எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, July 8, 2010

குப்பைக்கு போகும் கடவுள்கள்

என்னுடைய போன பதிவில் வருத்தங்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கு என் நன்றி . கடந்த இரண்டு நாட்களாக காவல்துறை இது சம்மந்தமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் . ரொம்ப நல்ல விஷயம் . இனி இது போல் ஒரு விபத்து நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .

-------------------------------------

முஸ்கி : மூடு சரியில்லாததால் இந்த முறை நோ மொக்க பதிவு , எனவே என் மனதில் ரொம்ப நாளாக இருந்த ஒரு ஆதங்கம் .

குப்பைக்கு போகும் கடவுள்கள்

என்னா தலைப்ப பாத்து டென்சன் ஆகிட்டிகளா ? ஆனா நியாயமான கேள்வி? நீங்களே கரக்டா பதில் சொல்லுங்கள்.

இது ஜாதி மத வேறுபாடு இல்லாமல் எல்லா மதத்திலும் நடக்கின்றது .

எங்கே ? எப்படி ?

கல்யாண பத்திரிகை , காலண்டர் போன்றவற்றில் போடப்படும் கடவுள் படங்கள்.

அனைத்தும் கடைசியில் குப்பையில் தான் போய் சேருகின்றன . அதிலும் மிக அதிகமாக செலவு செய்து சில கல்யாண பத்திரிகைகளில் கடவுள்கள் சிலை போல எம்போஸ் (கொஞ்சம் 3D எஃபக்டில் இருக்கும்) செய்து மிக அழகாக பத்திரிகை அடிக்கிறார்கள் . ஆனால் அது கடைசியில் குப்பைக்கு தான் செல்கிறது. .

இதே மாதிரி மிக செலவு செய்து மிக அழகான பத்திரிகை அடித்த என் நண்பன் ஒருவனிடம் கேட்டேன், இல்லை அதை பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார் . அது எப்படி சாத்தியம்? என் வீட்டையே எடுத்து கொண்டால் ஒரு வருடத்திற்கு நியாயமாக இருபது கல்யாண பத்திரிகைகள் வருகின்றது , ஐந்து , பத்து வருடங்கள் ஆனால் எவ்வளவு பத்திரிகைகள் இருக்கும்? அதை என்ன செய்வது ?

அதே போல் காலண்டர்கள்??? அதில் மிக மிக பெரிதாக ஆயில் பிரிண்ட் செய்வார்கள் , ஒரு வருடத்திற்கு பிறகு மிக நிச்சையமாக அது குப்பைக்கு தான் போகும் , எவ்வளவு படங்களை சேர்த்து வைக்க முடியும் ???

எனவே கல்யாண பத்திரிகை , காலண்டர் போன்ற வற்றில் கடவுள் படங்களை தவிர்க்கலாமே ???

இதே போல் வேறு ஒன்றும் உள்ளது ?

தேசிய கொடி

ஒரு முறை சென்னையில் நடந்த கிரிகெட் பார்க்க ஸ்டேடியம் சென்றோம் , அங்கு பத்து ரூபாய்க்கு மிக அழகான சிறிய பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசிய கொடி கொடுத்தார்கள் , கிட்டத்தட்ட அங்கு வந்த அனைவரும் வாங்கி விட்டார்கள் , மேட்ச் நடக்கும் போது அனைவரும் கொடியை காட்டினார்கள் மிகவுல் அழகாக இருந்தது .

மேட்ச் முடிந்து வெளியே வந்து பார்த்தால் நூற்றுக்கனக்கான தேசிய கொடிகள் தரையிலும் குப்பையிலும் கிடந்தன. அனைத்தையும் பொருக்கி எடுக்கலாம் என்றால் , எடுத்து என்ன செய்வது ???

நாங்கள் வாங்கியதை எங்கள் வண்டியில் மாட்டி விட்டோம், ஆனாலும் அது கடைசியில் குப்பைக்கு தான் சென்றது.

எனவே இது போன்ற விசியங்களை தவிர்ப்பது நல்லது .


87 comments:

கன்கொன் || Kangon said...

உண்மை...
அதுவும் தேசியக் கொடிகளை சுதந்திர தினத்திலும், இப்படியான கிறிக்கற் போட்டிகளிலும் மட்டும் தான் மதிக்கிறோம்.

கடவுள் - ஹி ஹி... :)))

மர்மயோகி said...

கடவுளுக்கு உருவம் கற்பிப்பதைபோல ஒரு முட்டாள்தனம் இல்லை..அதனால் குப்பைக்குபோவது கடவுள் அல்ல..வெறும் ஓவியங்கள்தான்..
அதுபோல விளையாட்டில்தான் நம்மவர்களின் தேச பக்தி பொங்கி வழியும். இதுவும் மூடத்தனம்தான்...

Madhavan Srinivasagopalan said...

Rightly said.

Infact we keep 'god' pictures from 'marriage invitation' separately... Yes, you can see invitation dt. 1930s are lying in my house.

But, it is not practical for all and also by years, it will need a separate room.

Hence I second your advice..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

திருந்திய மங்குனிக்கு, திருந்தாத ஜென்மம் பட்டாபட்டியின் கமென்ஸ்.

என்ன(மா)மோ சொல்றே.. ?..

நீ கலக்கு மச்சி..ஹி..ஹி

ஜில்தண்ணி said...

பணம் இருப்பவர்கள் பக்கம் பக்கமாக படம் போட்டு பத்திரிக்கை அடிக்கிறார்கள்
பணம் இல்லாதவங்க மஞ்சள் பத்திரிக்கை தான்

பணத்த எப்புடி செலவு பன்றது,இப்படித்தான்

ஜெய்லானி said...

இதுவும் என்னோட சந்தேக லிஸ்டில இருந்துச்சி மாம்ஸ் , நல்ல கேள்விதான்

ஆனா சரியான பதில வரவே வராது. தப்புன்னு தெரிஞ்சும் செய்யுர வேலை இது .

ஜெய்லானி said...

மங்கு புத்திசாலி யாயிட்டே ..எங்கய்யா டிரைனிங் நடக்குது..

Unknown said...

குப்பைகள் குப்பை தொட்டிக்குதான் போகும் ..

தேசியக்கொடி என்பதால் அதனையும் தலைமேல் வைத்து கொள்ளவா முடியும்?

ரொம்பதான் உணர்ச்சி வசப்படுறீங்க.. Be Cool

மங்குனி அமைச்சர் said...

கன்கொன் || Kangon said...

உண்மை...
அதுவும் தேசியக் கொடிகளை சுதந்திர தினத்திலும், இப்படியான கிறிக்கற் போட்டிகளிலும் மட்டும் தான் மதிக்கிறோம்.

கடவுள் - ஹி ஹி... :))) ////

நன்றி கன்கொன்

எனக்கு ஒரு டவுட்டு , அது கன்கொன் என்னாங்க ? அப்படின்னா என்ன ?

Unknown said...

யோவ் மங்குனி உமக்கு எதுக்குய இந்த வேலை நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு!

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

கடவுளுக்கு உருவம் கற்பிப்பதைபோல ஒரு முட்டாள்தனம் இல்லை..அதனால் குப்பைக்குபோவது கடவுள் அல்ல..வெறும் ஓவியங்கள்தான்..
அதுபோல விளையாட்டில்தான் நம்மவர்களின் தேச பக்தி பொங்கி வழியும். இதுவும் மூடத்தனம்தான்...////

உஸ்... அப்பா உன்கிட்ட இருந்தது தப்பிக்கவே முடியாதே ???

மங்குனி அமைச்சர் said...

Madhavan said...

Rightly said.

Infact we keep 'god' pictures from 'marriage invitation' separately... Yes, you can see invitation dt. 1930s are lying in my house.

But, it is not practical for all and also by years, it will need a separate room.

Hence I second your advice..////


நன்றி மாதவன் சார்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

திருந்திய மங்குனிக்கு, திருந்தாத ஜென்மம் பட்டாபட்டியின் கமென்ஸ்.

என்ன(மா)மோ சொல்றே.. ?..

நீ கலக்கு மச்சி..ஹி..ஹி////

இதுக்கு நீ நேர்லயே அடிச்சிருக்கலாம்

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

பணம் இருப்பவர்கள் பக்கம் பக்கமாக படம் போட்டு பத்திரிக்கை அடிக்கிறார்கள்
பணம் இல்லாதவங்க மஞ்சள் பத்திரிக்கை தான்

பணத்த எப்புடி செலவு பன்றது,இப்படித்தான்////

மஞ்சள் பத்திரிகைகளில் கூட கடவுள் படம் இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

இதுவும் என்னோட சந்தேக லிஸ்டில இருந்துச்சி மாம்ஸ் , நல்ல கேள்விதான்

ஆனா சரியான பதில வரவே வராது. தப்புன்னு தெரிஞ்சும் செய்யுர வேலை இது .////

நான் முந்திகிட்டேனா ??

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

மங்கு புத்திசாலி யாயிட்டே ..எங்கய்யா டிரைனிங் நடக்குது..///


ஹி,ஹி,ஹி கீழ்பாகத்துல

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

குப்பைகள் குப்பை தொட்டிக்குதான் போகும் ..

தேசியக்கொடி என்பதால் அதனையும் தலைமேல் வைத்து கொள்ளவா முடியும்?

ரொம்பதான் உணர்ச்சி வசப்படுறீங்க.. Be Cool///


கரக்ட்டு செந்தில் சார்

மங்குனி அமைச்சர் said...

ஆண்டாள்மகன் said...

யோவ் மங்குனி உமக்கு எதுக்குய இந்த வேலை நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு!////

சும்மா ஒரு சேஞ்சுக்கு , (செட்டாகலையோ ???)

ஜில்தண்ணி said...

//மஞ்சள் பத்திரிகைகளில் கூட கடவுள் படம் இருக்கும் //

அப்ப என் கல்யான பத்திரிக்கையில மங்குனி படத்த போட்டுட வேண்டியது தான்,அது குப்பைக்கு போனா ரைட்டுதான்

Jey said...

மங்குனி, இந்த ரெண்டும் நடந்துகிட்டுதான் இருக்கும், ஃபிராக்டிகலா யோசிச்சா இத மாத்த முடியாதுன்னுதான் தோனுது. மக்கள் பலகிட்டாங்கய்யாஅ பலகிட்டாய்ங்க.

பேப்பர்ல இருக்குற கடவுளுக்கும் செண்டிமெண்டா?!!!. அவர் பேரச் சொல்லி நாதாரித்தனம் பண்ணாம இருந்தா போதும் மங்கு. அதுகெல்லாம் ஃபீல் பண்ணாதே:)

ஜில்தண்ணி said...

மங்கி சாரி மங்கு இப்பலெல்லம் நம்ம கட பக்கம் வருவதே இல்ல,ஏன் யா

உமக்காக கடவுளை பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேன்,வந்து பாருய்யா

http://jillthanni.blogspot.com/2010/07/blog-post_07.html

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

//மஞ்சள் பத்திரிகைகளில் கூட கடவுள் படம் இருக்கும் //

அப்ப என் கல்யான பத்திரிக்கையில மங்குனி படத்த போட்டுட வேண்டியது தான்,அது குப்பைக்கு போனா ரைட்டுதான் ////


என்மேல உனக்கு இவ்ளோ கலைவெறி இருக்கா ???

மங்கு எஸ்கேப்

Jey said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...
//மஞ்சள் பத்திரிகைகளில் கூட கடவுள் படம் இருக்கும் //

அப்ப என் கல்யான பத்திரிக்கையில மங்குனி படத்த போட்டுட வேண்டியது தான்,அது குப்பைக்கு போனா ரைட்டுதான் ///

மங்குனி கடைசில அடுத்தவங்கள அவங்க கல்யாணபத்திடிக்கைல, உன் படத்த போடுறளவுக்கு, தள்ளிவிட்டுட்டியே, எப்படியா?!!, என்னமோ போய்யா!!:)

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி, இந்த ரெண்டும் நடந்துகிட்டுதான் இருக்கும், ஃபிராக்டிகலா யோசிச்சா இத மாத்த முடியாதுன்னுதான் தோனுது. மக்கள் பலகிட்டாங்கய்யாஅ பலகிட்டாய்ங்க.

பேப்பர்ல இருக்குற கடவுளுக்கும் செண்டிமெண்டா?!!!. அவர் பேரச் சொல்லி நாதாரித்தனம் பண்ணாம இருந்தா போதும் மங்கு. அதுகெல்லாம் ஃபீல் பண்ணாதே:)////


இப்ப சொன்னியே இது கரக்க்ட்டு

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மங்கி சாரி மங்கு இப்பலெல்லம் நம்ம கட பக்கம் வருவதே இல்ல,ஏன் யா

உமக்காக கடவுளை பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேன்,வந்து பாருய்யா

http://jillthanni.blogspot.com/2010/07/blog-post_07.html///


பாத்தாச்சு , படிச்சாச்சு காமன்ட்சும் போட்டாச்சு தல

மங்குனி அமைச்சர் said...

Jey said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...
//மஞ்சள் பத்திரிகைகளில் கூட கடவுள் படம் இருக்கும் //

அப்ப என் கல்யான பத்திரிக்கையில மங்குனி படத்த போட்டுட வேண்டியது தான்,அது குப்பைக்கு போனா ரைட்டுதான் ///

மங்குனி கடைசில அடுத்தவங்கள அவங்க கல்யாணபத்திடிக்கைல, உன் படத்த போடுறளவுக்கு, தள்ளிவிட்டுட்டியே, எப்படியா?!!, என்னமோ போய்யா!!:)///


அப்ப நானும் கடவுள் , இல்லை தலைவன் , பஸ்ட்டு தலைவன்

ILLUMINATI said...

//மஞ்சள் பத்திரிகைகளில் கூட கடவுள் படம் இருக்கும்//

பார்றா! மஞ்சத் தண்ணியப் பத்தி கவலைப்பட வேண்டிய ஆடு மஞ்சப் பத்திரிக்கையைப் பற்றி கவலைப்படுது. :P

சிநேகிதன் அக்பர் said...

கவலைப்படாதிங்க மங்குனி இதுக்கெல்லாம் கடவுள் வருத்தப்படமாட்டார். உலகமே அவருடையதுதானே.

எம் அப்துல் காதர் said...

சிரிப்பாய் எழுதுபவர்கள் மனதில் நிறைய சோகம் இருக்கும் என்பது எனக்கு நல்லாவே தெரியும் சார்,, உங்கள் மனதில் இவ்வளவு துக்கமா சார்?? ,, அல்லாவே எனக்கு தெரியாம போச்சே,, இந்த ஜெய்லானியும் சொல்லல(!!),, இருக்கட்டும் நடந்தவை எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொண்டு பழைய நிலைக்கு திரும்பி வாங்க சார்?? be cheerful .. எல்லாம் நலமாகும்..

(இதுக்கு நீங்க கிண்டலடிச்சு பதில் எழுதிடாதிங்க.. இப்பவே சொல்லிட்டேன்-அப்படி எழுதிட்டா சகஜமாகிடீங்கன்னு அர்த்தம்)

Prasanna said...

மரியாத மனசுல இருந்த போதும்னு சொல்லி தப்பிச்சிக்கலாம் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடுத்த செம்மொழி விழா அழைப்பிதல (சீ எத்தன ழ) மன்குனியோட போட்டோ போடுமாறு அறிவுறுத்தப் படுகிறது...

முத்து said...

மங்கு,

ராசா,

நல்லாதானே இருக்கே!

இல்லை

வெயில் உன்னை ஓவரா டிஸ்டர்ப் பண்ணுதா!

பட்டா கிட்ட சொல்லி நியு வாட்டர் வாங்கி அடி சரியாகிடும்

பொன் மாலை பொழுது said...

தீபாவளி சமயங்களில் வெடிக்கும் வெடிகளில் கூட கடவுளின் படங்கள்.வெடித்து சிதறி தெருக்கள் நாறிகிடக்குமே!.
நம்மவர்களிடம் இருக்கும் பத்தாம் பசலி தனங்களுக்கு அளவே இல்லை.
கடவுள் படங்கள் போட வேண்டும் என்ற வெடி செய்பவனின் எண்ணம்.
அப்படி போட்டால் தான் விற்கும் என்ற வியாபாரியின் எண்ணம் .
அதை வாங்கி வெடிக்க வேண்டும் என்ற வாங்குபவரின் எண்ணம்.
வெடித்த பின்னர் "இப்படி குப்பையாகி விட்டதே " என்ற நம் போன்றோர் எண்ணம்
தீபாவளியும்,
வெடிகளில் கடவுள் படங்களும்,
ஏன் தேச பக்க்தியும் கூட கிறுக்குத்தனம் தானோ?!
(பின்னூட்டம் இடுவதும் கூட ).

Anonymous said...

மங்குனி நீங்க சொல்லறது மிகவும் சரி ..கடவுள் படங்கள் கல்யாண பத்திரிகையிலும் காலேண்டரிலும் போடவே கூடாது ..ஆனா நாம சொன்னா யாரு கேக்க போறாங்க பா ..சீரியஸ் பதிவு நல்லா இருக்கு ..

வால்பையன் said...

பக்தனிடம் நன்றியையும், பொருளையும் வாங்கும் கடவுளை மானங்கெட்ட பிச்சைகார கடவுள் என சொல்லலாமா!?

யுக கோபிகா said...

கடவுள் படம் போக வேண்டிய இடமும் அது தான் ....
கடைசியில் நம் உடல் போக கூடிய இடமும் அது தான் ......
நல்ல காமடி பதிவு .....

Unknown said...

//கல்யாண பத்திரிகை , காலண்டர் போன்றவற்றில் போடப்படும் கடவுள் படங்கள்.

அனைத்தும் கடைசியில் குப்பையில் தான் போய் சேருகின்றன //

’எல்லாம் அவன் செயல்’ என்றிருக்கும்போது, அவனது படத்தை குப்பைக்கு அனுப்புவதும் அவன் செயல்தானே :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

அமைச்சரே என்ன புதுசா இருக்கு..

இந்த மாதம் கடவுள் மாதமோ.. எங்கே திரும்பினாலும் இந்த கன்றாவியா தான் இருக்கு..

மங்குனி அமைச்சர் said...

ILLUMINATI said...

//மஞ்சள் பத்திரிகைகளில் கூட கடவுள் படம் இருக்கும்//

பார்றா! மஞ்சத் தண்ணியப் பத்தி கவலைப்பட வேண்டிய ஆடு மஞ்சப் பத்திரிக்கையைப் பற்றி கவலைப்படுது. :P ///


விடு, விடு , கொஞ்சம் ஆடட்டும் ஆடு

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...

கவலைப்படாதிங்க மங்குனி இதுக்கெல்லாம் கடவுள் வருத்தப்படமாட்டார். உலகமே அவருடையதுதானே.///


அப்படியா ????

மங்குனி அமைச்சர் said...

எம் அப்துல் காதர் said...

சிரிப்பாய் எழுதுபவர்கள் மனதில் நிறைய சோகம் இருக்கும் என்பது எனக்கு நல்லாவே தெரியும் சார்,, உங்கள் மனதில் இவ்வளவு துக்கமா சார்?? ,, அல்லாவே எனக்கு தெரியாம போச்சே,, இந்த ஜெய்லானியும் சொல்லல(!!),, இருக்கட்டும் நடந்தவை எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொண்டு பழைய நிலைக்கு திரும்பி வாங்க சார்?? be cheerful .. எல்லாம் நலமாகும்..

(இதுக்கு நீங்க கிண்டலடிச்சு பதில் எழுதிடாதிங்க.. இப்பவே சொல்லிட்டேன்-அப்படி எழுதிட்டா சகஜமாகிடீங்கன்னு அர்த்தம்)////


இதுக்கெல்லாம் நாங்க அசர மாட்டோம்

மங்குனி அமைச்சர் said...

பிரசன்னா said...

மரியாத மனசுல இருந்த போதும்னு சொல்லி தப்பிச்சிக்கலாம் :)////


இது நல்லாருக்கே

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடுத்த செம்மொழி விழா அழைப்பிதல (சீ எத்தன ழ) மன்குனியோட போட்டோ போடுமாறு அறிவுறுத்தப் படுகிறது...////


ஆகா , அவனா நீ ???? இரு உனக்கு ஆப்பு வைக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

மங்கு,

ராசா,

நல்லாதானே இருக்கே!

இல்லை

வெயில் உன்னை ஓவரா டிஸ்டர்ப் பண்ணுதா!

பட்டா கிட்ட சொல்லி நியு வாட்டர் வாங்கி அடி சரியாகிடும்///


ஆமா முத்து , தக்காளி வெயிலு ரொம்ப ஓவரா இருக்கு

கண்ணகி said...

ஆமால்ல....ம்..

ஆமா..நீங்க நல்லவரா...கெட்டவரா....

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...

தீபாவளி சமயங்களில் வெடிக்கும் வெடிகளில் கூட கடவுளின் படங்கள்.வெடித்து சிதறி தெருக்கள் நாறிகிடக்குமே!.
நம்மவர்களிடம் இருக்கும் பத்தாம் பசலி தனங்களுக்கு அளவே இல்லை.
கடவுள் படங்கள் போட வேண்டும் என்ற வெடி செய்பவனின் எண்ணம்.
அப்படி போட்டால் தான் விற்கும் என்ற வியாபாரியின் எண்ணம் .
அதை வாங்கி வெடிக்க வேண்டும் என்ற வாங்குபவரின் எண்ணம்.
வெடித்த பின்னர் "இப்படி குப்பையாகி விட்டதே " என்ற நம் போன்றோர் எண்ணம்
தீபாவளியும்,
வெடிகளில் கடவுள் படங்களும்,
ஏன் தேச பக்க்தியும் கூட கிறுக்குத்தனம் தானோ?!
(பின்னூட்டம் இடுவதும் கூட ).///


அய்யோ தல, அப்படி நினைச்சு பின்னூட்டத்த விட்ராதீக , அதுதான் நமக்கு ஊக்க டானிக்

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

மங்குனி நீங்க சொல்லறது மிகவும் சரி ..கடவுள் படங்கள் கல்யாண பத்திரிகையிலும் காலேண்டரிலும் போடவே கூடாது ..ஆனா நாம சொன்னா யாரு கேக்க போறாங்க பா ..சீரியஸ் பதிவு நல்லா இருக்கு ..////

ரொம்ப நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

பக்தனிடம் நன்றியையும், பொருளையும் வாங்கும் கடவுளை மானங்கெட்ட பிச்சைகார கடவுள் என சொல்லலாமா!?///


கடவுளுக்கு "மானம்" இருக்கா வால்ஸ்

மங்குனி அமைச்சர் said...

me the 50

ஐ நான் தான் 50

மங்குனி அமைச்சர் said...

யுக கோபிகா said...

கடவுள் படம் போக வேண்டிய இடமும் அது தான் ....
கடைசியில் நம் உடல் போக கூடிய இடமும் அது தான் ......
நல்ல காமடி பதிவு .....//


ஆகா , இது என்ன புது டிரண்டா இருக்கு , காமடி பதிவா ? ஒன்னும் புரியல

மங்குனி அமைச்சர் said...

பரிதி நிலவன் said...

//கல்யாண பத்திரிகை , காலண்டர் போன்றவற்றில் போடப்படும் கடவுள் படங்கள்.

அனைத்தும் கடைசியில் குப்பையில் தான் போய் சேருகின்றன //

’எல்லாம் அவன் செயல்’ என்றிருக்கும்போது, அவனது படத்தை குப்பைக்கு அனுப்புவதும் அவன் செயல்தானே :)////


இது பாயிண்ட்டு , இப்ப கரக்டா வர்ரிங்க , வாங்க வாங்க

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

அமைச்சரே என்ன புதுசா இருக்கு..

இந்த மாதம் கடவுள் மாதமோ.. எங்கே திரும்பினாலும் இந்த கன்றாவியா தான் இருக்கு..////


ஆமா சார் , ஆமா எல்லாம் வேண்டுதல் போல

மங்குனி அமைச்சர் said...

கண்ணகி said...

ஆமால்ல....ம்..

ஆமா..நீங்க நல்லவரா...கெட்டவரா....////


கடவுள் பாதி , மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்

சூன்யா said...

எல்லா இடத்திலயும் கடவுள் இருக்கார் மங்குனி... குப்பையிலயும்....

மங்குனி அமைச்சர் said...

Soonya said...

எல்லா இடத்திலயும் கடவுள் இருக்கார் மங்குனி... குப்பையிலயும்....////

அட இதுவும் நல்ல பாயின்ட்

vasu balaji said...

கடவுள் படங்கள்னு சொல்லாம கடவுள்னு சொன்னது கடவுள் செயலோ:))

சீமான்கனி said...

பாராட்டப்பட வேண்டிய சிந்தனை வாழ்த்துக்கள் அமைச்சரே...இன்னும் நிறைய கருத்துகள் சேர்த்திருக்கலாம்...என்பது என் தாழ்மையான கருத்து...

GEETHA ACHAL said...

உண்மை தான் மங்குனி...அனைவரும் கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம்...

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

கடவுள் படங்கள்னு சொல்லாம கடவுள்னு சொன்னது கடவுள் செயலோ:)) ////


அப்படித்தான் நினைக்கிறன்

மங்குனி அமைச்சர் said...

seemangani said...

பாராட்டப்பட வேண்டிய சிந்தனை வாழ்த்துக்கள் அமைச்சரே...இன்னும் நிறைய கருத்துகள் சேர்த்திருக்கலாம்...என்பது என் தாழ்மையான கருத்து...///


இருக்கலாம் , நம்ம மண்டைல அவ்வளவுதான் சார் தோணிச்சு

மங்குனி அமைச்சர் said...

GEETHA ACHAL said...

உண்மை தான் மங்குனி...அனைவரும் கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம்...///

நன்றி கீதா ஆச்சல் மேடம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனி..எங்கிருந்தாலும், பட்டாபட்டியின் விளையாட்டு திடலுக்கு வரவும்...

வெளியூர்காரன் மாட்டியிருக்கான்..
வரும்போது.. மறக்காம, CarryBag எடுத்துகொண்டு வரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
( தலக்கறி மட்டும் எனக்கு.. டாக்டர் சொல்லியிருக்காரு...)

சௌந்தர் said...

நல்லவே சொல்லி இருகீங்க அமைச்சர் அவர்களே

pinkyrose said...

naamathaan ipdi sollitu thiriyuramonu oru feelings romba naala paravalla nammala mathiri innonnum irukungrathu santhosama (pch erichal nu epdi veliya solla mudiyum?!)irukkkkkku...

http://rkguru.blogspot.com/ said...

ஒரு மீட்டர் துணியல எங்க இருக்கு தேசிய உணர்வு....அது வெறும் மனத்தின் கற்பனை

athira said...

எம்பி.. வர வர நீங்க சீரியஸாகிக்கொண்டு வாறீங்க, இது அவ்வளவு நல்லதில்லை:), மொக்கை தான் உங்களுக்கு அழகூஊ:).. சரி சரி உந்த ஆராச்சி எல்லாம் எனக்கெதுக்கு.
&&&&&&&& &&&&&&&& &&&&&&&&&

இம்முறை போட்ட பதிவு உண்மையிலேயே நல்ல பதிவு. உங்களிடத்தில் மட்டுமில்லை, தமிழர்கள் வாழும் இடமெல்லாம் இதுதான் பிரச்சனை.

அதிலும் இப்போ, சைவத் திருமணங்களில் அதிகம் பிள்ளையார் படம்தான் இருக்கும், இப்போ பிள்ளையாரை தங்கச் சிலைபோல செய்து கார்ட் முகப்பிலே ஒட்டிவிடுகிறார்கள்.

கார்ட் அடித்துக் கொடுப்பவர்களுக்கு தீங்கில்லை, ஏனெனில் அவர்கள் பத்திரமாக பூஜை அறையில் வைத்துத்தான் கொடுக்கிறார்கள், ஆனால் வாங்குபவர்கள்தான் சாபத்திற்கு ஆழாக வேண்டி இருக்கு.

நானும் எத்தனையைத்தான் பாதுகாப்பதென சில கலண்டர்களை ரீசைக்கிள் பின்னுக்குள் போட்டுவிடுவேன், ஆனால் பின்னர் ஏதும் அசம்பாவிதம் நடந்தால், அதனால்தானோ என மனம் பதைக்கும். எதுக்கெல்லாம் பயப்பூட வேண்டிக்கிடக்கு.

ஆனால் இதுக்கு யாருமே தகுந்த பதில் தந்ததாக இல்லையே, அதாவது சுவாமிப்படங்களை குப்பையில் வீசுவது சரியோ என. எதிலும் நம்பிக்கையில்லாதவர்களானால் பிரச்சனை இல்லை, நம்பிக்கை இருப்பவர்கள் நடுங்கித்தான் ஆகவேண்டும்:).

பின் குறிப்பு:
இனி யாராவது வைபவங்களுக்கு கார்ட்டில் படம் போட ஆசைப்பட்டால், எங்கட ஜெய்..லானியின் படத்தைப் போடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்....

கடவுளே என்னைக் காப்பாத்துங்கோ நான் ஒரு அப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆவி.

athira said...

உங்கள் நண்பனின் இழப்புத்தான், உங்களைக் கடவுளைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறதோ எம்பி? அல்லது நீங்கள் எப்பவும் கடவுள் நம்பிக்கை உள்ளவரோ?

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

மங்குனி..எங்கிருந்தாலும், பட்டாபட்டியின் விளையாட்டு திடலுக்கு வரவும்...

வெளியூர்காரன் மாட்டியிருக்கான்..
வரும்போது.. மறக்காம, CarryBag எடுத்துகொண்டு வரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
( தலக்கறி மட்டும் எனக்கு.. டாக்டர் சொல்லியிருக்காரு...)///


எனக்கு கேரி பேக் பத்தாது , இரு ஒரு குண்டான் எடுத்துட்டு வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

நல்லவே சொல்லி இருகீங்க அமைச்சர் அவர்களே///


நன்றி சௌந்தர் சார்

மங்குனி அமைச்சர் said...

pinkyrose said...

naamathaan ipdi sollitu thiriyuramonu oru feelings romba naala paravalla nammala mathiri innonnum irukungrathu santhosama (pch erichal nu epdi veliya solla mudiyum?!)irukkkkkku...///


விடுங்க சங்கம் அமைச்சிடுவோம்

மங்குனி அமைச்சர் said...

rk guru said...

ஒரு மீட்டர் துணியல எங்க இருக்கு தேசிய உணர்வு....அது வெறும் மனத்தின் கற்பனை///

உண்மைதான் குரு சார்

மங்குனி அமைச்சர் said...

athira said...



கடவுளே என்னைக் காப்பாத்துங்கோ நான் ஒரு அப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆவி.////

சொல்ல தேவை இல்லை . பாத்தாலே தெரியுது நீங்க ஒரு ஆவின்னு

மங்குனி அமைச்சர் said...

athira said...

உங்கள் நண்பனின் இழப்புத்தான், உங்களைக் கடவுளைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறதோ எம்பி? அல்லது நீங்கள் எப்பவும் கடவுள் நம்பிக்கை உள்ளவரோ?///


ஹி,ஹி,ஹி

Anonymous said...

"வால்பையன் said...

பக்தனிடம் நன்றியையும், பொருளையும் வாங்கும் கடவுளை மானங்கெட்ட பிச்சைகார கடவுள் என சொல்லலாமா!?"

ஏன் வாலு கடவுள் நம்ம கிட்டே பொருள் கொடுன்னு கேக்கவே இல்லையே அப்போ மானம்கெட்ட பிச்சைகாரர்கள், பொருள் கொடுத்து.. வாங்கற ஆளுங்க தானே ?

வால்பையன் said...

//ஏன் வாலு கடவுள் நம்ம கிட்டே பொருள் கொடுன்னு கேக்கவே இல்லையே அப்போ மானம்கெட்ட பிச்சைகாரர்கள், பொருள் கொடுத்து.. வாங்கற ஆளுங்க தானே ? //


போற்றி போற்றின்னு துதி பாடும் போது கேட்டுகிட்டு இருப்பதும் லஞ்சம் தானே!

vanathy said...

மங்கு, உண்மைதான். காலண்டரில் சாமி படம் போட்டால் எறிய மனம் வராது. நடிகைகள் படங்கள்/ இயற்கை காட்சி போட்ட காலண்டர்களாக பார்த்து வாங்குவது நலம்.

'பரிவை' சே.குமார் said...

உண்மைதான்.

Karthick Chidambaram said...

Kodi, Kadavul ellam paarvayay poruthathu.

Anonymous said...

"வால்பையன் said...

//ஏன் வாலு கடவுள் நம்ம கிட்டே பொருள் கொடுன்னு கேக்கவே இல்லையே அப்போ மானம்கெட்ட பிச்சைகாரர்கள், பொருள் கொடுத்து.. வாங்கற ஆளுங்க தானே ? //


போற்றி போற்றின்னு துதி பாடும் போது கேட்டுகிட்டு இருப்பதும் லஞ்சம் தானே!"



அய்யா வாலு போற்றி போற்றி துதி பாட அவர் கேக்கவே இல்லையே பா இதும் இந்த மானங்கெட்ட பிச்சைகாரர்கள் செய்யற வேலை தானே ?

செல்வா said...

கடவுள் படத்த போட்டு குப்பைல போட்டதுக்கு எல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க ..அது நம்மளோட நம்பிக்கை.. இவ்ளோ அழக சாப்பிடறோம் , பேசறோம் , ப்ளாக் எழுதறோம் .. ஒரு நாளைக்கு நம்மளையும் மண்ணுக்குள்ள தான் போட போறாங்க .. அந்த மாதிரி தாங்க ..

(அப்புறம் வர வர உங்க ரூட்டே சரியில்லையே )

athira said...

July 10, 2010 10:38 AM
ப.செல்வக்குமார் said...
கடவுள் படத்த போட்டு குப்பைல போட்டதுக்கு எல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க ..அது நம்மளோட நம்பிக்கை.. இவ்ளோ அழக சாப்பிடறோம் , பேசறோம் , ப்ளாக் எழுதறோம் .. ஒரு நாளைக்கு நம்மளையும் மண்ணுக்குள்ள தான் போட போறாங்க .. அந்த மாதிரி தாங்க ..///

இது சூப்பர் பதில்... ஆனால் கடவுளும் மனிசரும் ஒன்றோ? சந்தேகம் வந்திட்டுதெனக்கு.

கபிலன் said...

ககக போ.....

தேசியக்கொடி...கொஞ்சம்...யோசிக்கலாம்...
அது இருக்கும் இடத்தை பொறுத்தே அதன் மரியாதை அமைகிறது...
கிரிக்கெட்டுக்கு மட்டும் ஆட்டிகொண்டிருக்கும்.......___________களை பற்றி..என்ன சொல்ல....
அங்கு ஆட்டும் போதே அதன் மரியாதை கெட்டுவிடுகிறது...பின் அது குப்பைக்கு போவது கூட நல்லதுதான்...
பணம் கொழிக்கும் கிரிக்கெட்....விளையாட்டு என்பதை தாண்டி நல்ல வியாபாரமாகிறது...
நம் தேசிய விளையாட்டாக ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது...
நாம் ஆட்டிகொண்டிருப்பதனால்.....கொடியை...

அன்புடன் கபிலன்...

Gayathri said...

வால்பையன் அவர்களின் கமென்ட் என்னை ரொம்ப்கவே பதிச்சுது.கடவுள காகா பிடிக்க மனுஷன் தான் நான் இதை கானிக்கையா செலுத்ரென் இத செய்ரேன் அத செய்ரேன்னு வேண்டிகிரான்.கடவுள் நம்ம கிட்ட எதயுமே எதிர்பக்கர்து இல்ல.உங்க கிட்ட எந்த கடவுள் எதை கேட்டது என்று சொல்ல முடியுமா.தயவு செய்து பிறற் மனது புன்படும் கமென்ஸய் தவிர்கலாமே.

வால்பையன் said...

//தயவு செய்து பிறற் மனது புன்படும் கமென்ஸய் தவிர்கலாமே.//


கடவுளே இல்லைனா உங்க மனசு ஏன் புண்படுது!?

வால்பையன் said...

//அய்யா வாலு போற்றி போற்றி துதி பாட அவர் கேக்கவே இல்லையே பா இதும் இந்த மானங்கெட்ட பிச்சைகாரர்கள் செய்யற வேலை தானே ? //

எதுவுமே கேக்காத கல்லுக்கு எதுக்கு கோவில்!

Anonymous said...

ஒரு தடவை கல்ண்டர் சீசனில் கடைக்குபோய் கலண்டர் கேட்டேன் சாமி கல்ண்டர் தந்தார். வேண்டாம் என்றேன். எனக்கு ந்டிகை கல்ண்டர்தான் வேனும் என்றேன். உண்ட வயசுக்கு இது வேனுமா என்றார்.ஆமாம் அதுதான் வேனும் ஏனென்றால் வருசம் முடிய சாமிபடத்தை குப்பயில் எறிய மனம் வராது.ஆனால் நடிகைபடத்தை கூச்சமிலாமல் கசக்கி எறியலாம் என்றேன். அதன்பிறகு எப்போதுமே ந்டிகைகளின் படம் தான் த்ருவார் கடைக்கரர்.

Meerapriyan said...

namakku pidikkaathavan padathai podalaamaa manguni sir...hi..hi..-meerapriyan