மாமூலா பிச்சை எடுப்பான் ) எனவே கலவை வேண்டாம் சீக்கிரம் கண்டு பிடித்து விடலாம்
//

அதுக்குள்ள இங்க அவரோட ப்ளாக்க யாரோ ஹேக் பண்ணி கவிதை எல்லாம் எழுதி வச்சிட்டாங்களே ..!!
////

நாம ஏன்னா சொன்னாலும் ஒரு பலயலும் நம்ப மாட்டேகிரானுகளே

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

இங்க ஒருத்தரையும் காணோம் ..!!
சரி நான் கிளம்புறேன் ..!!///

ஹலோ , அந்த நோக்கியா கேமரா மொபைல வச்சிட்டு போங்க, அது என்னது , ஆள் இல்லைன்னா ஆட்டயபோடவேண்டியது ?

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

அவ்வ்வ்வ்வ்................. நம்ம எவ்ளோ சீரியஸ் ஆ எழுதினாலும் ஒரு பய மதிக்க மட்ட்டேன்கிரானுகளே ?//
யோவ் இனிமேல் சீரியஸ் பதிவுனா முன்னமே மண்டையோடு படம் போடுறது நல்லது .இல்லனா நாங்க எப்படி புரிஞ்சிகிறது///

மண்டையன் சார் உண்மையிலேயே நல்ல ஐடியா , அடுத்து பாலோ பண்றேன்

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

//சிகிரட்டால் சுட்டுக்கொண்ட தழும்பை இப்பொழுது தடவி பார்த்தேன்.
//

வீட்டுல வடை திருடி அம்மா போட்ட சூடு கேள்வி பட்டேன்.../////

இவன் ஒரு லூசு , ரகசியமா எதையும் வக்க தெரியாது , எல்லாத்தையும் பொதுவுல போட்டு உடைச்சிடுவான்

மங்குனி அமைச்சர் said...

அன்பரசன் said...

//அவளிடம் திருடிய கர்ஷிப்கள் , ஹேர் கிளிப்க்கள்//

அத வச்சு என்ன பண்ணுனீங்க?////

என்ன இப்படி கேட்டுடிங்க படத்துக்கு போக காசு இல்லைன்னா அத வித்துட்டு தான் போவேன்

மங்குனி அமைச்சர் said...

சீமான்கனி said...

சூடு வச்சுமா திருந்தல...உண்மையாவே நான் ரசிச்சேன்...மங்குஜி ...ஜூப்பர்////

சார் நான் சூடு வைக்கும் போது சிகரட்டு பத்தவைக்க மறந்துட்டேன் ,
ரொம்ப நன்றி சீமான்கனி சார்

மங்குனி அமைச்சர் said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

யோவ்.. நான் என்ன ஜிமெயில் அட்ரசா வெச்சிருக்கேன்.. பிரகாஷ் @ சாமக்கோடாங்கி அப்டீன்னு போட்டு இருக்கீங்க.

நான் பிரகாஷ்(எ)சாமக்கோடங்கி..

பிரியுதா..?
காலையில ஒரு கமென்ட் போட்டேன்... ஆபீஸ் போயிட்டு வர்றதுக்குள்ள நூறு கமென்ட் தாண்டீடுச்சு... சரியான கல்லா கட்டும் இடம் தான் போல...

ம்ம.ம்ம.. நடக்கட்டும் மன்குநியாரே..////

என்ன சார் நீங்க பழைய அம்மாஜியாவே இருக்கீங்க , இப்ப உள்ள டிரண்டுக்கு தகுந்தா மாதி யூத்தா , மாடனா பேர் வக்கணும் , எப்படி அழகான பேர் இது , பண்ணுங்க எல்லாம் லைக் பண்ணும் பாருங்க . (பேர் மாத்தினதுக்கு 287689 /- என் அக்கவுண்டுல கிரடிட் பண்ணிடுங்க )

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

மறக்க முடியாத நாட்கள் . மறக்க விரும்பாத நாட்கள் . மீண்டும் கிடைக்காத நாட்கள் .ஆனால் மறக்க வேண்டிய நாட்கள்.



..... நான் லீவ்ல போய் இருந்தப்போ, இங்கே மங்குனி அமைச்சரை யாரோ கடத்திட்டாங்கப்பா .....////

என்னது லீவுல போயிருந்திகளா , அடடா நல்ல சான்ஸ் மிஸ் ஆகிடுச்சே , மேடம் இனிமே லீவுல போனா ஒரு வார்த்த சொல்லிட்டு போங்க . அப்பத்தான் உங்க பிலாக்க திருட வசதியாஇருக்கும்

மங்குனி அமைச்சர் said...

வித்யா said...

http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_08.html////

thanks medam

மங்குனி அமைச்சர் said...

n.d. shan said...

அவளுக்கு கொடுப்பதற்காக எழுதிய கவிதைக்கடிதம் இன்னும் குடுக்கப் படாமல் என் டைரியில்.. தயவு செய்து பதிவில் இடுங்க சார்....நாங்களாவது ரசிக்கிறோம்...////

ஹையோ ஹையோ , என்னா தைரியம் சார் உங்களுக்கு , நானே படிக்க பயந்துகிட்டு அத தொடுறதே இல்லை

Mythees said...

சூப்பரா கவிதை எழுதி காமெடி பண்ணறீங்க சார், உங்களுக்கு நான் சர் பட்டம் குடுக்குறேன் ..............

அஞ்சா சிங்கம் said...

மண்டையன் சார் உண்மையிலேயே நல்ல ஐடியா , அடுத்து பாலோ பண்றேன்.//
என்ன சாருனு சொல்லிடாங்க வாங்க எல்லாருக்கும் இன்னக்கி கடா வெட்டி விருந்து வைக்கிறேன் .

மங்குனி அமைச்சர் said...

mythees said...

சூப்பரா கவிதை எழுதி காமெடி பண்ணறீங்க சார், உங்களுக்கு நான் சர் பட்டம் குடுக்குறேன் ..............
////

இவனுக வெறுங்கையிலே குழிதோண்டி என்னைய போத்துடுவாணுக மேடம் , இதுல நீங்க அவனுக கைக்கு ஒரு கடப்பார வேற தர்றேங்குரிங்க , இம் என்ன என்னநடக்கப்போடுதோ

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

மண்டையன் சார் உண்மையிலேயே நல்ல ஐடியா , அடுத்து பாலோ பண்றேன்.//
என்ன சாருனு சொல்லிடாங்க வாங்க எல்லாருக்கும் இன்னக்கி கடா வெட்டி விருந்து வைக்கிறேன் .////

விருந்தா ???? இதோ வந்துட்டேன் .. (என்ன உங்க ப்ளாக் திறக்க மாட்டேங்குது , லிங்க் குடுங்க )

அஞ்சா சிங்கம் said...

நான் இன்னும் ப்ளாக் எழுத ஆரம்பிகல.கண்டிப்பா கோதாவுல எறங்குன உடனே சொல்லியானுபுறேன் .
வந்து விருந்து சாபிட்டு மொய் வச்சிட்டு போங்க .

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

நான் இன்னும் ப்ளாக் எழுத ஆரம்பிகல.கண்டிப்பா கோதாவுல எறங்குன உடனே சொல்லியானுபுறேன் .
வந்து விருந்து சாபிட்டு மொய் வச்சிட்டு போங்க .
///

சாப்பிட கூப்பிட்டிங்க சரி , அது என்ன மொய்யி ? மொய்யின்னா சாப்படு சாப்பிடுற ஏதாவது ஸ்வீட்டா ?

Vishnu said...

தருமி காலத்திலிருந்து நானும் பாக்குறேன் ஒரு பய சொந்தமா கவித எழுத மாட்டேன்றான்கப்பா. மண்டபக்காரன் எவனாவது உதவி செய்றாங்க. இல்லேனிய அங்க இங்கன்னு சுட்டுரான்கப்பா.

vanathy said...

மங்குனி, சுட்ட கவிதை சூப்பர். வயசான பிறகு இளமைக்காலத்தை அசை போடுவது சுகமாக இருக்கும் என்று பெரிசுகள் சொல்வார்கள்!!!!

n.d. shan said...

ஹையோ ஹையோ , என்னா தைரியம் சார் உங்களுக்கு , நானே படிக்க பயந்துகிட்டு அத தொடுறதே இல்லை ....

நீங்களே இப்படி சொன்னா?..அப்ப என் டைரியில் உள்ளதை எங்கு கொண்டுப்போய்,போடுறது...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மங்குனியா(ன அமைச்ச)ரே!
கல்லூரியில் படித்ததை அசைபோடுவதை
விடுத்து, கல்லூரிக் காதலை அசைபோடுறீகளே!
நல்லாதான் இருக்கு. அதே நேரம் நகைச்சுவையாகவும்
உள்ளது.
(எனது பிளாக் வந்தால் நிறைய நகைச்சுவை
சம்பவங்கள் படிக்கலாம்.)

MANO நாஞ்சில் மனோ said...

வரலாறு முக்கியம் அமைச்சரே........ஹி ஹி ஹி.......

priyamudanprabu said...

மறக்க முடியாத நாட்கள் . மறக்க விரும்பாத நாட்கள் . மீண்டும் கிடைக்காத நாட்கள் .ஆனால் மறக்க வேண்டிய நாட்கள்.
//////

priyamudanprabu said...

லேசா மழைபெய்யும் போது கல்லூரி வராண்டாவில் காதலிக்காக காத்துக்கிடப்பது தனி சுகம் . மழை காலங்களில் கல்லூரி விடுமுறை நாட்களில் அவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் கல்லூரி வராண்டாவில் காத்திருந்த நாட்கள் . அவள் உதட்டோரம் சுழிக்கும் சிரிப்புக்காக ஏங்கி நின்ற நாட்கள் .
///


விதி யாரை விட்டது

cheena (சீனா) said...

பரவா இல்லையே - அப்படியே கொசு வத்தி சுத்தி - மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து - ம்ம்ம்ம் - பலே பலே ! நெச்முன்னு நெனெசுத்தான் இந்த மறுமொழி