எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, May 31, 2010

மங்குனி டி.வி ???????

பாருங்க எங்க ஆபிசுல ஆணிபுடுங்க சொல்லி அநியாயம் பண்றானுக , எனக்கு ஆணிபுடுங்க தெரியாதுன்னு அவனுகளுக்கே தெரியும் , ஆனாலும் அழிச்சாட்டியம் பண்றானுக , அதுதான் வேலைய ரிசைன் பண்ணிட்டு பேசாம கவுருமெண்ட்டு ஆபீசுல வேலைக்கு சேந்திடலாம்ன்னு இருக்கேன். எனவே நண்பர்களே என்னால் அதிக நேரம் ப்ளாக் -களில் செலவிடமுடியவில்லை , யாரும் தவறாக நினைக்காதீர்கள் . சீக்கிரம் இந்த ஆணிகள புடுங்கி எறிஞ்சிட்டு வந்துடுறேன்.

------------------------------------------------------

அன்பான நேயர்களே , அருமையான நன்பர்களே நீங்கள் ஆவலுடன்(????) எதிபார்த்த "மங்குனி டி.வி" இன்று முதல் இனிதே ஆரம்பம் .....


டொன்ட்ட..... டொன்ட்ட.......டொன்ட்ட.....டொய்ய்யி

மங்குனி டி.வி யின் முதல் நிகழ்ச்சியாக நேயர் கடிதம்???


(யோவ் இன்னைக்கு தான் டி.வி ஆரம்பிச்சிக அதுக்குள்ள எப்படி நேயர் கடிதம்????)


சார் , சும்மா டென்சன் ஆகாதிக , எல்லா பயலுகளும் திருட்டு டி.வி.டில பாத்துட்டு லெட்டர் போட்ருக்கானுக!!!!

நடுவர் : சரி சரி , முதல் லெட்டர படிங்க ?

அழகான இளம் பெண் தொகுப்பாளினி (ஹி .ஹி ,ஹி ): புழல் ஜெயில்ல இருந்து , வெடிகுண்டு முருகேசன் எழுதியிருக்கார் சார் ,

நடுவர் : புழல் ஜெயில்ல டி.வி.யா ? எங்க படிங்க?


அ.இ.பெ.தொ : சார் நான் உங்க டி.வி நிகழ்சிகள பார்த்தேன் , ரெண்டு நாளா திருட்டு டி.வில திருட்டு டி.வி.டில உங்க நிகழ்சிகள் அனைத்தையும் பார்த்தேன்................!!!!!, நான் இன்னும் ரெண்டு நாள்ல ரிலீஸ் ஆகுறேன் !!! ....அதுக்குள்ள கவுரதையா சொல்றேன் மரியாதையா உங்க டி.வி கம்பனிய மூடிட்டு ஓடிடுன்ங்க... இல்ல மவனே வந்தவுடன் மொதோ டெட் பாடி நீதான் , நாதாரி என்னைய மறுபடியும், மறுபடியும் கொலகாரனாக்காத..............

நடுவர் : மொதோ கடிதமே டெர்ரரா இருக்கு???, சரி , சரி அடுத்த கடித்த படிங்க?


அ.இ.பெ.தொ : சார் மைலாபூர்ல இருந்து பார்த்த சாரதி எழுதிருக்கார்.


நடுவர் : மைலாபூர் பார்த்தசாரதி பேரே நல்லாருக்கே ? எங்க படிங்க ?


அ.இ.பெ.தொ: சார் , உங்கள் நிகழ்சிகள் அனைத்தும் அருமை , அதிலும் அந்த எட்டுக்கால் பூச்சி பத்திய நிகழ்ச்சி மிகவும் அருமை , ஆனா அதுல வந்த எட்டுக்கால் பூச்சிக்கு எழு கால் தான் இருந்தது , ஏன் ????

நடுவர் : அது......, அதுவந்து....... அது ஊனமுற்றோர்களுக்கான நிகழ்ச்சி அதுதான்!!!!! நல்லா கேக்குரானுக கேள்வி ? (உஸ்.... அப்பா எப்படியெல்லாம் ஆப்பு வக்கிரானுக ), அடுத்த கடிதம் படிங்க ?

அ.இ.பெ.தொ: கோபிசெட்டி பாளையத்துல இருந்து , கோபி எழுதிருக்கார் சார் சார் , உங்கள் நகழ்ச்சிகள் அனைத்தும் அருமை ,அதிலும் சூப்பர் ஸ்டார் நடித்த எந்திரன் படம் அருமையோ அருமை ..

நடுவர் : ஏய்? நிறுத்து நிறுத்து நிறுத்து , அந்த படம் இன்னும் ரிலீசே ஆகலையே அப்புறம் எப்படி நம்ம டி.வி.ல??? (ஆஹா...... , எவனோ கள்ள டெலிகாஸ்ட் வேற பன்னிருக்கானுகளே ?) .

டே, டே.......... உடனே கடைய மூடுங்கடா , எஸ்கேப்ப்ப்ப்ப்ப்..............................

நன்றி நண்பர்களே மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சநதிப்போம் .

Thursday, May 27, 2010

யாராவது பெரிய படிப்பு படிச்சவுக இருக்கீகளா??????

வானிலை அறிக்கை

கடந்த பத்து நாட்களாக பிளாகர்களின் வானிலை மிக மந்தமாக உள்ளது , (அனேகமா எல்லாரும் ஆணி புடுங்க போய்ட்டாங்கன்னு நினைக்கிறன்) , தினமும் பதிவு போடும் பிளாகர்களை தவிர மத்த பிரபல பதிவர்களின் பிளாக்கள் "நம் மங்குனி அமைசர் ப்ளாக் உட்பட" (ஹி.ஹி..ஹி... எல்லாம் ஒரு விளம்பரம் தான் ) இந்த வாரம் மந்த நிலையிலேயே இருந்தன. இன்னும் ஒரு வாரத்திற்கு இதே நிலை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் திரு .ரமணன் கூறியுள்ளார் .

----------------------------------------

பிளீஸ் , பிளீஸ் யாராவது படிச்சவுக இங்க என்னா நடக்குதுன்னு படிச்சு பாத்து சொல்லுங்க ?

நக்சலைட் தாக்குதல்கள் :

* நக்சலைட்கள் போலீஸ் நிலையத்தை தாக்கி 12 போலீசாரை சுட்டு கொன்று ஆயுதங்களை கடத்தி சென்றனர் .


* 06/04/2010 , நக்சலைட் கண்ணிவெடி தாக்குதலில் 76 போலீசார் பலி

* 18/05/2010 , நக்சலைட் கண்ணிவெடி தாக்குதலில் 40 பேர் பலி

* 25/05/2010 , இரவில் வந்த நக்சல்கள் ரோடு போடு இயந்திரம் , மற்றும் சரக்கு வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்


முக்கிய செய்தி : உள்துறை அமைசர் திரு பா.சிதம்பரம் அறிக்கை....... நக்சலைட்கள் ஆயுதங்களை கீழே போடும்வரை தாக்குதல்கள் தொடரும்....(????)

மங்குனி : சார் , எனக்கு ஒன்னுமே புரியல ? திரு பா.சிதம்பரம் யாருக்கு எச்சரிக்கை விடுகிறார் ? யாராவது படிச்சவுக , விவரமான ஆட்கள் கொஞ்சம் சொல்லுங்களேன் , இந்த மரமண்டைக்கு ஒன்னும் பிரியல ????

----------------------------------------


உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பா மறுபடியும் கரண்ட்டு போச்சு (மொரைக்காதிக பில்லு கட்டிட்டேன் ) , ஒரே வியர்வை , டென்சன் , கோபம்... எல்லா வேலையும் கெட்டுப்போச்சு? ..... இதுக்கெல்லாம் யார் காரணம் ???

ஆற்காட்டு வீராசாமியா ?

இல்லைங்க பாவம் அவர் என்னா செய்வார்?


கலைஞர் ?


சீ, சீ .... பாவம் அவரே
மேல் சபை 6 எம்.பி க்கு வாரிசுகள் இல்லையேன்னு கவலைல இருக்கார் .

பின்ன ஜெயலலிதாவா ?


அட போக சார் ,
சும்மா காமடி பன்னிகிட்டு இதெல்லாம் கவனிக்க அவுகளுக்கு நேரம் எங்க இருக்கு ?

அப்ப யாருன்னு சொல்லி தொலை ?

எல்லாத்துக்கும் காரணம் அந்த படவா ராஸ்கோல் நம்ம "மைகேல் பாரடே" (இவருதானே கரண்ட கண்டுபுடிச்சாரு??? ) தான் சார் , அந்த ஆள் மட்டும் கரண்ட்ட கண்டுபுடிகாட்டி நமக்கு இந்த டென்சன் இருக்குமா? , இப்படி ப்ளாக் ஆரம்பிச்சு இந்த இம்ச பட்ருப்பமா? இந்த பாழாப்போன கம்ப்யுடர் முன்னாடி உட்கார்ந்து இப்படி பொலம்புவமா ? அந்த ஆளு , "மைகேல் பாரடே" மட்டும் என்கைல கிடைச்சான் ? அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது ...... ஆமா சொல்லிபுட்டேன் , அந்த ஆள் கிட்ட சொல்லி கொஞ்ச நாள் என் கண்ல படவேனாம்னு சொல்லிவைங்க ..................(அந்த ஆள் நேரா ஜெனரேட்டர் கண்டுபுடிசிருக்க வேண்டியது தானே ?)

Monday, May 24, 2010

வழக்கம் போல "பல்பு" தான்

முஸ்கி: அது எப்படிதான் நம்மள பத்தி தெரியுதோ??? , தேடி, தேடி வந்து பல்பு குடுக்குரானுக....

ஒன்னுமே புரியல உலகத்துலே
என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது

.................................
.................................


காலைல எழும்போதே கரண்ட் இல்ல , ஒரே டென்சன் ,பக்கத்து
வீட்ல கரண்ட் இருக்கு நமக்கு இல்ல , பீ.பீ கூடிபோச்சு , ஈ.பீக்கு போன போட்டு என்னான்னு கேட்டா , இன்னைக்கு சன்டே லீவு நீங்க நாளைக்கு போன் பனுங்கன்னு சொல்றாங்க , அட சன்டேல கூட போன எடுக்குறாங்கன்னு பாத்தா , அது ரெகார்டேட் மெசேஜ் ???!!!

சரின்னு அன்னைக்கு பூராம் பக்கத்து வீட்லயே பேமிலியோட சாப்டோம் , (பாருங்க எங்க வீட்ல கரண்ட் போனா கேஸ் அடுப்பும் எரியமாட்டேன்கிது).

மறுநாள் மன்டே (தோ...டா... பெரிய கண்டுபிடிப்பு ), மறுபடியும் ஈ.பீக்கு போன போட்டு.....


"ஹலோ , ஈ.பீ ஆபிசா ?"


"ஆமா சார் , சொல்லுங்க "


"(என்னாட இது மரியாதையா பேசுறாங்கன்னு நினைசுகிடே ) என்ன சார் வேலை பாக்குறிங்க ? ரெண்டுநாளா என் வீட்ல கரண்ட் இல்லை?, சம்மர் வேற சீக்கிரம் சரிபன்னுங்க சார் ...

"
சாரி சார் , கோபபடாதிங்க இப்பவே சரி பன்னிடுறோம் , உங்க அட்ரெஸ் சொல்லுங்க ? "

"நம்பர் 44 , .... .... (மங்கு சத்தபோடாம சொல்லு உன் அட்ரெஸ் தேடி ஒரு பெரிய பிளாகர் குரூப் அலைஞ்சுகிட்டு இருக்கு , பீ கேர் புல் பர்சையும் , கிரெடிட் கார்டையும் பத்திரமா காப்பாத்திக்க) "

சார் கொஞ்சம் உங்க ஈ.பீ நம்பர் சொல்லுங்க


"388 ............ ."


"யோவ் பஸ்ட்டு பில்ல கட்டுயா, கரண்ட் தானா வரும் "


"....ங்ங்ங்ங்கே ??????????"

டுஸ்கி: ஆஹாஹா............ இன்னைக்கு காலைலே சைத்தான் தலை சீவ ஆரம்பிச்சிடுச்சு , இனி அது சடை பின்னி , பூவச்சு, பொட்டு வைக்காம போகாதே???? குலசாமி என்னைய நீ தான் காப்பாத்தனும்

சரின்னு , வண்டி எடுத்துகிட்டு ஆபீஸ் கிளம்புனேன் , கிளம்பி ஒரு 15 நிமிசத்துல வண்டி ஆபாயிடுச்சு, நானும் ரொம்ப நேரம் என்னென்னமோ ட்ரை பன்னி பாத்தேன் வண்டி ஸ்டார் ஆகல ,நேத்து தானே சர்வீஸ் பன்னோம் , மெக்கானிக் நாம் குளோஸ் பிரண்டுதான் , போன போட்டேன்

நா அடிச்சா தாங்கமாட்ட, நாலுமாசம் தூங்க மாட்ட .........
(அந்த பயலோட ரிங்க்டோன்)

"ஹலோ..."

"ஹலோ மாமா என்னையா வேல பாத்த , வண்டி ஆபிஸ் போகும்போது ஆபாயிடுச்சுடா ?"

"அடடா எங்க?"

"உதயம் தியேட்டர் பக்கத்துல "

"சோக் போட்டு ஸ்டார்ட் பன்னி பாரு ."

"எல்லாம் பாத்துட்டேன் ஒன்னும் வேலைக்காகல"

"அப்படியா சரி இரு வர்றேன் "

அவனும் பாவம் உடனே ஒரு வண்டில வந்து சேந்தான் , வந்தவன் ஒரு ரெண்டு நிமிஷம் வண்டிய நோண்டுனான் அப்புறம் வண்டிய விட்டு என்னைய சொறிநாய பாக்குற மாதிரி பாத்தான் ,

"என்னடா மாமா என்னாச்சு ?"

"போடா , பொறம்போக்கு, நாதாரி நாயே,டோமரு , பேமானி , நீ என்னைக்காவது தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அடிபட்டு தாண்டா சாவ ...."

"ஏ , எனாச்சு மாமா ஏன் இவ்வளவு டென்சனா இருக்க?"

"டே பரதேசி , பஸ்ட்டு வண்டிக்கு பெட்ரோல் போடுடா"

அப்பதாங்க கவனிச்சேன் பெட்ரோல் காலியாகி வண்டி ஆபாயிருக்கு. (எல்லா பயலுகளும் கோபக்கார பயலுகளா இருக்கானுக.)

டிஸ்கி : நம்ம மேல ஒன்னும் தப்பு இல்லை , நம்ம ஜாதகத்துலதான் ஏதோ பிசகு (வேற வழி எப்படிதான் தப்பிகிறது )

கிஸ்கி : எதுக்கு ஒரு அளவு இருக்கு?, என்னைய பாத்தா லூசு மாதிரியா இருக்கு?
அடுத்து இந்தமாதிரி ஏதாவது ஆச்சு? , பீ கேர்புல் (நான் என்னை சொன்னேன் ),