எங்க காலேஜுல வருசத்துக்கு ஒரு வாட்டி ஏதாவது தமிழ் படம் ஒன்னு போடுவாங்க . (நல்ல காலேஜா இருக்கு போல ?) .
ஆடிடோரியத்துல ஸ்கிரின் வச்சு , சின்ன ப்ரொஜெக்டர் வச்சு போடுவாங்க .( வெங்காயம் நீ மேட்டர சொல்லு, எங்களுக்கு தெரியும் , எங்க ஊர் திருவிழாவுல பாத்திருக்கோம் )
காலைல புல்லா லேடிஸ் , அவுக வீட்டுக்கு போனப்புறம் மதியம் பசங்களுக்கு (அப்பவே என்னா வில்லத்தனம்? ).
நான் யு.ஜி செகண்டு இயர் படிக்கும்போது அந்த வருட சினிமா "சின்னத்தம்பி" ( நீங்களே விசில் அடித்து கொள்ளவும் ) , வழக்கம் போல காலைல லேடிஸ் எல்லாம் படம் பாத்திட்டு கிளம்பினாங்க , நானும் பிரண்டு சிவாவும் வழக்கம் போல எங்க பிகருகள கொண்டுபோய் வீட்ல டிராப் பன்னிட்டு(அட சைக்கிள்ல பின்னாடியே போவம்ங்க ) திரும்ப வந்தோம் .
"அப்போ காலேஜுல போயி இந்த செகுரிடி வேல பாத்திகளா ??"
"நாயிக்கு தெரியுமா ஒரு சந்தி பானை , கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசன (அடபழமொழி , திட்டாத விடுப்பா ஒரு புலோல வந்திருச்சு ) . "
சரி காலேஜ் உள்ள போறத்துக்கு முன்னாடி ஒரு "டீ" சாப்பிடலாம்ன்னு "டீ"கடைல போய் "டீ" சாப்ட்டுகிட்டு இருந்தோம் . ( பன்னாட "டீ"ய போய் "டீ" கடைலசாப்பிடாம அப்புறம் பர்னிச்சர் கடையிலையா போய் "டீ" சாப்பிடுவாங்க,.... உஸ்....... அப்பா எத்தின "டீ" )
திடீர்ன்னு நம்ம பிரண்டு ஒரு பய பின்னங்கள் பிடரில அடிக்க தப தபன்னு ஓடிவந்தான் , அவனுக்கு பின்னாடியே காலேஜ் வாட்ச்மேன் ரெண்டு பேருஅப்புறம் நம்ம எதிரி குரூப் பசங்க ரெண்டு பேரு தொரத்திகிட்டே வந்தாங்க , வந்தவனுக நம்ம பிரண்ட புடிச்சு தரதரன்னு காலேஜுக்குள்ள இழுக்கஆரம்பிச்சானுக , நாங்க ஓடிப்போயி என்னன்னு கேட்குறதுக்குள்ள அடிதடிஆகிப்போச்சு , நம்ம பயல அடிச்சா விடுவமா ?
நாங்களும் அடிக்க ஆரம்பிச்சோம் திடீர்ன்னு "ஸ்டாப் இட்" ன்னு சத்தம், எவ அவன்னு திரும்பி பார்த்தா ???
பிரன்சிபால் மற்றும் ஏழு டிபார்ட்மன்ட் H.O.D எல்லாம் புடைசூழ நிக்கிறாங்க , நேரா எங்க அஞ்சு பேத்தையும் பிரின்சிபால் ரூமுக்கு கூப்ட்டு போய் நாலு நாள் சஸ்பென்ட் பண்ணாங்க. ( நாங்க ரெண்டுபேரு , ஓடிவந்த நம்ம பிரண்டு எதிரிகுரூப் பசங்க ரெண்டுபேரு).
சரின்னு நம்ம பயல தனிய கூப்ட்டு என்னடா நடந்திச்சுன்னு கேட்டா , சின்னத்தம்பி படத்துல போவோமா ஊர்கோலம் பாட்டு ஓடும்போது இந்த நாதாரி உணச்சிவசப்பட்டு வேகமா ஓடிப்போய் குஸ்புவுக்கு முத்தம் குடுத்திருக்கு , அப்பஸ்க்ரீன் கீழ விழுந்திடுச்சு , இது பயந்து போய் ஓடிவந்திருக்கு அவனுகளும் என்னமோ ஏதோன்னு தொரத்திருக்கானுக .
இந்த நாயிஅங்கே இருந்திருந்தா பேச்சு வார்த்தையிலேயே பிரச்சனை முடிச்சிருக்கும் . (அடிதடி நடக்கு போது காலேஜ் பியூன் ரெண்டுபேருக்குஅடிவிளுந்திருக்கு அதுதான் சஸ்பென்சன் .)
இதுக்கு பேருதான்
"தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டும் "
அப்படின்கிறதோ ??? (அட மங்கு இன்னைக்கு என்னடா ஒரே பழமொழியா இருக்கு? அசத்துடா ?)
ஆடிடோரியத்துல ஸ்கிரின் வச்சு , சின்ன ப்ரொஜெக்டர் வச்சு போடுவாங்க .( வெங்காயம் நீ மேட்டர சொல்லு, எங்களுக்கு தெரியும் , எங்க ஊர் திருவிழாவுல பாத்திருக்கோம் )
காலைல புல்லா லேடிஸ் , அவுக வீட்டுக்கு போனப்புறம் மதியம் பசங்களுக்கு (அப்பவே என்னா வில்லத்தனம்? ).
நான் யு.ஜி செகண்டு இயர் படிக்கும்போது அந்த வருட சினிமா "சின்னத்தம்பி" ( நீங்களே விசில் அடித்து கொள்ளவும் ) , வழக்கம் போல காலைல லேடிஸ் எல்லாம் படம் பாத்திட்டு கிளம்பினாங்க , நானும் பிரண்டு சிவாவும் வழக்கம் போல எங்க பிகருகள கொண்டுபோய் வீட்ல டிராப் பன்னிட்டு(அட சைக்கிள்ல பின்னாடியே போவம்ங்க ) திரும்ப வந்தோம் .
"அப்போ காலேஜுல போயி இந்த செகுரிடி வேல பாத்திகளா ??"
"நாயிக்கு தெரியுமா ஒரு சந்தி பானை , கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசன (அடபழமொழி , திட்டாத விடுப்பா ஒரு புலோல வந்திருச்சு ) . "
சரி காலேஜ் உள்ள போறத்துக்கு முன்னாடி ஒரு "டீ" சாப்பிடலாம்ன்னு "டீ"கடைல போய் "டீ" சாப்ட்டுகிட்டு இருந்தோம் . ( பன்னாட "டீ"ய போய் "டீ" கடைலசாப்பிடாம அப்புறம் பர்னிச்சர் கடையிலையா போய் "டீ" சாப்பிடுவாங்க,.... உஸ்....... அப்பா எத்தின "டீ" )
திடீர்ன்னு நம்ம பிரண்டு ஒரு பய பின்னங்கள் பிடரில அடிக்க தப தபன்னு ஓடிவந்தான் , அவனுக்கு பின்னாடியே காலேஜ் வாட்ச்மேன் ரெண்டு பேருஅப்புறம் நம்ம எதிரி குரூப் பசங்க ரெண்டு பேரு தொரத்திகிட்டே வந்தாங்க , வந்தவனுக நம்ம பிரண்ட புடிச்சு தரதரன்னு காலேஜுக்குள்ள இழுக்கஆரம்பிச்சானுக , நாங்க ஓடிப்போயி என்னன்னு கேட்குறதுக்குள்ள அடிதடிஆகிப்போச்சு , நம்ம பயல அடிச்சா விடுவமா ?
நாங்களும் அடிக்க ஆரம்பிச்சோம் திடீர்ன்னு "ஸ்டாப் இட்" ன்னு சத்தம், எவ அவன்னு திரும்பி பார்த்தா ???
பிரன்சிபால் மற்றும் ஏழு டிபார்ட்மன்ட் H.O.D எல்லாம் புடைசூழ நிக்கிறாங்க , நேரா எங்க அஞ்சு பேத்தையும் பிரின்சிபால் ரூமுக்கு கூப்ட்டு போய் நாலு நாள் சஸ்பென்ட் பண்ணாங்க. ( நாங்க ரெண்டுபேரு , ஓடிவந்த நம்ம பிரண்டு எதிரிகுரூப் பசங்க ரெண்டுபேரு).
சரின்னு நம்ம பயல தனிய கூப்ட்டு என்னடா நடந்திச்சுன்னு கேட்டா , சின்னத்தம்பி படத்துல போவோமா ஊர்கோலம் பாட்டு ஓடும்போது இந்த நாதாரி உணச்சிவசப்பட்டு வேகமா ஓடிப்போய் குஸ்புவுக்கு முத்தம் குடுத்திருக்கு , அப்பஸ்க்ரீன் கீழ விழுந்திடுச்சு , இது பயந்து போய் ஓடிவந்திருக்கு அவனுகளும் என்னமோ ஏதோன்னு தொரத்திருக்கானுக .
இந்த நாயிஅங்கே இருந்திருந்தா பேச்சு வார்த்தையிலேயே பிரச்சனை முடிச்சிருக்கும் . (அடிதடி நடக்கு போது காலேஜ் பியூன் ரெண்டுபேருக்குஅடிவிளுந்திருக்கு அதுதான் சஸ்பென்சன் .)
இதுக்கு பேருதான்
"தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டும் "
அப்படின்கிறதோ ??? (அட மங்கு இன்னைக்கு என்னடா ஒரே பழமொழியா இருக்கு? அசத்துடா ?)
