எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, June 3, 2010

போங்கடா நீங்களும், உங்க சீரியஸ் பதிவும்!!??

காணவில்லை

மேலே படத்தில் உள்ள "மங்குனி அமைசர்" என்பவரை நேற்றிலிருந்து காணவில்லை , இவர் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர் (எல்லாருக்கு உச்சி குளுந்துருக்குமே?) , காணாமல் போகும்போது சிகப்பு கலர் உடை அணிந்திருந்தார் , இவரை கண்டுபுடிபோர் உடனடியாக விஷம் கொடுத்து , கத்தியால் குத்தி , தூக்குல போட்டு ,அப்புறம் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு , அப்புறம் பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டு , பின் கீழ் கண்ட முகவரிக்கு வந்து 1000 ரூபாய் பரிசு பெற்றுகொள்ளவும் .( என்னாது 1000 மா ??? இது டம்மி பீசாச்சே , இதுக்கு 100ரே அதிகம் )

---------------------------------------------------------

ஏன் இந்த மாதிரி ஒரு நியுஸ் வந்துச்சுன்னு நீங்க தெரிசுகனும்னா , ஒரு பிளாஸ் பேக் !!!!?????????????


(நீங்களே கொசுவத்திய சுத்திகிட்டே படிங்க )

அட போங்கப்பா , எங்க பாத்தாலும் ஒரே சண்ட கொலைவெறி தாக்குதல்கள் ??? (ஆதிமூலம் , நர்சிம் , மயில் , கார்க்கி , பூக்காரி , அப்புறம் நம்ம கேப்டன்னுக்கு தமிழ்லே புடிக்காத வார்த்த ..... அட அது தாங்க "மன்னிப்பு" , கொலவெறி...... இது தாங்க மொத்த மேட்டர் )

இந்தவாரம் ஒரே
ரணகள ரத்த பூமியா ஆகிப்போச்சு , ஆளாளுக்கு கத்தியோடதான் அலையுரானுக, எங்க போனாலும் ஒரே ரத்த வாடை , சரி நம்மளும் களத்துல குதிச்சு சண்ட போடலாம்னு பாத்தா ? இன்னைக்கு வியாழக்கிழமை, விரதம் ..... வியாழக்கிழமை ரத்தம் பாக்கமாட்டேன்னு நம்ம அசின் தல மேல அடிச்சு சத்தியம்பன்னி குடுத்திட்டேன் , என்ன பன்னலாம்???????

சரி வழக்கம் போல ஒரு காமெடி பதிவு போடலாம்ன்னு உட்கார்ந்து யோசிச்சேன் ??

தக்காளி ஒரு யோசனையும் வரல .


ரெசிடன்சில ரூம் போட்டு கூட யோசிச்சு பாத்தேன் ஒன்னும் வேலைக்காகல !!!
(ஆகா நம்ம பிரைன்ல காமெடி ட்ரேக் வேலை செய்ற பக்கம் தேஞ்சு போச்சு போல....................... )


பட்டாப்பட்டி : என்னாது உனக்கு பிரைனா ? நீ எழுதுறது காமெடியா ? ஏ... மங்கு சும்மா ஜோக் அடிக்காத...........

(டே மங்கு , நீ சீரியஸ் பதிவுலையும் கிங்கு , சும்மா அசத்துடா .................அட? நம்ம மனசாட்சி தாங்க)

சரி சீரியஸா ஒரு பதிவு போடலாம்ன்னு நைட்டு புல்லா யோசிச்சு எழுதினேன் , என் வூட்டுகாரம்மா கூட டீ , ஸ்நாக்ஸ் கொடுத்து நல்ல என்கரேஜ் பண்ணாங்க.

புல்லா எழுதிட்டு படிச்சு பாத்தேன் , என் கண்ணுல தண்ணி வந்துரிச்சு , உச்சி குளுந்து போச்சு , உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு , என்ன அருமையா , உயிரோட்டத்தோட....................................
(மங்கு என்னவோ போடா , உன்ன அடிச்சுக்க ஆளே இல்லடா...... மறுபடியும் மனசாட்சி தாங்க )

சரின்னு பப்ளிஸ் பன்ன போனேன் , டக்குன்னு ஒரு யோசனை , நம்ம வுட்டுகாரம்மா கிட்ட காட்டி படிக்க சொன்னேன் .அவுகளும் பொறும்மையா படிச்சாக ,படிச்சிட்டு என்னைய பாத்து லேசா சிரிச்சாக !!!

நானும் ரொம்ப பெருமையா கேட்டேன் ,

"எப்படிமா இருக்கு ??"


அவுக ஒண்ணுமே சொல்லல , நேர போய் போன எடுத்து அவுக அப்பாவுக்கு , அதாவது என் மாமனாருக்கு போன் போட்டாக

எங்கே நிம்மதி , நிம்மதி என்று தேடி பார்தேன் அது எங்கேயும் இல்ல ...............
.

(அட .. இது என்னோட மாமனார் ரிங் டோன்னுங்க)

"ஹலோ .."

"அப்பா உடனே எனக்கு டைவர்ஸ் வாங்கி தாங்க?
"

"ஐயோ .. ஏம்மா ? என்னாச்சு ?
"

"இந்தாளுக்கு (என்னதான் ) பைத்தியம் புடுச்சு போச்சு , பைத்தியம் கூடவெல்லாம் என்னால குப்ப கொட்ட முடியாது , மரியாதையா டைவேர்ஸ் வாங்குங்க இல்ல ????"

"...................."

"நடு ராத்திரில இந்தாளு தலைய அம்மிக்கல்ல போட்டு...... சாரி... கிரைண்டர் கல்ல போட்டு கொன்னு போடுவேன் , என்னைய தேவையில்லாம ஒரு கொலை கேசுல மாட்டிவிடாதிக"

டிஸ்கி : ...ம்ம்ம்ம்.................... இப்ப தெரியுதா ஏன் அந்த நியுஸ் வந்துச்சுன்னு (என்னா புன்னியம் அதுதான் கைமீரி போச்சே? )

101 comments:

Unknown said...

அண்ணே உங்க அட்ரஸ் கொஞ்சம் சொல்ல முடியுமா?

அப்புறம் அந்த ஆயிரத்த யாருகிட்ட வாங்கிக்கணும்?

விவரமா எழுதினாத்தானே.. அரை குறைங்கிறது சரியாதான் இருக்கு..

பட்டாபட்டி நீங்க முந்திகிட்டா எனக்கு கட்டின்க் காசு குடுத்துரனும்.

S Maharajan said...

கவலைபடாதிங்க அமைச்சரே
உங்க வீட்டுல அப்படியெல்லாம் செய்ய மாட்டங்க
ஓடி போன நீங்க, நீங்களாவே வந்துருங்க
நாங்க எல்லாம் உங்களை தேடி விட்டு டைம் வேஸ்ட் பண்ண முடியாது ஆமா சொல்லிபுட்டேன்.

எல் கே said...

anne eppadi ungalala ippadi elutha mudiuthuu please solli thanga

அன்புடன் நான் said...

ஏங்க மங்குனி இப்ப நீஙகளே சீரியஸ் ஆவது போல தெரியுதே...???

எத பத்தியும் கவல படாம கண்ண தொடச்சிக்கிட்டு.... உங்க பாதயில போங்க...
(கரடி வந்தா மட்டும் எங்கிட்ட சொல்லுங்க)

அனு said...

கலவர பூமிலயும் காத்து வாங்க உங்களால மட்டும் தான் முடியும்..

ஜில்தண்ணி said...

மங்கு நீ எழுதுனத படிச்சிபுட்டு உங்க வூட்டுக்காரம்மா உசுரோட இருக்குறதே பெருசு தான்

// இவரை கண்டுபுடிபோர் உடனடியாக விஷம் கொடுத்து , கத்தியால் குத்தி , தூக்குல போட்டு ,அப்புறம் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு , அப்புறம் பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டு , பின் கீழ் கண்ட முகவரிக்கு வந்து 1000 ரூபாய் பரிசு பெற்றுகொள்ளவும் //

பட்டா வாங்க மேட்டர முடிச்சிட்டு ஷேர் பண்ணிப்போம்

Jaleela Kamal said...

//சரி சீரியஸா ஒரு பதிவு போடலாம்ன்னு நைட்டு புல்லா யோசிச்சு எழுதினேன் , என் வூட்டுகாரம்மா கூட டீ , ஸ்நாக்ஸ் கொடுத்து நல்ல என்கரேஜ் பண்ணாங்க//

ரொமப் நல்லவங்க ரொமப் கொடுத்த்து வைத்து இருக்கனும் நீஙக்

Jaleela Kamal said...

அமைச்சரே ஏற்கவ்னவே எனக்கு தருவதா சொன்ன 1000 பொற்காசு இன்னும் வந்து சேரல, இப்ப இது வேர டகுள் பாச்சாஅ வா

Jaleela Kamal said...

//மங்கு நீ எழுதுனத படிச்சிபுட்டு உங்க வூட்டுக்காரம்மா உசுரோட இருக்குறதே பெருசு தான் ///


அதானே

யூர்கன் க்ருகியர் said...

This is normal & It happens !

பருப்பு (a) Phantom Mohan said...

இன்று 87 வது பிறந்தநாள் கொண்டாடும் தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர், பாசத்தலைவன் டாக்டர் கலைஞர் அவர்கள் வாழ்க பல்லாண்டு!

இதுக்கு எவனாவது சிரிச்சீங்க, வெட்டிக் கொன்னு போட்டுடுவேன்!

பருப்பு (a) Phantom Mohan said...

தலைவர் பிறந்த நாளையொட்டி நடக்கும் கூட்டத்தில் திருமதி. குஷ்பூ சுந்தர் பேச்சக் கேட்க நேற்றே சென்று துண்டு போட்டு இடம் பிடித்த மங்குனி நீ வாழ்க! வாழ்க!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே உங்க அட்ரஸ் கொஞ்சம் சொல்ல முடியுமா?

அப்புறம் அந்த ஆயிரத்த யாருகிட்ட வாங்கிக்கணும்?

விவரமா எழுதினாத்தானே.. அரை குறைங்கிறது சரியாதான் இருக்கு..

பட்டாபட்டி நீங்க முந்திகிட்டா எனக்கு கட்டின்க் காசு குடுத்துரனும்.
//

இது பெரிய மனுசனுக்கு அழகு.. ஓ.கே பாஸ்.. டீல்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஜில்தண்ணி said...

மங்கு நீ எழுதுனத படிச்சிபுட்டு உங்க வூட்டுக்காரம்மா உசுரோட இருக்குறதே பெருசு தான்

// இவரை கண்டுபுடிபோர் உடனடியாக விஷம் கொடுத்து , கத்தியால் குத்தி , தூக்குல போட்டு ,அப்புறம் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு , அப்புறம் பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டு , பின் கீழ் கண்ட முகவரிக்கு வந்து 1000 ரூபாய் பரிசு பெற்றுகொள்ளவும் //

பட்டா வாங்க மேட்டர முடிச்சிட்டு ஷேர் பண்ணிப்போம்
//

டீல்....ஒண்ணை வெட்டினா..இன்னொன்னு இலவசம்..ஹா.ஹா

அமுதா கிருஷ்ணா said...

பாவம் தான் மிஸஸ்.மங்குனி...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்கு.. நிசமாவே நக்கலையா உனக்கு.. எல்லொரும் உயிருக்கு பயந்து ஒளிஞ்சிக்கிட்டு இருக்கோம்.. நீயே தலைக்கு மஞ்சத்தண்ணி ஊத்திகிட்டு, தலையாட்டிட்டு வரே..

பார்த்துக்க...

பழமைபேசி said...

ஆகா... வேற்றுகிரகத்துக்கே வந்துட்டா மாதிரி இருக்கே? ஸ்.... அப்பாட...

சிநேகிதன் அக்பர் said...

என்னது! வடிவேலுவை காணலையா? ஏன் பாஸ் இந்த கொலைவெறி.

கவி அழகன் said...

"சத்தியமா நல்லாயிருக்கு ,,,

தனி காட்டு ராஜா said...

//தொலைச்சுபுடுவேன் ஜாக்க்க்க்ரத..............//

அட என்ன தொலஞ்சு போய்ட்டேலா ...அப்ப Caption- ய் மாத்துங்க "தொலைஞ்சுபோயிருவேன் ஜாக்க்க்க்ரத"

Anonymous said...

ரொம்ப ஜோகா இருக்கு ..இப்பிடி எல்லாம் எழுத உட்காந்து யோசிப்பாங்களோ ....

GEETHA ACHAL said...

அதுக்கு தான் நம்மலே தலையில மண்னை வாரிகொட்ட கொள்ள கூடாது என்பது...எதுக்காக உங்கள் மனைவியிடன் படிக்க சொன்னிங்க...பாவம் தான் அவங்க...சும்மா தான் மங்கு...

ஜில்தண்ணி said...

பட்டாபட்டி.. said...

//டீல்....ஒண்ணை வெட்டினா..இன்னொன்னு இலவசம்..ஹா.ஹா//

டீல் நாட் ஓ.கே

ஒன்ன முதல்ல தூக்கனும் யா
(பட்டா எத்தன கிலோ இருப்பீக)

ilamthooyavan said...

மாம்சு வேண்டாம் இது நல்லது அல்ல ,ஒழுங்கா அவையை கூட்டி முடிவெடுக்கலாம், ஆமா சொல்லிட்டேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஒன்ன முதல்ல தூக்கனும் யா
(பட்டா எத்தன கிலோ இருப்பீக)
//

பட்டாபட்டியோடவா?. இல்ல இல்லாமலா?..

கேள்வி குறிப்பா கேட்காததால், நீங்க ஆட்டத்தில இருந்து நீக்கப்படுகிறீர்கள்..ஹி..ஹி

ஜெய்லானி said...

ஆடு தானா தலைய குடுக்குது..

//விஷம் கொடுத்து , கத்தியால் குத்தி , தூக்குல போட்டு ,அப்புறம் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு , அப்புறம் பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டு ,//

எதுக்குயா இவ்வளவு பொருள்!!!!
விஷம்
கத்தி
தூக்கு கயிறு
துப்பாக்கி
பெட்ரோல்
அத கொளுத்த தீ பெட்டி
இவ்வளவு செலவு ,ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பாழும் கிணத்துல (அதுவும் தண்ணி இல்லா )தள்ளி விட்டா போதும் . ஆயிரம் ரூபாய்க்கும் அல்வா வாங்கியே சாப்பிடுவேன்.

ஜில்தண்ணி said...

ஐயய்யோ நானும் அவுட்டா
சரி விடு ஜூட்

ஜெய்லானி said...

//ஐயய்யோ நானும் அவுட்டா
சரி விடு ஜூட்//

யாருப்பா அங்க சவுண்ட் விடுரது ...

ஜெய்லானி said...

//பட்டாபட்டியோடவா?. இல்ல இல்லாமலா?..//

ஆட்டை எப்படிய்யா எடை போட்டு வாங்குவீங்க ? டிரஸ் போட்டா ?!!

முதல்ல கழுத்தறுப்பு திருவிழா
அப்புரம் தோலுறிப்பு திருவிழா
பின்ன பீஸ்பீஸா வெட்டும் திருவிழா

ILLUMINATI said...

//ஒரு காமெடி பதிவு போடலாம்ன்னு உட்கார்ந்து யோசிச்சேன் ??//

இதுக்கு மேலயுமாய்யா நீ காமெடி பண்ணனும்?

நீ உக்காந்து யோசிச்சா உலகம் நின்னுடாது?

//ரெசிடன்சில ரூம் போட்டு கூட யோசிச்சு பாத்தேன் ஒன்னும் வேலைக்காகல !!!//

கழுத,வீட்டுல தண்ணி அடிக்க வக்கில்லாம ரூம் போட்டு தண்ணி அடிச்சுட்டு என்ன அலும்பு பண்ணுது பாரு.....

//ஆகா நம்ம பிரைன்ல காமெடி ட்ரேக் வேலை செய்ற பக்கம் தேஞ்சு போச்சு போல......//

அதுக்கு சான்சே இல்ல மச்சி....அதுக்கு முதல்ல முக்கியாம மேட்டர் ஒண்ணு வேணும்..... அட,சரக்கு இல்லயா....இவன் இன்னம் ரூம் நெனப்புலையே இருக்கானே .....
மூளைய்யா.....

//"நடு ராத்திரில இந்தாளு தலைய அம்மிக்கல்ல போட்டு...... சாரி... கிரைண்டர் கல்ல போட்டு கொன்னு போடுவேன் , என்னைய தேவையில்லாம ஒரு கொலை கேசுல மாட்டிவிடாதிக"//

ரைட்,இந்த டீலிங் எனக்கு பிடிச்சு இருக்கு.... :)

காஞ்சி முரளி said...

ஸ்.... இப்பவே ஏடாகூடமா கண்ணக் கட்டுதே....!

இன்னும் என்னென்ன பார்க்கவேண்டி இருக்கோ...!

Becareful.....
நான் என்னச் சொன்னே...!

ILLUMINATI said...
This comment has been removed by the author.
ILLUMINATI said...

//விவரமா எழுதினாத்தானே.. அரை குறைங்கிறது சரியாதான் இருக்கு..//

ஹாஹஹா...ஆரம்பமே அதிரடி யா இருக்கு....அப்ப,மங்குக்கு தர்ம அடி confirm.... :)

//மங்கு நீ எழுதுனத படிச்சிபுட்டு உங்க வூட்டுக்காரம்மா உசுரோட இருக்குறதே பெருசு தான் //

இது பாயிண்ட்...

//நீயே தலைக்கு மஞ்சத்தண்ணி ஊத்திகிட்டு, தலையாட்டிட்டு வரே..//

யோவ்,உன் ப்ளாக் ல வராததாயா இங்க வந்துடும் மங்கு?

இது ஒரு தனி talent யா...

Radhakrishnan said...

அசத்தல். மிகவும் ரசித்தேன். நீங்கள் மங்குனி அமைச்சர் அல்ல, மாபெரும் அமைச்சர்.

மங்குனி அமைச்சர் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே உங்க அட்ரஸ் கொஞ்சம் சொல்ல முடியுமா?

அப்புறம் அந்த ஆயிரத்த யாருகிட்ட வாங்கிக்கணும்?

விவரமா எழுதினாத்தானே.. அரை குறைங்கிறது சரியாதான் இருக்கு..

பட்டாபட்டி நீங்க முந்திகிட்டா எனக்கு கட்டின்க் காசு குடுத்துரனும்.///


நானே கானாபோயிட்டனே அப்புறம் எப்படி அட்ரஸ் தருவேன்

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

கவலைபடாதிங்க அமைச்சரே
உங்க வீட்டுல அப்படியெல்லாம் செய்ய மாட்டங்க
ஓடி போன நீங்க, நீங்களாவே வந்துருங்க
நாங்க எல்லாம் உங்களை தேடி விட்டு டைம் வேஸ்ட் பண்ண முடியாது ஆமா சொல்லிபுட்டேன்.///


இதுக்கு பேர்தான் வலை விரிக்கிறதோ ???

மங்குனி அமைச்சர் said...

LK said...

anne eppadi ungalala ippadi elutha mudiuthuu please solli thanga////


சார் , உங்களுக்கு மேலயா ?

மங்குனி அமைச்சர் said...

சி. கருணாகரசு said...

ஏங்க மங்குனி இப்ப நீஙகளே சீரியஸ் ஆவது போல தெரியுதே...???

எத பத்தியும் கவல படாம கண்ண தொடச்சிக்கிட்டு.... உங்க பாதயில போங்க...
(கரடி வந்தா மட்டும் எங்கிட்ட சொல்லுங்க)////



இதுல கரடி வேற வருமா ?

மங்குனி அமைச்சர் said...

அனு said...

கலவர பூமிலயும் காத்து வாங்க உங்களால மட்டும் தான் முடியும்..////


ஹி,ஹி,ஹி

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி said...

மங்கு நீ எழுதுனத படிச்சிபுட்டு உங்க வூட்டுக்காரம்மா உசுரோட இருக்குறதே பெருசு தான்

// இவரை கண்டுபுடிபோர் உடனடியாக விஷம் கொடுத்து , கத்தியால் குத்தி , தூக்குல போட்டு ,அப்புறம் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு , அப்புறம் பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டு , பின் கீழ் கண்ட முகவரிக்கு வந்து 1000 ரூபாய் பரிசு பெற்றுகொள்ளவும் //

பட்டா வாங்க மேட்டர முடிச்சிட்டு ஷேர் பண்ணிப்போம்///


ஒரு குரூபாதான்யா அலையுராணுக

மங்குனி அமைச்சர் said...

Jaleela said...

//சரி சீரியஸா ஒரு பதிவு போடலாம்ன்னு நைட்டு புல்லா யோசிச்சு எழுதினேன் , என் வூட்டுகாரம்மா கூட டீ , ஸ்நாக்ஸ் கொடுத்து நல்ல என்கரேஜ் பண்ணாங்க//

ரொமப் நல்லவங்க ரொமப் கொடுத்த்து வைத்து இருக்கனும் நீஙக்///


தோடா .... சப்போர்ட்டா ?

மங்குனி அமைச்சர் said...

Jaleela said...

அமைச்சரே ஏற்கவ்னவே எனக்கு தருவதா சொன்ன 1000 பொற்காசு இன்னும் வந்து சேரல, இப்ப இது வேர டகுள் பாச்சாஅ வா////


அட நீங்களுமா மேடம் கிளம்பிட்டிங்க ?

மங்குனி அமைச்சர் said...

Jaleela said...

//மங்கு நீ எழுதுனத படிச்சிபுட்டு உங்க வூட்டுக்காரம்மா உசுரோட இருக்குறதே பெருசு தான் ///


அதானே////


எனக்கும் இதே டவுட்டுதான்

மங்குனி அமைச்சர் said...

யூர்கன் க்ருகியர் said...

This is normal & It happens !///


எனக்கு முன்னாடியே அனுபவம் உள்ளது போல

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

இன்று 87 வது பிறந்தநாள் கொண்டாடும் தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர், பாசத்தலைவன் டாக்டர் கலைஞர் அவர்கள் வாழ்க பல்லாண்டு!

இதுக்கு எவனாவது சிரிச்சீங்க, வெட்டிக் கொன்னு போட்டுடுவேன்!///


சத்தியமா நான் சிரிக்கல , சிரிக்கல

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

தலைவர் பிறந்த நாளையொட்டி நடக்கும் கூட்டத்தில் திருமதி. குஷ்பூ சுந்தர் பேச்சக் கேட்க நேற்றே சென்று துண்டு போட்டு இடம் பிடித்த மங்குனி நீ வாழ்க! வாழ்க!///


என்னா கஷ்டப்பட்டேன் , அசால்ட்டா சொல்லிட்டிக

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...


//

இது பெரிய மனுசனுக்கு அழகு.. ஓ.கே பாஸ்.. டீல்..///


இவன் சும்மாவே கொலைகாரன் , இதுல கூட்டு வேறையா ?

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...


//

டீல்....ஒண்ணை வெட்டினா..இன்னொன்னு இலவசம்..ஹா.ஹா///



அந்த இன்னொன்னு யாரு பட்டா ?

மங்குனி அமைச்சர் said...

பழமைபேசி said...

ஆகா... வேற்றுகிரகத்துக்கே வந்துட்டா மாதிரி இருக்கே? ஸ்.... அப்பாட.../////


கொஞ்சம் எட்டி பாருங்க பூமி தெரியும்

மங்குனி அமைச்சர் said...

me tha 50

ஐ நான் தான் 50

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

பாவம் தான் மிஸஸ்.மங்குனி... ////


நீங்க வேற , நான்தான் பாவம்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

மங்கு.. நிசமாவே நக்கலையா உனக்கு.. எல்லொரும் உயிருக்கு பயந்து ஒளிஞ்சிக்கிட்டு இருக்கோம்.. நீயே தலைக்கு மஞ்சத்தண்ணி ஊத்திகிட்டு, தலையாட்டிட்டு வரே..

பார்த்துக்க...////



தலைல துண்டு போட்ருக்கேன் பாக்கலையா ?

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

மங்கு.. நிசமாவே நக்கலையா உனக்கு.. எல்லொரும் உயிருக்கு பயந்து ஒளிஞ்சிக்கிட்டு இருக்கோம்.. நீயே தலைக்கு மஞ்சத்தண்ணி ஊத்திகிட்டு, தலையாட்டிட்டு வரே..

பார்த்துக்க...////



தலைல துண்டு போட்ருக்கேன் பாக்கலையா ?

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...

என்னது! வடிவேலுவை காணலையா? ஏன் பாஸ் இந்த கொலைவெறி.///



யார் சார் அந்த வடிவேலு ?

மங்குனி அமைச்சர் said...

யாதவன் said...

"சத்தியமா நல்லாயிருக்கு ,,,///


ரொம்ப நன்றி யாதவன் சார்

மங்குனி அமைச்சர் said...

தனி காட்டு ராஜா said...

//தொலைச்சுபுடுவேன் ஜாக்க்க்க்ரத..............//

அட என்ன தொலஞ்சு போய்ட்டேலா ...அப்ப Caption- ய் மாத்துங்க "தொலைஞ்சுபோயிருவேன் ஜாக்க்க்க்ரத"///


எப்படிஎல்லாம் யோசிச்சு ஆப்பு வைக்கிறாங்க

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

ரொம்ப ஜோகா இருக்கு ..இப்பிடி எல்லாம் எழுத உட்காந்து யோசிப்பாங்களோ ....///


வாங்க , வாங்க , நான் படுற கஷ்டம் உங்களுக்கு ஜோக்கா இருக்கா ?

மங்குனி அமைச்சர் said...

Geetha Achal said...

அதுக்கு தான் நம்மலே தலையில மண்னை வாரிகொட்ட கொள்ள கூடாது என்பது...எதுக்காக உங்கள் மனைவியிடன் படிக்க சொன்னிங்க...பாவம் தான் அவங்க...சும்மா தான் மங்கு...///


ஆமா மேடம் ஆமா , அது இப்பத்தான் தெரியுது

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி said...

பட்டாபட்டி.. said...

//டீல்....ஒண்ணை வெட்டினா..இன்னொன்னு இலவசம்..ஹா.ஹா//

டீல் நாட் ஓ.கே

ஒன்ன முதல்ல தூக்கனும் யா
(பட்டா எத்தன கிலோ இருப்பீக)////



தேவையில்லாம பட்டா கிட்ட தலைய கொடுத்துட்டிகளே ?

மங்குனி அமைச்சர் said...

ilamthooyavan said...

மாம்சு வேண்டாம் இது நல்லது அல்ல ,ஒழுங்கா அவையை கூட்டி முடிவெடுக்கலாம், ஆமா சொல்லிட்டேன்./////



இதுகூட நல்லாருக்கே ?

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

ஒன்ன முதல்ல தூக்கனும் யா
(பட்டா எத்தன கிலோ இருப்பீக)
//

பட்டாபட்டியோடவா?. இல்ல இல்லாமலா?..

கேள்வி குறிப்பா கேட்காததால், நீங்க ஆட்டத்தில இருந்து நீக்கப்படுகிறீர்கள்..ஹி..ஹி////


........கொய்யாலே......

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

ஆடு தானா தலைய குடுக்குது..

//விஷம் கொடுத்து , கத்தியால் குத்தி , தூக்குல போட்டு ,அப்புறம் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு , அப்புறம் பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டு ,//

எதுக்குயா இவ்வளவு பொருள்!!!!
விஷம்
கத்தி
தூக்கு கயிறு
துப்பாக்கி
பெட்ரோல்
அத கொளுத்த தீ பெட்டி
இவ்வளவு செலவு ,ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பாழும் கிணத்துல (அதுவும் தண்ணி இல்லா )தள்ளி விட்டா போதும் . ஆயிரம் ரூபாய்க்கும் அல்வா வாங்கியே சாப்பிடுவேன்.////


ரொம்ப பெஸ்ட்டு பிரண்டு நீதான் ஜெய்லானி

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி said...

ஐயய்யோ நானும் அவுட்டா
சரி விடு ஜூட்///



இருங்க கள்ளாட்ட ஆடலாம்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

//ஐயய்யோ நானும் அவுட்டா
சரி விடு ஜூட்//

யாருப்பா அங்க சவுண்ட் விடுரது ...///


யாரும் இல்லைங்கோ

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

//பட்டாபட்டியோடவா?. இல்ல இல்லாமலா?..//

ஆட்டை எப்படிய்யா எடை போட்டு வாங்குவீங்க ? டிரஸ் போட்டா ?!!

முதல்ல கழுத்தறுப்பு திருவிழா
அப்புரம் தோலுறிப்பு திருவிழா
பின்ன பீஸ்பீஸா வெட்டும் திருவிழா////

good answar jeilaani

மங்குனி அமைச்சர் said...

ILLUMINATI said...

//ஒரு காமெடி பதிவு போடலாம்ன்னு உட்கார்ந்து யோசிச்சேன் ??//

இதுக்கு மேலயுமாய்யா நீ காமெடி பண்ணனும்?

நீ உக்காந்து யோசிச்சா உலகம் நின்னுடாது?

//ரெசிடன்சில ரூம் போட்டு கூட யோசிச்சு பாத்தேன் ஒன்னும் வேலைக்காகல !!!//

கழுத,வீட்டுல தண்ணி அடிக்க வக்கில்லாம ரூம் போட்டு தண்ணி அடிச்சுட்டு என்ன அலும்பு பண்ணுது பாரு.....

//ஆகா நம்ம பிரைன்ல காமெடி ட்ரேக் வேலை செய்ற பக்கம் தேஞ்சு போச்சு போல......//

அதுக்கு சான்சே இல்ல மச்சி....அதுக்கு முதல்ல முக்கியாம மேட்டர் ஒண்ணு வேணும்..... அட,சரக்கு இல்லயா....இவன் இன்னம் ரூம் நெனப்புலையே இருக்கானே .....
மூளைய்யா.....

//"நடு ராத்திரில இந்தாளு தலைய அம்மிக்கல்ல போட்டு...... சாரி... கிரைண்டர் கல்ல போட்டு கொன்னு போடுவேன் , என்னைய தேவையில்லாம ஒரு கொலை கேசுல மாட்டிவிடாதிக"//

ரைட்,இந்த டீலிங் எனக்கு பிடிச்சு இருக்கு.... :)////



ஏன் இல்லு , ஏன் இந்த கொலைவெறி ?

மங்குனி அமைச்சர் said...

காஞ்சி முரளி said...

ஸ்.... இப்பவே ஏடாகூடமா கண்ணக் கட்டுதே....!

இன்னும் என்னென்ன பார்க்கவேண்டி இருக்கோ...!

Becareful.....
நான் என்னச் சொன்னே...!///


கண்ணா மூடிராதிக , அப்புறம் நீங்களும் கானா போயடுவீக

மங்குனி அமைச்சர் said...

ILLUMINATI said...

//விவரமா எழுதினாத்தானே.. அரை குறைங்கிறது சரியாதான் இருக்கு..//

ஹாஹஹா...ஆரம்பமே அதிரடி யா இருக்கு....அப்ப,மங்குக்கு தர்ம அடி confirm.... :)

//மங்கு நீ எழுதுனத படிச்சிபுட்டு உங்க வூட்டுக்காரம்மா உசுரோட இருக்குறதே பெருசு தான் //

இது பாயிண்ட்...

//நீயே தலைக்கு மஞ்சத்தண்ணி ஊத்திகிட்டு, தலையாட்டிட்டு வரே..//

யோவ்,உன் ப்ளாக் ல வராததாயா இங்க வந்துடும் மங்கு?

இது ஒரு தனி talent யா...////


மங்கு உனக்கு சங்கு ரெடி

மங்குனி அமைச்சர் said...

V.Radhakrishnan said...

அசத்தல். மிகவும் ரசித்தேன். நீங்கள் மங்குனி அமைச்சர் அல்ல, மாபெரும் அமைச்சர்.////


ரொம்ப , ரொம்ப நன்றி ராதாக்ருஷ்ணன் சார்

ILLUMINATI said...

//ஏன் இல்லு , ஏன் இந்த கொலைவெறி ? //

அது ஒண்ணும் இல்ல மங்கு செல்லம்.கொஞ்ச நாளாவே சரியா ஆடு எதுவும் சிக்கல பாரு.அதான் ரெடி மேட் ஆடு உன்ன பொலி போடலாம்னு வந்தேன்.... பூஜைய ஆரம்பிசுடலாமா?என்ன சொல்ற?

ராஜவம்சம் said...

வாலு சாரி நாலு நாளா கத்தி ரத்தம்
என்று எல்லா பஹிவையும் சாரி பதிவையும் பார்த்த எனக்கு இப்ப கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிட்டன் இந்தப்பதிவைப்பார்த்து

(இறுந்தாலும் ஆயிரரூபாய்ண்டவன பேனாக்கத்தி எங்கன்னுதேடிட்டு இறுக்கேன்)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இந்தவாரம் ஒரே ரணகள ரத்த பூமியா ஆகிப்போச்சு , ஆளாளுக்கு கத்தியோடதான் அலையுரானுக, எங்க போனாலும் ஒரே ரத்த வாடை //
அதே தாங்க. அதில பயந்ததில இன்னும் தெளியல.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

எது எழுதினாலும் சிரிக்க வச்சிர்றீங்க..!!

ஸாதிகா said...

நல்லா சிரிக்க வைக்கறீங்க மங்குனி

பெசொவி said...

நீர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை சரியாகக் காட்டிக் கொண்டிருக்கிறீர்! பாதி பேர் சீரியஸ் பதிவு போடறதே ஹிட்ஸ் அதிகம் வர்றதுக்குத் தான். நீர் அதை எல்லாம் யோசிச்சு இருக்குற கொஞ்சூண்டு மூளையையும் கெடுத்துக்காதீர்!

ரோஸ்விக் said...

யோவ் சிகப்பு கலர் சட்டை போட்டிருந்த ஆளை புடிச்சு நீ சொன்ன மாதிரி எல்லாம் கொன்னுட்டேன்... கடைசியா பெட்ரோல் ஊத்தி கொளுத்துறது மட்டும் தான் பாக்கி... ஏன்னா, பெட்ரோல் வாங்க காசு இல்லை. அந்த பரிசா குடுக்குற 1000 ரூபாயை குடுத்தீன்னா அதையும் பண்ணிடுவேன். எப்புடி வசதி.

ஜெய்லானி said...

யப்பா ரோஸு நீ பொழைக்க தெரியாத ஆளய்யா ..என்னோட கமெண்ட படிய்யா முதல்ல ..பரிசு பணம் ஆயிரத்துல பெட்ரோல் வாங்கிட்டு அப்புறம் ?????....

இந்த பீஸுக்கு தண்ணியில்லா மொட்டை கிணரே அதிகம்....

ஷர்புதீன் said...

மங்குனி ., உங்களை போய் ஒருத்தர் தெரியாம பாராட்டிவிட்டார், இங்கே போய் அந்த கொடுமையை பாருங்கள்
http://blogintamil.blogspot.com/2010/06/comedy.html

எம் அப்துல் காதர் said...

//விஷம் கொடுத்து, கத்தியால் குத்தி, தூக்குல போட்டு,அப்புறம் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, அப்புறம் பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டு,//

நாங்கல்லாம் தும்முனாவே சுருண்டுடுவே எதுக்கு இவ்வளவு பொருளும் என்ன நான் சொல்றது. அனா எப்ப நான் தும்முவேன் என்று கேட்ககூடாது சரியா?

Prasanna said...

அப்படி போடு அருவாள :)

ஹேமா said...

ஐயா...மங்குனியாரே உங்களை இடைக்கிடை பாத்திருக்கேன் வடிவேலு உருவத்தில.இப்பிடி உலகத்தையே மறக்கிற மந்திரம் வச்சிருக்கீங்கன்னு இண்ணைக்குத்தான் பாத்தேன்.
அற்புதக் கலை நகைச்சுவை.இனி வருவேன் அப்ப அப்ப !

தக்குடு said...

நூறு ரூபாயே உங்களுக்கு ரெம்ப ஜாஸ்தியோனு எனக்கு தோனுது மங்குனி.....:)))

Jaleela Kamal said...

hihihihi

மங்குனி அமைச்சர் said...

//ஏன் இல்லு , ஏன் இந்த கொலைவெறி ? //

அது ஒண்ணும் இல்ல மங்கு செல்லம்.கொஞ்ச நாளாவே சரியா ஆடு எதுவும் சிக்கல பாரு.அதான் ரெடி மேட் ஆடு உன்ன பொலி போடலாம்னு வந்தேன்.... பூஜைய ஆரம்பிசுடலாமா?என்ன சொல்ற? /////



பிளான் பண்ணிட்ட , நடத்து ராசா நடத்து

மங்குனி அமைச்சர் said...

ராஜவம்சம் said...

வாலு சாரி நாலு நாளா கத்தி ரத்தம்
என்று எல்லா பஹிவையும் சாரி பதிவையும் பார்த்த எனக்கு இப்ப கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிட்டன் இந்தப்பதிவைப்பார்த்து////

ரொம்ப தேங்க்ஸ் சார்

// (இறுந்தாலும் ஆயிரரூபாய்ண்டவன பேனாக்கத்தி எங்கன்னுதேடிட்டு இறுக்கேன்)//

இம் ... ஸ்டார்ட் முசிக்

மங்குனி அமைச்சர் said...

நாய்க்குட்டி மனசு said...

இந்தவாரம் ஒரே ரணகள ரத்த பூமியா ஆகிப்போச்சு , ஆளாளுக்கு கத்தியோடதான் அலையுரானுக, எங்க போனாலும் ஒரே ரத்த வாடை //
அதே தாங்க. அதில பயந்ததில இன்னும் தெளியல.///



அதுக்கு தான் நான் தலைமறைவு ஆயிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...

எது எழுதினாலும் சிரிக்க வச்சிர்றீங்க..!!////


very very thanks Ananthi medam

மங்குனி அமைச்சர் said...

ஸாதிகா said...

நல்லா சிரிக்க வைக்கறீங்க மங்குனி///


இப்படி சிம்பிளா கமண்ட்ஸ் போட்ட ஒத்துக்க மாட்டோம்

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நீர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை சரியாகக் காட்டிக் கொண்டிருக்கிறீர்! பாதி பேர் சீரியஸ் பதிவு போடறதே ஹிட்ஸ் அதிகம் வர்றதுக்குத் தான். நீர் அதை எல்லாம் யோசிச்சு இருக்குற கொஞ்சூண்டு மூளையையும் கெடுத்துக்காதீர்!///



சரியா சொன்னிக்க சார்

மங்குனி அமைச்சர் said...

ரோஸ்விக் said...

யோவ் சிகப்பு கலர் சட்டை போட்டிருந்த ஆளை புடிச்சு நீ சொன்ன மாதிரி எல்லாம் கொன்னுட்டேன்... கடைசியா பெட்ரோல் ஊத்தி கொளுத்துறது மட்டும் தான் பாக்கி... ஏன்னா, பெட்ரோல் வாங்க காசு இல்லை. அந்த பரிசா குடுக்குற 1000 ரூபாயை குடுத்தீன்னா அதையும் பண்ணிடுவேன். எப்புடி வசதி./////


அடப்பாவிகளா , அது யாராவது கமுநிஸ்ட் காரனா இருக்கபோறான்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

யப்பா ரோஸு நீ பொழைக்க தெரியாத ஆளய்யா ..என்னோட கமெண்ட படிய்யா முதல்ல ..பரிசு பணம் ஆயிரத்துல பெட்ரோல் வாங்கிட்டு அப்புறம் ?????....

இந்த பீஸுக்கு தண்ணியில்லா மொட்டை கிணரே அதிகம்....////


நீ தண்டா குட் பாய்

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...

ஐயா...மங்குனியாரே உங்களை இடைக்கிடை பாத்திருக்கேன் வடிவேலு உருவத்தில.இப்பிடி உலகத்தையே மறக்கிற மந்திரம் வச்சிருக்கீங்கன்னு இண்ணைக்குத்தான் பாத்தேன்.
அற்புதக் கலை நகைச்சுவை.இனி வருவேன் அப்ப அப்ப !////

very very thanks hema medam , welcom

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...
மங்குனி ., உங்களை போய் ஒருத்தர் தெரியாம பாராட்டிவிட்டார், இங்கே போய் அந்த கொடுமையை பாருங்கள்
http://blogintamil.blogspot.com/2010/06/comedy.html
///


thanks sharfudeen

மங்குனி அமைச்சர் said...

எம் அப்துல் காதர் said...

//விஷம் கொடுத்து, கத்தியால் குத்தி, தூக்குல போட்டு,அப்புறம் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, அப்புறம் பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டு,//

நாங்கல்லாம் தும்முனாவே சுருண்டுடுவே எதுக்கு இவ்வளவு பொருளும் என்ன நான் சொல்றது. அனா எப்ப நான் தும்முவேன் என்று கேட்ககூடாது சரியா?////


அவனா நீ ?

மங்குனி அமைச்சர் said...

பிரசன்னா said...

அப்படி போடு அருவாள :)///

ரைட்டு தல

மங்குனி அமைச்சர் said...

தக்குடுபாண்டி said...

நூறு ரூபாயே உங்களுக்கு ரெம்ப ஜாஸ்தியோனு எனக்கு தோனுது மங்குனி.....:)))////


நான் பாவங்க , வேன் எல்லாம் வச்சு தப்பிச்சேன் கொஞ்சம் பாத்து போட்டு குடுங்க

மங்குனி அமைச்சர் said...

Jaleela said...

hihihihi/////



ஹாஹா.....,ஹா.....,ஹா.....,.....,

அன்புடன் மலிக்கா said...

//Becareful.....
நான் என்னச் சொன்னே...!//

இதெப்படியிருக்கு.

ஆளாளுக்கு ஆடவெட்ட கிளம்பிட்டதுபோல தெரியுது.
ஆடா! அதாருன்னு ஜெய்லானி கேக்குதாப்புல.

அதுவா. காணாபோனதா பேசிகிறாகளே அததாங்க சொன்னேன்.

ஓ அதுவா அது. மொக்கையா தின்னு தின்னு. நடு நாத்திரிலகூட நடுமண்டையில மொத்து மொத்துன்னு வாங்கிகின்னு கீதாம்.
அத கொண்டுவந்து கொடுத்த
சன் மானம் கொடுக்காங்கலாம்.

பாத்துங்கப்பு ஏற்கனவே ஜலீக்காக்குவேற கொடுக்கனுமாம் அவுக கத்தியோட அலையுதாக எடையில போய் மாட்டிக்காதீக.

ஜெய்லானி said...

@@@Anonymous அன்புடன் மலிக்கா //
பாத்துங்கப்பு ஏற்கனவே ஜலீக்காக்குவேற கொடுக்கனுமாம் அவுக கத்தியோட அலையுதாக எடையில போய் மாட்டிக்காதீக.//

எலேய் மங்கு, யாரோ அக்கவுண்ட் இல்லாம பேக் லிங்க்ல கமெண்ட் வந்திருக்கடோய் ....
( ஒரிஜினல் அட்ரஸ்ல படம் வரும் )

ஜெய்லானி said...

//அடப்பாவிகளா , அது யாராவது கமுநிஸ்ட் காரனா இருக்கபோறான் //

போனாப்போவுது ஒரு ரெண்டு ரூவா மேல போட்டு குடு சாமீ....தீப்பெட்டி வேற வாங்கனும்....

செல்வா said...

///பட்டாப்பட்டி : என்னாது உனக்கு பிரைனா ? நீ எழுதுறது காமெடியா ? ஏ... மங்கு சும்மா ஜோக் அடிக்காத...........///

எப்பிடியோ ஜோக் அடிச்சுட்டீங்கள்ள ... கவலைய விடுங்க .. அப்புறம் நீங்க பயப்படாம இருங்க .. நம்ம கோமாளி உங்களை காப்பாத்துவார்...