எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, March 23, 2010

பேருந்தில் ( vs சைக்கிள்) காதல் , தொடர் பதிவு

முஸ்கி : பேருந்தில் காதல் - தொடர் பதிவுக்கு அழைத்த பிரபாகருக்கு நன்றி. அப்புறம் தலைப்பே பேருந்து காதல் என்பதால் கல்லூரியில் நடந்த விசயங்களை தவிர்த்து பேருந்தில் நடந்தவைகளை மட்டுமே எழுதயுள்ளேன்.

மணி 9 :05 , இன்னும் 5 இல்லாட்டி 10 நிமிடத்தில் பஸ் கிராஸ் ஆகும். கிளம்பி ரெடியாகி தலை சீவ ஆரம்பிப்பேன். அந்த பஸ் எங்கள் வீட்டு சந்தை கிராஸ் செய்யும் வரை தலசீவிகிட்டே........ தான் இருப்பேன்.
"அது எங்க காலேஜ் லேடிஸ் பஸ்" .
2 அல்லது 3 வினாடிகளில் எங்கள் வீட்டு சந்தை கிராஸ் செய்துவிடும் அதற்குள் நாங்கள் இருவரும் கண்டுகொள்வோம். சில நேரம் ஜன்னலோர சீட்ல உட்கார்து இருப்பா . பெரும்பாலும் நின்று கொண்டுதான் வருவாள் , மிகசரியாக என் வீட்டை கடக்கும் போது குனிந்து ஜன்னல் வழியாக பார்த்து லேசாக சிரிப்பா பாருங்க , என் உச்சி மண்டைல (அப்பவே) கிர்ருங்கும்.

பஸ் போன 5 வது நிமிடம் நான் என்னோட டூ வீலர் (அதாங்க சைக்கிள் ) எடுத்திட்டு காலேஜ் கிளம்பிடுவேன். கூடவே சிவா , என் பிரண்டு எப்பவும் ஒன்னாதான் சுத்துவோம் . இப்ப அந்த நாதாரி திருச்சி "RANE "- ல ஆணிபுடுங்கிட்டு இருக்காரு. மழை பெய்தால் எங்களுக்கு ரொம்ப கொண்டாட்டம் கண்டிப்பா நனைந்திடுவோம்.

என் வீட்டு பக்கத்து வீட்டு அண்ணன் ஒரு டிரைவர் , சில நேரம் காலேஜ் ஜென்ட்ஸ் பஸ்ல வருவாரு , சிலநேரம் லேடீஸ் பஸ்ல வருவாரு.

அன்று காலேஜ் விடும்போது சரியான மழை, எங்களுக்கு ஒரே குசி , புக்ஸ் எல்லாம் பஸ்ல வர்ற பிரண்டு கிட்ட குடுத்திட்டு வழக்கம் போல நனைந்து கொண்டே சைக்கிள்ள கிளம்பினோம்.

பின்னாடி பாத்த லேடீஸ் பஸ் , டிரைவர் நம்ம அண்ணன்....... , அன்னைக்கு கிட்ட தட்ட 1 .5 கிலோ மீடர் தூரத்துக்கு பஸ்சுக்கு வழி விடாமல் சைக்கிள் வேகத்தில் வழிநடத்தி சென்றோம். நம்ம அண்ணாச்சியும் சிரிச்சுகிட்டே எங்கள ஓவர் டேக் பண்ணாம எங்க சைக்கிள் பின்னாடியே ஸ்லோவா பஸ்ஸ ஓட்டிட்டு வந்தார்.

இத பாத்த முன்சீட்ட்ல இருந்த பொண்ணுக நம்ம ஆளுக்கு சேதி அனுப்பி உடனே நம்ம ஆளையும் முன்னாடி வர வச்சுடாங்க , அப்புறம் என்னா....... அன்னைக்கு ஈவினிங் "இதயத்தை திருடாதே" (பிரபாகர் சார் சேம் பிளட் ) படம் பாத்துட்டு நைட்டு புல்லா மொட்ட மாடியில மல்லாக்க படுத்துகிட்டு வானத்த பாத்து கவித பாடிகிட்டு......... ஒரே லவ் மூடு தான்.

டுஸ்கி: இப்ப பஸ் vs சைக்கிள் சேசிங் .....

ஈவினிங்க்ள காலேஜ் விட்டு நேரா ரயில் வே கிராஸ் பக்கத்துல வந்து நம்ம ஆளு பஸ்சுக்காக வெயிட் பண்ணுவோம், அங்க இருந்தது தான் சேசிங் தொடங்கும் , பஸ்ஸ போகவிட்டு ஊருக்குள்ள முதல் புதூர் ஸ்டாப்ல பஸ்ஸ ஓவர் டேக் பண்ணுவோம் ,(கரக்டா நமக்காகவே ரைட்சைடு ஜன்னல் ஓரம் உட்காந்துகுவா) , அப்ப நம்ம ஆள்ட்ட இருந்து ஒரு லுக், ஒரு சிரிப்பு கிடைக்கும், அடுத்து பஸ்ஸ முன்னாடி விட்டு அடுத்து அரண்மனை ஸ்டாப், ஒரு ஓவர் டேக் , அங்க ஒரு லுக், ஒரு சிரிப்பு , அடுத்து பெருமாள் கோவில் , அஞ்சுராந்தால் , போலீஸ் ஸ்டேசன் என எல்லா ஸ்டாபிலும் ஒரு ஓவர் டேக் , ஒரு லுக், ஒரு சிரிப்பு அடுத்து அவ இறங்க போற பூக்கடை ஸ்டாப் அங்க பஸ்சுக்கு முனாடியே போய் வெயிட் பான்னுவோம் , பஸ்ச விட்டு இறங்கிய உடன் நம்மள பாத்து ஒரு சிரிப்பு சிரிப்பா பாருங்க................ , அந்த சிரிப்பு மறுநாள் காலை 9 :10 வரைக்கு தாங்கும் .

சில நாள் ஈவினிங்க்ள அவளுக்கு தெரியாம லெப்ட் சைடுல பஸ்ஸ சேஸ் பண்ணுவோம் , அப்ப அவ ஒவ்வொரு பஸ்ச்டாபிளையும் நம்மள தேடுவா பாருங்க ? அவ தேடுறத பாத்தா நமக்கு மனசு வலிக்கும்.


"பஸ் டே" கொண்டாட்டம் இது ரொம்ப நல்லா இருக்கும் . அன்னைக்கு மட்டும் மூணு ஜென்ட்ஸ் பஸ் , ரெண்டு லேடிஸ் பஸ் எல்லாம் ஒன்னா வரிசையா ஊர்வலமா போவோம். ஊரே ஜே... ஜே...ன்னு (அட இது அந்த ஜே.ஜே இல்லைங்க ) இருக்கும். பசங்க எல்லாம் கலர் பொடி தூவிக்கிட்டு செம ஜாலியா இருக்கும் ,பொண்ணுகளும் அவுங்க பஸ்சுக்குள்ளே கலர் பொடி பூசிப்பாங்க . ஆனா ரெண்டு லேடீஸ் பஸ்சுக்கும் லெக்சரர்ஸ் வோட பயங்கர எஸ்காட் டீம் இருக்கும் , லேடீஸ் பஸ் பக்கமே பசங்கள விடமாடாக . தேர்டு இயர்ல அப்படிதான் அவ்வளவு எஸ்காட் டீமுக்கு நடுவிலும் நைசா போய் ஜன்னலோரம் உட்காந்து இருந்த நம்ம ஆளுமேல கலர் பொடி தூவினே பாரு, அவ பயத்திலையும், பதட்டதிலையும் அழுதுட்டா , அப்புறம் வெட்கமா ஒரு சிரிப்பு சிரிச்சா பாருங்க ............ அத நெனச்சா எனக்கு இப்ப கண்ணு கலங்குதுங்க.
(மேலே செய்த குறும்புகளுக்காக காலேஜ்ல என்ன பனிஸ்மென்ட் தந்தாங்கன்னு சொல்ல வேண்டியதில்ல , ஏன்னா இது காதலுக்காக மட்டுமே இந்த தொடர் பதிவு , ரைட்டா ?)

டிஸ்கி : அப்புறம் அந்த காதலோட முடிவு என்னாகிறத உங்களுக்கு சொல்லமுடியாது , ஏன்னா அந்த முடிவு பஸ்ல நடக்கல .......................................................


கிஸ்கி : பேருந்தில் காதல் செய்த அனைவரும் இதை தொடரலாமே............

94 comments:

ஜெய்லானி said...

//டிஸ்கி : அப்புறம் அந்த காதலோட முடிவு என்னாகிறத உங்களுக்கு சொல்லமுடியாது , ஏன்னா அந்த முடிவு பஸ்ல நடக்கல //

முதுகில நாலும்., கன்னத்தில இரண்டும், தலையில் ஒன்றுமாக முடிந்தது. சுபம்

ஜெய்லானி said...

இப்பவும் வடை எனக்கா!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நீ பெண்கள்/டிரைவர் மனதை புண்படுத்தியதால்.. என்னுடைய
கருத்தை பதிக்க விரும்பவில்லை.

தனிமனித தாக்குதலை தவிர்...

ஜெய்லானி said...

அந்த ஏன்ஜல் இப்ப என்ன பன்னுது பாஸ் ?

ஜெய்லானி said...

பட்டு, ஹ..ஹ... மன்னிப்பு கேட்டாலும் விடரதா இல்ல ?

ஜெய்லானி said...

//தனிமனித தாக்குதலை தவிர்...//

அப்ப நா கழண்டுக்க வா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ஜெய்லானி
அப்ப நா கழண்டுக்க வா?
//


எனது கருத்தை உங்கள் மேல் திணிக்க நான் யார்?..
நல்லவர் கெட்டவர் யார் என பார்த்து.. நல்ல முடிவை எடுக்ப்பது
அவரவர் விருப்பம்..

மழை பொய்தால் வறட்சி..
இல்லையென்றால் வெள்ளம்..

நீங்கள் , குடையை பிடித்தோ, படக்கில் ஏறியோ தப்பிப்பது அவரவர் சாமார்தியம்..
வல்லவனுக்கு.. புல்லும் ஆயுதம்..
ஆனால் புல்லுக்கு வல்லவன் ஆயுதம் இல்லை..
சரி.. மூச்சு முட்டுது..
நன்றி வணக்கம்

பிரபாகர் said...

பஸ் சைக்கிள் சேசிங், சைக்கிள் பஸ் சேசிங் என சும்மா பின்னி பெடலெடுத்திருக்கீங்க!

அப்புறமென்ன லவ் சக்ஸஸ் தான் எங்களுக்கு தெரியாதா? (அதாங்க, காதலோட தோல்விதானே, லவ்வோட சக்ஸஸ்...)

பிரபாகர்.

ஜெய்லானி said...

//எனது கருத்தை உங்கள் மேல் திணிக்க நான் யார்?..
நல்லவர் கெட்டவர் யார் என பார்த்து.. நல்ல முடிவை எடுக்ப்பது
அவரவர் விருப்பம்..//

அடப்பாவி ஒரே ராத்திரியில் தலைகீழ் ஞானேதயம் .!! இருந்தாலும் வழிமொழிகிரேன்..நன்றி வணக்கம்

பிரபாகர் said...

பட்டாபட்டி! என்னாச்சி நண்பா! ஏனிந்த கோபம்!

பிரபாகர்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பிரபாகர் said...
பட்டாபட்டி! என்னாச்சி நண்பா! ஏனிந்த கோபம்!
பிரபாகர்...
//

நான் திருந்திவிட்டேன்.. கூவுகிறார் பட்டாபட்டியார்..

ஜெய்லானி said...

// பிரபாகர் said...பட்டாபட்டி! என்னாச்சி நண்பா! ஏனிந்த கோபம்!//

ஒன்னுமில்ல சார் நாலு நாலைக்கி மவுனவிரதம், நேர்த்திகடன் .

மங்குனி அமைச்சர் said...

டேய் நண்பர்களா கொஞ்சம் சீரியஸ் பிளீஸ் டா

சைவகொத்துப்பரோட்டா said...

கதை நல்லா இருக்கு, முடிவ சொல்லுங்க.

settaikkaran said...

அண்ணே! இதை வச்சுத்தான் சிம்பு-சோனியா அகர்வால் நடிச்சாங்களே ஒரு படம், அதை எடுத்தாங்களா? சூப்பர்!!!!!!

vasu balaji said...

நல்லாருக்கு கதை போங்க:)

அந்த சிவா said...

அடே நாயே நான் ரானே-லே ஆணியா புடுங்குறேன் ? இந்த கத முடிவு எனக்கு மட்டும்தான் தெரியும் பாது நடந்துக்க - பட் உன் நேர்மை எனனக்கு பிடிசுருக்கு - என்னமா நாபகம் வச்சுருக்க - நண்பர்களே இவன் ஒரு டூபாகூர் - இப்படிக்கு பாவப்பட்ட சிவா.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@மங்குனி அமைச்சர் said...
டேய் நண்பர்களா கொஞ்சம் சீரியஸ் பிளீஸ் டா
//

அன்னைக்கு என்னாடான, எட்டாம் கிளாஸ் பெயிலுனு சொன்னே..
இப்ப சைக்கிள் கேப்ல காலேசு..பஸ்னு அடிச்சு வீசறயே..
அடுத்த பதிவுல உன்னோட காலேஸ் மார்க் ஷீட்ட ஸ்கென் பண்ணிப் போடு..

ச்சே.. உட்டா டாக்டரு.. வக்கீலுக்கு படிச்சேனு பீலா உடுவானுக...

ஜெய்லானி said...

//ச்சே.. உட்டா டாக்டரு.. வக்கீலுக்கு படிச்சேனு பீலா உடுவானுக...//

இது என்ன சட்ட சபையா ? கொடைகானல் மார்க் ஷீட்ட கேக்க ?

பட்டு சார் நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ஜெய்லானி said...
இது என்ன சட்ட சபையா ? கொடைகானல் மார்க் ஷீட்ட கேக்க ?
பட்டு சார் நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு!!!
//

இல்லாட்டி மகளி அணிய கட்டுக்கோப்பா வச்சுக்க முடியுமா ஜெய்லானி..
ஆமா.. உம்ம ப்ளாக்ல என்னமோ தண்ணி..கிண்ணினு ஓடுதே..

ஏதாவது சரக்கடிக்கிற சமாச்சாரமா?

ஜெய்லானி said...

//ஆமா.. உம்ம ப்ளாக்ல என்னமோ தண்ணி..கிண்ணினு ஓடுதே..

ஏதாவது சரக்கடிக்கிற சமாச்சாரமா?//

தண்ணியா அப்டின்னா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ஜெய்லானி said...
தண்ணியா அப்டின்னா?
//


அட செல்லம்..
அவ்வளவு நல்ல பையனா நீ?..
சொல்லவேயில்ல..

பனித்துளி சங்கர் said...

//////////டிஸ்கி : அப்புறம் அந்த காதலோட முடிவு என்னாகிறத உங்களுக்கு சொல்லமுடியாது , ஏன்னா அந்த முடிவு பஸ்ல நடக்கல .......................................................////////


அதெல்லாம் முடியாது இதற்கு முடிவை சொல்லியே ஆகணும் ஆமா ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ March 23, 2010 2:31 PM
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அதெல்லாம் முடியாது இதற்கு முடிவை சொல்லியே ஆகணும் ஆமா ?
//
அண்ணே.. உம்னு சொல்லுங்கண்ணே.. மங்குனிய போட்டு தள்ளீட்டு முடிவைக்கேக்கலாம்..

Asiya Omar said...

மங்குனி ,இது எப்படி என் கண்ணில் மாட்டாமல் போனது.ஒரு கதையின் சுவாரசியம்,முடிவு தான் தெரியலை,ஏதோ மளையாளப் படம் போல.

ரோஸ்விக் said...

மங்கு உன் காதல் என்ன ஆச்சுன்னு தெரியல... ஆனால், நீ சொல்லுகிற விதத்துல இருந்தே இந்த காதலுக்காக நீ அடிச்ச சைக்கிள் மணி இன்னும் அதிர்ந்துகிட்டு தான்யா இருக்கு...

அசத்தல் மாமு... :-)

ஜெய்லானி said...

/// asiya omar said...ஒரு கதையின் சுவாரசியம்,முடிவு தான் தெரியலை,ஏதோ மளையாளப் படம் போல.//

மங்குவின் கதையே அப்படித்தான் இருக்கும். இதில் என்னுடைய முதல் கமெண்டை படிங்க அதான் முடிவு...

Balamurugan said...

நமக்கு பஸ்ல நிறைய காதல் இருக்கு, எதை எழுத!!??

ஜெய்லானி said...

///பாலமுருகன் said...நமக்கு பஸ்ல நிறைய காதல் இருக்கு, எதை எழுத!!??//

எங்க அடி வாங்கினீங்கலோ அதை முதல்ல எழுதுங்க !!

prince said...

நினைவுகள் என்றுமே சுகமானது தான் அன்றைக்கு கள்ளம் கபடம் இல்லாமல் நாம் செய்த அனைத்துமே.இப்போ நினைத்தாலும் சிரிப்பாகவும் முட்டாள் தனமாகவும் இருக்கும்..

இவன் சிவன் said...

மங்குனிகுள்ளேயும் ஒரு மல்லிகப்பூ இருக்குனு காமிச்சிடீங்க பாஸ்... கண்டிப்பா அழுவாச்சி இல்லாம இந்த கதை சொன்னதுக்காக உங்களை பாராட்டியே ஆகணும்..
நானும் என்னோட கலையுலக அனுபவுத்துல பாத்துட்டேன் ,பெரும்பாலும் பஸ் காதல் எல்லாமே ஆக்சிடென்ட் ஆகிடுது.. ஏன்னு தெரில....

kumaran said...

Neenga Bodia?

தாராபுரத்தான் said...

நல்லாத்தான் இருக்குதுங்க.

sathishsangkavi.blogspot.com said...

மங்குனியரே பின்னீட்டிங்க....

உங்க சேசிங்கும் அதைச்சொன்ன விதமும் கலக்கல்.....

சரி க்ளைமேக்ஸ் என்ன ஆச்சு..... அடுத்த பதிவுல சொல்லுங்க....

Veliyoorkaran said...

எலேய் மங்குனி...வந்த புதுசுல எங்ககிட்ட மாட்டி மாட்டடி வாங்குன பயலாடா நீ..தக்காளி எங்கயோ போய்கிட்ருக்க வாத்யாரே...!!

ஜெய்லானி said...

//எலேய் மங்குனி...வந்த புதுசுல எங்ககிட்ட மாட்டி மாட்டடி வாங்குன பயலாடா நீ..தக்காளி எங்கயோ போய்கிட்ருக்க வாத்யாரே...!!//

வெளி!! ஆள் பாடி ஸ்டிராங், ஆனா பெஸ்மெண்ட் வீக்

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...
அந்த ஏன்ஜல் இப்ப என்ன பன்னுது பாஸ் ?//

குட் குஸ்டியன் ....,

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...
நீ பெண்கள்/டிரைவர் மனதை புண்படுத்தியதால்.. என்னுடைய
கருத்தை பதிக்க விரும்பவில்லை.

தனிமனித தாக்குதலை தவிர்...//

மயிலாப்பூர் பார்த்தசாரதி சார் , உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

மங்குனி அமைச்சர் said...

//பிரபாகர் said...
பஸ் சைக்கிள் சேசிங், சைக்கிள் பஸ் சேசிங் என சும்மா பின்னி பெடலெடுத்திருக்கீங்க!

அப்புறமென்ன லவ் சக்ஸஸ் தான் எங்களுக்கு தெரியாதா? (அதாங்க, காதலோட தோல்விதானே, லவ்வோட சக்ஸஸ்...)

பிரபாகர்.//


கேள்வியும் நீங்களே , பதிலும் நீங்களே

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

//சைவகொத்துப்பரோட்டா said...
கதை நல்லா இருக்கு, முடிவ சொல்லுங்க.//

அப்புறம் சொல்றேன் சார்

மங்குனி அமைச்சர் said...

//சேட்டைக்காரன் said...
அண்ணே! இதை வச்சுத்தான் சிம்பு-சோனியா அகர்வால் நடிச்சாங்களே ஒரு படம், அதை எடுத்தாங்களா? சூப்பர்!!!!!!
//

சார் நான் சிம்பு படம் பார்ப்பதில்லை

மங்குனி அமைச்சர் said...

//வானம்பாடிகள் said...
நல்லாருக்கு கதை போங்க:)//

நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...
அன்னைக்கு என்னாடான, எட்டாம் கிளாஸ் பெயிலுனு சொன்னே..
இப்ப சைக்கிள் கேப்ல காலேசு..பஸ்னு அடிச்சு வீசறயே..
அடுத்த பதிவுல உன்னோட காலேஸ் மார்க் ஷீட்ட ஸ்கென் பண்ணிப் போடு..

ச்சே.. உட்டா டாக்டரு.. வக்கீலுக்கு படிச்சேனு பீலா உடுவானுக...//


நண்பா நான் +2 முடிச்சுட்டு , அஞ்சாப்பு வரைக்கும் படிச்சிருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

//அந்த சிவா said...
அடே நாயே நான் ரானே-லே ஆணியா புடுங்குறேன் ? இந்த கத முடிவு எனக்கு மட்டும்தான் தெரியும் பாது நடந்துக்க - பட் உன் நேர்மை எனனக்கு பிடிசுருக்கு - என்னமா நாபகம் வச்சுருக்க - நண்பர்களே இவன் ஒரு டூபாகூர் - இப்படிக்கு பாவப்பட்ட சிவா.//

வாங்க நண்பா நன்றி

மங்குனி அமைச்சர் said...

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//////////டிஸ்கி : அப்புறம் அந்த காதலோட முடிவு என்னாகிறத உங்களுக்கு சொல்லமுடியாது , ஏன்னா அந்த முடிவு பஸ்ல நடக்கல .......................................................////////


அதெல்லாம் முடியாது இதற்கு முடிவை சொல்லியே ஆகணும் ஆமா ?
///

அப்புறம் சொல்றேன் சார்

ஜெய்லானி said...

//நண்பா நான் +2 முடிச்சுட்டு , அஞ்சாப்பு வரைக்கும் படிச்சிருக்கேன்//

ஆபீஸ்ல என்னமா மொக்கை போடுது இப்ப. யப்பா!!!!!!

மங்குனி அமைச்சர் said...

//asiya omar said...
மங்குனி ,இது எப்படி என் கண்ணில் மாட்டாமல் போனது.ஒரு கதையின் சுவாரசியம்,முடிவு தான் தெரியலை,ஏதோ மளையாளப் படம் போல.//

கொஞ்சமாவது நம்புங்க , நான் பாவம்

ஜெய்லானி said...

Veliyoorkaran said...

@@@@ ஜெய்லானி said...
(வெரும் லட்டரை) வெளியூருவ வைத்தே நிருபிப்பான் இந்த ஜெய்லானி///

ச்சே...கவுண்டர் பண்ணி கலாசிட்டானுகளே..!..இருங்கடா...வேற எதாச்சும் யோசிச்சிட்டு மறுபடியும் வர்றேன்..!

மங்குனி அமைச்சர் said...

//ரோஸ்விக் said...
மங்கு உன் காதல் என்ன ஆச்சுன்னு தெரியல... ஆனால், நீ சொல்லுகிற விதத்துல இருந்தே இந்த காதலுக்காக நீ அடிச்ச சைக்கிள் மணி இன்னும் அதிர்ந்துகிட்டு தான்யா இருக்கு...

அசத்தல் மாமு... :-)
//

தேங்க்ஸ் ரோஸ்

மங்குனி அமைச்சர் said...

//பாலமுருகன் said...
நமக்கு பஸ்ல நிறைய காதல் இருக்கு, எதை எழுத!!??//

நீங்க பன்ன காதல பத்தி எழுதுங்க,

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்குது.

மங்குனி அமைச்சர் said...

//princerajan C.T said...
நினைவுகள் என்றுமே சுகமானது தான் அன்றைக்கு கள்ளம் கபடம் இல்லாமல் நாம் செய்த அனைத்துமே.இப்போ நினைத்தாலும் சிரிப்பாகவும் முட்டாள் தனமாகவும் இருக்கும்..
//

தங்கள் வருகைக்கு , கருத்துக்கும் ரொம்ப நன்றி princerajan C.T

மங்குனி அமைச்சர் said...

//இவன் சிவன் said... //

thanks sivan

மங்குனி அமைச்சர் said...

//kumaran said...
Neenga Bodia?//


ஆமா பாஸ், நீங்க யாரு ?

மங்குனி அமைச்சர் said...

//தாராபுரத்தான் said...
நல்லாத்தான் இருக்குதுங்க.//

நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

//Sangkavi said...
மங்குனியரே பின்னீட்டிங்க....

உங்க சேசிங்கும் அதைச்சொன்ன விதமும் கலக்கல்.....

சரி க்ளைமேக்ஸ் என்ன ஆச்சு..... அடுத்த பதிவுல சொல்லுங்க....//

ரொம்ப தேங்க்ஸ் சார் , அப்புறம் சொல்றேன் சார்

மங்குனி அமைச்சர் said...

//Veliyoorkaran said...
எலேய் மங்குனி...வந்த புதுசுல எங்ககிட்ட மாட்டி மாட்டடி வாங்குன பயலாடா நீ..தக்காளி எங்கயோ போய்கிட்ருக்க வாத்யாரே...!!//

பட்ட அடிக்கு பலனில்லாம போகுமா , எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்

மங்குனி அமைச்சர் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...
நல்லா இருக்குது.//

ரொம்ப நன்றி சார்

Jaleela Kamal said...

உங்க கட்டு கத ஜுப்பரு, உஙக்ளுக்கு ஈடா மல்லு ஜெய்லானியாலும், பட்டாபட்டியாலும் தான் முடியும்.

மற்றபடி, டிஸ்கி, முஸ்கி, விஸ்கி எல்லாமே ஜுப்பரி.

Jaleela Kamal said...

ஐய்யோ இத வேற தொடர போறீங்கலா என்ன கொடுமையய்யாயாஆஅ


இந்த ஆட்டத்துக்கு நான் வரல‌

ஜெய்லானி said...

///Jaleela said... உஙக்ளுக்கு ஈடா மல்லு ஜெய்லானியாலும், பட்டாபட்டியாலும் தான் முடியும்.//

திட்றீங்களா ? புகழ்றீங்களா ?ஒன்னுமே புரியலயே!! இன்னும் படிக்கவேண்டியது நெறய இருக்கோ!!!

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...
உங்க கட்டு கத ஜுப்பரு, உஙக்ளுக்கு ஈடா மல்லு ஜெய்லானியாலும், பட்டாபட்டியாலும் தான் முடியும்.

மற்றபடி, டிஸ்கி, முஸ்கி, விஸ்கி எல்லாமே ஜுப்பரி.
//

என்னா மேடம் ஒரே வார்த்தைல கலாசுடின்களே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

kumaran said...

Neenga Bodia?

//

அது பாடிங்க.. வியாசர்பாடிங்க..

யூர்கன் க்ருகியர் said...

காதல் வாழ்க !! காதல் வாழ்க !! காதல் வாழ்க !!
..........................

நமக்கு காதல்தான் இன்னிவரைக்கும் வாய்க்கல !!
வாழ்க என்றாவது கூவிட்டு போறேன் !!

சுவராஸ்யமான பகிர்வு !!

மங்குனி அமைச்சர் said...

//யூர்கன் க்ருகியர் said...
காதல் வாழ்க !! காதல் வாழ்க !! காதல் வாழ்க !!
..........................

நமக்கு காதல்தான் இன்னிவரைக்கும் வாய்க்கல !!
வாழ்க என்றாவது கூவிட்டு போறேன் !!

சுவராஸ்யமான பகிர்வு !!//

என்னா தங்கமான மனசு , சீக்கிரம் அந்த அனுபவம் கிடைக்க வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

அமைச்சரே! என்னாச்சின்னு கேக்கமாட்டேனே. தொடரோ தொடருன்னு தொடருரமாதரி தெரியுது.

யாரங்கே அமைச்சருக்கு பக்கத்தில் வடையோ வடைன்னு அந்தரத்தில் தொங்கியபடி கூவுவது

பனித்துளி சங்கர் said...

பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு)
இப்பதிவு குறித்து தொடர்பதிவு எழுதிட எமது கீழ்கண்ட நண்பர்களை நட்புடன் அழைக்கின்றேன்.

Cheena (சீனா)
கேபிள் சங்கர்
ஈரோடு கதிர்
Butterfly
சூர்யா இராகவன்,
நைஜிரியா
விக்னேஷ்வரி
சேட்டைக்காரன்
வெற்றி
பிரேமா மகள்
பிரவின்குமார் .
உங்களின் காதல் நினைவுகளை மறைவின்றி இந்த தொடர் பதிவின் வாயிலாக பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் .

இதற்கான அழைப்பிதழ் பதிவு நாளை காலையில் வெளியிடப்படும் http://wwwrasigancom.blogspot.com/

MUTHU said...

தலைப்பே பேருந்து காதல் என்பதால் கல்லூரியில் நடந்த விசயங்களை தவிர்த்து பேருந்தில் நடந்தவைகளை மட்டுமே எழுதயுள்ளேன்./////////

கல்லூரி வரைக்கும் நீ போயிருக்கியா!!!!!!!!!!!!!!!!!!!!!!

MUTHU said...

அப்புறம் இந்த மேட்டர் உங்க ஊட்டு அம்மாவுக்கு தெரியுமா?ஏன் கேட்கிறேன்னு உனக்கே தெரியும்

MUTHU said...

ஜெய்லானி said...

அந்த ஏன்ஜல் இப்ப என்ன பன்னுது பாஸ் ?


என்ன பாஸ் நம்ம மன்குவை பார்த்து லுக் விட்டு இருக்குனா அது ஏன்ஜல் ஆ வா இருக்கும்

MUTHU said...

மங்குனி அமைச்சர் said...

டேய் நண்பர்களா கொஞ்சம் சீரியஸ் பிளீஸ் டா////////


அப்படினா ?

Rettaival's Blog said...

யேய் மங்குனி,,,கலக்கிப்புட்டலே நீயி...

சரி...அப்படியே காலேஜ் வாசல்ல அந்த புள்ளையோட அண்ணனுக உன்னைப் படுக்கப்போட்டு மிதிச்சானுகள்ல...அந்த கதையும் அடுத்தாப்ல சொல்லிடு! இல்லாட்டி தெய்வ குத்தம் ஆயிடும்லே!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//அப்படியே காலேஜ் வாசல்ல அந்த புள்ளையோட அண்ணனுக உன்னைப் படுக்கப்போட்டு மிதிச்சானுகள்ல...அந்த கதையும் அடுத்தாப்ல சொல்லிடு! இல்லாட்டி தெய்வ குத்தம் ஆயிடும்லே!
//


ஏன்.. மூணூ நாளா, லாக்கப்ல..ஜட்டியோட முட்டிக்கு முட்டி தட்டுனானுகளே.. அதையும் சேர்த்து எழுது..
.
இமேஜா..?
.
யோவ்.. நக்கல் பண்ணாதய்யா.. நாம் என்ன பிததன் சாரா?..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்புறம் ஒரு நாள்..சைக்கிள ஓட்டும்போது உன்னோட பேண்ட் கிழிஞ்சது..

அதற்குப்பின்.. இனிமேல பேண்டே போடமாட்டேனு, பஸ்ஸுக்கு முன்னாடி உருளுனது..

அதை பார்த்து.. உன்னோட பிகர் ஓடி போயி.. மாரியம்மன் கோயில , வேப்பலை எடுத்து சாமி ஆடினது..

அத பார்த்துட்டு.. இதுக்கே.. அதுவே பரவாயில்லைனு நீ திரும்ப பேண்ட் போட ஆரம்பிச்சது..

எதையும் உடக்கூடாது ஓ.கே..

மங்குனி அமைச்சர் said...

//அன்புடன் மலிக்கா said...
அமைச்சரே! என்னாச்சின்னு கேக்கமாட்டேனே. தொடரோ தொடருன்னு தொடருரமாதரி தெரியுது.

யாரங்கே அமைச்சருக்கு பக்கத்தில் வடையோ வடைன்னு அந்தரத்தில் தொங்கியபடி கூவுவது//

வட போச்சே

மங்குனி அமைச்சர் said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...//

thanks sir

மங்குனி அமைச்சர் said...

//Muthu said... //

வந்து இவ்ளோ மரியாத செஞ்சதுக்கு நன்றி முத்து

மங்குனி அமைச்சர் said...

//ரெட்டைவால் ' ஸ் said...
யேய் மங்குனி,,,கலக்கிப்புட்டலே நீயி...

சரி...அப்படியே காலேஜ் வாசல்ல அந்த புள்ளையோட அண்ணனுக உன்னைப் படுக்கப்போட்டு மிதிச்சானுகள்ல...அந்த கதையும் அடுத்தாப்ல சொல்லிடு! இல்லாட்டி தெய்வ குத்தம் ஆயிடும்லே!//

மன்னா ராஜாங்க ரகசியத்தை வெளியே சொன்னா உங்களுக்கு இழுக்கு வரும்கற ஒரே காரதுக்காக தான் நான் அதை எல்லாம் வெளிய சொல்லல

Anonymous said...

பழைய நினைவுகளை கண்முன் நிறுத்துகிறது உங்கள் பதிவு..
வாழ்த்துக்கள் மங்குனி அமைச்சரே..

kavisiva said...

பஸ் ஸ்டாப்புல அடி வாங்இன விஷயத்தை மட்டும் சொல்லாம விட்டுட்டீங்களே!

உங்களுக்காக என் ப்ளாகில் ஒரு அவார்டு காத்துக்கிட்டு இருக்கு வந்து வாங்கிக்கோங்க
http://kavippakam.blogspot.com/2010/03/blog-post_24.html

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உங்களுக்காக என் ப்ளாகில் ஒரு அவார்டு காத்துக்கிட்டு இருக்கு வந்து வாங்கிக்கோங்க
http://kavippakam.blogspot.com/2010/03/blog-post_24.html
//

அய்.. இன்னைக்கு டாஸ்மார்க்ல டீரீட்..
ஜாலி...பதிவ பத்திரமா எடுத்துட்டு வாயா.. இன்னும் விளையாட்டுதனம் பண்ணிட்டு கீழ எங்காவது போட்றாதே..

MUTHU said...

பட்டாபட்டி.. said...
ஏன்.. மூணூ நாளா, லாக்கப்ல..ஜட்டியோட முட்டிக்கு முட்டி தட்டுனானுகளே.. அதையும் சேர்த்து எழுது..
.
இமேஜா..?
.
யோவ்.. நக்கல் பண்ணாதய்யா.. நாம் என்ன பிததன் சாரா?..//////


யோவ் பட்டு இதில் ஏதேனும் டபுள் மீனிங் இருக்கா?

திவ்யாஹரி said...

//டிஸ்கி : அப்புறம் அந்த காதலோட முடிவு என்னாகிறத உங்களுக்கு சொல்லமுடியாது , ஏன்னா அந்த முடிவு பஸ்ல நடக்கல //

இப்படியா சொல்லாம விடுவீங்க.. முடிவு சொல்லுங்க நண்பா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ் பட்டு இதில் ஏதேனும் டபுள் மீனிங் இருக்கா?
//

நாம என்னைக்கு டபுள் மீனிங்கில பேசியிருக்கோம்..

ஜெய்லானி said...

மங்கு மெயில போய் பார்கவும்.

Chitra said...

மங்குனி அமைச்சர் - சைக்கிள்/பஸ் தொடர் பதவில் கலக்கி விட்டார். தேர் பவனியின் போது கொண்ட அனுபவங்களையும் எழுதவும். :-)

மங்குனி அமைச்சர் said...

//kavisiva said...

பஸ் ஸ்டாப்புல அடி வாங்இன விஷயத்தை மட்டும் சொல்லாம விட்டுட்டீங்களே!//

மேடம் ராணுவ ரகசியத வெளிய சொல்ல கூடாது



// உங்களுக்காக என் ப்ளாகில் ஒரு அவார்டு காத்துக்கிட்டு இருக்கு வந்து வாங்கிக்கோங்க
http://kavippakam.blogspot.com/2010/03/blog-post_24.html//

தோ............... வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

// திவ்யாஹரி said...


இப்படியா சொல்லாம விடுவீங்க.. முடிவு சொல்லுங்க நண்பா.//

அப்புறம் சொல்றேன் , தேங்க்ஸ்

மங்குனி அமைச்சர் said...

//Blogger Chitra said...

மங்குனி அமைச்சர் - சைக்கிள்/பஸ் தொடர் பதவில் கலக்கி விட்டார். தேர் பவனியின் போது கொண்ட அனுபவங்களையும் எழுதவும். :-)//

தேங்க்ஸ் மேடம் , கண்டிப்பா திரை பண்றேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பேசாம, நாமளும், பெண்ணுக பேர்ல கமென்ஸ் போட்டிருக்கலாம்..

அப்பவாவது..இந்த நாதாரி பதில் சொல்லியிருக்கும்...... ம்....

மங்குனி அமைச்சர் said...

// பட்டாபட்டி.. said...

பேசாம, நாமளும், பெண்ணுக பேர்ல கமென்ஸ் போட்டிருக்கலாம்..

அப்பவாவது..இந்த நாதாரி பதில் சொல்லியிருக்கும்...... ம்....//


வாங்க பட்டா , தங்கள் வருகைக்கு , கருத்துக்கு நன்றி

MUTHU said...

உன் blog க்கு வர சொல்ற வந்தா பதிலா சொள்ளமாற்ற இரு உன்ன இராணுவத்துடன் கோத்து விடறேன்

இரசிகை said...

//////////டிஸ்கி : அப்புறம் அந்த காதலோட முடிவு என்னாகிறத உங்களுக்கு சொல்லமுடியாது , ஏன்னா அந்த முடிவு பஸ்ல நடக்கல .......................................................////////


maappu vachchuttaaryaa aappu.........:))