எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, January 19, 2011

டேய்....என்கவுன்டர்ல போட்டு தள்ளிடுவேன் ஜாக்கிரத

ஐயோ , ஐயோ , ஐயோ ............ என் பொண்டாட்டி மடார் மடார்ன்னு தலையிலே அடிச்சுக்கிட்டு

" இப்படி ஒரு பைத்தியக்காரனுக்கு போயி என்னைய கட்டி வச்சிருக்கான் பாரு எங்கப்பன செருப்பால அடிக்கணும்..... என் பொழப்பு இப்படி நாசமா போச்சேன்னு" பொலம்ப ஆரம்பிச்சா ...........

என் பையன் அவனோட புக்கு நோட்டு எல்லாத்தையும் கிழிச்சு போட்டு

"மம்மி நீ அழுகாத மம்மி , பேசாம இந்த ஆள டைவேர்ஸ் பண்ணிட்டு வா நான் உன்னைய மாடு மேச்சாவது காப்பாத்துறேன் , இந்த ஆளுக்கு புள்ளையா பொறத்ததுக்காக இனி நான் ஸ்கூல் பக்கமே போகமாட்டேன் "

திடீர்ன்னு பக்கத்து வீட்டுல ஒரே சத்தம் என்னான்னு போயி பாத்தா.........

அவுங்க வீட்டு நாய் நடு ஹால்ல தூக்கு மாட்டி தொங்குது .

வெளிய வந்து பாத்தா பக்கத்து வீட்டு ஹவுஸ் ஓனர் ரெண்டாவது மாடியில இருந்து கீழ குதிச்சு சூசைட்டு டிரை பன்னி கால உடைச்சிக்கிட்டார் ............

ரோட்டுல ஒரே சைரன் சத்தம் போலீசு , ஆம்புலன்சுன்னு ஒரே களேபரம் ......

போலீசு நேர என்கிட்ட வந்து

"யோவ் , இதுவரைக்கு 67 போன் கம்ப்ளைன்ட் வந்திருக்கு , மரியாதையா இனி பாட்டு பாடாத , அப்படியே பாடனும்னாலும் அடுத்து வீடுகளுக்கு கேக்காம சத்தமில்லாம வாயில சைலன்சர் வச்சிக்கிட்டு பாடு , இல்லை உன்னைய என்கவுன்டர்ல போட்டு தள்ளிடுவேன் ஜாக்கிரத "

இது என்னங்க சார் அநியாயமா இருக்கு , அப்படி என்ன சார் நான் பெரிய்ய தப்பு பன்னிட்டேன் .......... நீங்களே சொல்லுங்க சார் , அயன் படத்துல வர்ற

"விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே "

பாட்ட இங்கிலீசுல கீழ உள்ளது மாதிரி பாடினேன் சார் ,



ஐஸ்மூடி திங்க்பன்னினால்
தெயரும் கம்முனாய் பிரன்டே பிரன்டே
லோன்லியாக டாக்கிடும் ஹெப்பியை
கிவ்வுனாய் பேக்கே பேக்கே
அடி திஸ்போல் ரெயின் காலம் மை லைபில் கம்முமா
ரெயின் பேரட்டே ரெயின் பேரட்டே உன் ஐஸை சீத்தேனே
ஐஸ் வழியே ஐஸ் வழியே மீ மையை சீத்தேனே ............ ரெட்ஹனியே ...............



இது ஒரு தப்பா சார் ............. நான் இங்கிலீசு பேசுறது , பாடுறத பாத்து எல்லாரும் பொறாம புடிச்ச பேட் பீபுளா இருக்காங்க சார் .

181 comments:

Speed Master said...

வடை

Speed Master said...

அய்யா வடை கிடைச்சாச்சு

KANA VARO said...

சூப்பரு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உன்னை எல்லாம் இளைஞன் படத்தை தொடர்ந்து அம்பது தடவ பார்க்க வைச்சு கொல்லனும்

sulthanonline said...

நல்லவேளை அமைச்சரே நான் உங்க வீட்டு பக்கத்தில இல்ல. ஒருவேளை இருந்தேன்னா..! என் கதி என்ன ஆகி இருந்திருக்கும் தப்பிச்சேன்டா சாமி

Speed Master said...

பாடல் சூப்பர் நீங்கள் ஏன் சினிமாவில் பாடல் பாட கூடாது


// அப்பாடா உசுப்பேத்தியாச்சு இனி சினிமா அழிந்துடும்

sulthanonline said...

ஆஹா வட போச்சே...!

Madhavan Srinivasagopalan said...

அதான.. இந்தப் பாட்ட இங்கிலீசுல பாடினா அப்படித்தான் நடக்கும்..
ஹிந்தில டிரை பண்ணிப் பாருங்க.. சரியா வருதான்னு..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அய்யய்யோ... பாடுரீங்களா??????

சாரி சார்.. ராங் அட்ரஸ்... :)

(ஸூஊ.. ஜஸ்ட்ட் மிஸ்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி மக்களுக்கு தெரியலை நரி ஊளை கேட்டா நல்லதுன்னு. விடு விளங்காத பசங்கக

S Maharajan said...

//இப்படி ஒரு பைத்தியக்காரனுக்கு போயி என்னைய கட்டி வச்சிருக்கான் பாரு எங்கப்பன செருப்பால அடிக்கணும்//

பாவம் அவங்களும் எவ்வளவு நாலு தான் பைத்தியக்காரனோடு வாழ்வாங்க

//அவுங்க வீட்டு நாய் நடு ஹால்ல தூக்கு மாட்டி தொங்குது//.

புளு க்ராஸ் ஆள்களை வீட்டுக்கு அனுப்புறேன்

//ஐஸ்மூடி திங்க்பன்னினால்
தெயரும் கம்முனாய் பிரன்டே பிரன்டே//

பாட்டு சூப்பர் அமைச்சரே நீர்
பாடியது தான் thappu
இனி நீர் இப்படி பாடினால் மூக்கு வழியாக மீசையை நுழைத்து
மூளையை குடைந்து விடுவேன் ஜாக்கிரதை!!!!!!!!!

Unknown said...

மங்குனி பாடுவதற்கும், மக்கள் தொகையை குறைக்க அரசு திட்டங்கள் கொண்டு வந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை # மனித உரிமை கழகத்தில் மத்திய அரசு விளக்கம்..

vinu said...

machi nee paadu machchi

Unknown said...

//என் பையன் அவனோட புக்கு நோட்டு எல்லாத்தையும் கிழிச்சு போட்டு//

// இந்த ஆளுக்கு புள்ளையா பொறத்ததுக்காக இனி நான் ஸ்கூல் பக்கமே போகமாட்டேன் "//

பயபுள்ள ஸ்கூல் போகாமா இருக்க, என்னாமா திட்டம் போடுது...

TERROR-PANDIYAN(VAS) said...

//அவுங்க வீட்டு நாய் நடு ஹால்ல தூக்கு மாட்டி தொங்குது .//

மச்சி!! உன் வீட்டு ஹால்ல ஒரு நாய நான் அடிச்சி தூக்குல தொங்கவிட போறேன் பாரு.... :))

vinu said...

உன்னையும் பதிவரா மதிச்சு இம்புட்டு பேரு வந்து படிச்சு தலையிலே அடிச்சுகிட்டு சாகுரப்போ உம்மோட பாட்டு மட்டும் என்னத்தை குறைச்சல் நீ பாடு மச்சி; யாரு என்ன சொன்னாலும் நீ கேக்காதே [அப்புடியே கேட்டுட்டா மட்டும் ] நீ பாடு மச்சி;

TERROR-PANDIYAN(VAS) said...

//ரெயின் பேரட்டே ரெயின் பேரட்டே உன் ஐஸை சீத்தேனே
ஐஸ் வழியே ஐஸ் வழியே மீ மையை சீத்தீனே ............ ரெட்ஹனியே ...............
//

இதுக்கு அப்புறம் உன்னை உயிரோட விட்டு வைக்கனுமா? :)

அமுதா கிருஷ்ணா said...

பையனின் ஐடியா அருமை.

'பரிவை' சே.குமார் said...

தப்பிச்சேன்டா சாமி.
தப்பிச்சேன்டா சாமி.
தப்பிச்சேன்டா சாமி.
தப்பிச்சேன்டா சாமி.
தப்பிச்சேன்டா சாமி.
தப்பிச்சேன்டா சாமி.
தப்பிச்சேன்டா சாமி.
தப்பிச்சேன்டா சாமி.

sulthanonline said...

அமைச்சரே ஒரு நாய் தூக்குல தொங்குற அளவுக்கு பாடியிருக்கீங்க..! அரண்மனை கி(லி)ளி ராஜ்கிரண் styleல பாடியிருப்பீங்களோ நல்ல வேளை blue croosல இருந்து யாரும் வரல அத நெனச்சு சந்தோஷப்படுங்க..! அவ்வ்வ்வ்

அஞ்சா சிங்கம் said...

உடுங்க பாஸ் எல்லாம் போராம பிடிச்ச பசங்க நீங்க இப்படியே தொடர்ந்து பாடிக்கிட்டே இருங்க அப்பதான் நாட்டுல தீவிரவாதம் கொறயும்.விஜயகாந்த் படம் எடுக்க மாட்டாரு .விஜய் நல்லபடமா நடிப்பாரு. இன்னும் பல மாற்றங்கள் நாட்டுல நடக்கும் ........

மர்மயோகி said...

மங்குநியாரே..எப்படியோ சிரிக்க வைத்து விடுகிறீர்கள்..ம்ம்...கோ ஆன்..தொடருங்கள்...

அப்புறம் ஏதோ வடை வடைன்னு ஆளாளுக்கு சொல்லிக்கிட்டு திரியுறாங்களே அப்படீன்னா என்ன மங்குநியாரே..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்... வெளங்கிருச்சு............

ஆர்வா said...

அமைச்சரே.. ரொம்ப அருமையான பாட்டு.. மைக்கேல் ஜாக்ஸனுக்கு அப்புறம் இங்கிலீஷ் பாட்டு எழுதுறதுல உங்கள அடிச்சுக்க ஆளே இல்லையாமே

விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை

sulthanonline said...

அண்ணன் அஞ்சா சிங்கத்தை ஆதரிக்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா பாட்டு எங்கே.....பாட்டு எங்கே.....? உன் பாடலைக் கேட்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே....!

சௌந்தர் said...

நிச்சயம் இவரை போட்டு தள்ளனும்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அயன் படத்துல வர்ர பாட்டையா இன்னும் பாடுறீங்க அமைச்சரே?

sulthanonline said...

பன்னி குட்டி அண்ணா நாங்க கெளம்பி போனதுக்கு அப்புறமா நீங்களும் அமைச்சரும் பாடோ பாடுன்னு தனியா பாடிக்கங்க. அட ஆள விடுங்கப்பா..!

முத்தரசு said...

கழுதைக்கு தெரிமா கற்பூர வாசனை -உடு உடு அமைச்சரே பீல் பண்ணாதே

இதுகேல்லமா என்கவுன்ட்டர் - காலம் ஒருநாள் மாறும்

வானம் said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உன்னை எல்லாம் இளைஞன் படத்தை தொடர்ந்து அம்பது தடவ பார்க்க வைச்சு கொல்லனும்/////

தீர்ப்புன்னா இதுதான்யா தீர்ப்பு.

என்றா பசுபதி, புட்றா இந்த மங்குனிய..

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா பாட்டு எங்கே.....பாட்டு எங்கே.....? உன் பாடலைக் கேட்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே....!
/////

க்க்கும்...வெளங்கிரும்.....

எஸ்.கே said...

அடுத்து நாமெல்லாம் இந்த பாடலை ஆங்கிலத்தில் பாடுவோம்:

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி தாங்காது பூமி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போ சொல்றேண்டா தீர்ப்பு........ யார்ராவன் பிராது கொடுத்தவன, வாங்கடா இங்க, தீர்ப்பு சொல்லும் போது ஓடிப்போனா அப்புறம் இந்த நாட்டாமைக்கு என்றா மருவாதி?

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உன்னை எல்லாம் இளைஞன் படத்தை தொடர்ந்து அம்பது தடவ பார்க்க வைச்சு கொல்லனும்//

உங்க பிளாக்கில் போட்டீங்களே அதுவா? அது நல்ல படமாச்சே!

எஸ்.கே said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போ சொல்றேண்டா தீர்ப்பு........ யார்ராவன் பிராது கொடுத்தவன, வாங்கடா இங்க, தீர்ப்பு சொல்லும் போது ஓடிப்போனா அப்புறம் இந்த நாட்டாமைக்கு என்றா மருவாதி?//

நாட்டாமை தீர்ப்பை இங்கிலீசுல சொல்லுங்க!

வானம் said...

அந்தப்பாட்டை ரெக்கார்டு பண்ணி உன் பிளாக்குல கோத்துவிடுய்யா. பதிவுலகத்துக்கே திருஷ்டி கழிஞ்சமாதிரி இருக்கும்.

வானம் said...

//// எஸ்.கே said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போ சொல்றேண்டா தீர்ப்பு........ யார்ராவன் பிராது கொடுத்தவன, வாங்கடா இங்க, தீர்ப்பு சொல்லும் போது ஓடிப்போனா அப்புறம் இந்த நாட்டாமைக்கு என்றா மருவாதி?//

நாட்டாமை தீர்ப்பை இங்கிலீசுல சொல்லுங்க!/////

மங்குனி இங்லிபீசுக்கே இங்கிட்டு பேதி புடிங்கிருச்சு. இதுல பன்னிக்குட்டியோட இங்கிலிபீசு வேறயா. இதுக்கு நான் பன்னிக்காய்ச்சல் வந்தே செத்துப்போயிருக்கலாம்.

மாணவன் said...

"டேய்....என்கவுன்டர்ல போட்டு தள்ளிடுவேன் ஜாக்கிரத"

தப்பே இல்ல....ஹிஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தப் பாட்டுதான்டா குஞ்சுக்கவுண்டரோட பேமிலி பாட்டு, அதுனால மங்குனிதான் குஞ்சுக்கவுண்டரோட ஒரே வாரிசுன்னு தீர்ப்புச் சொல்றேன்..... குஞ்சுக்கவுண்டரோட ஒரே சொத்தான இந்த நைஞ்சு போன சொம்பு, இனிமே மங்குனிக்குத்தான் சொந்தம்..... பஞ்சுக் கவுண்டரு, இனிமே சொம்பு வெவகாரத்துல தலையிடப்படாது...... இதுதாண்டா என்ற தீர்ப்பு........... எலேய் சின்றாசு கட்றா வண்டிய.... அடுத்த பஞ்சாயத்துக்கு போகோனும்......!

வானம் said...

நாட்டாம, தீர்ப்ப மாத்திச்சொல்லு

Chitra said...

இது ஒரு தப்பா சார் ............. நான் இங்கிலீசு பேசுறது , பாடுறத பாத்து எல்லாரும் பொறாம புடிச்ச பேட் பீபுளா இருக்காங்க சார் .


......உங்கள் ப்லாக் ல, கீழே ஒரு குழந்தை - ஒரு சுத்தியலை வச்சு தலையில அடிச்சுக்குதே, அந்த சுத்தியலை கொஞ்சம் இரவல் தர முடியுமா, ப்ளீஸ்? முடியல....

எஸ்.கே said...

//எலேய் சின்றாசு கட்றா வண்டிய.... அடுத்த பஞ்சாயத்துக்கு போகோனும்......!//

ஏனுங்க நாட்டாமை! சின்றாசுக்கு வண்டிய கட்டி வைக்கிறீங்க! ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டி வைக்கப்புடாதா?

வானம் said...

இது தீர்ப்பு இல்லய்யா. மங்குனிக்கு வைக்கிற ஆப்பு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
நாட்டாம, தீர்ப்ப மாத்திச்சொல்லு//////

படுவா ராஸ்கோலு, இந்தத் தீர்ப்ப எத்தன தடவய்யா மாத்துறது? அப்புறாம் இந்த நாட்டாமைக்கி என்றா மருவாதி?

வானம் said...

மங்குனி வச்சுக்கப்போற நைஞ்சு போன சொம்ப குஞ்சுக்கவுண்டர் வைச்சுருந்தாரு.
அப்ப குஞ்சுக்கவுண்டர் வச்சுருந்த............??????????

settaikkaran said...

அல்லாருக்கும் கடுப்பு மங்குனி! எங்கே இந்தப் பாட்டுகாக ஆஸ்கார் அவார்டை உங்களுக்குத் தூக்கிக் கொடுத்திருவாங்களோன்னு பொறாமை. நீங்க பாட்டுக்கு கன்டின்யூ பண்ணுங்க உங்க இம்சையை, அதாவது இசையை...! :-)

//ஐஸ்மூடி திங்க்பன்னினால்
தெயரும் கம்முனாய் பிரன்டே பிரன்டே//

நல்லாத்தானே இருக்கு? என்னவாம்...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
மங்குனி வச்சுக்கப்போற நைஞ்சு போன சொம்ப குஞ்சுக்கவுண்டர் வைச்சுருந்தாரு.
அப்ப குஞ்சுக்கவுண்டர் வச்சுருந்த............??????????/////

குஞ்சுக்கவுண்டர் வச்சிருந்தத பஞ்சுக்கவுண்டர் வெச்சுக்குவாரு..... இதுக்கெல்லாம் பஞ்சாயத்து வேண்டியதில்ல, அட்ஜஸ்ட்மெண்ட்டுதான் தம்பி.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
//எலேய் சின்றாசு கட்றா வண்டிய.... அடுத்த பஞ்சாயத்துக்கு போகோனும்......!//

ஏனுங்க நாட்டாமை! சின்றாசுக்கு வண்டிய கட்டி வைக்கிறீங்க! ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டி வைக்கப்புடாதா?//////

நல்ல பொண்ண அவன் கட்டிக்கிட்டா அப்புறாம் நான் என்றா பண்றது?

வானம் said...

அக்கார்டிங் டு இ பி கோ செக்சன் 420 ச்சீ ச்சீ(CC), தட் நைஞ்சு போன சொம்பு வில் ஆல்சோ பி சேர்டு பை நாட்டாமை பன்னிக்குட்டி ராம்சாமி.

வானம் said...

நான் கொடுத்ததுதான்யா வடையான தீர்ப்பு, நோ நோ சரியான தீர்ப்பு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வானம் said...
அக்கார்டிங் டு இ பி கோ செக்சன் 420 ச்சீ ச்சீ(CC), தட் நைஞ்சு போன சொம்பு வில் ஆல்சோ பி சேர்டு பை நாட்டாமை பன்னிக்குட்டி ராம்சாமி./////

அதுக்கு வேற சொம்பு இருக்கு.......!

Porkodi (பொற்கொடி) said...

பையன் பெரியாளா வருவான் போல.. :))

வானம் said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வானம் said...
அக்கார்டிங் டு இ பி கோ செக்சன் 420 ச்சீ ச்சீ(CC), தட் நைஞ்சு போன சொம்பு வில் ஆல்சோ பி சேர்டு பை நாட்டாமை பன்னிக்குட்டி ராம்சாமி./////

அதுக்கு வேற சொம்பு இருக்கு.......!/////

நாட்டாம, அது இங்கிலீசுல சொன்ன தீர்ப்புய்யா, நீ நெனக்கிற மாதிரியெல்லாம் மாத்தமுடியாது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாரும் வழிவிடுங்க... வழிவிடுங்க.... வழிவிடுங்க... குஞ்சுக்கவுண்டர் வர்ரார்.... வழிவிடுங்க.... வழிவிடுங்க...... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வானம் said...
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வானம் said...
அக்கார்டிங் டு இ பி கோ செக்சன் 420 ச்சீ ச்சீ(CC), தட் நைஞ்சு போன சொம்பு வில் ஆல்சோ பி சேர்டு பை நாட்டாமை பன்னிக்குட்டி ராம்சாமி./////

அதுக்கு வேற சொம்பு இருக்கு.......!/////

நாட்டாம, அது இங்கிலீசுல சொன்ன தீர்ப்புய்யா, நீ நெனக்கிற மாதிரியெல்லாம் மாத்தமுடியாது./////

இங்கிலிபீசுல சொல்லிட்டா இந்த நாட்டாமைக்கி தெரியாதுன்னு நெனச்சிட்டியா, வெளக்கெண்ண, எலேய் சின்றாசு அந்த சாட்டைய் எடுத்துட்டு வா.... இங்க தீர்ப்ப மாத்திச் சொல்ல வேண்டியிருக்கு........!

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
எல்லாரும் வழிவிடுங்க... வழிவிடுங்க.... வழிவிடுங்க... குஞ்சுக்கவுண்டர் வர்ரார்.... வழிவிடுங்க.... வழிவிடுங்க...... !////

யோவ். நிக்கிறதே ரெண்டு பேருதான். இதுக்கு ஏன் இப்படி கூவுற?

அருண் பிரசாத் said...

மங்குனி

இதையும் கொஞ்சம் பாருங்க

http://arunprasathgs.blogspot.com/2010/06/blog-post_29.html

வானம் said...

////இங்கிலிபீசுல சொல்லிட்டா இந்த நாட்டாமைக்கி தெரியாதுன்னு நெனச்சிட்டியா, வெளக்கெண்ண, எலேய் சின்றாசு அந்த சாட்டைய் எடுத்துட்டு வா.... இங்க தீர்ப்ப மாத்திச் சொல்ல வேண்டியிருக்கு........!
/////

அதான் போன பஞ்சாயத்துலயே முன் அபராதமா ஒன்னேமுக்கா ரூபா கட்டிட்டனே. மறந்துபோச்சா?

சி.பி.செந்தில்குமார் said...

english poet? m m i cant

வானம் said...

யோவ் பன்னிகுட்டி, நீதான இதுக்குமுன்னாடி பஞ்சுக்கவுண்டருக்கு பஞ்சு சப்ளை பண்ணிக்கிட்டுருந்த.
இப்ப .....?

vinu said...

yow vootu onaru engyaaaa

வானம் said...

/// vinu said...
yow vootu onaru engyaaaa/////

இப்படி இங்கிலீசு தொர மாதிரியே கமெண்டு போட்டா எப்படி? தமிழ்ல வாங்கய்யா..

MANO நாஞ்சில் மனோ said...

கொல்லாம விட்டது, பாக்கியம் போங்க...........

Anonymous said...

தொர இங்கிலிபீசெல்லாம் பேசுது..
காலக்கொடுமைடா சாமி..

sathishsangkavi.blogspot.com said...

மங்குனி கலக்கல்...

பொன் மாலை பொழுது said...

பேசாம மன்குனிய நம்ம பார்லிமெண்டுக்கு எம்.பி யா அனுப்பி வைக்கோணும். சண்டை போட்டு சபைய ஒத்திவேக்காமா மங்குனி பாட்டு பாடினா எல்லா பன்னாடைகளும் காண்டீனுக்கு ஓடிபோயிடும்.

logu.. said...

innum sagaliya nee?

Unknown said...

பாட்டு சூப்பர் அமைச்சரே, அடுத்து என்ன பாட்டு என்பதை கேட்க ஆவலாக உள்ளேன்

vinu said...

manguni rocks

vinu said...

சரி சரி யாரையும் காணோம் விவரமா வடையை எடுத்துட்டு ஓடிடணும்

Velmaheshk said...

ஏதோ வடை வடைன்னு ஆளாளுக்கு சொல்லிக்கிட்டு திரியுறாங்களே அப்படீன்னா என்ன மங்குநியாரே..?

vinu said...

iiiiiiiiiiiiiya me 75thu

vinu said...

iiiiiiiiiiiiiya me 75thu

vinu said...

iiiiiiiiiiiiiya me 75thu

vinu said...

அப்பாடி எம்புட்டு குஷ்டம்டா சீ இது கஷ்டம்டா

vinu said...

என்னதிது ஒரு பயலயும் காணோம்

vinu said...

மச்சி பன்னிகுட்டி நீயுமா ஓடிவிட்டாய்

இம்சைஅரசன் பாபு.. said...

மங்குனிக்கு மூளை கலங்கி போச்சு .....

வெங்கட் said...

மைக்கேல் ஜாக்ஸன் சாகறதுக்கு
முன்னாடி ஐ.பாட்ல கேட்ட பாட்டு
மாதிரியே இருக்கு..

ஒருவேளை. இது தான் அதா..?!!

கோநா said...

மங்குனி அமைச்சரே அப்டியே இந்த followers க்காக ஒரு பாட்டு பாடுங்களேன்.
உன்னையெல்லாம், காச வாங்கிட்டு வெளிய நடமாட விட்டுருக்காங்க பாரு, அந்த போலிச இந்த மொக்கையெல்லாம் கேட்க வைக்கணும், அப்பத்தான் அவங்களுக்கு தெரியும் மத்தவங்களோட கஷ்டம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சரி விடு.. மேட்டருக்கு வா.. கடைசியா நாய் பிரியாணி எப்படி இருந்துச்சு...?

காரம் கொஞ்சம் தூக்கலோ?

சாருஸ்ரீராஜ் said...

ஒன்னும் சொல்றதுக்கு இல்லை வர வர அமைச்சரோட ரவுசு தாங்க முடியலை ....

அஞ்சா சிங்கம் said...

இங்க மங்குனி மன்குனின்னு ஒரு மானஸ்தன் இருந்தான் ...
அவர காணும் அதான் தேடிக்கிட்டு இருக்கேன் ...........

தினேஷ்குமார் said...

ஹையோ ஹையோ ஏண்டா கம்முன தமிழ் பர்கட் ஆகிடும் போல

♔ℜockzs ℜajesℌ♔™ said...

போலீஸ் இன்னுமா என்கவுன்டர்ல போடல? என்னங்கைய போலீஸ் அவங்க ? , இந்த மாதிரி குற்றதுக்கெல்லாம் பேசவே கூடாது இந்நேரம் மங்குனியா போட்டு தள்ளி இருக்கணும் . . .

குறையொன்றுமில்லை. said...

உங்களுக்கு இங்கிபிலீசெல்லாம் கூட வருமா?

Ram said...

ஐயோ.!! ஒரு விஞ்ஞானிய என்கவுன்டர் போட பாத்திருக்காங்களே.. என்ன ஒரு அருமையான மொழியாக்கம்.. நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா.. பின்றார்பா பின்றார்பா...

ஹேமா said...

மொழிபெயர்ப்பு அருமை.ஏன் எல்லாரும் உங்களைத் திட்டுறாங்க !

ஜெயந்த் கிருஷ்ணா said...

அடப்பாவி மக்கா.. அந்த போலீஸ் காரனுங்க உன்னை சும்மாவா விட்டுகிட்டு போனாங்க... அவனுங்களா உதைக்கணும் முதல்ல.. அப்புறம் மிதிக்கணும் உன்ன...

ரொம்ப........அப்பாவி ....... said...

1947 க்கு முன்னால நீ இருந்திருந்தினா நீ ஒருத்தனே போதும், இங்கிலிஷ்காரன் ஓடியிருப்பான்

மங்குனி அமைச்சர் said...

Blogger Speed Master said...

வடை///

ரைட்டு ....... எங்க வடைய பத்தி இங்கிலீசுல ஒரு சாங் பாடுங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger Speed Master said...

அய்யா வடை கிடைச்சாச்சு////

இன்னும் சாங் ஸ்டார்ட் பன்னல????

மங்குனி அமைச்சர் said...

Blogger KANA VARO said...

சூப்பரு!////

நன்றிங்க காண வரோ (சார் இந்த பேருக்கு என்ன அர்த்தம் சார் ?)

மங்குனி அமைச்சர் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உன்னை எல்லாம் இளைஞன் படத்தை தொடர்ந்து அம்பது தடவ பார்க்க வைச்சு கொல்லனும்////

அதுக்கு பேசாம உன் போடவா நாலுவாட்டி பாத்தா போதுமே , எல்லாம் முடிஞ்சிடும்

மங்குனி அமைச்சர் said...

Blogger sulthanonline said...

நல்லவேளை அமைச்சரே நான் உங்க வீட்டு பக்கத்தில இல்ல. ஒருவேளை இருந்தேன்னா..! என் கதி என்ன ஆகி இருந்திருக்கும் தப்பிச்சேன்டா சாமி////

கவலையே படாதிங்க சார் , உங்க மொபைல் நம்பர் குடுங்க நான் சாங் பாடும்போது உங்களுக்கு கால் பண்ணுறேன் , நீங்க அத ஸ்பீக்கர்ல போட்டிங்கன்னா உங்க தெருவே சந்தோசப்படுவாங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger Speed Master said...

பாடல் சூப்பர் நீங்கள் ஏன் சினிமாவில் பாடல் பாட கூடாது


// அப்பாடா உசுப்பேத்தியாச்சு இனி சினிமா அழிந்துடும்///

அவ்வ்வ்வ்வ்வ்............வீட்டுல பாடினதுக்கே கொலைமிரட்டல் வருது .....இதுல சினிமாவில வேறையா ??? (ஒன்லி ஹூளிவுட் தான் சார் ....நோ லோகல் )

மங்குனி அமைச்சர் said...

Blogger sulthanonline said...

ஆஹா வட போச்சே...!/////

கொஞ்சம் லேட் .........

மங்குனி அமைச்சர் said...

Blogger Madhavan Srinivasagopalan said...

அதான.. இந்தப் பாட்ட இங்கிலீசுல பாடினா அப்படித்தான் நடக்கும்..
ஹிந்தில டிரை பண்ணிப் பாருங்க.. சரியா வருதான்னு..///

ஹி.ஹி..ஹி..............சூப்பர் இடியா சார் ......... எனக்கு இங்கிலீச விட ஹிந்தி நல்லா வரும் ,... ஆனா இந்த மக்களுக்கு புரியாதே ???

மங்குனி அமைச்சர் said...

போட்டாம் பாரு 100 ,,,,,.............

மங்குனி அமைச்சர் said...

Blogger Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அய்யய்யோ... பாடுரீங்களா??????

சாரி சார்.. ராங் அட்ரஸ்... :)

(ஸூஊ.. ஜஸ்ட்ட் மிஸ்)/////

விடுவமா ???? இருங்க உங்க பிளாக்குல வந்து பாடுறேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி மக்களுக்கு தெரியலை நரி ஊளை கேட்டா நல்லதுன்னு. விடு விளங்காத பசங்கக////

அட ஒரு நரியே

நரியின் சகுனம்

சொல்கிறதே ! (அட ஆச்சரியக்குறி )

மங்குனி அமைச்சர் said...

Blogger S Maharajan said...

//இப்படி ஒரு பைத்தியக்காரனுக்கு போயி என்னைய கட்டி வச்சிருக்கான் பாரு எங்கப்பன செருப்பால அடிக்கணும்//

பாவம் அவங்களும் எவ்வளவு நாலு தான் பைத்தியக்காரனோடு வாழ்வாங்க ////

நான் மட்டும் பேய் கூட வாழ்க்கை நடத்துறேன் ....அதவிட இது என்ன கஷ்ட்டம் (யப்பா சாமிகளா யாரும் போட்டு குடுத்திடாதிங்க , உங்களுக்கு புண்ணியமா போகும் )

//அவுங்க வீட்டு நாய் நடு ஹால்ல தூக்கு மாட்டி தொங்குது//.

புளு க்ராஸ் ஆள்களை வீட்டுக்கு அனுப்புறேன் //////

இல்லை சார் ,...அந்த நாயிக்கு என் மேல பாசம் அதிகம் , அதுனால என் மேல பளிவரக்கூடாதுன்னு ....என் சாவுக்கு யாரும் காரணம் இல்லைன்னு எழுதி வச்சிடுச்சு

//ஐஸ்மூடி திங்க்பன்னினால்
தெயரும் கம்முனாய் பிரன்டே பிரன்டே//

பாட்டு சூப்பர் அமைச்சரே நீர்
பாடியது தான் thappu
இனி நீர் இப்படி பாடினால் மூக்கு வழியாக மீசையை நுழைத்து
மூளையை குடைந்து விடுவேன் ஜாக்கிரதை!!!!!!!!!////

சாருக்கு எந்த ஊருன்னு சொன்னிங்கன்னா ................. அந்த ஏரியா பக்கம் கூட தலைவச்சு படுக்க மாட்டேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger பாரத்... பாரதி... said...

மங்குனி பாடுவதற்கும், மக்கள் தொகையை குறைக்க அரசு திட்டங்கள் கொண்டு வந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை # மனித உரிமை கழகத்தில் மத்திய அரசு விளக்கம்..////

ஹி.ஹி.ஹி............. அப்படிதான் அறிக்கை குடுக்க சொல்லி இருக்கோம் ....

மங்குனி அமைச்சர் said...

Blogger vinu said...

machi nee paadu மச்சி///

மச்சி வா மச்சி ....இங்க என்னைய ரொம்ப கலாயிக்கிறாங்க ,, வந்து என்னான்னு கேளு ?

மங்குனி அமைச்சர் said...

Blogger பாரத்... பாரதி... said...

//என் பையன் அவனோட புக்கு நோட்டு எல்லாத்தையும் கிழிச்சு போட்டு//

// இந்த ஆளுக்கு புள்ளையா பொறத்ததுக்காக இனி நான் ஸ்கூல் பக்கமே போகமாட்டேன் "//

பயபுள்ள ஸ்கூல் போகாமா இருக்க, என்னாமா திட்டம் போடுது...////

ஹி.ஹி.ஹி............... ரத்தம் அப்படி .............அவுங்க அப்பன் எப்படியோ , அவனும் அப்படியே ??? சேம் பிளட்

மங்குனி அமைச்சர் said...

Blogger TERROR-PANDIYAN(VAS) said...

//அவுங்க வீட்டு நாய் நடு ஹால்ல தூக்கு மாட்டி தொங்குது .//

மச்சி!! உன் வீட்டு ஹால்ல ஒரு நாய நான் அடிச்சி தூக்குல தொங்கவிட போறேன் பாரு.... :))/////

மச்சி ........ நீ உம்ம்ன்னு சொல்லு நானே சூசைட் பன்னிக்கிறேன்.... நீ என் கொலைப் பழிக்கு ஆளாகுற

மங்குனி அமைச்சர் said...

Blogger vinu said...

உன்னையும் பதிவரா மதிச்சு இம்புட்டு பேரு வந்து படிச்சு தலையிலே அடிச்சுகிட்டு சாகுரப்போ உம்மோட பாட்டு மட்டும் என்னத்தை குறைச்சல் நீ பாடு மச்சி; யாரு என்ன சொன்னாலும் நீ கேக்காதே [அப்புடியே கேட்டுட்டா மட்டும் ] நீ பாடு மச்சி;////

எனக்கு ஒரு ரசிகன் ................. இவன் எங்கையோ ஆப்பு வைக்கிற மாதிரியும் இருக்கு , மங்கு பீ கேர்புல்

மங்குனி அமைச்சர் said...

Blogger TERROR-PANDIYAN(VAS) said...

//ரெயின் பேரட்டே ரெயின் பேரட்டே உன் ஐஸை சீத்தேனே
ஐஸ் வழியே ஐஸ் வழியே மீ மையை சீத்தீனே ............ ரெட்ஹனியே ...............
//

இதுக்கு அப்புறம் உன்னை உயிரோட விட்டு வைக்கனுமா? :)///

மச்சி .... எப்படி எனது மதியூகம் ........... பரிசு ஏதாவது குடுப்பியா அதைவிட்டு .............

மங்குனி அமைச்சர் said...

Blogger அமுதா கிருஷ்ணா said...

பையனின் ஐடியா அருமை.////

எப்படான்னு காத்துக்கிட்டு இருந்திருப்பான் போல மேடம்

மங்குனி அமைச்சர் said...

Blogger சே.குமார் said...

தப்பிச்சேன்டா சாமி.
தப்பிச்சேன்டா சாமி.
தப்பிச்சேன்டா சாமி.
தப்பிச்சேன்டா சாமி.
தப்பிச்சேன்டா சாமி.
தப்பிச்சேன்டா சாமி.
தப்பிச்சேன்டா சாமி.
தப்பிச்சேன்டா சாமி.////

அப்படியா ???? இருங்க உங்க பிளாக்குல வந்து பாடுறேன் ......... உங்க மொபைல் நம்பர் பிளீஸ்

மங்குனி அமைச்சர் said...

Blogger sulthanonline said...

அமைச்சரே ஒரு நாய் தூக்குல தொங்குற அளவுக்கு பாடியிருக்கீங்க..! அரண்மனை கி(லி)ளி ராஜ்கிரண் styleல பாடியிருப்பீங்களோ நல்ல வேளை blue croosல இருந்து யாரும் வரல அத நெனச்சு சந்தோஷப்படுங்க..! அவ்வ்வ்வ்/////

அது செத்தாலும் என்னோட உயிரை காப்பாத்திட்டு போயிருக்கு சார் ........... என் சாவுக்கு யாரும் காரணம் இல்லைன்னு லெட்டர் எழுதி வச்சிருக்கு சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger அஞ்சா சிங்கம் said...

உடுங்க பாஸ் எல்லாம் போராம பிடிச்ச பசங்க நீங்க இப்படியே தொடர்ந்து பாடிக்கிட்டே இருங்க அப்பதான் நாட்டுல தீவிரவாதம் கொறயும்.விஜயகாந்த் படம் எடுக்க மாட்டாரு .விஜய் நல்லபடமா நடிப்பாரு. இன்னும் பல மாற்றங்கள் நாட்டுல நடக்கும் ......../////

என் உங்களுக்கு இந்த கொலை வெறி ????

மங்குனி அமைச்சர் said...

Blogger மர்மயோகி said...

மங்குநியாரே..எப்படியோ சிரிக்க வைத்து விடுகிறீர்கள்..ம்ம்...கோ ஆன்..தொடருங்கள்...

அப்புறம் ஏதோ வடை வடைன்னு ஆளாளுக்கு சொல்லிக்கிட்டு திரியுறாங்களே அப்படீன்னா என்ன மங்குநியாரே..?////

ஹி.ஹி.ஹி.........நன்றி மர்மயோகி ................ வடைன்ன என்னான்னு தெரியாதா ? அட ...இருங்க யாருகிட்டயாவது போயி கேட்டு வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்... வெளங்கிருச்சு............////

வாப்பு .......ஆரம்பிச்சிட்டியா ???

மங்குனி அமைச்சர் said...

Blogger கவிதை காதலன் said...

அமைச்சரே.. ரொம்ப அருமையான பாட்டு.. மைக்கேல் ஜாக்ஸனுக்கு அப்புறம் இங்கிலீஷ் பாட்டு எழுதுறதுல உங்கள அடிச்சுக்க ஆளே இல்லையாமே ///

ஹி.ஹி.ஹி........... என்னை இப்படி புகழாதிங்க, எனக்கு புடிக்காது ....... ஆமா கொஞ்சமா புகல்தாவேல்லாம் புடிக்காது .......... ஹி,ஹி,ஹி,,,,,,,,,,

மங்குனி அமைச்சர் said...

Blogger sulthanonline said...

அண்ணன் அஞ்சா சிங்கத்தை ஆதரிக்கிறேன்////

ஒ .............. இதுல கூட்டு வேற சேர்ரின்களா ? ரைட்டு மங்கு ஒடம்ப புண்ணாக்காம் எப்படியாவது வீடு போயி சேன்துருடா

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா பாட்டு எங்கே.....பாட்டு எங்கே.....? உன் பாடலைக் கேட்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே....!////

என்னது மறுபடியும் பாடவா ???? யோவ் என்னை என்கவுண்டர்ல போட்டு தள்ள பாக்குறியா ???

மங்குனி அமைச்சர் said...

Blogger சௌந்தர் said...

நிச்சயம் இவரை போட்டு தள்ளனும்...!////

ஹி.ஹி.ஹி.............. என்ன ஒரு நல்ல மனசு ??? நல்லா இருங்க ............. வேணா உங்களுக்காக இன்னொரு பாட்டு பாடவா சவுந்தர்

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

அயன் படத்துல வர்ர பாட்டையா இன்னும் பாடுறீங்க அமைச்சரே?////

நிஜம்மாவே அதுக்கு அப்புறம் வந்த பாடல் எனக்கு புடிக்கல பண்ணி

மங்குனி அமைச்சர் said...

Blogger sulthanonline said...

பன்னி குட்டி அண்ணா நாங்க கெளம்பி போனதுக்கு அப்புறமா நீங்களும் அமைச்சரும் பாடோ பாடுன்னு தனியா பாடிக்கங்க. அட ஆள விடுங்கப்பா..!///

இம்மம்ம்ம் ............. அந்த பயம் இருக்கட்டும்

மங்குனி அமைச்சர் said...

Blogger மனசாட்சி said...

கழுதைக்கு தெரிமா கற்பூர வாசனை -உடு உடு அமைச்சரே பீல் பண்ணாதே

இதுகேல்லமா என்கவுன்ட்டர் - காலம் ஒருநாள் மாறும்///

சார் .... உண்மையிலேயே உங்களுக்கு தான் சார் மனசாட்சி இருக்கு ............. இவங்கல்லாம் ரசிக்க தெரியாத ரசனை கெட்ட பீபுல்ஸ் சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger வானம் said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உன்னை எல்லாம் இளைஞன் படத்தை தொடர்ந்து அம்பது தடவ பார்க்க வைச்சு கொல்லனும்/////

தீர்ப்புன்னா இதுதான்யா தீர்ப்பு.

என்றா பசுபதி, புட்றா இந்த மங்குனிய..////

ஆமா எங்கட அந்த மங்குனி பரதேசி ....விடாத .புடி......இன்னைக்கு அவன பழி போடுறோம்

மங்குனி அமைச்சர் said...

Blogger வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா பாட்டு எங்கே.....பாட்டு எங்கே.....? உன் பாடலைக் கேட்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே....!
/////

க்க்கும்...வெளங்கிரும்.....////

ஹி..ஹி.ஹி............ உங்களுக்கு என் சார் பொறாமை ......... பண்ணி நீ என் இனமடா

மங்குனி அமைச்சர் said...

Blogger எஸ்.கே said...

அடுத்து நாமெல்லாம் இந்த பாடலை ஆங்கிலத்தில் பாடுவோம்:

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி தாங்காது பூமி!////

பிளடி தமிழ் ....ஐ டோன்ட் நோ டமில் யா ???

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போ சொல்றேண்டா தீர்ப்பு........ யார்ராவன் பிராது கொடுத்தவன, வாங்கடா இங்க, தீர்ப்பு சொல்லும் போது ஓடிப்போனா அப்புறம் இந்த நாட்டாமைக்கு என்றா மருவாதி?////

நான் வேணா ஒரு இங்கிலீசு பாட்டு பாடி கூட்டம் சேக்கவா நாட்டாம சார் ???

மங்குனி அமைச்சர் said...

Blogger எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உன்னை எல்லாம் இளைஞன் படத்தை தொடர்ந்து அம்பது தடவ பார்க்க வைச்சு கொல்லனும்//

உங்க பிளாக்கில் போட்டீங்களே அதுவா? அது நல்ல படமாச்சே!///

அந்த நாதாரிக்கு அது கூட தெரியல பாருங்க ................. அது சிரிப்பு போலீசு இல்லை சிரிப்பு , சிரிப்பு போலீசு

மங்குனி அமைச்சர் said...

Blogger எஸ்.கே said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போ சொல்றேண்டா தீர்ப்பு........ யார்ராவன் பிராது கொடுத்தவன, வாங்கடா இங்க, தீர்ப்பு சொல்லும் போது ஓடிப்போனா அப்புறம் இந்த நாட்டாமைக்கு என்றா மருவாதி?//

நாட்டாமை தீர்ப்பை இங்கிலீசுல சொல்லுங்க!///

ஹா,ஹா,ஹா,............ மாட்டினான் நாட்டாம ............. அதுக்கு இங்கிலீசுன்னா என்னானே தெரியாது ........ இங்கிலீசுன்னா எது புது வகையான சரக்கான்னு கேக்கும்

மங்குனி அமைச்சர் said...

Blogger வானம் said...

அந்தப்பாட்டை ரெக்கார்டு பண்ணி உன் பிளாக்குல கோத்துவிடுய்யா. பதிவுலகத்துக்கே திருஷ்டி கழிஞ்சமாதிரி இருக்கும்.///

அட இது கூட நல்லா இருக்கே ............. ஆனா அப்புறம் என் குரலை கேட்டு ஏதாவது ஏடாகூடம் ஆயிடுச்சுன்னா ???

மங்குனி அமைச்சர் said...

Blogger வானம் said...

//// எஸ்.கே said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போ சொல்றேண்டா தீர்ப்பு........ யார்ராவன் பிராது கொடுத்தவன, வாங்கடா இங்க, தீர்ப்பு சொல்லும் போது ஓடிப்போனா அப்புறம் இந்த நாட்டாமைக்கு என்றா மருவாதி?//

நாட்டாமை தீர்ப்பை இங்கிலீசுல சொல்லுங்க!/////

மங்குனி இங்லிபீசுக்கே இங்கிட்டு பேதி புடிங்கிருச்சு. இதுல பன்னிக்குட்டியோட இங்கிலிபீசு வேறயா. இதுக்கு நான் பன்னிக்காய்ச்சல் வந்தே செத்துப்போயிருக்கலாம்.////
ஆமா பன்னிக்கு காய்ச்சல் வந்த நீங்க ஏன் சாகனும் ??? # டவுட்டு

மங்குனி அமைச்சர் said...

Blogger மாணவன் said...

"டேய்....என்கவுன்டர்ல போட்டு தள்ளிடுவேன் ஜாக்கிரத"

தப்பே இல்ல....ஹிஹிஹி////

ஓ........ அப்ப போலீசுல போட்டு கொடுத்தது நீங்கதானா ???? இருக்கட்டும் , இருக்கட்டும் ........... கவனிச்சுக்கிர்றேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தப் பாட்டுதான்டா குஞ்சுக்கவுண்டரோட பேமிலி பாட்டு, அதுனால மங்குனிதான் குஞ்சுக்கவுண்டரோட ஒரே வாரிசுன்னு தீர்ப்புச் சொல்றேன்..... குஞ்சுக்கவுண்டரோட ஒரே சொத்தான இந்த நைஞ்சு போன சொம்பு, இனிமே மங்குனிக்குத்தான் சொந்தம்..... பஞ்சுக் கவுண்டரு, இனிமே சொம்பு வெவகாரத்துல தலையிடப்படாது...... இதுதாண்டா என்ற தீர்ப்பு........... எலேய் சின்றாசு கட்றா வண்டிய.... அடுத்த பஞ்சாயத்துக்கு போகோனும்......!////

எச்சூச்மி மிஸ்டர் நாட்டாமை .......... வாட் இஸ் மீன் பை சொம்பு ??? ஐ டோன்ட் நோ டமில் யார் ..... அப்புறம் இந்த வண்டிய கட்டிட்டா எப்படி போகமுடியும் ???

மங்குனி அமைச்சர் said...

Blogger வானம் said...

நாட்டாம, தீர்ப்ப மாத்திச்சொல்லு///

மாத்தின்னா எப்படி ரிவர்சுலையா ??? இல்லை வேற மரத்தடில உட்கார்ந்தா ?

மங்குனி அமைச்சர் said...

Blogger Chitra said...

இது ஒரு தப்பா சார் ............. நான் இங்கிலீசு பேசுறது , பாடுறத பாத்து எல்லாரும் பொறாம புடிச்ச பேட் பீபுளா இருக்காங்க சார் .


......உங்கள் ப்லாக் ல, கீழே ஒரு குழந்தை - ஒரு சுத்தியலை வச்சு தலையில அடிச்சுக்குதே, அந்த சுத்தியலை கொஞ்சம் இரவல் தர முடியுமா, ப்ளீஸ்? முடியல....////

ஹி.ஹி.ஹி........... கேட்டுப் பாருங்க மேடம் , நான் கேட்டா தரமாட்றான்

மங்குனி அமைச்சர் said...

Blogger எஸ்.கே said...

//எலேய் சின்றாசு கட்றா வண்டிய.... அடுத்த பஞ்சாயத்துக்கு போகோனும்......!//

ஏனுங்க நாட்டாமை! சின்றாசுக்கு வண்டிய கட்டி வைக்கிறீங்க! ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டி வைக்கப்புடாதா?///

எஸ்.கே. சார் .........நாட்டாமைக்கு அந்த அளவுக்கு கூறு வாறு இருக்குன்னு நினைக்கிறிங்களா ???

மங்குனி அமைச்சர் said...

Blogger வானம் said...

இது தீர்ப்பு இல்லய்யா. மங்குனிக்கு வைக்கிற ஆப்பு.///

உங்களுக்கு உச்சி குளுந்து போயி சந்தோசமா இருக்குமே ???

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே...

இதே ரேஞ்சுல போச்சுன்னா.. நிச்சயமா உங்க பிளாக்க படிக்கறவங்க ஆளுக்கு ஒரு துப்பாக்கியோட உங்களை தேடப்போறாங்க..

சொல்லிப்புட்டேன் . . ஆமா..

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
நாட்டாம, தீர்ப்ப மாத்திச்சொல்லு//////

படுவா ராஸ்கோலு, இந்தத் தீர்ப்ப எத்தன தடவய்யா மாத்துறது? அப்புறாம் இந்த நாட்டாமைக்கி என்றா மருவாதி?///

நாட்டமா சார் , நாட்டாம சார் .........பேசாம இனிமே தீர்ப்பு சொல்லும் போது ஒரு 5 ஆப்சன் குடுத்திடுங்களேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger வானம் said...

மங்குனி வச்சுக்கப்போற நைஞ்சு போன சொம்ப குஞ்சுக்கவுண்டர் வைச்சுருந்தாரு.
அப்ப குஞ்சுக்கவுண்டர் வச்சுருந்த............?????????? ////

கோழிக்குஞ்ச தான கேக்குறிங்க ???

மங்குனி அமைச்சர் said...

Blogger சேட்டைக்காரன் said...

அல்லாருக்கும் கடுப்பு மங்குனி! எங்கே இந்தப் பாட்டுகாக ஆஸ்கார் அவார்டை உங்களுக்குத் தூக்கிக் கொடுத்திருவாங்களோன்னு பொறாமை. நீங்க பாட்டுக்கு கன்டின்யூ பண்ணுங்க உங்க இம்சையை, அதாவது இசையை...! :-)

//ஐஸ்மூடி திங்க்பன்னினால்
தெயரும் கம்முனாய் பிரன்டே பிரன்டே//

நல்லாத்தானே இருக்கு? என்னவாம்...?///

வா சேட்ட, இந்த பயபுள்ளைக எல்லாம் சேந்து என்னைய ரொம்ப டிஸ்கரேஜ் பண்ணுறானுக ........... தக்காளி இவனுக எல்லாம் மூக்குமேல விரல வக்கிர மாதிரி நான் பெரிய்ய விஞ்ஞானி ஆகிகாற்றேன் பாரு சேட்ட

மங்குனி அமைச்சர் said...

Blogger வானம் said...

அக்கார்டிங் டு இ பி கோ செக்சன் 420 ச்சீ ச்சீ(CC), தட் நைஞ்சு போன சொம்பு வில் ஆல்சோ பி சேர்டு பை நாட்டாமை பன்னிக்குட்டி ராம்சாமி.///

ஏன்யா நாட்டாமையா திட்டுற ?? அதுவும் கெட்ட வார்த்தைல ???

மங்குனி அமைச்சர் said...

Blogger Porkodi (பொற்கொடி) said...

பையன் பெரியாளா வருவான் போல.. :))///

ஆமாங்க மேடம் இப்பவே என் சோல்டர் அளவுக்கு வளந்துட்டான் ......... நீங்க ஹைட்டதான கேட்டிங்க ??

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வானம் said...
/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வானம் said...
அக்கார்டிங் டு இ பி கோ செக்சன் 420 ச்சீ ச்சீ(CC), தட் நைஞ்சு போன சொம்பு வில் ஆல்சோ பி சேர்டு பை நாட்டாமை பன்னிக்குட்டி ராம்சாமி./////

அதுக்கு வேற சொம்பு இருக்கு.......!/////

நாட்டாம, அது இங்கிலீசுல சொன்ன தீர்ப்புய்யா, நீ நெனக்கிற மாதிரியெல்லாம் மாத்தமுடியாது./////

இங்கிலிபீசுல சொல்லிட்டா இந்த நாட்டாமைக்கி தெரியாதுன்னு நெனச்சிட்டியா, வெளக்கெண்ண, எலேய் சின்றாசு அந்த சாட்டைய் எடுத்துட்டு வா.... இங்க தீர்ப்ப மாத்திச் சொல்ல வேண்டியிருக்கு........!///

தீர்ப்ப மாத்தி சொல்ல வாயி தான வேணும் ........ சாட்டை எதுக்கு ?? # டவுட்

மங்குனி அமைச்சர் said...

Blogger வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
எல்லாரும் வழிவிடுங்க... வழிவிடுங்க.... வழிவிடுங்க... குஞ்சுக்கவுண்டர் வர்ரார்.... வழிவிடுங்க.... வழிவிடுங்க...... !////

யோவ். நிக்கிறதே ரெண்டு பேருதான். இதுக்கு ஏன் இப்படி கூவுற?////

இதுக்கு முன்னாடி கோர்ட்டுல டவாலியா வேலை செஞ்சிக்கிட்டு இருந்தாரு இந்த நாட்டாம .......... அந்த பழக்க

மங்குனி அமைச்சர் said...

Blogger வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
எல்லாரும் வழிவிடுங்க... வழிவிடுங்க.... வழிவிடுங்க... குஞ்சுக்கவுண்டர் வர்ரார்.... வழிவிடுங்க.... வழிவிடுங்க...... !////

யோவ். நிக்கிறதே ரெண்டு பேருதான். இதுக்கு ஏன் இப்படி கூவுற?////

இதுக்கு முன்னாடி கோர்ட்டுல டவாலியா வேலை செஞ்சிக்கிட்டு இருந்தாரு இந்த நாட்டாம .......... அந்த பழக்க தோஷம் தான்

வெட்டிப்பேச்சு said...

//பட்டாபட்டி.... said...
சரி விடு.. மேட்டருக்கு வா.. கடைசியா நாய் பிரியாணி எப்படி இருந்துச்சு...?

காரம் கொஞ்சம் தூக்கலோ? ///

????!!!!;)))

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

மங்குனி

இதையும் கொஞ்சம் பாருங்க

http://arunprasathgs.blogspot.com/2010/06/blog-post_29.ஹ்த்ம்ல்////

அருண் நீங்க சொல்றதுக்கு முன்னாடியே படிச்சுட்டேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger வானம் said...

////இங்கிலிபீசுல சொல்லிட்டா இந்த நாட்டாமைக்கி தெரியாதுன்னு நெனச்சிட்டியா, வெளக்கெண்ண, எலேய் சின்றாசு அந்த சாட்டைய் எடுத்துட்டு வா.... இங்க தீர்ப்ப மாத்திச் சொல்ல வேண்டியிருக்கு........!
/////

அதான் போன பஞ்சாயத்துலயே முன் அபராதமா ஒன்னேமுக்கா ரூபா கட்டிட்டனே. மறந்துபோச்சா? ////

யோவ் , அதுல தான்யா போற வாரம் புல்லா சரக்கு அடிச்சு நம்ம நாட்டாம

மங்குனி அமைச்சர் said...

Blogger சி.பி.செந்தில்குமார் said...

english poet? m m i கான்ட்///

சும்மா ஒரு வாட்டி கேளுங்க செந்தில் சார் ............ பிரீ தான் .........ஆனா பின் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது

மங்குனி அமைச்சர் said...

Blogger வானம் said...

யோவ் பன்னிகுட்டி, நீதான இதுக்குமுன்னாடி பஞ்சுக்கவுண்டருக்கு பஞ்சு சப்ளை பண்ணிக்கிட்டுருந்த.
இப்ப .....? ///

யோவ் என் இப்படி ஏடாகூடமா கேள்வி கேக்குற ??? நம்ம பண்ணி என்ன வெளியில சொல்றதுமாதிர் கவுரவமான வேலையா இப்ப பாத்துக்கிட்டு இருக்கு ?? சும்மா சத்தம் போட்டு மானத்த வாங்காத

மங்குனி அமைச்சர் said...

Blogger vinu said...

yow vootu onaru engyaaaa ////


எங்கையாவது லேடிஸ் காலேஜ் வாசல்ல பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பாரு

மங்குனி அமைச்சர் said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...

கொல்லாம விட்டது, பாக்கியம் போங்க...........////

நீங்க எங்க வீட்டு பக்கத்து வீட்டு ஆளுக நான் கொள்ளாம விட்டதா தான சொல்றிங்க ????

மங்குனி அமைச்சர் said...

Blogger இந்திரா said...

தொர இங்கிலிபீசெல்லாம் பேசுது..
காலக்கொடுமைடா சாமி..////

நோ பேச்சு .......... ஒன்லி சாங் ............. வி அர் பேசிக்கல்லி பிரம் எடக்குநாட்டாம் பட்டி

மங்குனி அமைச்சர் said...

Blogger சங்கவி said...

மங்குனி கலக்கல்...///

ரொம்ப நன்றி சங்கவி சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger கக்கு - மாணிக்கம் said...

பேசாம மன்குனிய நம்ம பார்லிமெண்டுக்கு எம்.பி யா அனுப்பி வைக்கோணும். சண்டை போட்டு சபைய ஒத்திவேக்காமா மங்குனி பாட்டு பாடினா எல்லா பன்னாடைகளும் காண்டீனுக்கு ஓடிபோயிடும்.////

அப்ப கொலைகள பெரிய்ய லெவல்ல பன்னச்சொல்ரிங்க ??? ரைட்டு .........

மங்குனி அமைச்சர் said...

Blogger logu.. said...

innum sagaliya nee? ///

எங்க இவிங்க கிட்ட ஒழுங்கா ஒரு கொலை கூட பண்ண முடியல அப்புறம் எங்கிட்டு தற்கொலை பண்ணிக்கிறது

மங்குனி அமைச்சர் said...

Blogger இரவு வானம் said...

பாட்டு சூப்பர் அமைச்சரே, அடுத்து என்ன பாட்டு என்பதை கேட்க ஆவலாக உள்ளேன்////

அட ...உங்களுக்கு அசாத்திய தைரியம் தான் போங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger vinu said...

manguni rocks ///

யோவ் என்னைய ஏன்யா திட்டுற ???

மங்குனி அமைச்சர் said...

Blogger vinu said...

சரி சரி யாரையும் காணோம் விவரமா வடையை எடுத்துட்டு ஓடிடணும்///

என்னா ஒரு வில்லத்தனம்

மங்குனி அமைச்சர் said...

Blogger *VELMAHESH* said...

ஏதோ வடை வடைன்னு ஆளாளுக்கு சொல்லிக்கிட்டு திரியுறாங்களே அப்படீன்னா என்ன மங்குநியாரே..?////

சார் ஊருக்கு புதுசா ??? இருங்க கொஞ்ச நாள்ல நீங்களே கண்டுபுடுச்சிருவிங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger vinu said...

iiiiiiiiiiiiiya me 75thu ///

போதும் , போதும் ........... எத்தின வடை ........... பின்னாடி ஏதாவது பிரச்சனை ஆகிடப்போகுது ...இவனுக வடைல ஏதாவது கலந்து வச்சிருப்பானுக

மங்குனி அமைச்சர் said...

Blogger vinu said...

அப்பாடி எம்புட்டு குஷ்டம்டா சீ இது கஷ்டம்டா////

என்ன ஒரு திறமை , புத்திசாலித்தனம் ............. வாவ் ........... வெறி குட்

மங்குனி அமைச்சர் said...

Blogger இம்சைஅரசன் பாபு.. said...

மங்குனிக்கு மூளை கலங்கி போச்சு .....////

அட நீங்க வேற .......நான் ஸ்கூல்ல படிக்கும் போதே இப்படித்தான் எல்லாரும் சொன்னாங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger வெங்கட் said...

மைக்கேல் ஜாக்ஸன் சாகறதுக்கு
முன்னாடி ஐ.பாட்ல கேட்ட பாட்டு
மாதிரியே இருக்கு..

ஒருவேளை. இது தான் அதா..?!! ////

பாவம் அவரே சாகக்கிடக்காறு அவரு முன்னாடி நீ என் போயி பாட்டெல்லாம் கேக்குற ? அவருக்கு மனசு சங்கடப்படாது ???

மங்குனி அமைச்சர் said...

Blogger கோநா said...

மங்குனி அமைச்சரே அப்டியே இந்த followers க்காக ஒரு பாட்டு பாடுங்களேன். ///

ஆஹா என்ன ஒரு ரசனை ???


//உன்னையெல்லாம், காச வாங்கிட்டு வெளிய நடமாட விட்டுருக்காங்க பாரு, அந்த போலிச இந்த மொக்கையெல்லாம் கேட்க வைக்கணும், அப்பத்தான் அவங்களுக்கு தெரியும் மத்தவங்களோட கஷ்டம்.////

அய்யோ என்னா ஒரு வில்லத்தனம் ???

மங்குனி அமைச்சர் said...

Blogger பட்டாபட்டி.... said...

சரி விடு.. மேட்டருக்கு வா.. கடைசியா நாய் பிரியாணி எப்படி இருந்துச்சு...?

காரம் கொஞ்சம் தூக்கலோ?///

நீ தாண்டா என் செல்லம் ..........கரக்ட்டா மேட்டருக்கு வந்திட்ட பாரு ??? எங்க பட்டா அதுக்கு முன்னாடியே பண்ணி வந்து நாயா இழுத்திட்டு போயிடுச்சு

மங்குனி அமைச்சர் said...

Blogger சாருஸ்ரீராஜ் said...

ஒன்னும் சொல்றதுக்கு இல்லை வர வர அமைச்சரோட ரவுசு தாங்க முடியலை ....////

ரொம்ப நன்றிங்க சாருஸ்ரீராஜ்

மங்குனி அமைச்சர் said...

Blogger அஞ்சா சிங்கம் said...

இங்க மங்குனி மன்குனின்னு ஒரு மானஸ்தன் இருந்தான் ...
அவர காணும் அதான் தேடிக்கிட்டு இருக்கேன் ...........///

என் சார் அந்த பன்னாடைய போயி தேடுறிங்க .....விடுங்க எங்கையாவது மானம் கெட்டுப்போயி பிகருங்க கூட சுத்திக்கிட்டு இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

Blogger தினேஷ்குமார் said...

ஹையோ ஹையோ ஏண்டா கம்முன தமிழ் பர்கட் ஆகிடும் போல ////

சார் உங்களுக்கும் இங்கிலீசு நல்லா வருது .......... நீங்களும் பாடலாம்

மங்குனி அமைச்சர் said...

Blogger ♔ℜockzs ℜajesℌ♔™ said...

போலீஸ் இன்னுமா என்கவுன்டர்ல போடல? என்னங்கைய போலீஸ் அவங்க ? , இந்த மாதிரி குற்றதுக்கெல்லாம் பேசவே கூடாது இந்நேரம் மங்குனியா போட்டு தள்ளி இருக்கணும் . . ./////

என்னா கொலைவெறி ????

மங்குனி அமைச்சர் said...

Blogger Lakshmi said...

உங்களுக்கு இங்கிபிலீசெல்லாம் கூட வருமா?///

ஹி.ஹி.ஹி............ எங்க ஊருல வயல்ல நாத்து நாடும் போது லேடிஸ் எல்லாம் பாடுவாங்க , அப்படியே நானும் கத்துக்கிட்டேன் மேடம்

மங்குனி அமைச்சர் said...

Blogger தம்பி கூர்மதியன் said...

ஐயோ.!! ஒரு விஞ்ஞானிய என்கவுன்டர் போட பாத்திருக்காங்களே.. என்ன ஒரு அருமையான மொழியாக்கம்.. நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா.. பின்றார்பா பின்றார்பா...////

ஆஹா....... தம்பி கூர்மதியன் ........... சே... உங்க பாசத்த நினைச்சா .............. என்னால பேசவே முடியல கண்ணு எல்லாம் கலங்கிப் போச்சு

மங்குனி அமைச்சர் said...

Blogger ஹேமா said...

மொழிபெயர்ப்பு அருமை.ஏன் எல்லாரும் உங்களைத் திட்டுறாங்க !////

நல்லா கேளுங்க மேடம் ........... பிளடி ஸ்டுப்பிட் நான்சென்ஸ் இந்த பயலுகளுக்கு இங்கிலீசு நாலேஜே இல்லைங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

Blogger வெறும்பய said...

அடப்பாவி மக்கா.. அந்த போலீஸ் காரனுங்க உன்னை சும்மாவா விட்டுகிட்டு போனாங்க... அவனுங்களா உதைக்கணும் முதல்ல.. அப்புறம் மிதிக்கணும் உன்ன...////

ஆஹா.....ஒரு குரூப்பா தான்யா கிளம்பி இருக்காங்க .......... மங்கு எஸ்கேப்

மங்குனி அமைச்சர் said...

Blogger ரொம்ப........அப்பாவி ....... said...

1947 க்கு முன்னால நீ இருந்திருந்தினா நீ ஒருத்தனே போதும், இங்கிலிஷ்காரன் ஓடியிருப்பான்/////

ஆனாலும் நீங்க ரொம்ப, ரொம்ப , ரொம்ப ............. அப்பாவியா இருக்கீங்க

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே...

இதே ரேஞ்சுல போச்சுன்னா.. நிச்சயமா உங்க பிளாக்க படிக்கறவங்க ஆளுக்கு ஒரு துப்பாக்கியோட உங்களை தேடப்போறாங்க..

சொல்லிப்புட்டேன் . . ஆமா..////


ஹி.ஹி.ஹி........... அவ்ளோ துப்பாக்கிகள வச்சிக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன் ............. உங்களுக்கும் கொஞ்சம் துப்பாக்கிகள் தர்றேன்

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா!!.. இந்தமாதிரி 1947க்கு முன்னாடியே பாடியிருந்தா, வெள்ளைக்காரன், சுதந்திரத்தை கொடுத்துட்டு சொல்லாம கொள்ளாம ஓடியிருப்பானே :-)))

அன்புடன் அருணா said...

எங்க டியூஷன் போறீங்க???அட்ரெஸ் குடுங்க!

Ram said...

//ஆஹா....... தம்பி கூர்மதியன் ........... சே... உங்க பாசத்த நினைச்சா .............. என்னால பேசவே முடியல கண்ணு எல்லாம் கலங்கிப் போச்சு
//

இதெல்லாம் நோட் பண்ணாதிங்கப்பா நோட் பண்ணாதீங்கப்பா... நீங்க அமெரிக்கா போனீங்கன்னா உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு.. எனக்கு இனி டவுட்டு தான்..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

மில்க்கும் ப்ருட்டும் ஹேண்டில் ஏந்தி
பவள மௌத்தில் லாபிங் ட்ராப்பிங்
கோல பிகாக் போல் கம்வாயே
பவள கொடியே ஐ மலர்வாயே...

சாய்ராம் கோபாலன் said...

// இது ஒரு தப்பா சார் ............. நான் இங்கிலீசு பேசுறது , பாடுறத பாத்து எல்லாரும் பொறாம புடிச்ச பேட் பீபுளா இருக்காங்க சார் .//

என்னவொரு பீலிங் ? வாஸ்தவம் dhaan. ப்ளேடி people