எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, April 5, 2010

அசைவகொத்துபுரோட்டா

முஸ்கி: எல்லாரும் கொத்து பரோட்டா போடுறாக , சரி நாமளும் ஒன்னு போடலாம்னு யோசிச்சா சைவம் போடலாமா இல்ல அசைவம் போடலாமான்னு ஒரு கேள்வி ? நமக்கு சைவம் சரியா வராது , அதுனால அசைவகொத்துபுரோட்டா போட்டேன் , சாப்டு கொல வெறியோட என்ன தேடாம , பின்னுட்டத்துல போய் பின்னிஎடுங்க


முதல்ல ஒரு சந்தோசமான விஷயம்

அப்பாடா இந்த வருசமும் " good friday " sunday வரலே , ஒரு நாள் லீவ் வேஸ்ட் ஆகல , கவுருமென்ட் வருசா வருஷம் லீவு தர்றதே 12 நாள் தான் , அதுல ஏதாவது ரெண்டு மூணு சண்டே வந்து வேஸ்டா போய்டும் , இந்த வருஷம் "good friday " , friday வந்து ஒரு லீவு தப்பிச்சது .


குட்டி கவுஜ

கருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து

வளைந்து

பெருக்கி போனால்
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு


கரக்ட்டு தானே

சரக்கு ரயில்
தடம்
புரண்டது
இதில்
என்ன ஆச்சரியம்????


டுஸ்கி: நோக்கியா கேமரா மொபைல் போட்டியின் 5 கேள்விகளில் 4 கேள்விகளுக்குஅனைவரும் மிக சரியான பதில் கூறியுள்ளீர்கள் , அந்த 3-வது கேள்விக்குமங்குனி அமைசர் தவிர யாரும் சரியான பதில் சொல்லாததால் அந்த நோக்கியாகேமரா மொபைல் மங்குனி அமைச்சருக்கு பரிசாக வழங்கபடுகிறது.



மூளை கார பயபுள்ள என்னா கேள்வி கேட்குது பாருங்க

ஆமா சோமாலியாவுல கடலை கொள்ளையடிகளையே !!! கப்பல தானே கொள்ளையடிகிறாங்க அப்புறம் ஏன் எல்லோரும் அவுகள கடல் கொள்ளையர்கள்ன்னு சொல்றோம்?

இப்படிக்கு
ஓசி டீயோட ஓசி பேப்பர் படிப்போர் சங்கம்



கொள்ளிவாய் பிசாசு

திடீர்ன்னு எங்க ஊர்ல ஒரே பரபரப்பு .. மேட்டர் இது தான்

"தினமும் நைட்டு 8 மணிக்கு மேல எங்க ஊர் பக்கத்துல இருக்க சுடுகாட்ல கொள்ளிவாய் பிசாசு வந்து டான்ஸ் ஆடுது "

ஊருல இருந்து 2 கிலோமீட்டர் தள்ளி ஆத்த தான்டி போனா ஒரு சுடுகாடு இருக்கு. ஆத்து மேட்ல இருந்து பாத்தா சுடுகாடு தெரியும், அங்க ஒரு எரிக்கிற மேடையும் நிறைய சமாதிகளும் இருக்கும் . நம்ம பயபுள்ளைக ரெண்டு பேரு ஒரு நாள்நைட்டு 8 மணிக்கு ஆத்துக்கு போயிட்டு எதார்த்தமா சுடுகாட்ட பாத்துகங்க , அங்கசாமாதிகளுக்கு நடுவுல திடீர்ன்னு ஒரு செகண்டு தீ மாதிரி பளிச்சுன்னுஆடிருக்கு , அவ்வளவுதான் பயபுள்ளைக அங்க புடுச்ச ஓட்டம் அவிங்க வீட்லபோய் தான் நின்னாங்க , மறுநாள் ஒருத்தனுக்கு காயிச்சல் வந்துருச்சு , ஊருக்குள்ள ஒரே பரபரப்பு .

இந்த பேய் பிசாசு நம்பிக்க இல்லாத நாலு பேரு சிரிச்சுகிட்டே பகல்ல சுடுகாட்லபோய் பாத்தா அங்க ஒன்னும் இல்லை . பகல்ல எப்படி கொள்ளிவாய் பிசாசுவரும்? , வந்தாலும் வெளிச்சதுல்ல எப்படி தெரியும்? அப்படின்னு நாலு பேர்சொல்ல , சரின்னு நைட் போய் பாத்தாக .

பாத்தா நிஜமாவே தீ மாதிரி ஒன்னுஆடுது , அதுவும் ஒரு செகண்டு தான் , ஆனா ஒரு மணி நேரத்துல மூணு நாலு வாட்டி ஆடுது. இத பாத்தா பேய் பிசாசு நம்பிக்க இல்லாத நாலு பேரும் ஆடிபோயிட்டாக . அப்புறம் ஒரு வாரம் அனலைஸ் பண்ணி என்னான்னு பாத்தா , சாமாதிகளுக்கு நடுவுல ஒரு சமாதில கருப்பு டைல்ஸ்ல செந்தவுகள பத்தின டீடைல்ஸ் போட்டு இருந்தது , நைட்டு மெயின் ரோட்டல வர்ற வண்டிக லைட்டு ஒரு ஆங்கிள்ள படும்போது இங்க ஆத்து மேட்ல இருந்து பாத்தா அந்த கருப்புகல்லு கிளார் அடிக்குது , அது உண்மைலே ஏதோ தீ டான்ஸ் ஆடுறமாதிரிதான் இருந்தது . அந்த ஒரு வாரம் எங்க ஊரே ஒரே டென்சன் தான் போங்க , வீட்டுக்கு முன்னாடி பழைய செருப்ப கட்டி தொங்க விடுறது , பூசாரி மந்திருத்துகொடுக்கும் தண்ணிய வீட்ட சுத்தி தொளிசுகிட்டும் ஒரே அமர்களமா இருந்துச்சு .



டிஸ்கி : பித்தன் சார் " , விளக்காடும் விநாயகர்" படிச்சப்புறம் , எங்க ஊர்ல நடந்த இந்தகொள்ளிவாய் பிசாசு நியாபகம் வந்தது


கிஸ்கி : வேணாம்..........., சொன்னா கேளுங்க.............,
அப்புறம் கொல கேஸ்ல உள்ள போய்டுவிங்க , ஆமா சொல்லிபுட்டேன் .





103 comments:

மன்னார்குடி said...

முடியல..

Ahamed irshad said...

இப்பவே கன்ன கட்டுதே...

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த கொள்ளி வாய் பிசாசு,
ஹா..........ஹா.............

யூர்கன் க்ருகியர் said...

அந்த கொள்ளி வாய் பிசாசு Analysis was awesome!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கரக்ட்டு தானே

சரக்கு ரயில்
தடம் புரண்டது
இதில் என்ன ஆச்சரியம்???
//

மங்குனி.. நீயா?..
எப்படியா?..

சூப்பராயிருக்கு...

ஜெய்லானி said...

மங்கு இங்கே எங்களுக்கு எல்லா friday ம் good friday தான்யா ! லீவுதான் மஜாதான் !! ( எங்கேயே வயுறு பொசுங்குற ஸ்மெல் வருதே!! )

ஜெய்லானி said...

//ருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கி போனால்
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு//

கன்னம் சிவந்தது , செறுப்படி வாங்குனதையும் எழுது மாப்ள

ஜெய்லானி said...

//
சரக்கு ரயில்
தடம் புரண்டது
இதில் என்ன ஆச்சரியம்????//

ஆமாம்!! அதுக்குள்ள நீதானே இருந்த, அதான் ஆச்சரியம் !!

Mythees said...

cool........

Aba said...

கலக்கிட்டப்பா........

அந்த சோமாலியா சூப்பரு...

கொள்ளிவாய் கலக்கலு,

இதுக்கும் மேல நா ஏடாகூடமா எழுத்தித் தொலைச்சா வெளியூரு இங்கயும் வந்து அழிச்சிடுவான்

Prasanna said...

ஹீ ஹீ.. நீங்க மங்குனி அமைச்சர் இல்ல.. இம்சை அரசர் :))

அப்துல்மாலிக் said...

//சாமாதிகளுக்கு நடுவுல ஒரு சமாதில கருப்பு டைல்ஸ்ல செந்தவுகள பத்தின டீடைல்ஸ் போட்டு இருந்தது , நைட்டு மெயின் ரோட்டல வர்ற வண்டிக லைட்டு ஒரு ஆங்கிள்ள படும்போது இங்க ஆத்து மேட்ல இருந்து பாத்தா அந்த கருப்புகல்லு கிளார் அடிக்குது , //

இது மாதிரி நிறைய அறிவியல் கண்டுபுடிப்பு இருக்கு தல, அதையெல்லாம் தீர விசாரிக்காம அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது மாதிரி நம்புறோம்.

எல்லாத்தையும் ரசிச்சேன் அமைச்சரே

பிரபாகர் said...

குட் ஃப்ரைடே - குட்

கருப்பு வளையல் - கல்யாண்ஜின்னு நினைக்கிறேன்.

சரக்கு ரயில் - சான்சே இல்லை

சோமாலியா - சூப்பர்

டுஸ்கி,கேமிரா மொபைல் - டுபாக்கூர்

கொள்ளிவாய்ப்பிசாசு - கலக்கல்...

அசத்துங்க மங்குனி!

பிரபாகர்...

சிநேகிதன் அக்பர் said...

ஸ்ஸ்ஸ். யப்பா முடியலை.

யாருக்கு என்ன பாவம் செய்தோம் நமக்கு மட்டும் ஏன் இந்த சோதனை.

கலக்கல்.

S Maharajan said...

//கொல வெறியோட என்ன தேடாம//

நாங்க கொலை வெறியுடன் உங்களை தேடவே இல்லை அப்படின்னு சொன்னதை நீங்க நம்பிடீங்க. ஐயோ! ஐயோ!

சுசி said...

கொலைவெறி படிச்ச எங்களுக்கா இல்ல எழுதின உங்களுக்கா அமைச்சரே??

வால்பையன் said...

சரக்கு ரயில்
தடம் புரண்டது
இதில் என்ன ஆச்சரியம்????


அடடே
ஆச்சர்யகுறி!

நாடோடி said...

கொள்ளிவாய் பிசாசு க‌தை ந‌ல்லா இருக்கு...

மங்குனி அமைச்சர் said...

//மன்னார்குடி said...

முடியல..//

கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க

மங்குனி அமைச்சர் said...

//அஹமது இர்ஷாத் said...

இப்பவே கன்ன கட்டுதே...//

இதற்க்கு நிவாகம் பொறுப்பாகாது

மங்குனி அமைச்சர் said...

//சைவகொத்துப்பரோட்டா said...

அந்த கொள்ளி வாய் பிசாசு,
ஹா..........ஹா.............//

தேங்க்ஸ் தல

மங்குனி அமைச்சர் said...

//யூர்கன் க்ருகியர் said...

அந்த கொள்ளி வாய் பிசாசு Analysis was awesome!//

கரக்ட்டு தல , கேள்விப்பட்டதுதான்

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

மங்குனி.. நீயா?..
எப்படியா?..

சூப்பராயிருக்கு...//

மயிலாப்பூர் பார்த்தசாரதி அவர்களே , எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கிது

Balamurugan said...

//கருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கி போனால்
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு//

எங்கியோ படிச்சா மாதிரி இருக்கு.... ;)

அவள் குனிந்து கூட்டினால்
என் மனம் குப்பையானது!

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

மங்கு இங்கே எங்களுக்கு எல்லா friday ம் good friday தான்யா ! லீவுதான் மஜாதான் !! ( எங்கேயே வயுறு பொசுங்குற ஸ்மெல் வருதே!! )//

அப்ப goodfriday , சண்டேல வந்தாத்தாண்ட நீ சந்தோசப்படனும் கூமுட்ட

மங்குனி அமைச்சர் said...

// T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))//

thanks sir

மங்குனி அமைச்சர் said...

// mythees said...

cool........//

thank you mytees

மங்குனி அமைச்சர் said...

//கரிகாலன் said...

கலக்கிட்டப்பா........

அந்த சோமாலியா சூப்பரு...

கொள்ளிவாய் கலக்கலு,

இதுக்கும் மேல நா ஏடாகூடமா எழுத்தித் தொலைச்சா வெளியூரு இங்கயும் வந்து அழிச்சிடுவான்//

புதுசா வந்ததுக்கு நன்றி , அப்புறம் வெளியூரு ஏதும் பிரச்சன பண்ணா சொல்லுக , நாம போய் சத்தம் போடாம கால்ல விழுந்து சமாதானம் ஆகிடலாம் , இல்லை உங்களுக்கு தான்டேஞ்சர்

மங்குனி அமைச்சர் said...

//பிரசன்னா said...

ஹீ ஹீ.. நீங்க மங்குனி அமைச்சர் இல்ல.. இம்சை அரசர் :))//

ஆஹா இது கூட நால்லாருக்கு தல

மங்குனி அமைச்சர் said...

//அபுஅஃப்ஸர் said...//

thank you abuafsar

மங்குனி அமைச்சர் said...

//குட் ஃப்ரைடே - குட்

கருப்பு வளையல் - கல்யாண்ஜின்னு நினைக்கிறேன்.

சரக்கு ரயில் - சான்சே இல்லை

சோமாலியா - சூப்பர்

டுஸ்கி,கேமிரா மொபைல் - டுபாக்கூர்

கொள்ளிவாய்ப்பிசாசு - கலக்கல்...

அசத்துங்க மங்குனி!

பிரபாகர்...//

தேங்க்ஸ் சார் , அது கல்யாண்ஜி இல்ல சார்

மங்குனி அமைச்சர் said...

//அக்பர் said...

ஸ்ஸ்ஸ். யப்பா முடியலை.

யாருக்கு என்ன பாவம் செய்தோம் நமக்கு மட்டும் ஏன் இந்த சோதனை.

கலக்கல்.//

thanks thala

மங்குனி அமைச்சர் said...

// S Maharajan said...

//கொல வெறியோட என்ன தேடாம//

நாங்க கொலை வெறியுடன் உங்களை தேடவே இல்லை அப்படின்னு சொன்னதை நீங்க நம்பிடீங்க. ஐயோ! ஐயோ!//

வாங்க மகாராஜன் , வருகைக்கும் கருத்துக்கு நன்றி , நம்ம பொழப்பே ஒளிஞ்சு வாழ்ற பொழப்புதான்

மங்குனி அமைச்சர் said...

// சுசி said...

கொலைவெறி படிச்ச எங்களுக்கா இல்ல எழுதின உங்களுக்கா அமைச்சரே??//

யோசிக்க வேண்டிய கேள்வி

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

சரக்கு ரயில்
தடம் புரண்டது
இதில் என்ன ஆச்சரியம்????


அடடே
ஆச்சர்யகுறி!//

அண்ணா ரொம்ப நன்றிண்ணா

மங்குனி அமைச்சர் said...

// நாடோடி said...

கொள்ளிவாய் பிசாசு க‌தை ந‌ல்லா இருக்கு...//

ரொம்ப தேங்க்ஸ் நாடோடி சார்

Unknown said...

அசைவக் கொத்துபுரோட்டா டேஸ்ட்டாத்தான்யா இருக்கு.. அடிக்கடி போடுங்க

Balamurugan said...

அமைச்சரே, என்னுடைய பின்னூட்டத்தை பார்க்க தவறி விட்டீரே!

Paleo God said...

சாரி. நான் சைவம்..:)

வெள்ளிநிலா said...

மங்குனி..சீரியசா எழுதுனா சீண்ட மாட்டேங்கிறாங்க..ஹ்ம்ம் நடத்துங்க நடத்துங்க..
அப்புறம் - follower - லிஸ்டுல சேந்துட்டேன்...ஓகேயா?

எல் கே said...

//ஆமா சோமாலியாவுல கடலை கொள்ளையடிகளையே !!! கப்பல தானே கொள்ளையடிகிறாங்க அப்புறம் ஏன் எல்லோரும் அவுகள கடல் கொள்ளையர்கள்ன்னு சொல்றோம்?
//
அமைச்சரே தலைப்ப பார்த்தவுடன் நினச்சேன் இப்படித்தான் எதாவது எழுதி இருப்பீங்கன்னு . க க போ

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அமைச்சரேஇப்படித்தான்
லிஸ்டுல சேந்துட்டேன்...

ஜெய்லானி said...

மங்கு, மெயில பாத்தியா, பாத்துட்டு ரிப்ளை பண்ணு!!!

Chitra said...

சரக்கு ரயில்
தடம் புரண்டது
இதில் என்ன ஆச்சரியம்????


...... ha,ha,ha,ha,ha.....
அதை கண்டு பிடிச்சு சொல்ல மங்குனி அமைச்சர் வர வேண்டியது இருந்திருக்கு. ஹா,ஹா,ஹா,ஹா....
விருதுக்கு வாழ்த்துக்கள்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//வீட்டுக்கு முன்னாடி பழைய செருப்ப கட்டி தொங்க விடுறது , பூசாரி மந்திருத்துகொடுக்கும் தண்ணிய வீட்ட சுத்தி தொளிசுகிட்டும் ஒரே அமர்களமா இருந்துச்சு//

ரொம்ப சூப்பர்.. சொன்ன விதம் சான்சே இல்ல..!

//கிஸ்கி : வேணாம்..........., சொன்னா கேளுங்க.............,
அப்புறம் கொல கேஸ்ல உள்ள போய்டுவிங்க , ஆமா சொல்லிபுட்டேன் .//

ஹா..ஹா..ஹா.. முடியல.. எப்படிங்க.. இப்படி பின்றீங்க..
ரசிக்கும் வண்ணம் இருந்தது.. வாழ்த்துக்கள்..

அன்புத்தோழன் said...

//கருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கி போனால்
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு//

எப்புடி இப்புடிலாம்.... மங்கம்மாவை பார்த்ததும் கொட்டுதோ.... ஹ ஹ...

மங்குனி அமைச்சர் said...

///பாலமுருகன் said...

எங்கியோ படிச்சா மாதிரி இருக்கு.... ;)

அவள் குனிந்து கூட்டினால்
என் மனம் குப்பையானது!///

நீங்க எழுதின வரிகள் தப்பு
இன்னும் கொஞ்சம் யோசிங்க

மங்குனி அமைச்சர் said...

//முகிலன் said...

அசைவக் கொத்துபுரோட்டா டேஸ்ட்டாத்தான்யா இருக்கு.. அடிக்கடி போடுங்க//

ரொம்ப நன்றி முகிலன் ,

உங்களுக்கு நான் அடிவாகுரத பாக்க அவ்வளவு ஆச , இம் ம்ம்ம்ம் இருக்கட்டும்

மங்குனி அமைச்சர் said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சாரி. நான் சைவம்..:)//


சார் இது முட்டை மாதிரி , சைவமாவும் சாபிடலாம்

மங்குனி அமைச்சர் said...

//வெள்ளிநிலா said...

மங்குனி..சீரியசா எழுதுனா சீண்ட மாட்டேங்கிறாங்க..ஹ்ம்ம் நடத்துங்க நடத்துங்க..
அப்புறம் - follower - லிஸ்டுல சேந்துட்டேன்...ஓகேயா?//

வருகைக்கும் , கருத்துக்கும் ரொம்ப நன்றி வெள்ளிநிலா

அன்புத்தோழன் said...

//சாமாதிகளுக்கு நடுவுல ஒரு சமாதில கருப்பு டைல்ஸ்ல செந்தவுகள பத்தின டீடைல்ஸ் போட்டு இருந்தது , நைட்டு மெயின் ரோட்டல வர்ற வண்டிக லைட்டு ஒரு ஆங்கிள்ள படும்போது இங்க ஆத்து மேட்ல இருந்து பாத்தா அந்த கருப்புகல்லு கிளார் அடிக்குது//


அடடா என்ன ஒரு கண்டுபுடிப்பு.... இதுக்கு ஒரு வாரம் ஒரு ஊரே ஒன்னுகூடி அனலைஸ் பண்ணீங்களா.... நீர் மட்டும் தான் மங்குனு பாத்தா..... ஹ ஹ....

மங்குனி அமைச்சர் said...

// LK said...


அமைச்சரே தலைப்ப பார்த்தவுடன் நினச்சேன் இப்படித்தான் எதாவது எழுதி இருப்பீங்கன்னு . க க போ//


எதிலையும் ஒரு நேர்மை இருக்கனும் சார்

மங்குனி அமைச்சர் said...

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அமைச்சரேஇப்படித்தான்
லிஸ்டுல சேந்துட்டேன்...//

ரொம்ப நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

//Chitra said...

சரக்கு ரயில்
தடம் புரண்டது
இதில் என்ன ஆச்சரியம்????


...... ha,ha,ha,ha,ha.....
அதை கண்டு பிடிச்சு சொல்ல மங்குனி அமைச்சர் வர வேண்டியது இருந்திருக்கு. ஹா,ஹா,ஹா,ஹா....
விருதுக்கு வாழ்த்துக்கள்!//


என்னா மேடம் பன்றது, எல்லாத்துக்கும் என்னையதான் அடிச்சு தொரதுராணுக

மங்குனி அமைச்சர் said...

// Ananthi said...



ரொம்ப சூப்பர்.. சொன்ன விதம் சான்சே இல்ல..!


ஹா..ஹா..ஹா.. முடியல.. எப்படிங்க.. இப்படி பின்றீங்க..
ரசிக்கும் வண்ணம் இருந்தது.. வாழ்த்துக்கள்..///



அப்புறம் உயிர் பொழைக்க வேணாமா ?
ரொம்ப நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

//அன்புத்தோழன் said...


எப்புடி இப்புடிலாம்.... மங்கம்மாவை பார்த்ததும் கொட்டுதோ.... ஹ ஹ...//


உண்மை தெரிஞ்ச மனசுக்குள்ளே வசுகனும்

மங்குனி அமைச்சர் said...

//அன்புத்தோழன் said...



அடடா என்ன ஒரு கண்டுபுடிப்பு.... இதுக்கு ஒரு வாரம் ஒரு ஊரே ஒன்னுகூடி அனலைஸ் பண்ணீங்களா.... நீர் மட்டும் தான் மங்குனு பாத்தா..... ஹ ஹ....//


அப்புறம் நான் அமைச்சரா இருக்க ஊர் எப்புடி இருக்கும்

Jaleela Kamal said...

இதெல்லாம் ஜனங்க கொளுத்தி போடுர பீதி தான்,

சின்னவயதில், சுவர ரொம்ப உத்து பார்த்தா, ராத்திரில, எங்க்காவது கவர், பேப்பர் ஆடி கொண்டு இருந்தால் நம்ம கண்ணுக்க்கு பேய் பிசாசு கொள்ளிவாய் பிசாசு போல் இருக்கும், அதே போல் வானத்த பார்த்த்தாலும், இடத்த விட்டு எழுந்திரிக்கவே பயமா இருக்கும்.

விக்னேஷ்வரி said...

நீங்க ரொம்ப மூளைக்கார பயபுள்ள தான்.

பித்தனின் வாக்கு said...

// இந்த வருஷம் "good friday " , fridayல வந்து ஒரு லீவு தப்பிச்சது . //
சரியான மங்குனி அமைச்சரே, நீர் இன்னமும் ஜெய்லானியின் கொசுமுட்டை லோகியமும்,பட்டாபட்டியின் கொய்யாக்காய் கொத்துபுரோட்டா சாப்பிட்ட மப்பு போகவில்லை.
அது பேரே நல்ல வெள்ளியாச்சே அப்புறம் எப்படி ஞாயிற்றுக்கிழமையில் வரும் எல்லா வருசமும் அது வியாழக் கிழமையில் தான் வரும் புரிஞ்சுதா?

மங்குனி சரியா சொல்லு கருப்பு வளையலா இல்லை கருப்புக் கையில் வளையலா? ஏன்னா இலக்கியம் ரொம்ப முக்கியம்.

நமிதான்னு சொன்னதுக்கு மொபைல் எனக்குத்தான் கொடுக்கனும், அல்ப மன்னரின் அமைச்சர் என்பதால் விட்டு விடுகின்றேன்.
சோமாலியா மேட்டர் சூப்பரு அப்பு.

Asiya Omar said...

அசைவகொத்துபரோட்டான்னதும் கோழி,ஆடு,மாடு,மீன எல்லாம் சேர்த்து பண்ணிய பரோட்டான்னு நினைச்சு வந்தால் கவுஜை,கருப்புன்னு சப்ஜக்ட் வேறு.இதுவும் நல்லாயிருக்கு.

settaikkaran said...

கொள்ளிவாப் பிசாசு படுசூப்பர்! :-)))))

MUTHU said...

மங்கு உனக்கு இருக்குன்னு நிருபிச்சுடையா அட மூளையை சொன்னேன்பா

MUTHU said...

ஜெய்லானி said...

கன்னம் சிவந்தது , செறுப்படி வாங்குனதையும் எழுது மாப்ள/////


அப்படி கேளு,சீக்கிரம் எழுது மங்கு

MUTHU said...

சுசி said...

கொலைவெறி படிச்ச எங்களுக்கா இல்ல எழுதின உங்களுக்கா அமைச்சரே??////

இதில் என்ன டவுட் நமக்கு தான்,வாங்க அதே வெறியோட போட்டு தாக்கிடலாம்

MUTHU said...

விக்னேஷ்வரி said...

நீங்க ரொம்ப மூளைக்கார பயபுள்ள தான்.///////

மங்குவிற்கு புகழ்ச்சியே பிடிக்காது,

அதுவும் இல்லாததை சொல்லி புகழ்ந்தாள் !!!!!!!

Priya said...

ஸ் ஸ் ஸ்ப்பா கன்ன கட்டுதே...:)

மங்குனி அமைச்சர் said...

////Jaleela said...

இதெல்லாம் ஜனங்க கொளுத்தி போடுர பீதி தான்,

சின்னவயதில், சுவர ரொம்ப உத்து பார்த்தா, ராத்திரில, எங்க்காவது கவர், பேப்பர் ஆடி கொண்டு இருந்தால் நம்ம கண்ணுக்க்கு பேய் பிசாசு கொள்ளிவாய் பிசாசு போல் இருக்கும், அதே போல் வானத்த பார்த்த்தாலும், இடத்த விட்டு எழுந்திரிக்கவே பயமா இருக்கும்.////


ஆகா , பேய் பிசாசுன்னா ரொம்ப பயபடுவிக போலருக்கே ?

மங்குனி அமைச்சர் said...

// விக்னேஷ்வரி said...

நீங்க ரொம்ப மூளைக்கார பயபுள்ள தான்.///


இல்லை மேடம் சின்னவயசுல தலைல லைட்டா அடிபட்டுச்சு அதுளைருந்து இப்படிருக்கு மேடம்

மங்குனி அமைச்சர் said...

//பித்தனின் வாக்கு said...

// இந்த வருஷம் "good friday " , fridayல வந்து ஒரு லீவு தப்பிச்சது . //
சரியான மங்குனி அமைச்சரே, நீர் இன்னமும் ஜெய்லானியின் கொசுமுட்டை லோகியமும்,பட்டாபட்டியின் கொய்யாக்காய் கொத்துபுரோட்டா சாப்பிட்ட மப்பு போகவில்லை.
அது பேரே நல்ல வெள்ளியாச்சே அப்புறம் எப்படி ஞாயிற்றுக்கிழமையில் வரும் எல்லா வருசமும் அது வியாழக் கிழமையில் தான் வரும் புரிஞ்சுதா?///


ஆமா சார் , ஆமா இன்னும் மப்பு தீரல, வியாழக் கிளமைஎல்லாம் வெள்ளி கிளமைமாதிரியே இருக்கு




// மங்குனி சரியா சொல்லு கருப்பு வளையலா இல்லை கருப்புக் கையில் வளையலா? ஏன்னா இலக்கியம் ரொம்ப முக்கியம்.///


ஆஹா , நல்லா யோசிச்சாலும் மப்புல இருந்ததால சரியா நியாபகம் வரமாட்டேன்குது சார்


//// நமிதான்னு சொன்னதுக்கு மொபைல் எனக்குத்தான் கொடுக்கனும், அல்ப மன்னரின் அமைச்சர் என்பதால் விட்டு விடுகின்றேன்.
சோமாலியா மேட்டர் சூப்பரு அப்பு.////

அந்த கிஸ்கி படிகலையா ?
ரொம்ப தேங்க்ஸ் சார்

மங்குனி அமைச்சர் said...

///asiya omar said...

அசைவகொத்துபரோட்டான்னதும் கோழி,ஆடு,மாடு,மீன எல்லாம் சேர்த்து பண்ணிய பரோட்டான்னு நினைச்சு வந்தால் கவுஜை,கருப்புன்னு சப்ஜக்ட் வேறு.இதுவும் நல்லாயிருக்கு.////


ஆமா மேடம் கொஞ்சம் வேறமாதிரி அசைவம்

மங்குனி அமைச்சர் said...

// சேட்டைக்காரன் said...

கொள்ளிவாப் பிசாசு படுசூப்பர்! :-)))))////

வா சேட்ட, வா சேட்ட

மங்குனி அமைச்சர் said...

// Muthu said...

மங்கு உனக்கு இருக்குன்னு நிருபிச்சுடையா அட மூளையை சொன்னேன்பா///


ஏம்பா முத்து எனக்கு பொய் பேசினா புடிக்காது

மங்குனி அமைச்சர் said...

// Muthu said...

சுசி said...

கொலைவெறி படிச்ச எங்களுக்கா இல்ல எழுதின உங்களுக்கா அமைச்சரே??////

இதில் என்ன டவுட் நமக்கு தான்,வாங்க அதே வெறியோட போட்டு தாக்கிடலாம்///


தக்காளி துணைக்கு ஆள் வேற சேகுரியா?

மங்குனி அமைச்சர் said...

Muthu said...

/// விக்னேஷ்வரி said...

நீங்க ரொம்ப மூளைக்கார பயபுள்ள தான்.///////

மங்குவிற்கு புகழ்ச்சியே பிடிக்காது,

அதுவும் இல்லாததை சொல்லி புகழ்ந்தாள் !!!!!!!////


என்னா முத்து ஒரு நேரத்துக்கு ஒன்னு சொல்ற

மங்குனி அமைச்சர் said...

//Priya said...

ஸ் ஸ் ஸ்ப்பா கன்ன கட்டுதே...:)///



வாங்க வாங்க வாங்க மேடம் , லெமன் ஜூஸ் சாபுடுரின்களா ?

Jaleela Kamal said...

அது சின்ன வயசுலன்னு சொன்னே,
இப்ப பேயோ, பிசாசோ வந்த என்ன பார்த்து தான் பயந்து ஓடனும் ஹிஹி

பனித்துளி சங்கர் said...

இதற்குமேல ஏதாவது சொன்னீங்கனா அழுதுடுவேன் ஆமா !

பித்தனின் வாக்கு said...

// அது சின்ன வயசுலன்னு சொன்னே,
இப்ப பேயோ, பிசாசோ வந்த என்ன பார்த்து தான் பயந்து ஓடனும் ஹிஹி //

சரி சரி ஜலில்லாக்கா, நீங்க டெய்லி கண்ணாடி பாக்குற விஷயத்தை நான் வெளியில சொல்லமாத்தேன்.

மங்குனி மூளை மாதிரியே நல்லா யோசிக்கிறீங்க.

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...

அது சின்ன வயசுலன்னு சொன்னே,
இப்ப பேயோ, பிசாசோ வந்த என்ன பார்த்து தான் பயந்து ஓடனும் ஹிஹி//


அது நீங்க சொல்லி தான் தெரியவேண்டியதில்ல , எங்களுக்கு முன்னாடியே தெரியும்

மங்குனி அமைச்சர் said...

//// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இதற்குமேல ஏதாவது சொன்னீங்கனா அழுதுடுவேன் ஆமா !////


விடுங்க சார் , அரசியல்ல இது சாதாரணம் சார் , உங்களுக்கு தெரியாததா

மங்குனி அமைச்சர் said...

///பித்தனின் வாக்கு said...

// அது சின்ன வயசுலன்னு சொன்னே,
இப்ப பேயோ, பிசாசோ வந்த என்ன பார்த்து தான் பயந்து ஓடனும் ஹிஹி //

சரி சரி ஜலில்லாக்கா, நீங்க டெய்லி கண்ணாடி பாக்குற விஷயத்தை நான் வெளியில சொல்லமாத்தேன்.

மங்குனி மூளை மாதிரியே நல்லா யோசிக்கிறீங்க.///


எல்லாம் குரு நீங்க குடுத்த ஞானப்பால் தான் மன்னா

சிநேகிதன் அக்பர் said...

விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்

http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html

Anonymous said...

டம்பிஈ உண்மையா சொல்லு எந்த கவித என் கிட்ட இர்ந்து சுட்டது தான நான் கசக்கி போட்ட பபெர எடுத்து ப்ளோக்ல போடறியா - எத்தன பேரு கிளம்பி இர்கிங்க
- சிவா

Rettaival's Blog said...

மங்கூ..... வர வர பின்னுற...

மங்குனி அமைச்சர் said...

//Anonymous said...

டம்பிஈ உண்மையா சொல்லு எந்த கவித என் கிட்ட இர்ந்து சுட்டது தான நான் கசக்கி போட்ட பபெர எடுத்து ப்ளோக்ல போடறியா - எத்தன பேரு கிளம்பி இர்கிங்க
- சிவா///


வாப்பா சிவா , நல்லாருக்கியா ?

மங்குனி அமைச்சர் said...

//அக்பர் said...

விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்

http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html///


தோ.. வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

//ரெட்டைவால் ' ஸ் said...

மங்கூ..... வர வர பின்னுற...///


ஆஹா , மன்னரே பாராட்டிடாரே , கலக்குடா மங்கு

ஜெய்லானி said...

################
மங்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
###########

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்கு.. உள்ள இருக்கையா.. இல்ல வெளிய வந்துட்டயா..
ரொம்ப நாளா, வீட்டு பக்கம் காணலையே..அதுக்குத்தான் கேட்டேன்..

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

################
மங்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
###########
///

தோ.. வர்றேன் .

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

மங்கு.. உள்ள இருக்கையா.. இல்ல வெளிய வந்துட்டயா..
ரொம்ப நாளா, வீட்டு பக்கம் காணலையே..அதுக்குத்தான் கேட்டேன்..///


எங்க பட்டா நமிதா வந்து ஜாமீன் குடுத்தான் விடுவேகுரானுக

Vidhya Chandrasekaran said...

முடியல..

ரோஸ்விக் said...

அசைவ கொத்துபரோட்டா... தக்காளி சூப்பரா இருக்குயா... :-)))

சாமக்கோடங்கி said...

பின்னி பெடல் எடுக்கிறீங்க போங்க...

சூப்பர் தல..

சாமக்கோடங்கி said...
This comment has been removed by the author.
சாமக்கோடங்கி said...

////கருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கி போனால்
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு//
//

அப்ப வேலைக்காரியைக் கூட விடறதில்லை போல நீங்க... இதுக்குதான் ஆபீஸ்க்கு யாரும் வர்றதுக்கு முன்னாடியே, நேரமா போயடரீங்களா..? கூட்ட வரும்போது பாத்துட்டு இந்த மாறி கவி எழுத...


மங்குனி பாஷையில் சொன்னால், கம்பெனியில் யாரைப்பார்த்தாலும் கவிதை வருவதில்லை.. ஆனால், வேலைக்காரியைப் பார்த்தால் மட்டும் அனைத்து வார்த்தைகளும் வந்து என் மேல் விழுந்து கும்மி எடுத்து விடுகின்றன....

இதற்க்கு உங்களிடம் இருந்து நேர்மையான பதில் கிடைக்காத பட்சத்தில், உங்கள் கூட வேலை பார்ப்பவர் யாரேனும் பதில் சொல்லட்டும்..

பட்டாபட்டி அண்ணே.. இருக்கீங்களா...?

சாமக்கோடங்கி said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

//வித்யா said...

முடியல..///



மேடம்க்கு ஒரு லெமன் ஜூஸ் பார்சல்

மங்குனி அமைச்சர் said...

//ரோஸ்விக் said...

அசைவ கொத்துபரோட்டா... தக்காளி சூப்பரா இருக்குயா... :-)))///


ரொம்ப தேங்க்ஸ் ரோஸ்

மங்குனி அமைச்சர் said...

//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

பின்னி பெடல் எடுக்கிறீங்க போங்க...

சூப்பர் தல..///


ஆகா, ரொம்ப தேங்க்ஸ் தல

மங்குனி அமைச்சர் said...

///
Blogger பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...


அப்ப வேலைக்காரியைக் கூட விடறதில்லை போல நீங்க... இதுக்குதான் ஆபீஸ்க்கு யாரும் வர்றதுக்கு முன்னாடியே, நேரமா போயடரீங்களா..? கூட்ட வரும்போது பாத்துட்டு இந்த மாறி கவி எழுத...


மங்குனி பாஷையில் சொன்னால், கம்பெனியில் யாரைப்பார்த்தாலும் கவிதை வருவதில்லை.. ஆனால், வேலைக்காரியைப் பார்த்தால் மட்டும் அனைத்து வார்த்தைகளும் வந்து என் மேல் விழுந்து கும்மி எடுத்து விடுகின்றன....

இதற்க்கு உங்களிடம் இருந்து நேர்மையான பதில் கிடைக்காத பட்சத்தில், உங்கள் கூட வேலை பார்ப்பவர் யாரேனும் பதில் சொல்லட்டும்..////


தல உண்மைய வெளியில சொல்லகூடாது

பட்டாபட்டி அண்ணே.. இருக்கீங்களா...?

Unknown said...

Neengal ellam eappavavathu ipadia or epavumay ipadia