எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, August 23, 2010

தக்காளி செத்தடா நீ

பாருங்க அன்னைக்கு காலைலேயே பூனை குறுக்க போச்சு (யார்ர அவன் பூனைக்கு என்னாச்சுன்னு சவுண்டு விடுறவன்? ) , நரி ஊளை இட்டுச்சு (யோவ், அது அதோட பிகருக்கு சிக்னல் கொடுக்குதுய்யா ), பல்லி சொட்டான் போட்டுச்சு(குளிக்காத உன் மூஞ்சிய பாத்து பயந்திருக்கும் ). ஆஹா..., இன்னைக்கு இயற்கை மொத்தமும் நமக்கு எதிரா செயல்படுதே , என்ன நடக்கப் போகுதோ???

டக்குன்னு காலண்டருல நம்ம ராசிக்கு என்னா பலன்னு பாத்தேன் , "தக்காளி செத்தடா நீ " (காலண்டருல இப்படியெல்லாமா ராசிபலன் போடுவாங்க ?) அப்படின்னு போட்டு இருந்தது .

கடவுளே இன்னைக்கு வர்ற சோதனைல இருந்து என்னைய காப்பத்திட்டன்னா , நம்ம பட்டாப்பட்டி, ஜெய்லானி ,ஜெய் , பன்னிகுட்டி, டெர்ரர் பாண்டி , முத்து , அருண் பிரசாத் , பனங்காட்டுநரி,கோமாளி , ரமேஷ் (ஐ .... மாட்னிங்களா, மாட்னிங்களா, மாட்னிங்களா) எல்லாருக்கும் மொட்டை போட்டு காத்து குத்தி தீச்சட்டி எடுக்க வக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன் .(இதுல விட்டு போனவுங்க அவுங்களா மரியாதையா வந்து மொட்டை போட்டுகங்க ).

"டேய் மங்கு ...."
(எங்க அப்பா தாங்க )

"இங்க வா , இந்த கவர கொண்டு போய் , போடில இருக்க நம்ம ஆடிட்டர் கிட்ட குடுத்திட்டு வா"

"சரிப்பா"

"அவரு வீடு தெரியும்ல ?"

"அட்ரஸ் குடுங்கப்பா போயிடுவேன் "

"நான் ஒரு வாட்டி சொல்றேன் கேட்டுக்க "

"(எனக்கு பகீருன்னு ஆகிப் போச்சு , ஏன்னா? அவரு அட்ரஸ் டீடைல் சொல்றத பத்தி உங்களுக்கு தெரியாது, ஆஹா .....இன்னைக்கு ராசி பலன் பலிச்சிடும் போல இருக்கே ?) "

"நேரா பஸ்டாண்டு போ , அங்க போடி பஸ் இருக்கான்னு பாரு , இல்லை பாளையம் , கம்பம் பஸ் இருக்கான்னு பாரு"


"சரி "

" வழி சின்னமன்னூர் அப்படின்னு போட்டு இருக்கும்............

"இம் .............."

அதுல ஏறிராத, வழி போடி
போட்ருக்கும் , அதுல ஏறு "

"(ஆஹா இதுதான் சோதனையின் ஆரம்பமா ) "அப்பா எனக்கு தெரியும்ப்பா "

"அதுக்கில்லைடா , நீபாட்டுக்கு மாத்தி போயிட்டா ? போடிக்கு போனவுடனே பஸ்ட்டு பார்க் ஸ்டாப் நிக்கும்.... இறங்கிராத, அடுத்து அரண்மனை ஸ்டாப் நிக்கும்.... அதுல இறங்கிராத , அடுத்தது பெருமாள் கோவில் ஸ்டாப் நிக்கும்.... அதிலையும் இறங்கிராத "

"(அவ்வ்வ்வ்வ்வ்...............................என்னங்கடா .....அடிச்சு கூட கேப்பாக , அப்பவும் சொல்லிராதிக கதையா இருக்கே? )

"நேரா பஸ்டாண்டுல போய் இறங்கு "

"( பஸ் ஸ்டாண்டுல போய் இறங்குன்னு முதல்லே சொல்லிருக்கலாம்ல? )"


"பஸ்டாண்ட விட்டு வெளியவந்த உடனே லெப்ட்ல பாத்தா ஒரு சந்து போகும்ல ?"

"ஆமா"

"அதுல போயிராத "

"(உஸ்.................முடியல , வேணாம்........... அழுதிடுவேன் )"

"அதுக்கு அடுத்த சந்துல போனேன்னா , இடது கைபக்கம் பஸ்ட்டு புளுகலர் கேட் போட்ட வீடு இருக்கும்"

"சரி"

"அந்த வீடு இல்லை , அதுக்கு அடுத்த கிரீன் கலர்ல கேட் போட்டு போட்ட வீடு இருக்கும் "

"இம் .................(எவ்ளோ நேரந்தான் வலிக்காதது மாதிரியே நடிக்கிறது)"

"அந்த வீட்டுக்கு எதிர்த்த வீடு தான் ஆடிட்டர் வீடு , வெளில கூட போர்டு போட்டு இருக்கும் "

"("போடி பஸ்டாண்டுக்கு வெளிய செகண்டு லெப்டுல ரைட் சைடு ரெண்டாவது வீடுன்னு சொல்லவேண்டியதுதானே? , ஏன் இந்த கொல வெறி? )"

"அந்த வீட்டுல போய் காலிங் பெல் அடிச்சேன்னா? தலையல்லாம் நரச்சுபோன வயசான ஒருத்தர் முண்டா பனியன் போட்டுக்கிட்டு வந்து கதவ திறப்பார் "

"அவர்கிட்ட குடுத்துடவா ?"

"அட அவரு ஆடிட்டர் இல்லைப்பா , அவரு மகன் தான் ஆடிட்டர் , அவரு மகன் கிட்ட குடுக்க சொல்லி இந்த கவர அவர் கிட்ட குடுத்திட்டு வா "

"ஹா, ஹா, ஹா...............ஹா, ஹா, ஹா ..............."

"ஏன்டா சிரிக்கிற? "

"இல்ல உங்க ஆபீசுல உங்களுக்கு கீழ வேலை செய்றவங்க நிலமைய யோசிச்சு பாத்தேன்........ ஹா, ஹா, ஹா ...............ஹா, ஹா, ஹா ..............."

"அப்ப நீ இந்த வேலைக்கு சரிபட்டு வரமாட்ட , உங்க அண்ணன் எங்க ? அவன அனுப்பலாம் , டேய் .................."

டிஸ்கி : ஜஸ்ட்டு மிஸ்ஸு , மக்கா பட்டாப்பட்டி, ஜெய்லானி ,ஜெய் , பன்னிகுட்டி, டெர்ரர் பாண்டி , முத்து , அருண் பிரசாத் , பனங்காட்டுநரி, கோமாளி , ரமேஷ் உங்களுக்கு மொட்டை கன்பாம்

139 comments:

Mohamed Faaique said...

அமைச்சருக்கு ......
முதல் வெட்டு.......
நாங்க வந்தா ரத்தம் பார்க்கம போக மாட்டோமில்ல...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///"("போடி பஸ்டாண்டுக்கு வெளிய செகண்டு லெப்டுல ரைட் சைடு ரெண்டாவது வீடுன்னு சொல்லவேண்டியதுதானே? , ஏன் இந்த கொல வெறி?///

ஹா ஹா ஹா.. அச்சோ சிரிச்சு முடியல..
என்னமா திங்க் பண்றாங்கப்பா?
ரொம்ப நல்லா இருக்கு.. என்ஜாய் பண்ணி வாசிச்சேன்.

Unknown said...

வந்தோம் வந்தனம் தந்தோம்

அருண் பிரசாத் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

முடியல

அருண் பிரசாத் said...

மங்குனி, இரு ஆணி புடிங்கிட்டு வந்து ஆட்டத்த வெச்சிக்கறேன்...

vels-erode said...

அப்பா அங்க.....மகன் இங்க....( ராவடி தாங்க முட்இயலடா சாமீமீமீமீஈஈ.....)

Anonymous said...

எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.. முடியல யப்பா!

vasu balaji said...

:)). இப்பதான் புரியுது மங்குனி எஃபெக்டு:)))

ஜெயந்த் கிருஷ்ணா said...

டக்குன்னு காலண்டருல நம்ம ராசிக்கு என்னா பலன்னு பாத்தேன் , "தக்காளி செத்தடா நீ

//

காலேண்டர் உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல்லா அச்சடிக்கிராங்களா... முடியலடா சாமி...

vinu said...

ippaaathaan theariyutthu paa eppudi ivolovu talent nammaa mangunni appudeenu naallaveallai namma manguni appaa blog worldkkuu varalai,



ippavea kannai kattutheaaaaaaaaaaaa

Anonymous said...

"(உஸ்.................முடியல , வேணாம்........... அழுதிடுவேன் )"
நான் அழுதிட்டேன் சிரிச்சு சிரிச்சு தான் ..மங்குனி சூப்பர் பா எப்பிடி பா இந்த மாதிரி எழுதறேன் ...அப்பாவும் பையனும் செம்மா லூட்டி தான்..

அப்புறம் மொட்டை போட்டு காது குத்தி தீ சட்டி எடுக்கற எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் ஹி ஹி ஹி

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... தப்பிச்சிட்டீங்களே!!! செம காமெடி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்கப்பா ஒரு பைசா செலவில்லாம ஊர சுத்தி காட்டிருக்காரே(உபயம்: துள்ளாத மனமும் துள்ளும்) அதை முன்னிட்டு மன்குக்கு அலகு குத்தி பால் காவடி எடுக்கலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஜஸ்ட்டு மிஸ்ஸு , மக்கா பட்டாப்பட்டி, ஜெய்லானி ,ஜெய் , பன்னிகுட்டி, டெர்ரர் பாண்டி , முத்து , அருண் பிரசாத் , பனங்காட்டுநரி, கோமாளி , ரமேஷ் உங்களுக்கு மொட்டை கன்பாம்//

இந்த ரமேஷ் யாருப்பா? எங்க இருக்கான் அந்த குழந்தை பையன்?

S Maharajan said...

இது தான் அமைச்சர் ஸ்டைல்

Gayathri said...

அடக்கடவுளே தாங்க முடியல பாவம் நீங்க.....சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது.....இப்படி கூட ஜாலியா வழி சொல்லலாமுன்னு தெரியாம போச்சே ..ஹா ஹா ஹா

Jey said...

//நம்ம பட்டாப்பட்டி, ஜெய்லானி ,ஜெய் , பன்னிகுட்டி, டெர்ரர் பாண்டி , முத்து , அருண் பிரசாத் , பனங்காட்டுநரி,கோமாளி , ரமேஷ் (ஐ .... மாட்னிங்களா, மாட்னிங்களா, மாட்னிங்களா) எல்லாருக்கும் மொட்டை போட்டு///

ஏம்ப்பா, தெரியாமதான் கேக்குரேன்..., நாங்க எதுக்குயா மொட்டை போடனும்..., இருடி..உனக்கு ஏழரை நடக்குதுன்னு நினைக்கிறேன்..

Jey said...

//அப்ப நீ இந்த வேலைக்கு சரிபட்டு வரமாட்ட , உங்க அண்ணன் எங்க ? அவன அனுப்பலாம்///

அவரையும் பிளாக் எழுத அனுப்பிராத ராசா... ஏற்கனவே இங்க காது..மூக்குல நெட்தம் வந்திட்டிருக்கு...( பீதிய கிளப்புரதே மங்குக்கு பொளப்பா போச்சி)

Jey said...

//அதுக்கில்லைடா , நீபாட்டுக்கு மாத்தி போயிட்டா ? ///

மங்கு மக்குப் பயபுள்ளைனு தெளிவாத் தெரிஞ்சிவச்சிருக்காரு...

ஆர்வா said...

அமைச்சரே... அசத்திவிட்டீரே... இந்தாரும் பொற்முடிப்பு

Mohan said...

ஏங்க! எப்படி, இப்படி? ரூம் போட்டு யோசிச்சீங்களா? வாய் விட்டு சிரித்தேன்... ரொம்ப நன்றிங்க!

Saran said...

எனக்கும் ஒரு மொட்டை...என்னாது சீப்பை ஒளிச்சு வெச்சுட்டாங்களா?

Katz said...

நேத்து தான் நான் பழனி பொய் மொட்டை போட்டுட்டு வந்தேன். எனக்கு எப்படி போடுவிங்க? ஹையோ ஹையோ!

சாந்தி மாரியப்பன் said...

செம கலாட்டா :-)))))))

முத்து said...

மங்கு உன் அப்பாவுக்கு உன் மேல் எவ்வளவு நம்பிக்கை

முத்து said...

மொட்டை தானே போட்டுட்டா போச்சு உனக்காக இது கூட செய்யலைனா எப்புடி?அப்புறம் ஒரு சின்ன விஷயம் ஒரு ரெண்டு லட்சம் கைமாத்தா கொடுத்தா இங்க ஒரு சின்ன செட்டில்மென்ட் முடிச்சுட்டு வந்துருவேன் நம்மக்குள் இது சகஜம் தானே

Ramesh said...

செம காமெடி...சத்தமா சிரிச்சு வெச்சிட்டேன்..ஆபிஸ்ல எல்லாம் என்னை ஒரு மாதிரி பாக்கறாங்க...

Anonymous said...

நீங்க தான் இப்படினு நெனச்சேன்.. உங்க அப்பாவுமா????

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

முடியல.

Jey said...

மங்குனி புதுப் பதிவா...சிரிச்சி மாலலை...சூப்பரா ...காமெடியா ...இருக்குயா....:)

ராஜவம்சம் said...

சொல்லிப்புட்டருல்ல சோக்காசொல்லிப்புட்டாருல்ல
போஸ்ட்மேன் வேலைக்கே லயக்கில்லன்னு சொல்லிப்புட்டாருல்ல.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

இந்த ஆடிட் டறு சொல்றியே ?!! அது நம்ம ஜெய் தானே மங்கு ???

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// பாருங்க அன்னைக்கு காலைலேயே பூனை குறுக்க போச்சு ///

நல்லா பாரு!! நீ நடந்து போகும் போது கண்ணாடியை பார்த்திருபே !!!!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// நரி ஊளை இட்டுச்சு ///

நான் வரவே இல்லை மங்கு எப்படி ? ஓ என் figure தான் தேனீ பக்கம் அதான் இருக்கும் !! இரு மங்கு ஒரு லவ் லெட்டர் தரேன் குடுத்துடு !!!

லவ் லெட்டர்

உ உ உ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ உ உ உ உ உ உ உ உ உ
உ உ உ
ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

உ உ உஉ உ உஉ உ உஉ உ உஉ உ உஉ உ உஉ உ உஉ உ உஉ உ உ....., ஜில்பான்சி ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// டக்குன்னு காலண்டருல நம்ம ராசிக்கு என்னா பலன்னு பாத்தேன் , "தக்காளி செத்தடா நீ "////

தப்பு மங்கு நீ பார்த்தது கடக ராசிக்கு ..,உன் ராசிக்கு இன்னைக்கு கடா வெட்டு

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/// எனக்கு பகீருன்னு ஆகிப் போச்சு , ஏன்னா? அவரு அட்ரஸ் டீடைல் சொல்றத பத்தி உங்களுக்கு தெரியாது, ///

SAME BLOOD மங்கு ,ஆமாம்ப ஆமா

என்னது நானு யாரா? said...

அமைச்சரே! என்ன மாதிரி கலக்கிட்டீங்கப்பா! அருண் சூப்பரா கலக்கி இருக்காரு! நீங்க வேற சூப்பரா கலக்கி இருக்கீங்க! அருமை! பேசாம நீங்க எல்லாம் சினிமால வசனம் எழுத போகலாம்!

நல்ல நகைசுவை படமா வெளிவரும்! காமெடி என்கின்ற பேரில, சும்மா சும்மா ஒருத்தர போட்டு அடிச்சுகிட்டு, இப்போ வர்ற காமெடி சீன விட நீங்க எழுதறது எல்லாம் அருமை!

மங்குனி அமைச்சர் said...

Mohamed Faaique said...

அமைச்சருக்கு ......
முதல் வெட்டு.......
நாங்க வந்தா ரத்தம் பார்க்கம போக மாட்டோமில்ல... ///

ரைட்டு , ஒரே போடா போடுங்க

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...

///"("போடி பஸ்டாண்டுக்கு வெளிய செகண்டு லெப்டுல ரைட் சைடு ரெண்டாவது வீடுன்னு சொல்லவேண்டியதுதானே? , ஏன் இந்த கொல வெறி?///

ஹா ஹா ஹா.. அச்சோ சிரிச்சு முடியல..
என்னமா திங்க் பண்றாங்கப்பா?
ரொம்ப நல்லா இருக்கு.. என்ஜாய் பண்ணி வாசிச்சேன்.///

ரொம்ப நன்றி ஆனந்தி

மங்குனி அமைச்சர் said...

A.சிவசங்கர் said...

வந்தோம் வந்தனம் தந்தோம்//

வாங்க , வாங்க சிவசங்கர் ரொம்ப நன்றி

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

மங்குனி, இரு ஆணி புடிங்கிட்டு வந்து ஆட்டத்த வெச்சிக்கறேன்...///

நீ என்னா பண்ணினாலும் மொட்டை கன்பாம்

மங்குனி அமைச்சர் said...

velumani1 said...

அப்பா அங்க.....மகன் இங்க....( ராவடி தாங்க முட்இயலடா சாமீமீமீமீஈஈ.....)///

நாங்க குடும்பத்தோட சமூக சேவை செய்றோம் velumani1 சார்

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.. முடியல யப்பா!///

பதிலுக்கு நீங்களும் போட்டு தாக்க வேண்டியது தானே

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

:)). இப்பதான் புரியுது மங்குனி எஃபெக்டு:)))///

ஹி,ஹி,ஹி ,,,, அப்ப இது ஜெனிடிக் பிராபலமுன்னு சொல்றிங்களா ???

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

டக்குன்னு காலண்டருல நம்ம ராசிக்கு என்னா பலன்னு பாத்தேன் , "தக்காளி செத்தடா நீ

//

காலேண்டர் உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல்லா அச்சடிக்கிராங்களா... முடியலடா சாமி...///

ஆமா சார் , எனக்கும் அதே டவுட்டு

மங்குனி அமைச்சர் said...

vinu said...

ippaaathaan theariyutthu paa eppudi ivolovu talent nammaa mangunni appudeenu naallaveallai namma manguni appaa blog worldkkuu varalai,



ippavea kannai kattutheaaaaaaaaaaaa///

ரொம்ப நன்றி வினு சார்

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

"(உஸ்.................முடியல , வேணாம்........... அழுதிடுவேன் )"
நான் அழுதிட்டேன் சிரிச்சு சிரிச்சு தான் ..மங்குனி சூப்பர் பா எப்பிடி பா இந்த மாதிரி எழுதறேன் ...அப்பாவும் பையனும் செம்மா லூட்டி தான்..///

அது ஒன்னும் இல்லைங்க மேடம் , சின்ன வயசுல தலைல லைட்டா அடி பட்டுச்சு அதுல இருந்து இப்படி ஆகிப்போச்சு மேடம்

/// அப்புறம் மொட்டை போட்டு காது குத்தி தீ சட்டி எடுக்கற எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் ஹி ஹி ஹி///

நேர்ல வந்து அவனுக மொட்டை போட்டு காத்து குத்தி தீச்சட்டி எடுக்குறத பாத்து வாழ்த்திட்டு போங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... தப்பிச்சிட்டீங்களே!!! செம காமெடி!///

வாங்க , வாங்க சித்தரா மேடம் , மயிரிழையில் உயிர் தப்பினேன்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்கப்பா ஒரு பைசா செலவில்லாம ஊர சுத்தி காட்டிருக்காரே(உபயம்: துள்ளாத மனமும் துள்ளும்) அதை முன்னிட்டு மன்குக்கு அலகு குத்தி பால் காவடி எடுக்கலாம்.///

நீ ஏன்னா சொன்னாலும் , மொட்டை , காதுகுத்து , தீச்சட்டி கண்பாமுடி

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஜஸ்ட்டு மிஸ்ஸு , மக்கா பட்டாப்பட்டி, ஜெய்லானி ,ஜெய் , பன்னிகுட்டி, டெர்ரர் பாண்டி , முத்து , அருண் பிரசாத் , பனங்காட்டுநரி, கோமாளி , ரமேஷ் உங்களுக்கு மொட்டை கன்பாம்//

இந்த ரமேஷ் யாருப்பா? எங்க இருக்கான் அந்த குழந்தை பையன்?///

அங்க பாரு , அந்த போடோவுல திருட்டுபய மாதிரியே ஒருத்தன் முழிச்சுகிட்டு இருக்கான் பாரு அவன்தான் ரமேஸ்

மங்குனி அமைச்சர் said...

அம்பாதாவது வெட்டு நான்தான்

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

இது தான் அமைச்சர் ஸ்டைல்//

வாங்க , வாங்க மகாராஜன் சார் , ரொம்ப நன்றி

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

அடக்கடவுளே தாங்க முடியல பாவம் நீங்க.....சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது.....இப்படி கூட ஜாலியா வழி சொல்லலாமுன்னு தெரியாம போச்சே ..ஹா ஹா ஹா///

வாங்க காயத்திரி மேடம் , ரொம்ப நன்றி , இன்னும் நிறையா இருக்கு மேடம்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//நம்ம பட்டாப்பட்டி, ஜெய்லானி ,ஜெய் , பன்னிகுட்டி, டெர்ரர் பாண்டி , முத்து , அருண் பிரசாத் , பனங்காட்டுநரி,கோமாளி , ரமேஷ் (ஐ .... மாட்னிங்களா, மாட்னிங்களா, மாட்னிங்களா) எல்லாருக்கும் மொட்டை போட்டு///

ஏம்ப்பா, தெரியாமதான் கேக்குரேன்..., நாங்க எதுக்குயா மொட்டை போடனும்..., இருடி..உனக்கு ஏழரை நடக்குதுன்னு நினைக்கிறேன்..///

ஏம்பா ஒரு நண்பனோட வேண்டுதலா நிறைவேத்த மாட்டிங்களா ???? மரியாதையா மொட்டை போடுங்க இல்லை சாமி குத்தம் ஆகிப்போகும்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//அப்ப நீ இந்த வேலைக்கு சரிபட்டு வரமாட்ட , உங்க அண்ணன் எங்க ? அவன அனுப்பலாம்///

அவரையும் பிளாக் எழுத அனுப்பிராத ராசா... ஏற்கனவே இங்க காது..மூக்குல நெட்தம் வந்திட்டிருக்கு...( பீதிய கிளப்புரதே மங்குக்கு பொளப்பா போச்சி)///

ஹா.ஹா.,ஹா.ஹா.ஹா ...... ரொம்ப நேரம் சிரிச்சேன் ஜெய்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

//அதுக்கில்லைடா , நீபாட்டுக்கு மாத்தி போயிட்டா ? ///

மங்கு மக்குப் பயபுள்ளைனு தெளிவாத் தெரிஞ்சிவச்சிருக்காரு...///

சரியா சொன்ன

மங்குனி அமைச்சர் said...

கவிதை காதலன் said...

அமைச்சரே... அசத்திவிட்டீரே... இந்தாரும் பொற்முடிப்பு///

ரொம்ப நன்றி கவிதா காதலன் சார் , சே ... கவிதை காதலன் சார் (ஹி.ஹி.ஹி வாய் குலரிருச்சு )

மங்குனி அமைச்சர் said...

Mohan said...

ஏங்க! எப்படி, இப்படி? ரூம் போட்டு யோசிச்சீங்களா? வாய் விட்டு சிரித்தேன்... ரொம்ப நன்றிங்க!////

ரொம்ப , ரொம்ப நன்றி மோகன் சார்

மங்குனி அமைச்சர் said...

Saran said...

எனக்கும் ஒரு மொட்டை...என்னாது சீப்பை ஒளிச்சு வெச்சுட்டாங்களா?///

டேய் எல்லாரும் இங்க வாங்கடா , ஒரு ஆடு அதுவா தலைய காட்டுது (சும்மா தமாசுக்கு சரண் சார் , கருத்துக்கு ரொம்ப நன்றி )

மங்குனி அமைச்சர் said...

வழிப்போக்கன் said...

நேத்து தான் நான் பழனி பொய் மொட்டை போட்டுட்டு வந்தேன். எனக்கு எப்படி போடுவிங்க? ஹையோ ஹையோ!///

அப்ப காத்து குத்தி தீச்சட்டி எடுத்திடுங்க

மங்குனி அமைச்சர் said...

அமைதிச்சாரல் said...

செம கலாட்டா :-)))))))///

நன்றி அமைதிச்சாரல்

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

மங்கு உன் அப்பாவுக்கு உன் மேல் எவ்வளவு நம்பிக்கை///

அதானே, அப்புறம் நீ மொட்டை போடனும் மறந்துறாத

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

மொட்டை தானே போட்டுட்டா போச்சு உனக்காக இது கூட செய்யலைனா எப்புடி?அப்புறம் ஒரு சின்ன விஷயம் ஒரு ரெண்டு லட்சம் கைமாத்தா கொடுத்தா இங்க ஒரு சின்ன செட்டில்மென்ட் முடிச்சுட்டு வந்துருவேன் நம்மக்குள் இது சகஜம் தானே///

ஒரு மொட்டை ரெண்டு லட்சம் ரூபாயா ?? யோவ் முத்து எனக்கு வெறும் 1000 ரூபா குடுய்யா நான் ஜெயக்கு மொட்டை போட்டு விட்டிறேன்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ் said...

செம காமெடி...சத்தமா சிரிச்சு வெச்சிட்டேன்..ஆபிஸ்ல எல்லாம் என்னை ஒரு மாதிரி பாக்கறாங்க...///

ரொம்ப நன்றி ரமேஸ் (பாத்து சிரிங்க அப்புறம் ஏடாகூடமா ஆயிடப்போகுது )

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

நீங்க தான் இப்படினு நெனச்சேன்.. உங்க அப்பாவுமா????

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

முடியல.///

எல்லாம் அவரு கிட்ட இருந்துதான் நமக்கு தொத்திகிச்சு மேடம்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி புதுப் பதிவா...சிரிச்சி மாலலை...சூப்பரா ...காமெடியா ...இருக்குயா....:)//

வாங்க ஜெய் சார் , உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் ரொம்ப நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

ராஜவம்சம் said...

சொல்லிப்புட்டருல்ல சோக்காசொல்லிப்புட்டாருல்ல
போஸ்ட்மேன் வேலைக்கே லயக்கில்லன்னு சொல்லிப்புட்டாருல்ல.///


ஆஹா , இந்த ஆங்கிள்ள யாருமே யோசிக்கலையே ????

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

இந்த ஆடிட் டறு சொல்றியே ?!! அது நம்ம ஜெய் தானே மங்கு ???///

என்னப்பா நீ ஜெய் ய அசிங்கப்படுத்துற ? அவன் நாலாப்பு பெயிலு

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

//// பாருங்க அன்னைக்கு காலைலேயே பூனை குறுக்க போச்சு ///

நல்லா பாரு!! நீ நடந்து போகும் போது கண்ணாடியை பார்த்திருபே !!!!!///

சே,சே பூனை என்ன அவ்வளவு அசிங்கமாவா இருக்கும் ??

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

//// நரி ஊளை இட்டுச்சு ///

நான் வரவே இல்லை மங்கு எப்படி ? ஓ என் figure தான் தேனீ பக்கம் அதான் இருக்கும் !! இரு மங்கு ஒரு லவ் லெட்டர் தரேன் குடுத்துடு !!!

லவ் லெட்டர்

உ உ உ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ உ உ உ உ உ உ உ உ உ
உ உ உ
ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

உ உ உஉ உ உஉ உ உஉ உ உஉ உ உஉ உ உஉ உ உஉ உ உஉ உ உ....., ஜில்பான்சி ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ///

இந்த லெட்டர படிச்சு , கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னைய டைவேர்ஸ் பண்ணிரும் உன் பிகரு

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

//// டக்குன்னு காலண்டருல நம்ம ராசிக்கு என்னா பலன்னு பாத்தேன் , "தக்காளி செத்தடா நீ "////

தப்பு மங்கு நீ பார்த்தது கடக ராசிக்கு ..,உன் ராசிக்கு இன்னைக்கு கடா வெட்டு///

இந்த பலன் எவ்ளோ மேலப்பா

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

/// எனக்கு பகீருன்னு ஆகிப் போச்சு , ஏன்னா? அவரு அட்ரஸ் டீடைல் சொல்றத பத்தி உங்களுக்கு தெரியாது, ///

SAME BLOOD மங்கு ,ஆமாம்ப ஆமா////

அவ்வ்வ்வ்வ்...................... விடு நம்ம தலை எழுத்து

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

அமைச்சரே! என்ன மாதிரி கலக்கிட்டீங்கப்பா! அருண் சூப்பரா கலக்கி இருக்காரு! நீங்க வேற சூப்பரா கலக்கி இருக்கீங்க! அருமை! பேசாம நீங்க எல்லாம் சினிமால வசனம் எழுத போகலாம்!

நல்ல நகைசுவை படமா வெளிவரும்! காமெடி என்கின்ற பேரில, சும்மா சும்மா ஒருத்தர போட்டு அடிச்சுகிட்டு, இப்போ வர்ற காமெடி சீன விட நீங்க எழுதறது எல்லாம் அருமை!///

ரொம்ப நன்றி ,சார் ,,,, (ஆமா உங்கள எப்படி கூப்புடுறது )

Saran said...

//டேய் எல்லாரும் இங்க வாங்கடா , ஒரு ஆடு அதுவா தலைய காட்டுது//

உங்களின் நகைச்சுவை உணர்வு கண்டு மெய்சிலிர்த்தேன். பருத்தி பால் வேணுமா. (யாரங்கே ... பால்ல ரெண்டு ஸ்பூன் விஷத்த கலந்துடுங்க)

அ.முத்து பிரகாஷ் said...

நோக்கியா கேமரா மொபைல் வச்சிருக்கிற உங்க கிட்டேயே அப்பா இப்படிஎல்லா பண்றாரா ... நீங்க ரொம்ப பாவம் அமைச்சரே ...

senthil velayuthan said...

உஸ்.................முடியல

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

அமைச்சருக்கு ......

பதிவுலகத்துக்கு புதியவன்...!நம்ம பக்கத்தையும் வந்து பாருங்கள்,பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை ..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...! அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/

சீமான்கனி said...

ஏலேய் கைப்புள்ள தேனீ ,வீரபாண்டி,சின்னமனூர்,உத்தம பாளையம்,கம்பம்,போடி...எல்லா எடத்துலயும் வரிசையா ஆளப்போடு டா...அடுத்தவாட்டி மிஸ்ஸாக கூடாது...தக்காளி இவ்வோ பக்கத்துல இருந்தும் தெரியாம போச்சே....

Unknown said...

செம காமெடி......!

ஜெய்லானி said...

//எல்லாருக்கும் மொட்டை போட்டு காத்து குத்தி தீச்சட்டி எடுக்க வக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன்//

யோவ் மங்கு....என்னை மொட்டை போட்டு பாக்க அப்படி என்னா உனக்கு ஆசை..ஏன் இந்த கொலவெறி...

ஜெய்லானி said...

@@@sandhya //
அப்புறம் மொட்டை போட்டு காது குத்தி தீ சட்டி எடுக்கற எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் ஹி ஹி ஹி//

என்னது உங்களுக்குமாஆஆஆஆஆ..அவ்வ்வ்வ்

ஜெய்லானி said...

//ஏம்பா ஒரு நண்பனோட வேண்டுதலா நிறைவேத்த மாட்டிங்களா ???? மரியாதையா மொட்டை போடுங்க இல்லை சாமி குத்தம் ஆகிப்போகும்//


ங்கொய்யால நாளைக்கு தற்கொல செய்ய வேண்டிப்ப அதுக்கு எங்க தல தானா கிடைச்சது..

மங்குனி அமைச்சர் said...

Saran said...

//டேய் எல்லாரும் இங்க வாங்கடா , ஒரு ஆடு அதுவா தலைய காட்டுது//

உங்களின் நகைச்சுவை உணர்வு கண்டு மெய்சிலிர்த்தேன். பருத்தி பால் வேணுமா. (யாரங்கே ... பால்ல ரெண்டு ஸ்பூன் விஷத்த கலந்துடுங்க) ////

ஹா,ஹா,ஹா.......... சார் நாங்க விசத்துல தான் பருத்திப்பால் ரெண்டு ஸ்பூன் கலந்து சாப்பிட்டு பழக்கம் , அத மாத்திராதிக , ஒரு கப் விசத்துல ரெண்டு ஸ்பூன் கலந்து தரச்சொல்லுங்க

மங்குனி அமைச்சர் said...

நியோ said...

நோக்கியா கேமரா மொபைல் வச்சிருக்கிற உங்க கிட்டேயே அப்பா இப்படிஎல்லா பண்றாரா ... நீங்க ரொம்ப பாவம் அமைச்சரே ///

ஆமா சார் , ஆமா

மங்குனி அமைச்சர் said...

senthil1426 said...

உஸ்.................முடியல///

விடுங்க செந்தில் சார் , அடுத்த தடவ பாத்துகல்லாம்

மங்குனி அமைச்சர் said...

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

அமைச்சருக்கு ......

பதிவுலகத்துக்கு புதியவன்...!நம்ம பக்கத்தையும் வந்து பாருங்கள்,பின்னூட்டம் போட்டு நிறை,குறைகளை ..!என்னை என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்...! அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com////

வாருங்கள் வெற்றி , வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

சீமான்கனி said...

ஏலேய் கைப்புள்ள தேனீ ,வீரபாண்டி,சின்னமனூர்,உத்தம பாளையம்,கம்பம்,போடி...எல்லா எடத்துலயும் வரிசையா ஆளப்போடு டா...அடுத்தவாட்டி மிஸ்ஸாக கூடாது...தக்காளி இவ்வோ பக்கத்துல இருந்தும் தெரியாம போச்சே....//

சீமான்கனி சார் , நாங்க வேஷம் போடுறதுல கிளாடி , ஒரு தடவ மரு வச்சிக்கிட்டு வருவோம் , அடுத்த தடவ கூலிங்கிளாஸ் போட்டு வருவோம் , இப்படி பல கெட் அப் வச்சிருக்கோம்

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

செம காமெடி......!//

நன்றி கலாநேசன் சார்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

//எல்லாருக்கும் மொட்டை போட்டு காத்து குத்தி தீச்சட்டி எடுக்க வக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன்//

யோவ் மங்கு....என்னை மொட்டை போட்டு பாக்க அப்படி என்னா உனக்கு ஆசை..ஏன் இந்த கொலவெறி...//

வாப்பு எல்லாம் ஒரு பாசம்தான்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

@@@sandhya //
அப்புறம் மொட்டை போட்டு காது குத்தி தீ சட்டி எடுக்கற எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் ஹி ஹி ஹி//

என்னது உங்களுக்குமாஆஆஆஆஆ..அவ்வ்வ்வ்///

பாரு எவ்ளோ பேரு உன்மேல பாசமா இருக்காங்க , ஸ்டார்ட் மூசிக்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

//ஏம்பா ஒரு நண்பனோட வேண்டுதலா நிறைவேத்த மாட்டிங்களா ???? மரியாதையா மொட்டை போடுங்க இல்லை சாமி குத்தம் ஆகிப்போகும்//


ங்கொய்யால நாளைக்கு தற்கொல செய்ய வேண்டிப்ப அதுக்கு எங்க தல தானா கிடைச்சது..//

ஐ , இது கூட நல்லா இருக்கே , ஐடியா குடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஜெய்லானி

Jey said...

// சீமான்கனி said...
ஏலேய் கைப்புள்ள தேனீ ,வீரபாண்டி,சின்னமனூர்,உத்தம பாளையம்,கம்பம்,போடி...எல்லா எடத்துலயும் வரிசையா ஆளப்போடு டா...அடுத்தவாட்டி மிஸ்ஸாக கூடாது...தக்காளி இவ்வோ பக்கத்துல இருந்தும் தெரியாம போச்சே....///

நீங்களும் நம்மூர்க்காரவகளா..., விடாதீங்க வலைச்சி பிடிங்க ஆட்டை வறுத்துடலாம்...

மங்குனி அமைச்சர் said...

Jey said...

// சீமான்கனி said...
ஏலேய் கைப்புள்ள தேனீ ,வீரபாண்டி,சின்னமனூர்,உத்தம பாளையம்,கம்பம்,போடி...எல்லா எடத்துலயும் வரிசையா ஆளப்போடு டா...அடுத்தவாட்டி மிஸ்ஸாக கூடாது...தக்காளி இவ்வோ பக்கத்துல இருந்தும் தெரியாம போச்சே....///

நீங்களும் நம்மூர்க்காரவகளா..., விடாதீங்க வலைச்சி பிடிங்க ஆட்டை வறுத்துடலாம்...///

ஹா.ஹா.ஹா .... ஆடு இப்ப கீரிபுள்ள வேசத்துல உங்க வீட்ட்லதான் இருக்கு ஜெய்

NADESAN said...

அட நல்லாதானே இருக்கு ???????????????
நெல்லை நடேசன்
அமீரகம்

முத்து said...

மங்குனி அமைசர் said...
ஒரு மொட்டை ரெண்டு லட்சம் ரூபாயா ?? யோவ் முத்து எனக்கு வெறும் 1000 ரூபா குடுய்யா நான் ஜெயக்கு மொட்டை போட்டு விட்டிறேன்///////


1000 ரூபா என்ன மேற்கொண்டு ஒரு 1000 ரூபா தரேன் சிப்பு போலீசுக்கும் சேர்த்து மொட்டை போட்டுடு.அவனுங்க தொல்ல தாங்க முடியல

பெசொவி said...

அமைச்சரால் எப்படி இவ்வளவு அருமையாக கலாய்க்க முடிகிறது என்பதன் ரகசியம் இதுதானோ?

பெசொவி said...

96

பெசொவி said...

97

பெசொவி said...

98

பெசொவி said...

99

பெசொவி said...

ஹையா........நான்தான் நூறு!
(டெண்டுல்கருக்கு போட்டி வந்தாச்சு டோய்.......!)

மங்குனி அமைச்சர் said...

NADESAN said...

அட நல்லாதானே இருக்கு ???????????????
நெல்லை நடேசன்
அமீரகம் ///

மிக்க நன்றி நெல்லை நடேசன் சார்

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

மங்குனி அமைசர் said...
ஒரு மொட்டை ரெண்டு லட்சம் ரூபாயா ?? யோவ் முத்து எனக்கு வெறும் 1000 ரூபா குடுய்யா நான் ஜெயக்கு மொட்டை போட்டு விட்டிறேன்///////


1000 ரூபா என்ன மேற்கொண்டு ஒரு 1000 ரூபா தரேன் சிப்பு போலீசுக்கும் சேர்த்து மொட்டை போட்டுடு.அவனுங்க தொல்ல தாங்க முடியல///

விடு , விடு அனைய போற விளக்கு பிரகாசமாத்தான் எறியும், அடுத்த ஆடு அதுதான் , போட்டு தள்ளிடுவோம்

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அமைச்சரால் எப்படி இவ்வளவு அருமையாக கலாய்க்க முடிகிறது என்பதன் ரகசியம் இதுதானோ?///

ஹி,ஹி,ஹி, எல்லாம் ரத்தத்துலே இருக்குங்க

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஹையா........நான்தான் நூறு!
(டெண்டுல்கருக்கு போட்டி வந்தாச்சு டோய்.......!)///

நோ பால்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னா ஒரு வில்லத்தனம்? எங்களூக்கே மொட்டைய்யா? சரி சரி ரொம்ப பீல் பண்ணாதீங்க, இந்தாங்க விக்கு, வெச்சுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாராவது மங்குனிக்கு ஒரு நோ பால் போடுங்கய்யா!

r.v.saravanan said...

எவ்வளவு நேரம் தான் சிரிக்காத படிக்கிறது ஹா ஹா ஹா ஹா

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னா ஒரு வில்லத்தனம்? எங்களூக்கே மொட்டைய்யா? சரி சரி ரொம்ப பீல் பண்ணாதீங்க, இந்தாங்க விக்கு, வெச்சுங்க!///

வாப்பு , உனக்கு ரொம்ப ஈசி , விக்க கலட்டி மாட்டிக்கலாம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாராவது மங்குனிக்கு ஒரு நோ பால் போடுங்கய்யா!///

ஹி.ஹி,ஹி ................. நான் இப்ப அம்பயர்

மங்குனி அமைச்சர் said...

r.v.saravanan said...

எவ்வளவு நேரம் தான் சிரிக்காத படிக்கிறது ஹா ஹா ஹா ஹா///

கஷ்டப் படாம உடனே சிரிச்சிடுங்க , ரொம்ப நன்றி சரவணன்

'பரிவை' சே.குமார் said...

ஹா.... ஹா... ஹா....
கடைசி வரைக்கும் சிரிப்பு...
அமைச்சரே... எப்பூடி இப்பூடி..?

வால்பையன் said...

உங்க வீட்ல உங்க அண்ணன் தான் பாவம் போலயே!

வால்பையன் said...

உங்க வீட்ல உங்க அண்ணன் தான் பாவம் போலயே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அமைச்சரே தூங்குனது போதும், எந்திரிச்சி நம்ம கடைப்பக்கம் வாய்யா!

r.v.saravanan said...

என் வலை தள பக்கம் வந்து கொஞ்சம் கலகலப்பாக்குங்க மங்குனி

Jaleela Kamal said...

அமைச்சரே எங்கு ஒளிந்து கொண்டீர்,
தக்களி நீ செத்தடா வா அங்கு பஜ்ஜி கட ப்க்கம் வாரும், நீரும்.....
அங்க போர் களம் ரணகளமா இருக்கு.’’’

Jaleela Kamal said...

பஜ்ஜிய பற்றி கேள்வி கேட்டெ கொளுத்தி போட்டுட்டு இப்படி கும்ப கரணம் தூக்கம் போட்டா நம்ம மக்காஸ் விட்டுடுவாங்களா என்ன?

அந்நியன் 2 said...

மன்னா .........................

எஸ்.கே said...

மனசு நிறைய சிரிச்சேன் சார்! நன்றி சார்!

செல்வா said...

//டக்குன்னு காலண்டருல நம்ம ராசிக்கு என்னா பலன்னு பாத்தேன் , "தக்காளி செத்தடா நீ " (காலண்டருல இப்படியெல்லாமா ராசிபலன் போடுவாங்க ?) அப்படின்னு போட்டு இருந்தது .
//
கப்சா விடுறதுக்கும் ஒரு அளவு இருக்குங்க ..!!
// நம்ம பட்டாப்பட்டி, ஜெய்லானி ,ஜெய் , பன்னிகுட்டி, டெர்ரர் பாண்டி , முத்து , அருண் பிரசாத் , பனங்காட்டுநரி,கோமாளி , ரமேஷ்//
ஹா ஹா .. நான் ஏற்கெனவே உங்களுக்கு மொட்டை அடிக்கிறதா வேண்டிருக்கேன் .. அதனால அதுக்கும் இதுக்கும் ஈக்குவல் பண்ணிக்கலாம் ..

செல்வா said...

//பஸ் ஸ்டாண்டுல போய் இறங்குன்னு முதல்லே சொல்லிருக்கலாம்ல? ///
உங்களுக்கு அவ்வளவு விவரம் பத்தாதுங்க .. அதனாலதான் அப்படி சொன்னார் ..

செல்வா said...

//"அப்ப நீ இந்த வேலைக்கு சரிபட்டு வரமாட்ட , உங்க அண்ணன் எங்க ? அவன அனுப்பலாம் , டேய் .................."
//
அதான் நீங்க தப்பிசிட்டீன்கள்ள .. அப்புறம் எதுக்கு மொட்டை ..!! நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க ..

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

ஹா.... ஹா... ஹா....
கடைசி வரைக்கும் சிரிப்பு...
அமைச்சரே... எப்பூடி இப்பூடி..?///

ரொம்ப நன்றி குமார் சார்

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

உங்க வீட்ல உங்க அண்ணன் தான் பாவம் போலயே!///

வாலு அவன் என்னை விட வில்லன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அமைச்சரே தூங்குனது போதும், எந்திரிச்சி நம்ம கடைப்பக்கம் வாய்யா!//

சாரி பண்ணி ஆணி ஜாஸ்த்தி , அதுதான் லேட்டா வந்தேன் , கும்மி அடிக்க முடியல , அதுத்த வாரம் கும்மி;அடிப்போம்

மங்குனி அமைச்சர் said...

r.v.saravanan said...

என் வலை தள பக்கம் வந்து கொஞ்சம் கலகலப்பாக்குங்க மங்குனி///

சரவணன் சார் , கோவிச்சுகாதிங்க கொஞ்சம் வேலை பிசி , அதுத்தவாரம் வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

பஜ்ஜிய பற்றி கேள்வி கேட்டெ கொளுத்தி போட்டுட்டு இப்படி கும்ப கரணம் தூக்கம் போட்டா நம்ம மக்காஸ் விட்டுடுவாங்களா என்ன?///

அப்பத்தான் மேடம் வாழ்க்கை சுவாரசியமா இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

Mohamed Ayoub K said...

மன்னா .........................///

சொல்லுங்க ஐயுப்

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

மனசு நிறைய சிரிச்சேன் சார்! நன்றி சார்!///

ரொம்ப நன்றி , ரொம்ப ரொம்ப சந்தோசம் எஸ்.கே சார்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...


//
கப்சா விடுறதுக்கும் ஒரு அளவு இருக்குங்க ..!!////

நீ அவ்ளோ நல்லவனா ? என்ன சொன்னாலும் நம்பிடுவியா ? ஹி.ஹி.ஹி ......


// ஹா ஹா .. நான் ஏற்கெனவே உங்களுக்கு மொட்டை அடிக்கிறதா வேண்டிருக்கேன் .. அதனால அதுக்கும் இதுக்கும் ஈக்குவல் பண்ணிக்கலாம் ..///

செல்லாது ,செல்லாது , முதல்ல நான்தான் சொன்னேன்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//பஸ் ஸ்டாண்டுல போய் இறங்குன்னு முதல்லே சொல்லிருக்கலாம்ல? ///
உங்களுக்கு அவ்வளவு விவரம் பத்தாதுங்க .. அதனாலதான் அப்படி சொன்னார் ..///

ஆமா செல்வகுமார்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//"அப்ப நீ இந்த வேலைக்கு சரிபட்டு வரமாட்ட , உங்க அண்ணன் எங்க ? அவன அனுப்பலாம் , டேய் .................."
//
அதான் நீங்க தப்பிசிட்டீன்கள்ள .. அப்புறம் எதுக்கு மொட்டை ..!! நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க ..///

தப்பிச்சதுக்குதானே மொட்டையே , தப்பிச்சா மொட்டை போடுறேன்னுதானே வேண்டி இருக்கேன்

அந்நியன் 2 said...

மன்னா .நான் இந்த அரண்மனைக்கு புதிது, இருந்த போதிலும் நீவிர்,மக்களுக்கு செய்யும் தொண்டினைக் கண்டு வியப்படைந்தேன்,ஆகையால் அடியேனின் முடிவு, தாங்களின் அரண்மனைக்கு வெளியே, ஒரு அரிசிக் கடை போடலாம்னு இருக்கேன் தாங்கள் அனுமதி அளித்தால் கடவு

ஞாஞளஙலாழன் said...

யாரங்கே, உடனே இந்த அமைச்சரைத் தூக்கி தலைகீழாக தொங்க விடுங்கள்.

முத்து said...

Mohamed Ayoub K said...

மன்னா .நான் இந்த அரண்மனைக்கு புதிது, இருந்த போதிலும் நீவிர்,மக்களுக்கு செய்யும் தொண்டினைக் கண்டு வியப்படைந்தேன்,ஆகையால் அடியேனின் முடிவு, தாங்களின் அரண்மனைக்கு வெளியே, ஒரு அரிசிக் கடை போடலாம்னு இருக்கேன் தாங்கள் அனுமதி அளித்தால் கடவு /////////////////

என்ன பாஸ் இது போயி பெர்மிசியன் கேட்டுகிட்டு தாராளமா போடுங்க,தேவைபட்டால் மங்குனியையும் போட்டு தாக்குங்க

முத்து said...

ஞாஞளஙலாழன் said...

யாரங்கே, உடனே இந்த அமைச்சரைத் தூக்கி தலைகீழாக தொங்க விடுங்கள்./////////////


பார்ரா....பயபுள்ளைய வந்ததும் வராததுமா அமைச்சரைத் தூக்கி தலைகீழாக தொங்க விட சொல்லுது.யார்கிட்ட அதுவும் நான் இருக்கும் போது விடுவேனா,இரு போயி மன்குனியை தலைகீழாக தொங்க விட்டு விட்டு வந்து பேசிக்குறேன்

அந்நியன் 2 said...

மன்னா, நான் அரிசிக்கடை போடுவது வியாபரத்திர்க்காக, அதுக்காக் சாம்பிள் வாங்க கடைப் பக்கம் வந்து விடாதிர்கள்.

அந்நியன் 2 said...

மன்னா, நான் அரிசிக்கடை போடுவது வியாபரத்திர்க்காக, அதுக்காக் சாம்பிள் வாங்க கடைப் பக்கம் வந்து விடாதிர்கள்.

பவள சங்கரி said...

அமைச்சரே, வித்யா புண்ணியத்துல உங்க இடுகையை படித்து, மனம் விட்டு சிரிக்க முடிந்ததுங்க. அன்றாட வாழ்க்கையையே நாம எளிமையா பார்க்க ஆரம்பிச்சோம்னா அதையே நகைச்சுவையாக் கூட மாத்த முடியும்னு புரிஞ்சிக்கிட்டேன்.......எல்லாம் நம்மகிட்டதானே இருக்குது.......வாழ்த்துக்கள்.