பாருங்க எங்க ஆபிசுல ஆணிபுடுங்க சொல்லி அநியாயம் பண்றானுக , எனக்கு ஆணிபுடுங்க தெரியாதுன்னு அவனுகளுக்கே தெரியும் , ஆனாலும் அழிச்சாட்டியம் பண்றானுக , அதுதான் வேலைய ரிசைன் பண்ணிட்டு பேசாம கவுருமெண்ட்டு ஆபீசுல வேலைக்கு சேந்திடலாம்ன்னு இருக்கேன். எனவே நண்பர்களே என்னால் அதிக நேரம் ப்ளாக் -களில் செலவிடமுடியவில்லை , யாரும் தவறாக நினைக்காதீர்கள் . சீக்கிரம் இந்த ஆணிகள புடுங்கி எறிஞ்சிட்டு வந்துடுறேன்.------------------------------------------------------
அன்பான நேயர்களே , அருமையான நன்பர்களே நீங்கள் ஆவலுடன்(????) எதிபார்த்த "மங்குனி டி.வி" இன்று முதல் இனிதே ஆரம்பம் ..... டொன்ட்ட..... டொன்ட்ட.......டொன்ட்ட.....டொய்ய்யிமங்குனி டி.வி யின் முதல் நிகழ்ச்சியாக நேயர் கடிதம்???
(யோவ் இன்னைக்கு தான் டி.வி ஆரம்பிச்சிக அதுக்குள்ள எப்படி நேயர் கடிதம்????)
சார் , சும்மா டென்சன் ஆகாதிக , எல்லா பயலுகளும் திருட்டு டி.வி.டில பாத்துட்டு லெட்டர் போட்ருக்கானுக!!!!
நடுவர் : சரி சரி , முதல் லெட்டர படிங்க ?அழகான இளம் பெண் தொகுப்பாளினி (ஹி .ஹி ,ஹி ): புழல் ஜெயில்ல இருந்து , வெடிகுண்டு முருகேசன் எழுதியிருக்கார் சார் ,நடுவர் : புழல் ஜெயில்ல டி.வி.யா ? எங்க படிங்க?அ.இ.பெ.தொ : சார் நான் உங்க டி.வி நிகழ்சிகள பார்த்தேன் , ரெண்டு நாளா திருட்டு டி.வில திருட்டு டி.வி.டில உங்க நிகழ்சிகள் அனைத்தையும் பார்த்தேன்................!!!!!, நான் இன்னும் ரெண்டு நாள்ல ரிலீஸ் ஆகுறேன் !!! ....அதுக்குள்ள கவுரதையா சொல்றேன் மரியாதையா உங்க டி.வி கம்பனிய மூடிட்டு ஓடிடுன்ங்க... இல்ல மவனே வந்தவுடன் மொதோ டெட் பாடி நீதான் , நாதாரி என்னைய மறுபடியும், மறுபடியும் கொலகாரனாக்காத..............
நடுவர் : மொதோ கடிதமே டெர்ரரா இருக்கு???, சரி , சரி அடுத்த கடிதத்த படிங்க?
அ.இ.பெ.தொ : சார் மைலாபூர்ல இருந்து பார்த்த சாரதி எழுதிருக்கார்.
நடுவர் : மைலாபூர் பார்த்தசாரதி பேரே நல்லாருக்கே ? எங்க படிங்க ?
அ.இ.பெ.தொ: சார் , உங்கள் நிகழ்சிகள் அனைத்தும் அருமை , அதிலும் அந்த எட்டுக்கால் பூச்சி பத்திய நிகழ்ச்சி மிகவும் அருமை , ஆனா அதுல வந்த எட்டுக்கால் பூச்சிக்கு எழு கால் தான் இருந்தது , ஏன் ????
நடுவர் : அது......, அதுவந்து....... அது ஊனமுற்றோர்களுக்கான நிகழ்ச்சி அதுதான்!!!!! நல்லா கேக்குரானுக கேள்வி ? (உஸ்.... அப்பா எப்படியெல்லாம் ஆப்பு வக்கிரானுக ), அடுத்த கடிதம் படிங்க ?
அ.இ.பெ.தொ: கோபிசெட்டி பாளையத்துல இருந்து , கோபி எழுதிருக்கார் சார் சார் , உங்கள் நகழ்ச்சிகள் அனைத்தும் அருமை ,அதிலும் சூப்பர் ஸ்டார் நடித்த எந்திரன் படம் அருமையோ அருமை ..
நடுவர் : ஏய்? நிறுத்து நிறுத்து நிறுத்து , அந்த படம் இன்னும் ரிலீசே ஆகலையே அப்புறம் எப்படி நம்ம டி.வி.ல??? (ஆஹா...... , எவனோ கள்ள டெலிகாஸ்ட் வேற பன்னிருக்கானுகளே ?) .
டே, டே.......... உடனே கடைய மூடுங்கடா , எஸ்கேப்ப்ப்ப்ப்ப்..............................
நன்றி நண்பர்களே மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சநதிப்போம் .